< பிலிப்பியர் 4 >

1 ஆகவே, எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரர்களே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இப்படியே கர்த்தருக்குள் நிலைத்து நில்லுங்கள்.
ହେ ମଦୀଯାନନ୍ଦମୁକୁଟସ୍ୱରୂପାଃ ପ୍ରିଯତମା ଅଭୀଷ୍ଟତମା ଭ୍ରାତରଃ, ହେ ମମ ସ୍ନେହପାତ୍ରାଃ, ଯୂଯମ୍ ଇତ୍ଥଂ ପଭୌ ସ୍ଥିରାସ୍ତିଷ୍ଠତ|
2 கர்த்தருக்குள் ஒரே சிந்தையாக இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
ହେ ଇୱଦିଯେ ହେ ସୁନ୍ତୁଖି ଯୁୱାଂ ପ୍ରଭୌ ଏକଭାୱେ ଭୱତମ୍ ଏତଦ୍ ଅହଂ ପ୍ରାର୍ଥଯେ|
3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாக இருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடும் நற்செய்தியை அறிவிப்பதில் என்னோடு அதிகமாக உழைத்தார்கள், அவர்களுடைய பெயர்கள் ஜீவபுத்தகத்தில் இருக்கிறது.
ହେ ମମ ସତ୍ୟ ସହକାରିନ୍ ତ୍ୱାମପି ୱିନୀଯ ୱଦାମି ଏତଯୋରୁପକାରସ୍ତ୍ୱଯା କ୍ରିଯତାଂ ଯତସ୍ତେ କ୍ଲୀମିନାଦିଭିଃ ସହକାରିଭିଃ ସାର୍ଦ୍ଧଂ ସୁସଂୱାଦପ୍ରଚାରଣାଯ ମମ ସାହାଯ୍ୟାର୍ଥଂ ପରିଶ୍ରମମ୍ ଅକୁର୍ୱ୍ୱତାଂ ତେଷାଂ ସର୍ୱ୍ୱେଷାଂ ନାମାନି ଚ ଜୀୱନପୁସ୍ତକେ ଲିଖିତାନି ୱିଦ୍ୟନ୍ତେ|
4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்; சந்தோஷமாக இருங்கள் என்று மீண்டும் சொல்லுகிறேன்.
ଯୂଯଂ ପ୍ରଭୌ ସର୍ୱ୍ୱଦାନନ୍ଦତ| ପୁନ ର୍ୱଦାମି ଯୂଯମ୍ ଆନନ୍ଦତ|
5 உங்களுடைய சாந்தகுணம் எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் அருகில் இருக்கிறார்.
ଯୁଷ୍ମାକଂ ୱିନୀତତ୍ୱଂ ସର୍ୱ୍ୱମାନୱୈ ର୍ଜ୍ଞାଯତାଂ, ପ୍ରଭୁଃ ସନ୍ନିଧୌ ୱିଦ୍ୟତେ|
6 நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாமல், எல்லாவற்றையும்குறித்து உங்களுடைய விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
ଯୂଯଂ କିମପି ନ ଚିନ୍ତଯତ କିନ୍ତୁ ଧନ୍ୟୱାଦଯୁକ୍ତାଭ୍ୟାଂ ପ୍ରାର୍ଥନାଯାଞ୍ଚାଭ୍ୟାଂ ସର୍ୱ୍ୱୱିଷଯେ ସ୍ୱପ୍ରାର୍ଥନୀଯମ୍ ଈଶ୍ୱରାଯ ନିୱେଦଯତ|
7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
ତଥା କୃତ ଈଶ୍ୱରୀଯା ଯା ଶାନ୍ତିଃ ସର୍ୱ୍ୱାଂ ବୁଦ୍ଧିମ୍ ଅତିଶେତେ ସା ଯୁଷ୍ମାକଂ ଚିତ୍ତାନି ମନାଂସି ଚ ଖ୍ରୀଷ୍ଟେ ଯୀଶୌ ରକ୍ଷିଷ୍ୟତି|
8 கடைசியாக, சகோதரர்களே, உண்மையுள்ளவைகள் எவைகளோ, ஒழுக்கமுள்ளவைகள் எவைகளோ, நீதியுள்ளவைகள் எவைகளோ, கற்புள்ளவைகள் எவைகளோ, அன்புள்ளவைகள் எவைகளோ, நற்பெயர் உள்ளவைகள் எவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
ହେ ଭ୍ରାତରଃ, ଶେଷେ ୱଦାମି ଯଦ୍ୟତ୍ ସତ୍ୟମ୍ ଆଦରଣୀଯଂ ନ୍ୟାଯ୍ୟଂ ସାଧୁ ପ୍ରିଯଂ ସୁଖ୍ୟାତମ୍ ଅନ୍ୟେଣ ଯେନ କେନଚିତ୍ ପ୍ରକାରେଣ ୱା ଗୁଣଯୁକ୍ତଂ ପ୍ରଶଂସନୀଯଂ ୱା ଭୱତି ତତ୍ରୈୱ ମନାଂସି ନିଧଧ୍ୱଂ|
9 நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவைகளும், பெற்றுக்கொண்டவைகளும், கேட்டவைகளும், பார்த்தவைகளும் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடு இருப்பார்.
ଯୂଯଂ ମାଂ ଦୃଷ୍ଟ୍ୱା ଶ୍ରୁତ୍ୱା ଚ ଯଦ୍ୟତ୍ ଶିକ୍ଷିତୱନ୍ତୋ ଗୃହୀତୱନ୍ତଶ୍ଚ ତଦେୱାଚରତ ତସ୍ମାତ୍ ଶାନ୍ତିଦାଯକ ଈଶ୍ୱରୋ ଯୁଷ୍ମାଭିଃ ସାର୍ଦ୍ଧଂ ସ୍ଥାସ୍ୟତି|
10 ௧0 என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மீண்டும் அக்கறை கொண்டதினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; முன்னமே இப்படிச் செய்ய நினைத்தீர்கள், ஆனால் உதவிசெய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ମମୋପକାରାଯ ଯୁଷ୍ମାକଂ ଯା ଚିନ୍ତା ପୂର୍ୱ୍ୱମ୍ ଆସୀତ୍ କିନ୍ତୁ କର୍ମ୍ମଦ୍ୱାରଂ ନ ପ୍ରାପ୍ନୋତ୍ ଇଦାନୀଂ ସା ପୁନରଫଲତ୍ ଇତ୍ୟସ୍ମିନ୍ ପ୍ରଭୌ ମମ ପରମାହ୍ଲାଦୋଽଜାଯତ|
11 ௧௧ என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.
ଅହଂ ଯଦ୍ ଦୈନ୍ୟକାରଣାଦ୍ ଇଦଂ ୱଦାମି ତନ୍ନହି ଯତୋ ମମ ଯା କାଚିଦ୍ ଅୱସ୍ଥା ଭୱେତ୍ ତସ୍ୟାଂ ସନ୍ତୋଷ୍ଟୁମ୍ ଅଶିକ୍ଷଯଂ|
12 ௧௨ தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எந்த இடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாக இருக்கவும், பட்டினியாக இருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் கற்றுக்கொண்டேன்.
ଦରିଦ୍ରତାଂ ଭୋକ୍ତୁଂ ଶକ୍ନୋମି ଧନାଢ୍ୟତାମ୍ ଅପି ଭୋକ୍ତୁଂ ଶକ୍ନୋମି ସର୍ୱ୍ୱଥା ସର୍ୱ୍ୱୱିଷଯେଷୁ ୱିନୀତୋଽହଂ ପ୍ରଚୁରତାଂ କ୍ଷୁଧାଞ୍ଚ ଧନଂ ଦୈନ୍ୟଞ୍ଚାୱଗତୋଽସ୍ମି|
13 ௧௩ என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.
ମମ ଶକ୍ତିଦାଯକେନ ଖ୍ରୀଷ୍ଟେନ ସର୍ୱ୍ୱମେୱ ମଯା ଶକ୍ୟଂ ଭୱତି|
14 ௧௪ ஆனாலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடு பங்குகொண்டது நலமாக இருக்கிறது.
କିନ୍ତୁ ଯୁଷ୍ମାଭି ର୍ଦୈନ୍ୟନିୱାରଣାଯ ମାମ୍ ଉପକୃତ୍ୟ ସତ୍କର୍ମ୍ମାକାରି|
15 ௧௫ மேலும், பிலிப்பியரே, நற்செய்தி ஊழியத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, உங்களைத்தவிர வேறு எந்த சபையும் எனக்குப் பணம் கொடுத்து உதவிசெய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியும்.
ହେ ଫିଲିପୀଯଲୋକାଃ, ସୁସଂୱାଦସ୍ୟୋଦଯକାଲେ ଯଦାହଂ ମାକିଦନିଯାଦେଶାତ୍ ପ୍ରତିଷ୍ଠେ ତଦା କେୱଲାନ୍ ଯୁଷ୍ମାନ୍ ୱିନାପରଯା କଯାପି ସମିତ୍ୟା ସହ ଦାନାଦାନଯୋ ର୍ମମ କୋଽପି ସମ୍ବନ୍ଧୋ ନାସୀଦ୍ ଇତି ଯୂଯମପି ଜାନୀଥ|
16 ௧௬ நான் தெசலோனிக்கேயில் இருந்தபோதும், என் குறைவுகளில் உதவிசெய்ய நீங்கள் பலமுறை பணம் அனுப்பி உதவி செய்தீர்கள்.
ଯତୋ ଯୁଷ୍ମାଭି ର୍ମମ ପ୍ରଯୋଜନାଯ ଥିଷଲନୀକୀନଗରମପି ମାଂ ପ୍ରତି ପୁନଃ ପୁନର୍ଦାନଂ ପ୍ରେଷିତଂ|
17 ௧௭ உங்களுடைய உதவிகளை நான் தேடாமல், உங்களுடைய உதவிகளால் உங்களுக்கு வரும் பலன் பெருகுவதையே பார்க்க விரும்புகிறேன்.
ଅହଂ ଯଦ୍ ଦାନଂ ମୃଗଯେ ତନ୍ନହି କିନ୍ତୁ ଯୁଷ୍ମାକଂ ଲାଭୱର୍ଦ୍ଧକଂ ଫଲଂ ମୃଗଯେ|
18 ௧௮ எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
କିନ୍ତୁ ମମ କସ୍ୟାପ୍ୟଭାୱୋ ନାସ୍ତି ସର୍ୱ୍ୱଂ ପ୍ରଚୁରମ୍ ଆସ୍ତେ ଯତ ଈଶ୍ୱରସ୍ୟ ଗ୍ରାହ୍ୟଂ ତୁଷ୍ଟିଜନକଂ ସୁଗନ୍ଧିନୈୱେଦ୍ୟସ୍ୱରୂପଂ ଯୁଷ୍ମାକଂ ଦାନଂ ଇପାଫ୍ରଦିତାଦ୍ ଗୃହୀତ୍ୱାହଂ ପରିତୃପ୍ତୋଽସ୍ମି|
19 ௧௯ என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்களுடைய குறைகளையெல்லாம் கிறிஸ்து இயேசுவிற்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
ମମେଶ୍ୱରୋଽପି ଖ୍ରୀଷ୍ଟେନ ଯୀଶୁନା ସ୍ୱକୀଯୱିଭୱନିଧିତଃ ପ୍ରଯୋଜନୀଯଂ ସର୍ୱ୍ୱୱିଷଯଂ ପୂର୍ଣରୂପଂ ଯୁଷ୍ମଭ୍ୟଂ ଦେଯାତ୍|
20 ௨0 நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ଅସ୍ମାକଂ ପିତୁରୀଶ୍ୱରସ୍ୟ ଧନ୍ୟୱାଦୋଽନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ଭୱତୁ| ଆମେନ୍| (aiōn g165)
21 ௨௧ கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் எல்லோருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடு இருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
ଯୂଯଂ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟୈକୈକଂ ପୱିତ୍ରଜନଂ ନମସ୍କୁରୁତ| ମମ ସଙ୍ଗିଭ୍ରାତରୋ ଯୂଷ୍ମାନ୍ ନମସ୍କୁର୍ୱ୍ୱତେ|
22 ௨௨ பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரண்மனையில் உள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
ସର୍ୱ୍ୱେ ପୱିତ୍ରଲୋକା ୱିଶେଷତଃ କୈସରସ୍ୟ ପରିଜନା ଯୁଷ୍ମାନ୍ ନମସ୍କୁର୍ୱ୍ୱତେ|
23 ௨௩ நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
ଅସ୍ମାକଂ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ପ୍ରସାଦଃ ସର୍ୱ୍ୱାନ୍ ଯୁଷ୍ମାନ୍ ପ୍ରତି ଭୂଯାତ୍| ଆମେନ୍|

< பிலிப்பியர் 4 >