< மாற்கு 16 >

1 ஓய்வுநாளுக்குப்பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்கு வாசனைத் திரவியங்களை வாங்கிக்கொண்டு.
अगली संझा जालू सब्ते दे दा रोज होई गिया, तां उना जनानियां जिना दे नां मरियम मगदलीनी, याकूबे दी मां मरियम, सलोमी उना सुगंध बालियां चिंजा खरीदियां, ताकि यीशुऐ दिया लाशा पर मलन, क्योंकि ऐ सारा यहूदियां दा रिती रिबाजा था।
2 வாரத்தின் முதலாம்நாளின் அதிகாலையிலே சூரியன் உதிக்கிறபோது கல்லறைக்கு வந்து,
ब्यागा तड़के तुआरे बाले दिने, सै कबरां पर गियां,
3 கல்லறையின் வாசலில் இருக்கிற கல்லை நமக்காக யார் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
कने अपु चे बोला दियां थियां की, “साड़े तांई कबरां दे रखयो बडे कने भारी पथरे जो कुण हटांगा?”
4 அந்தக் கல் மிகவும் பெரிதாக இருந்தது; அவர்கள் பார்த்தபோது, அந்தக் கல் தள்ளப்பட்டிருப்பத்தைப் பார்த்தார்கள்.
पर जालू उना यीशुऐ दी कबरा पासे दिखया, तां दिखया की सै पथर तां पेहले ला ही हटया होया है।
5 அவர்கள் கல்லறைக்குள் சென்று, வெள்ளை அங்கி அணிந்த ஒரு வாலிபன் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பயந்தார்கள்.
कने जालू सै कबरा दे बखे पुजियां कने अंदर गियां, उना ओथु इक नौजवान जागते जो चिट्टे चमकदार कपड़े पाई करी उदे सजे पासे बैठया दिखया, कने सै बड़ियां हेरान होईयां कने डरी गियां।
6 அவன் அவர்களைப் பார்த்து: பயப்படாமல் இருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிரோடு எழுந்தார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்.
उनी जवान माणुऐ उना जनानियां जो बोलया, डरा मत, तुसां यीशु नासरत बाले जो तोपा दियां न, जिसयो सूली पर चढ़ाया था। सै जिन्दा होई गिया है, ऐथू नी है; दिखा ऐ सेई जगा है, जिथू उना उसयो रखया था।
7 நீங்கள் அவருடைய சீடர்களிடமும் பேதுருவிடமும்போய்: உங்களுக்கு முன்னே அவர் கலிலேயாவிற்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைப் பார்ப்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
पर हुण तुसां जा, कने ऐ गल्ल तुसां पतरस कने यीशुऐ दे बाकी चेलयां जो बोला की यीशुऐ तुहांजो ला पेहले गलील प्रदेशे जो जाणा है, जियां उनी तुहांजो ने बोलया था, तुसां उसयो ओथु दिखणा है।
8 அவர்கள் பயந்து நடுங்கி, சீக்கிரமாக வெளியே வந்து, கல்லறையைவிட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமல் போனார்கள்.
जालू उना ऐ सुणया, तालू सै कबरां ला निकली करी नठी गियां क्योंकि सै घबराई करी कमी पियाँ थियां। कने उना रस्ते च कुसी होरसी ने कुछ नी बोलया।
9 (note: The most reliable and earliest manuscripts do not include Mark 16:9-20.) வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு உயிரோடு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதலாக தரிசனமானார்.
(note: The most reliable and earliest manuscripts do not include Mark 16:9-20.) हफ्ते दे पेहले तुआरे ब्याग होंदे ही सै जिन्दा होईकरी सबना ला पेहले यीशु मरियम मगदलीनी जो मिल्ला, जिसा चे उनी सत बुरियां आत्मा कडियां थियां।
10 ௧0 அவளிடமிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டுப்போய், இயேசுவுடன் இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கும்போது, அவர்களுக்கு அந்தச் செய்தியைச் சொன்னாள்.
सै यीशु दे चेलयां बाली गेई, चेले बड़े भरी गमे च थे कने रोआ दे थे, उना जड़ा कुछ उना दिखया था, सै उना जो सुणाया।
11 ௧௧ அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவள் இயேசுவைப் பார்த்தாள் என்றும் அவள் சொன்னபோது, இவர்கள் நம்பவில்லை.
पर जालू उना उसा ला सुणया की यीशु जिन्दा है, कने उना उसयो दिखया है, उना भरोसा नी किता।
12 ௧௨ அதற்குப்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்திற்கு நடந்து போகிறபொழுது அவர்களுக்கு வேறு உருவத்தில் தரிசனமானார்.
उदे बाद यीशु दुज्जे दो होर चेलयां सामणे आया, जड़े यरूशलेमे शेहरे ला अपणे घरे जो ओआ दे थे, पर पेहले उना उसयो नी पछाणा, क्योंकि उदी भेस भुशा पेहले ला लग थी।
13 ௧௩ அவர்களும்போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
जालू उना जाणी लिया सै कुण है, तालू सै दौड़ी करी दुज्जयां जो दसणा गे, पर उना भी भरोसा नी किता।
14 ௧௪ அதற்குப்பின்பு பதினொருபேரும் சாப்பிடும்போது அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிரோடு எழுந்திருந்த அவரைப் பார்த்தவர்களை அவர்கள் நம்பாமல் போனதினால் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார்.
इदे बाद यीशु उना गयारां चेलयां जो भी मिल्ला, जालू सै रोटी खाणां बैठयो थे, तां यीशुऐ उना जो झिड़कया, क्योंकि यीशुऐ जो जिन्दा होणे बाद दिखया, फिरी भी उना भरोसा नी कितया था।
15 ௧௫ பின்பு, அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் உலகமெங்கும்போய், எல்லோருக்கும் நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணுங்கள்.
कने यीशुऐ उना जो बोलया, “तुसां सारे संसार च जाई करी लोकां जो परमेश्वर दे शुभसमाचार दा प्रचार करा।
16 ௧௬ விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசிக்காதவனோ தண்டனைக்குள்ளாவான்.
जड़ा कोई मिजों पर भरोसा करगा कने बपतिस्मा लेंगा परमेश्वरे उसयो उदे पापां दी सजा ला बचाणा, पर जड़ा मिंजो पर भरोसा नी करगा तां उसयो सजा मिलणी है।
17 ௧௭ விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் என்னவென்றால்: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; புதிய மொழிகளைப் பேசுவார்கள்;
कने जड़े लोक मिजों पर भरोसा करगे सै चमत्कारी निशाण उना दे बाली होणे न, उना मेरे नाए ने बुरियां आत्मा जो कडणा, कने मैं उना जो नोईयां-नोईयां भाषा बोलणे दे काबील बणागां।
18 ௧௮ சர்ப்பங்களை எடுப்பார்கள்; மரணத்திற்குரிய எதைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; நோயாளிகளின்மேல் கரங்களை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சுகமடைவார்கள் என்றார்.
मैं उना जो बचाणा है, जड़े सप्पां जो भी चुकी लेंगे, कने जहरीली चीज भी पी लेंगे, मैं तमी उना जो मरणा नी दिगां, उना बिमारां पर हथ रखणा कने उना जो मेरे नाऐ ला खरा करणा है।”
19 ௧௯ இவ்விதமாக கர்த்தர் அவர்களோடு பேசினபின்பு, பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.
तालू उदे बाद प्रभु यीशु उना ने गल्लां करणे बाद परमेश्वरे यीशुऐ जो स्वर्गे च सदी लिया, कने यीशु परमेश्वरे दे सजे पासे इज्जत बाले सिहांसन पर बैठी गिया।
20 ௨0 சீடர்கள் புறப்பட்டுப்போய், எல்லா இடங்களிலும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்கள் மூலம் கிரியைசெய்து, அவர்களால் நடந்த அற்புத அடையாளங்களினால் வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.
तालू चेले सारयां पास्से गे कने हर जगा परमेश्वरे दा प्रचार किता, कने प्रभु उना सोगी कम्म करदा रिया, कने उना चमत्कारां दे जरिये जड़े सोगी-सोगी होंदे थे, बचना जो पुरा करदा रिया। आमीन।

< மாற்கு 16 >