< வெளிப்படுத்தின விசேஷம் 17 >
1 ௧ ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
১তদনন্তরং তেষাং সপ্তকংসধারিণাং সপ্তদূতানাম্ এক আগত্য মাং সম্ভাষ্যাৱদৎ, অত্রাগচ্ছ, মেদিন্যা নরপতযো যযা ৱেশ্যযা সার্দ্ধং ৱ্যভিচারকর্ম্ম কৃতৱন্তঃ,
2 ௨ அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
২যস্যা ৱ্যভিচারমদেন চ পৃথিৱীনিৱাসিনো মত্তা অভৱন্ তস্যা বহুতোযেষূপৱিষ্টাযা মহাৱেশ্যাযা দণ্ডম্ অহং ৎৱাং দর্শযামি|
3 ௩ ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
৩ততো ঽহম্ আত্মনাৱিষ্টস্তেন দূতেন প্রান্তরং নীতস্তত্র নিন্দানামভিঃ পরিপূর্ণং সপ্তশিরোভি র্দশশৃঙ্গৈশ্চ ৱিশিষ্টং সিন্দূরৱর্ণং পশুমুপৱিষ্টা যোষিদেকা মযা দৃষ্টা|
4 ௪ அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
৪সা নারী কৃষ্ণলোহিতৱর্ণং সিন্দূরৱর্ণঞ্চ পরিচ্ছদং ধারযতি স্ৱর্ণমণিমুক্তাভিশ্চ ৱিভূষিতাস্তি তস্যাঃ করে ঘৃণার্হদ্রৱ্যৈঃ স্ৱৱ্যভিচারজাতমলৈশ্চ পরিপূর্ণ একঃ সুৱর্ণমযঃ কংসো ৱিদ্যতে|
5 ௫ மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
৫তস্যা ভালে নিগূঢৱাক্যমিদং পৃথিৱীস্থৱেশ্যানাং ঘৃণ্যক্রিযাণাঞ্চ মাতা মহাবাবিলিতি নাম লিখিতম্ আস্তে|
6 ௬ அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
৬মম দৃষ্টিগোচরস্থা সা নারী পৱিত্রলোকানাং রুধিরেণ যীশোঃ সাক্ষিণাং রুধিরেণ চ মত্তাসীৎ তস্যা দর্শনাৎ মমাতিশযম্ আশ্চর্য্যজ্ঞানং জাতং|
7 ௭ அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
৭ততঃ স দূতো মাম্ অৱদৎ কুতস্তৱাশ্চর্য্যজ্ঞানং জাযতে? অস্যা যোষিতস্তদ্ৱাহনস্য সপ্তশিরোভি র্দশশৃঙ্গৈশ্চ যুক্তস্য পশোশ্চ নিগূঢভাৱম্ অহং ৎৱাং জ্ঞাপযামি|
8 ௮ நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos )
৮ৎৱযা দৃষ্টো ঽসৌ পশুরাসীৎ নেদানীং ৱর্ত্ততে কিন্তু রসাতলাৎ তেনোদেতৱ্যং ৱিনাশশ্চ গন্তৱ্যঃ| ততো যেষাং নামানি জগতঃ সৃষ্টিকালম্ আরভ্য জীৱনপুস্তকে লিখিতানি ন ৱিদ্যন্তে তে পৃথিৱীনিৱাসিনো ভূতম্ অৱর্ত্তমানমুপস্থাস্যন্তঞ্চ তং পশুং দৃষ্ট্ৱাশ্চর্য্যং মংস্যন্তে| (Abyssos )
9 ௯ ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
৯অত্র জ্ঞানযুক্তযা বুদ্ধ্যা প্রকাশিতৱ্যং| তানি সপ্তশিরাংসি তস্যা যোষিত উপৱেশনস্থানস্ৱরূপাঃ সপ্তগিরযঃ সপ্ত রাজানশ্চ সন্তি|
10 ௧0 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
১০তেষাং পঞ্চ পতিতা একশ্চ ৱর্ত্তমানঃ শেষশ্চাদ্যাপ্যনুপস্থিতঃ স যদোপস্থাস্যতি তদাপি তেনাল্পকালং স্থাতৱ্যং|
11 ௧௧ இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
১১যঃ পশুরাসীৎ কিন্ত্ৱিদানীং ন ৱর্ত্ততে স এৱাষ্টমঃ, স সপ্তানাম্ একো ঽস্তি ৱিনাশং গমিষ্যতি চ|
12 ௧௨ நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
১২ৎৱযা দৃষ্টানি দশশৃঙ্গাণ্যপি দশ রাজানঃ সন্তিঃ, অদ্যাপি তৈ রাজ্যং ন প্রাপ্তং কিন্তু মুহূর্ত্তমেকং যাৱৎ পশুনা সার্দ্ধং তে রাজান ইৱ প্রভুৎৱং প্রাপ্স্যন্তি|
13 ௧௩ இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
১৩ত একমন্ত্রণা ভৱিষ্যন্তি স্ৱকীযশক্তিপ্রভাৱৌ পশৱে দাস্যন্তি চ|
14 ௧௪ இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
১৪তে মেষশাৱকেন সার্দ্ধং যোৎস্যন্তি, কিন্তু মেষশাৱকস্তান্ জেষ্যতি যতঃ স প্রভূনাং প্রভূ রাজ্ঞাং রাজা চাস্তি তস্য সঙ্গিনো ঽপ্যাহূতা অভিরুচিতা ৱিশ্ৱাস্যাশ্চ|
15 ௧௫ பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
১৫অপরং স মাম্ অৱদৎ সা ৱেশ্যা যত্রোপৱিশতি তানি তোযানি লোকা জনতা জাতযো নানাভাষাৱাদিনশ্চ সন্তি|
16 ௧௬ நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
১৬ৎৱযা দৃষ্টানি দশ শৃঙ্গাণি পশুশ্চেমে তাং ৱেশ্যাম্ ঋতীযিষ্যন্তে দীনাং নগ্নাঞ্চ করিষ্যন্তি তস্যা মাংসানি ভোক্ষ্যন্তে ৱহ্নিনা তাং দাহযিষ্যন্তি চ|
17 ௧௭ தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
১৭যত ঈশ্ৱরস্য ৱাক্যানি যাৱৎ সিদ্ধিং ন গমিষ্যন্তি তাৱদ্ ঈশ্ৱরস্য মনোগতং সাধযিতুম্ একাং মন্ত্রণাং কৃৎৱা তস্মৈ পশৱে স্ৱেষাং রাজ্যং দাতুঞ্চ তেষাং মনাংসীশ্ৱরেণ প্রৱর্ত্তিতানি|
18 ௧௮ நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
১৮অপরং ৎৱযা দৃষ্টা যোষিৎ সা মহানগরী যা পৃথিৱ্যা রাজ্ঞাম্ উপরি রাজৎৱং কুরুতে|