< வெளிப்படுத்தின விசேஷம் 11 >
1 ௧ பின்பு கைத்தடி போன்ற ஒரு அளவுகோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னைப் பார்த்து: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்து பார்.
১অনন্তরং পরিমাণদণ্ডৱদ্ একো নলো মহ্যমদাযি, স চ দূত উপতিষ্ঠন্ মাম্ অৱদৎ, উত্থাযেশ্ৱরস্য মন্দিরং ৱেদীং তত্রত্যসেৱকাংশ্চ মিমীষ্ৱ|
2 ௨ ஆலயத்திற்கு வெளியே இருக்கிற முற்றம் யூதரல்லாதவர்களுக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளக்கவேண்டாம்; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதங்கள்வரைக்கும் மிதிப்பார்கள்.
২কিন্তু মন্দিরস্য বহিঃপ্রাঙ্গণং ত্যজ ন মিমীষ্ৱ যতস্তদ্ অন্যজাতীযেভ্যো দত্তং, পৱিত্রং নগরঞ্চ দ্ৱিচৎৱারিংশন্মাসান্ যাৱৎ তেষাং চরণৈ র্মর্দ্দিষ্যতে|
3 ௩ என்னுடைய இரண்டு சாட்சிகளும் துக்கத்திற்கான சாக்கு ஆடை அணிந்துகொண்டவர்களாக, ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள்வரை தீர்க்கதரிசனம் சொல்லுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
৩পশ্চাৎ মম দ্ৱাভ্যাং সাক্ষিভ্যাং মযা সামর্থ্যং দাযিষ্যতে তাৱুষ্ট্রলোমজৱস্ত্রপরিহিতৌ ষষ্ঠ্যধিকদ্ৱিশতাধিকসহস্রদিনানি যাৱদ্ ভৱিষ্যদ্ৱাক্যানি ৱদিষ্যতঃ|
4 ௪ பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
৪তাৱেৱ জগদীশ্ৱরস্যান্তিকে তিষ্ঠন্তৌ জিতৱৃক্ষৌ দীপৱৃক্ষৌ চ|
5 ௫ ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய எதிராளிகளை அழிக்கும்; யாராவது அவர்களைச் சேதப்படுத்த நினைத்தால், அவனும் அப்படியே கொல்லப்படவேண்டும்.
৫যদি কেচিৎ তৌ হিংসিতুং চেষ্টন্তে তর্হি তযো র্ৱদনাভ্যাম্ অগ্নি র্নির্গত্য তযোঃ শত্রূন্ ভস্মীকরিষ্যতি| যঃ কশ্চিৎ তৌ হিংসিতুং চেষ্টতে তেনৈৱমেৱ ৱিনষ্টৱ্যং|
6 ௬ அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாட்களிலே மழைபெய்யாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டியபோதெல்லாம் பூமியை எல்லாவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
৬তযো র্ভৱিষ্যদ্ৱাক্যকথনদিনেষু যথা ৱৃষ্টি র্ন জাযতে তথা গগনং রোদ্ধুং তযোঃ সামর্থ্যম্ অস্তি, অপরং তোযানি শোণিতরূপাণি কর্ত্তুং নিজাভিলাষাৎ মুহুর্মুহুঃ সর্ৱ্ৱৱিধদণ্ডৈঃ পৃথিৱীম্ আহন্তুঞ্চ তযোঃ সামর্থ্যমস্তি|
7 ௭ அவர்கள் தங்களுடைய சாட்சியைச் சொல்லி முடிக்கும்போது, பாதாளத்தில் இருந்து மேலே ஏறி வருகிற மிருகம் அவர்களோடு யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (Abyssos )
৭অপরং তযোঃ সাক্ষ্যে সমাপ্তে সতি রসাতলাদ্ যেনোত্থিতৱ্যং স পশুস্তাভ্যাং সহ যুদ্ধ্ৱা তৌ জেষ্যতি হনিষ্যতি চ| (Abyssos )
8 ௮ அவர்களுடைய உடல்கள், நம்முடைய கர்த்தர் சிலுவையிலே அறையப்பட்ட மகா நகரத்தின் வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் அடையாளமாகச் சொல்லப்படும்.
৮ততস্তযোঃ প্রভুরপি যস্যাং মহাপুর্য্যাং ক্রুশে হতো ঽর্থতো যস্যাঃ পারমার্থিকনামনী সিদোমং মিসরশ্চেতি তস্যা মহাপুর্য্যাংঃ সন্নিৱেশে তযোঃ কুণপে স্থাস্যতঃ|
9 ௯ மக்களிலும், கோத்திரங்களிலும், பல மொழிக்காரர்களும், பல தேசங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாட்கள்வரை பார்ப்பார்கள், ஆனால், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்க அனுமதிக்கமாட்டார்கள்.
৯ততো নানাজাতীযা নানাৱংশীযা নানাভাষাৱাদিনো নানাদেশীযাশ্চ বহৱো মানৱাঃ সার্দ্ধদিনত্রযং তযোঃ কুণপে নিরীক্ষিষ্যন্তে, তযোঃ কুণপযোঃ শ্মশানে স্থাপনং নানুজ্ঞাস্যন্তি|
10 ௧0 அந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் மக்களை வேதனைப்படுத்தினதினால் அவர்களுக்காக பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.
১০পৃথিৱীনিৱাসিনশ্চ তযো র্হেতোরানন্দিষ্যন্তি সুখভোগং কুর্ৱ্ৱন্তঃ পরস্পরং দানানি প্রেষযিষ্যন্তি চ যতস্তাভ্যাং ভৱিষ্যদ্ৱাদিভ্যাং পৃথিৱীনিৱাসিনো যাতনাং প্রাপ্তাঃ|
11 ௧௧ மூன்றரை நாட்களுக்குப்பின்பு தேவனிடத்தில் இருந்து ஜீவ சுவாசம் அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் கால் ஊன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு அதிக பயம் உண்டானது.
১১তস্মাৎ সার্দ্ধদিনত্রযাৎ পরম্ ঈশ্ৱরাৎ জীৱনদাযক আত্মনি তৌ প্রৱিষ্টে তৌ চরণৈরুদতিষ্ঠতাং, তেন যাৱন্তস্তাৱপশ্যন্ তে ঽতীৱ ত্রাসযুক্তা অভৱন্|
12 ௧௨ இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து அவர்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய எதிராளிகள் அவர்களைப் பார்த்தார்கள்.
১২ততঃ পরং তৌ স্ৱর্গাদ্ উচ্চৈরিদং কথযন্তং রৱম্ অশৃণুতাং যুৱাং স্থানম্ এতদ্ আরোহতাং ততস্তযোঃ শত্রুষু নিরীক্ষমাণেষু তৌ মেঘেন স্ৱর্গম্ আরূঢৱন্তৌ|
13 ௧௩ அந்த நேரத்திலே பூமி அதிகமாக அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்தில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது; மனிதர்களில் ஏழாயிரம்பேர் பூமி அதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதி இருந்தவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
১৩তদ্দণ্ডে মহাভূমিকম্পে জাতে পুর্য্যা দশমাংশঃ পতিতঃ সপ্তসহস্রাণি মানুষাশ্চ তেন ভূমিকম্পেন হতাঃ, অৱশিষ্টাশ্চ ভযং গৎৱা স্ৱর্গীযেশ্ৱরস্য প্রশংসাম্ অকীর্ত্তযন্|
14 ௧௪ இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது.
১৪দ্ৱিতীযঃ সন্তাপো গতঃ পশ্য তৃতীযঃ সন্তাপস্তূর্ণম্ আগচ্ছতি|
15 ௧௫ ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவிற்குரிய ராஜ்யங்களானது; அவர் எல்லாக் காலங்களிலும் ராஜ்யங்களை ஆளுவார் என்ற சத்தங்கள் வானத்தில் உண்டானது. (aiōn )
১৫অনন্তরং সপ্তদূতেন তূর্য্যাং ৱাদিতাযাং স্ৱর্গ উচ্চৈঃ স্ৱরৈর্ৱাগিযং কীর্ত্তিতা, রাজৎৱং জগতো যদ্যদ্ রাজ্যং তদধুনাভৱৎ| অস্মৎপ্রভোস্তদীযাভিষিক্তস্য তারকস্য চ| তেন চানন্তকালীযং রাজৎৱং প্রকরিষ্যতে|| (aiōn )
16 ௧௬ அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்களுடைய சிங்காசனங்கள்மேல் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து:
১৬অপরম্ ঈশ্ৱরস্যান্তিকে স্ৱকীযসিংহাসনেষূপৱিষ্টাশ্চতুর্ৱিংশতিপ্রাচীনা ভুৱি ন্যঙ্ভূখা ভূৎৱেশ্ৱরং প্রণম্যাৱদন্,
17 ௧௭ “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக் கொண்டு ராஜ்யங்களை ஆளுகிறீர்.
১৭হে ভূত ৱর্ত্তমানাপি ভৱিষ্যংশ্চ পরেশ্ৱর| হে সর্ৱ্ৱশক্তিমন্ স্ৱামিন্ ৱযং তে কুর্ম্মহে স্তৱং| যৎ ৎৱযা ক্রিযতে রাজ্যং গৃহীৎৱা তে মহাবলং|
18 ௧௮ தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது” என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
১৮ৱিজাতীযেষু কুপ্যৎসু প্রাদুর্ভূতা তৱ ক্রুধা| মৃতানামপি কালো ঽসৌ ৱিচারো ভৱিতা যদা| ভৃত্যাশ্চ তৱ যাৱন্তো ভৱিষ্যদ্ৱাদিসাধৱঃ| যে চ ক্ষুদ্রা মহান্তো ৱা নামতস্তে হি বিভ্যতি| যদা সর্ৱ্ৱেভ্য এতেভ্যো ৱেতনং ৱিতরিষ্যতে| গন্তৱ্যশ্চ যদা নাশো ৱসুধাযা ৱিনাশকৈঃ||
19 ௧௯ அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமி அதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டானது.
১৯অনন্তরম্ ঈশ্ৱরস্য স্ৱর্গস্থমন্দিরস্য দ্ৱারং মুক্তং তন্মন্দিরমধ্যে চ নিযমমঞ্জূষা দৃশ্যাভৱৎ, তেন তডিতো রৱাঃ স্তনিতানি ভূমিকম্পো গুরুতরশিলাৱৃষ্টিশ্চৈতানি সমভৱন্|