< பிலிப்பியர் 1 >
1 ௧ இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது:
ಪೌಲತೀಮಥಿನಾಮಾನೌ ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ದಾಸೌ ಫಿಲಿಪಿನಗರಸ್ಥಾನ್ ಖ್ರೀಷ್ಟಯೀಶೋಃ ಸರ್ವ್ವಾನ್ ಪವಿತ್ರಲೋಕಾನ್ ಸಮಿತೇರಧ್ಯಕ್ಷಾನ್ ಪರಿಚಾರಕಾಂಶ್ಚ ಪ್ರತಿ ಪತ್ರಂ ಲಿಖತಃ|
2 ௨ நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ಅಸ್ಮಾಕಂ ತಾತ ಈಶ್ವರಃ ಪ್ರಭು ರ್ಯೀಶುಖ್ರೀಷ್ಟಶ್ಚ ಯುಷ್ಮಭ್ಯಂ ಪ್ರಸಾದಸ್ಯ ಶಾನ್ತೇಶ್ಚ ಭೋಗಂ ದೇಯಾಸ್ತಾಂ|
3 ௩ நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால்,
ಅಹಂ ನಿರನ್ತರಂ ನಿಜಸರ್ವ್ವಪ್ರಾರ್ಥನಾಸು ಯುಷ್ಮಾಕಂ ಸರ್ವ್ವೇಷಾಂ ಕೃತೇ ಸಾನನ್ದಂ ಪ್ರಾರ್ಥನಾಂ ಕುರ್ವ್ವನ್
4 ௪ நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி,
ಯತಿ ವಾರಾನ್ ಯುಷ್ಮಾಕಂ ಸ್ಮರಾಮಿ ತತಿ ವಾರಾನ್ ಆ ಪ್ರಥಮಾದ್ ಅದ್ಯ ಯಾವದ್
5 ௫ உங்களில் நல்லசெயல்களைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்வரை நடத்திவருவார் என்று நம்பி,
ಯುಷ್ಮಾಕಂ ಸುಸಂವಾದಭಾಗಿತ್ವಕಾರಣಾದ್ ಈಶ್ವರಂ ಧನ್ಯಂ ವದಾಮಿ|
6 ௬ நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
ಯುಷ್ಮನ್ಮಧ್ಯೇ ಯೇನೋತ್ತಮಂ ಕರ್ಮ್ಮ ಕರ್ತ್ತುಮ್ ಆರಮ್ಭಿ ತೇನೈವ ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ದಿನಂ ಯಾವತ್ ತತ್ ಸಾಧಯಿಷ್ಯತ ಇತ್ಯಸ್ಮಿನ್ ದೃಢವಿಶ್ವಾಸೋ ಮಮಾಸ್ತೇ|
7 ௭ என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது.
ಯುಷ್ಮಾನ್ ಸರ್ವ್ವಾನ್ ಅಧಿ ಮಮ ತಾದೃಶೋ ಭಾವೋ ಯಥಾರ್ಥೋ ಯತೋಽಹಂ ಕಾರಾವಸ್ಥಾಯಾಂ ಪ್ರತ್ಯುತ್ತರಕರಣೇ ಸುಸಂವಾದಸ್ಯ ಪ್ರಾಮಾಣ್ಯಕರಣೇ ಚ ಯುಷ್ಮಾನ್ ಸರ್ವ್ವಾನ್ ಮಯಾ ಸಾರ್ದ್ಧಮ್ ಏಕಾನುಗ್ರಹಸ್ಯ ಭಾಗಿನೋ ಮತ್ವಾ ಸ್ವಹೃದಯೇ ಧಾರಯಾಮಿ|
8 ௮ இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
ಅಪರಮ್ ಅಹಂ ಖ್ರೀಷ್ಟಯೀಶೋಃ ಸ್ನೇಹವತ್ ಸ್ನೇಹೇನ ಯುಷ್ಮಾನ್ ಕೀದೃಶಂ ಕಾಙ್ಕ್ಷಾಮಿ ತದಧೀಶ್ವರೋ ಮಮ ಸಾಕ್ಷೀ ವಿದ್ಯತೇ|
9 ௯ மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,
ಮಯಾ ಯತ್ ಪ್ರಾರ್ಥ್ಯತೇ ತದ್ ಇದಂ ಯುಷ್ಮಾಕಂ ಪ್ರೇಮ ನಿತ್ಯಂ ವೃದ್ಧಿಂ ಗತ್ವಾ
10 ௧0 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
ಜ್ಞಾನಸ್ಯ ವಿಶಿಷ್ಟಾನಾಂ ಪರೀಕ್ಷಿಕಾಯಾಶ್ಚ ಸರ್ವ್ವವಿಧಬುದ್ಧೇ ರ್ಬಾಹುಲ್ಯಂ ಫಲತು,
11 ௧௧ நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ದಿನಂ ಯಾವದ್ ಯುಷ್ಮಾಕಂ ಸಾರಲ್ಯಂ ನಿರ್ವಿಘ್ನತ್ವಞ್ಚ ಭವತು, ಈಶ್ವರಸ್ಯ ಗೌರವಾಯ ಪ್ರಶಂಸಾಯೈ ಚ ಯೀಶುನಾ ಖ್ರೀಷ್ಟೇನ ಪುಣ್ಯಫಲಾನಾಂ ಪೂರ್ಣತಾ ಯುಷ್ಮಭ್ಯಂ ದೀಯತಾಮ್ ಇತಿ|
12 ௧௨ சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
ಹೇ ಭ್ರಾತರಃ, ಮಾಂ ಪ್ರತಿ ಯದ್ ಯದ್ ಘಟಿತಂ ತೇನ ಸುಸಂವಾದಪ್ರಚಾರಸ್ಯ ಬಾಧಾ ನಹಿ ಕಿನ್ತು ವೃದ್ಧಿರೇವ ಜಾತಾ ತದ್ ಯುಷ್ಮಾನ್ ಜ್ಞಾಪಯಿತುಂ ಕಾಮಯೇಽಹಂ|
13 ௧௩ அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,
ಅಪರಮ್ ಅಹಂ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಕೃತೇ ಬದ್ಧೋಽಸ್ಮೀತಿ ರಾಜಪುರ್ಯ್ಯಾಮ್ ಅನ್ಯಸ್ಥಾನೇಷು ಚ ಸರ್ವ್ವೇಷಾಂ ನಿಕಟೇ ಸುಸ್ಪಷ್ಟಮ್ ಅಭವತ್,
14 ௧௪ சகோதரர்களில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் தைரியம்கொண்டு பயம் இல்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாகத் துணிந்திருக்கிறார்கள்.
ಪ್ರಭುಸಮ್ಬನ್ಧೀಯಾ ಅನೇಕೇ ಭ್ರಾತರಶ್ಚ ಮಮ ಬನ್ಧನಾದ್ ಆಶ್ವಾಸಂ ಪ್ರಾಪ್ಯ ವರ್ದ್ಧಮಾನೇನೋತ್ಸಾಹೇನ ನಿಃಕ್ಷೋಭಂ ಕಥಾಂ ಪ್ರಚಾರಯನ್ತಿ|
15 ௧௫ சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
ಕೇಚಿದ್ ದ್ವೇಷಾದ್ ವಿರೋಧಾಚ್ಚಾಪರೇ ಕೇಚಿಚ್ಚ ಸದ್ಭಾವಾತ್ ಖ್ರೀಷ್ಟಂ ಘೋಷಯನ್ತಿ;
16 ௧௬ சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
ಯೇ ವಿರೋಧಾತ್ ಖ್ರೀಷ್ಟಂ ಘೋಷಯನ್ತಿ ತೇ ಪವಿತ್ರಭಾವಾತ್ ತನ್ನ ಕುರ್ವ್ವನ್ತೋ ಮಮ ಬನ್ಧನಾನಿ ಬಹುತರಕ್ಲೋಶದಾಯೀನಿ ಕರ್ತ್ತುಮ್ ಇಚ್ಛನ್ತಿ|
17 ௧௭ நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
ಯೇ ಚ ಪ್ರೇಮ್ನಾ ಘೋಷಯನ್ತಿ ತೇ ಸುಸಂವಾದಸ್ಯ ಪ್ರಾಮಾಣ್ಯಕರಣೇಽಹಂ ನಿಯುಕ್ತೋಽಸ್ಮೀತಿ ಜ್ಞಾತ್ವಾ ತತ್ ಕುರ್ವ್ವನ್ತಿ|
18 ௧௮ இதனால் என்ன? ஏமாற்றுவதினாலோ, உண்மையினாலோ, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்படுவேன்.
ಕಿಂ ಬಹುನಾ? ಕಾಪಟ್ಯಾತ್ ಸರಲಭಾವಾದ್ ವಾ ಭವೇತ್, ಯೇನ ಕೇನಚಿತ್ ಪ್ರಕಾರೇಣ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಘೋಷಣಾ ಭವತೀತ್ಯಸ್ಮಿನ್ ಅಹಮ್ ಆನನ್ದಾಮ್ಯಾನನ್ದಿಷ್ಯಾಮಿ ಚ|
19 ௧௯ அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன்.
ಯುಷ್ಮಾಕಂ ಪ್ರಾರ್ಥನಯಾ ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯಾತ್ಮನಶ್ಚೋಪಕಾರೇಣ ತತ್ ಮನ್ನಿಸ್ತಾರಜನಕಂ ಭವಿಷ್ಯತೀತಿ ಜಾನಾಮಿ|
20 ௨0 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும்.
ತತ್ರ ಚ ಮಮಾಕಾಙ್ಕ್ಷಾ ಪ್ರತ್ಯಾಶಾ ಚ ಸಿದ್ಧಿಂ ಗಮಿಷ್ಯತಿ ಫಲತೋಽಹಂ ಕೇನಾಪಿ ಪ್ರಕಾರೇಣ ನ ಲಜ್ಜಿಷ್ಯೇ ಕಿನ್ತು ಗತೇ ಸರ್ವ್ವಸ್ಮಿನ್ ಕಾಲೇ ಯದ್ವತ್ ತದ್ವದ್ ಇದಾನೀಮಪಿ ಸಮ್ಪೂರ್ಣೋತ್ಸಾಹದ್ವಾರಾ ಮಮ ಶರೀರೇಣ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಮಹಿಮಾ ಜೀವನೇ ಮರಣೇ ವಾ ಪ್ರಕಾಶಿಷ್ಯತೇ|
21 ௨௧ கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.
ಯತೋ ಮಮ ಜೀವನಂ ಖ್ರೀಷ್ಟಾಯ ಮರಣಞ್ಚ ಲಾಭಾಯ|
22 ௨௨ ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது.
ಕಿನ್ತು ಯದಿ ಶರೀರೇ ಮಯಾ ಜೀವಿತವ್ಯಂ ತರ್ಹಿ ತತ್ ಕರ್ಮ್ಮಫಲಂ ಫಲಿಷ್ಯತಿ ತಸ್ಮಾತ್ ಕಿಂ ವರಿತವ್ಯಂ ತನ್ಮಯಾ ನ ಜ್ಞಾಯತೇ|
23 ௨௩ ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்;
ದ್ವಾಭ್ಯಾಮ್ ಅಹಂ ಸಮ್ಪೀಡ್ಯೇ, ದೇಹವಾಸತ್ಯಜನಾಯ ಖ್ರೀಷ್ಟೇನ ಸಹವಾಸಾಯ ಚ ಮಮಾಭಿಲಾಷೋ ಭವತಿ ಯತಸ್ತತ್ ಸರ್ವ್ವೋತ್ತಮಂ|
24 ௨௪ அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
ಕಿನ್ತು ದೇಹೇ ಮಮಾವಸ್ಥಿತ್ಯಾ ಯುಷ್ಮಾಕಮ್ ಅಧಿಕಪ್ರಯೋಜನಂ|
25 ௨௫ இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக,
ಅಹಮ್ ಅವಸ್ಥಾಸ್ಯೇ ಯುಷ್ಮಾಭಿಃ ಸರ್ವ್ವೈಃ ಸಾರ್ದ್ಧಮ್ ಅವಸ್ಥಿತಿಂ ಕರಿಷ್ಯೇ ಚ ತಯಾ ಚ ವಿಶ್ವಾಸೇ ಯುಷ್ಮಾಕಂ ವೃದ್ಧ್ಯಾನನ್ದೌ ಜನಿಷ್ಯೇತೇ ತದಹಂ ನಿಶ್ಚಿತಂ ಜಾನಾಮಿ|
26 ௨௬ உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்.
ತೇನ ಚ ಮತ್ತೋಽರ್ಥತೋ ಯುಷ್ಮತ್ಸಮೀಪೇ ಮಮ ಪುನರುಪಸ್ಥಿತತ್ವಾತ್ ಯೂಯಂ ಖ್ರೀಷ್ಟೇನ ಯೀಶುನಾ ಬಹುತರಮ್ ಆಹ್ಲಾದಂ ಲಪ್ಸ್ಯಧ್ವೇ|
27 ௨௭ நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.
ಯೂಯಂ ಸಾವಧಾನಾ ಭೂತ್ವಾ ಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಸುಸಂವಾದಸ್ಯೋಪಯುಕ್ತಮ್ ಆಚಾರಂ ಕುರುಧ್ವಂ ಯತೋಽಹಂ ಯುಷ್ಮಾನ್ ಉಪಾಗತ್ಯ ಸಾಕ್ಷಾತ್ ಕುರ್ವ್ವನ್ ಕಿಂ ವಾ ದೂರೇ ತಿಷ್ಠನ್ ಯುಷ್ಮಾಕಂ ಯಾಂ ವಾರ್ತ್ತಾಂ ಶ್ರೋತುಮ್ ಇಚ್ಛಾಮಿ ಸೇಯಂ ಯೂಯಮ್ ಏಕಾತ್ಮಾನಸ್ತಿಷ್ಠಥ, ಏಕಮನಸಾ ಸುಸಂವಾದಸಮ್ಬನ್ಧೀಯವಿಶ್ವಾಸಸ್ಯ ಪಕ್ಷೇ ಯತಧ್ವೇ, ವಿಪಕ್ಷೈಶ್ಚ ಕೇನಾಪಿ ಪ್ರಕಾರೇಣ ನ ವ್ಯಾಕುಲೀಕ್ರಿಯಧ್ವ ಇತಿ|
28 ௨௮ நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
ತತ್ ತೇಷಾಂ ವಿನಾಶಸ್ಯ ಲಕ್ಷಣಂ ಯುಷ್ಮಾಕಞ್ಚೇಶ್ವರದತ್ತಂ ಪರಿತ್ರಾಣಸ್ಯ ಲಕ್ಷಣಂ ಭವಿಷ್ಯತಿ|
29 ௨௯ ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ಯತೋ ಯೇನ ಯುಷ್ಮಾಭಿಃ ಖ್ರೀಷ್ಟೇ ಕೇವಲವಿಶ್ವಾಸಃ ಕ್ರಿಯತೇ ತನ್ನಹಿ ಕಿನ್ತು ತಸ್ಯ ಕೃತೇ ಕ್ಲೇಶೋಽಪಿ ಸಹ್ಯತೇ ತಾದೃಶೋ ವರಃ ಖ್ರೀಷ್ಟಸ್ಯಾನುರೋಧಾದ್ ಯುಷ್ಮಾಭಿಃ ಪ್ರಾಪಿ,
30 ௩0 நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
ತಸ್ಮಾತ್ ಮಮ ಯಾದೃಶಂ ಯುದ್ಧಂ ಯುಷ್ಮಾಭಿರದರ್ಶಿ ಸಾಮ್ಪ್ರತಂ ಶ್ರೂಯತೇ ಚ ತಾದೃಶಂ ಯುದ್ಧಂ ಯುಷ್ಮಾಕಮ್ ಅಪಿ ಭವತಿ|