< 1 தீமோத்தேயு 3 >

1 கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
ଯଦି କଶ୍ଚିଦ୍ ଅଧ୍ୟକ୍ଷପଦମ୍ ଆକାଙ୍କ୍ଷତେ ତର୍ହି ସ ଉତ୍ତମଂ କର୍ମ୍ମ ଲିପ୍ସତ ଇତି ସତ୍ୟଂ|
2 எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.
ଅତୋଽଧ୍ୟକ୍ଷେଣାନିନ୍ଦିତେନୈକସ୍ୟା ଯୋଷିତୋ ଭର୍ତ୍ରା ପରିମିତଭୋଗେନ ସଂଯତମନସା ସଭ୍ୟେନାତିଥିସେୱକେନ ଶିକ୍ଷଣେ ନିପୁଣେନ
3 அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து,
ନ ମଦ୍ୟପେନ ନ ପ୍ରହାରକେଣ କିନ୍ତୁ ମୃଦୁଭାୱେନ ନିର୍ୱ୍ୱିୱାଦେନ ନିର୍ଲୋଭେନ
4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும்.
ସ୍ୱପରିୱାରାଣାମ୍ ଉତ୍ତମଶାସକେନ ପୂର୍ଣୱିନୀତତ୍ୱାଦ୍ ୱଶ୍ୟାନାଂ ସନ୍ତାନାନାଂ ନିଯନ୍ତ୍ରା ଚ ଭୱିତୱ୍ୟଂ|
5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
ଯତ ଆତ୍ମପରିୱାରାନ୍ ଶାସିତୁଂ ଯୋ ନ ଶକ୍ନୋତି ତେନେଶ୍ୱରସ୍ୟ ସମିତେସ୍ତତ୍ତ୍ୱାୱଧାରଣଂ କଥଂ କାରିଷ୍ୟତେ?
6 அவன் பெருமை அடைந்து, சாத்தானைப்போல தண்டனையிலே விழாதபடிக்கு, புதிய சீடனாக இருக்கக்கூடாது.
ଅପରଂ ସ ଗର୍ୱ୍ୱିତୋ ଭୂତ୍ୱା ଯତ୍ ଶଯତାନ ଇୱ ଦଣ୍ଡଯୋଗ୍ୟୋ ନ ଭୱେତ୍ ତଦର୍ଥଂ ତେନ ନୱଶିଷ୍ୟେଣ ନ ଭୱିତୱ୍ୟଂ|
7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.
ଯଚ୍ଚ ନିନ୍ଦାଯାଂ ଶଯତାନସ୍ୟ ଜାଲେ ଚ ନ ପତେତ୍ ତଦର୍ଥଂ ତେନ ବହିଃସ୍ଥଲୋକାନାମପି ମଧ୍ୟେ ସୁଖ୍ୟାତିଯୁକ୍ତେନ ଭୱିତୱ୍ୟଂ|
8 அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும்,
ତଦ୍ୱତ୍ ପରିଚାରକୈରପି ୱିନୀତୈ ର୍ଦ୍ୱିୱିଧୱାକ୍ୟରହିତୈ ର୍ବହୁମଦ୍ୟପାନେ ଽନାସକ୍ତୈ ର୍ନିର୍ଲୋଭୈଶ୍ଚ ଭୱିତୱ୍ୟଂ,
9 விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
ନିର୍ମ୍ମଲସଂୱେଦେନ ଚ ୱିଶ୍ୱାସସ୍ୟ ନିଗୂଢୱାକ୍ୟଂ ଧାତିୱ୍ୟଞ୍ଚ|
10 ௧0 மேலும், இவர்கள் முதலில் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களென்றால் உதவிக்காரர்களாக ஊழியம் செய்யலாம்.
ଅଗ୍ରେ ତେଷାଂ ପରୀକ୍ଷା କ୍ରିଯତାଂ ତତଃ ପରମ୍ ଅନିନ୍ଦିତା ଭୂତ୍ୱା ତେ ପରିଚର୍ୟ୍ୟାଂ କୁର୍ୱ୍ୱନ୍ତୁ|
11 ௧௧ அப்படியே பெண்களும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.
ଅପରଂ ଯୋଷିଦ୍ଭିରପି ୱିନୀତାଭିରନପୱାଦିକାଭିଃ ସତର୍କାଭିଃ ସର୍ୱ୍ୱତ୍ର ୱିଶ୍ୱାସ୍ୟାଭିଶ୍ଚ ଭୱିତୱ୍ୟଂ|
12 ௧௨ மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும்.
ପରିଚାରକା ଏକୈକଯୋଷିତୋ ଭର୍ତ୍ତାରୋ ଭୱେଯୁଃ, ନିଜସନ୍ତାନାନାଂ ପରିଜନାନାଞ୍ଚ ସୁଶାସନଂ କୁର୍ୟ୍ୟୁଶ୍ଚ|
13 ௧௩ இப்படி உதவிக்காரர்களுடைய ஊழியத்தை நன்றாகச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
ଯତଃ ସା ପରିଚର୍ୟ୍ୟା ଯୈ ର୍ଭଦ୍ରରୂପେଣ ସାଧ୍ୟତେ ତେ ଶ୍ରେଷ୍ଠପଦଂ ପ୍ରାପ୍ନୁୱନ୍ତି ଖ୍ରୀଷ୍ଟେ ଯୀଶୌ ୱିଶ୍ୱାସେନ ମହୋତ୍ସୁକା ଭୱନ୍ତି ଚ|
14 ௧௪ நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன்.
ତ୍ୱାଂ ପ୍ରତ୍ୟେତତ୍ପତ୍ରଲେଖନସମଯେ ଶୀଘ୍ରଂ ତ୍ୱତ୍ସମୀପଗମନସ୍ୟ ପ୍ରତ୍ୟାଶା ମମ ୱିଦ୍ୟତେ|
15 ௧௫ தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது.
ଯଦି ୱା ୱିଲମ୍ବେଯ ତର୍ହୀଶ୍ୱରସ୍ୟ ଗୃହେ ଽର୍ଥତଃ ସତ୍ୟଧର୍ମ୍ମସ୍ୟ ସ୍ତମ୍ଭଭିତ୍ତିମୂଲସ୍ୱରୂପାଯାମ୍ ଅମରେଶ୍ୱରସ୍ୟ ସମିତୌ ତ୍ୱଯା କୀଦୃଶ ଆଚାରଃ କର୍ତ୍ତୱ୍ୟସ୍ତତ୍ ଜ୍ଞାତୁଂ ଶକ୍ଷ୍ୟତେ|
16 ௧௬ அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
ଅପରଂ ଯସ୍ୟ ମହତ୍ତ୍ୱଂ ସର୍ୱ୍ୱସ୍ୱୀକୃତମ୍ ଈଶ୍ୱରଭକ୍ତେସ୍ତତ୍ ନିଗୂଢୱାକ୍ୟମିଦମ୍ ଈଶ୍ୱରୋ ମାନୱଦେହେ ପ୍ରକାଶିତ ଆତ୍ମନା ସପୁଣ୍ୟୀକୃତୋ ଦୂତୈଃ ସନ୍ଦୃଷ୍ଟଃ ସର୍ୱ୍ୱଜାତୀଯାନାଂ ନିକଟେ ଘୋଷିତୋ ଜଗତୋ ୱିଶ୍ୱାସପାତ୍ରୀଭୂତସ୍ତେଜଃପ୍ରାପ୍ତଯେ ସ୍ୱର୍ଗଂ ନୀତଶ୍ଚେତି|

< 1 தீமோத்தேயு 3 >