< யோவான் 15 >

1 நான் உண்மையான திராட்சைச்செடி, என் பிதா திராட்சைத்தோட்டக்காரர்.
सच्ची दाखा दी बेल मैं हे; कने मेरा पिता परमेश्वर किसान है।
2 என்னில் கனிகொடுக்காதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்செய்கிறார்.
हर इक डाली जड़ी मिंजो ने लगियो है, कने नी फल्दी है, उस जो सै बडी दिन्दा है, कने जड़ी डाली फल्दी है उसा जो सै छांडदा है ताकि सै होर जादा फले।
3 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாக இருக்கிறீர்கள்.
जड़ी शिक्षा मैं तुसां जो दितियो है, उसा दिया बजा ने तुसां शुद्ध न।
4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சைச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாக கனிகொடுக்காததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.
तुसां मिंजो च बणी रिया, कने मैं तुहांजो च: जियां कोई डाली अगर दाखा दिया बेला ला टूटी जा, तां सै अपु नी फली सकदी, तियां ही तुसां मिंजो च बणी नी रेंगे तां, तुसां कुछ नी करी सकदे।
5 நானே திராட்சைச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னை அல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யமுடியாது.
मैं दाख बेल है: कने तुसां डालियाँ न; जड़ा मिंजो च बणी रेंदा है, कने मैं उदे च, सै मता फलदा है, क्योंकि मिंजो ने लग होईकरी तुसां कुछ नी करी सकदे।
6 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எரியப்பட்ட கொடியைப்போல அவன் எரியப்பட்டு உலர்ந்துபோவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோகும்.
अगर कोई मिंजो च बणी नी रे, तां उसा डालियाँ जो बड्डी करी फेंकी दिन्दे न, कने जालू सै डालियाँ सुकी जांदियां न; कने लोक उना जो गठेरी करी अग्गी च पाई दिन्दे न, कने सै फकुई जान्दियां न।
7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவது எதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
अगर तुसां मिंजो ने बंणी रेन, कने मेरियां शिक्षा च तुसां बणी रेंगे तां तुसां जड़ा चांगे सै मंगा कने सै तुहाड़े तांई होई जाणा।
8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீடராக இருப்பீர்கள்.
मेरे पिता परमेश्वर दी महिमा इसी ने होंदी है, की तुसां बड़ा जादा फल लोंगे, ऐई तुहाड़ा मेरे चेले होणे दा सबूत है।
9 பிதா என்னில் அன்பாக இருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாக இருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.
जियां पिता परमेश्वरे मिंजो ने प्यार रख्या, तियां ही मैं भी तुहांजो ने प्यार किता, मेरे प्यारे च बंणी रिया।
10 ௧0 நான் என் பிதாவின் கட்டளைகளைக் கடைபிடித்து அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.
अगर तुसां मेरे हुकमा जो मनगे, तां मेरे प्यारे च बंणी रेणा जियां की मैं अपणे पिता परमेश्वरे दे हुक्मा जो मनया है, कने उदे प्यारे च बणी रेंदा है।
11 ௧௧ என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்.
मैं ऐ गल्लां तुहांजो इस तांई बोलियां न, ताकि तुसां च भी सेई खुशी हो जड़ी मिंजो च है, कने तुहाड़ी खुशी पुरी होई जा।
12 ௧௨ நான் உங்களில் அன்பாக இருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கட்டளையாக இருக்கிறது.
मेरा हुकम ऐ है, की जियां मैं तुसां ने प्यार रखया है तियां ही तुसां भी इकी दुज्जे ने प्यार रखा।
13 ௧௩ ஒருவன் தன் நண்பனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.
कुसी बाल ऐ दसणे तांई की सै अपणे मित्रां ने प्यार करदा है, इसला बडा होर कोई तरिका नी है की सै अपणे मित्रां जो बचाणे तांई अपणी जान देई दे।
14 ௧௪ நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் நண்பர்களாக இருப்பீர்கள்.
जड़ा भी हुकम मैं तुहांजो दिन्दा है, अगर तुसां उसयो करन, तां तुसां मेरे मित्र न।
15 ௧௫ இனி நான் உங்களை வேலைக்காரர்கள் என்று சொல்லுகிறதில்லை, வேலைக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களை நண்பர்கள் என்றேன், ஏனென்றால், என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.
हुण मैं तुहांजो सेवक नी बोलणा, क्योंकि सेवक नी जाणदा है, की उदा स्वामी क्या करदा है: पर मैं तुहांजो मित्र बोलया है, क्योंकि मैं जड़ियां गल्लां अपणे पिता परमेश्वरे ला सुणियां, सै सारियां तुहांजो दस्सी दितियां न।
16 ௧௬ நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்ளுவது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கும்படி நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்களுடைய கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
तुसां मिंजो नी चूंणया है पर मैं तुहांजो चूंणया है कने तुहांजो नियुक्त कितया है ताकि तुसां जाई करी फल देन; कने तुहाड़ा फल टिकाऊ रे, ताकि तुसां मेरे चेले न, इस तांई जड़ा कुछ तुसां मेरे ना ने मंगगे, सै तुहांजो दे।
17 ௧௭ நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.
इना गल्लां दा हुकम मैं इस तांई दिन्दा है, ताकि तुसां इकी दुज्जे ने प्यार रखन।
18 ௧௮ உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்.
अगर संसार दे लोक तुहांजो ने बैर रखदे न, तां तुसां जाणदे न, की इना तुसां ला पेहले मिंजो ने भी बैर रखया।
19 ௧௯ நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
अगर तुसां संसारे दे लोकां सांई होंदे, तां संसारे दे लोक अपणयां ने प्यार करदे न, पर इसा बजा ने की तुसां इस संसारे दे लोकां ने रिश्ता नी रखदे, कने मैं तुहांजो इस संसारे ला चूंणया है, इस तांई संसारे दे लोक तुहांजो ने बैर रखदे न।
20 ௨0 வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்.
जड़ा मैं तुसां जो दसया है, सेवक अपणे मालिके ला बडा नी होंदा है, इसयो याद रखा अगर उना मिंजो सताया, तां तुहांजो भी सताणां है; अगर उना मेरियां शिक्षा जो मनया, तां तुहाड़ी शिक्षा जो भी मनणा।
21 ௨௧ அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள்.
पर ऐ सारा कुछ लोकां इसा बजा ने तुहाड़े सोगी करणा क्योंकि तुसां मेरे चेले न, कने सै मेरे भेजणे बाले परमेश्वरे जो नी जाणदे न।
22 ௨௨ நான் வந்து அவர்களோடு பேசாதிருந்தால் அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுதோ தங்களுடைய பாவத்தைக்குறித்து சாக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
अगर मैं नी ओंदा कने उना ने गल्लां नी करदा, तां सै पापी नी बणदे पर हुण उना जो उना दे पापां तांई कोई भाना नी।
23 ௨௩ என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.
जड़ा मिंजो ने बैर रखदा है, सै मेरे पिता परमेश्वर ने भी बैर रखदा है।
24 ௨௪ வேறொருவரும் செய்யாத செயல்களை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தால், அவர்களுக்குப் பாவம் இருக்காது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் பார்த்தும், பகைத்தும் இருக்கிறார்கள்.
अगर मैं उना च सै चमत्कार नी करदा, जड़े कुनी होरनी नी किते तां सै पापी नी बणदे, पर हुण उना मिंजो दिखी लिया है फिरी भी सै मिंजो कने मेरे पिता परमेश्वरे दोनो ने बैर करदे न।
25 ௨௫ காரணம் இல்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதி இருக்கிற வாக்கியம் நிறைவேறும்படி இப்படியானது.
ऐ इस तांई होया की जड़ा उना दे पबित्र शास्त्र च लिखया है ऐ इना गल्लां जो पूरा करदा है, उना बिना कुसी बजा ने मिंजो ने नफरत किती।
26 ௨௬ பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார்.
पर जालू सै मददगार ओंगा, जिसयो मैं तुहाड़े बाल पिता परमेश्वरे दिया तरफा ला भेजगा, मतलब की सच्च दी आत्मा जड़ी पिता परमेश्वरे दिया तरफा ला निकलदी है, तां उनी मेरी गबाई देंणी।
27 ௨௭ நீங்களும் ஆரம்பமுதல் என்னுடனே இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.
कने तुसां भी गबाह न क्योंकि तुसां शुरू ला मेरे सोगी न।

< யோவான் 15 >