< கொலோசெயர் 3 >
1 ௧ நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
ଯଦି ଯୂଯଂ ଖ୍ରୀଷ୍ଟେନ ସାର୍ଦ୍ଧମ୍ ଉତ୍ଥାପିତା ଅଭୱତ ତର୍ହି ଯସ୍ମିନ୍ ସ୍ଥାନେ ଖ୍ରୀଷ୍ଟ ଈଶ୍ୱରସ୍ୟ ଦକ୍ଷିଣପାର୍ଶ୍ୱେ ଉପୱିଷ୍ଟ ଆସ୍ତେ ତସ୍ୟୋର୍ଦ୍ଧ୍ୱସ୍ଥାନସ୍ୟ ୱିଷଯାନ୍ ଚେଷ୍ଟଧ୍ୱଂ|
2 ௨ பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள்.
ପାର୍ଥିୱୱିଷଯେଷୁ ନ ଯତମାନା ଊର୍ଦ୍ଧ୍ୱସ୍ଥୱିଷଯେଷୁ ଯତଧ୍ୱଂ|
3 ௩ ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
ଯତୋ ଯୂଯଂ ମୃତୱନ୍ତୋ ଯୁଷ୍ମାକଂ ଜୀୱିତଞ୍ଚ ଖ୍ରୀଷ୍ଟେନ ସାର୍ଦ୍ଧମ୍ ଈଶ୍ୱରେ ଗୁପ୍ତମ୍ ଅସ୍ତି|
4 ௪ நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
ଅସ୍ମାକଂ ଜୀୱନସ୍ୱରୂପଃ ଖ୍ରୀଷ୍ଟୋ ଯଦା ପ୍ରକାଶିଷ୍ୟତେ ତଦା ତେନ ସାର୍ଦ୍ଧଂ ଯୂଯମପି ୱିଭୱେନ ପ୍ରକାଶିଷ୍ୟଧ୍ୱେ|
5 ௫ ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள்.
ଅତୋ ୱେଶ୍ୟାଗମନମ୍ ଅଶୁଚିକ୍ରିଯା ରାଗଃ କୁତ୍ସିତାଭିଲାଷୋ ଦେୱପୂଜାତୁଲ୍ୟୋ ଲୋଭଶ୍ଚୈତାନି ର୍ପାଥୱପୁରୁଷସ୍ୟାଙ୍ଗାନି ଯୁଷ୍ମାଭି ର୍ନିହନ୍ୟନ୍ତାଂ|
6 ௬ இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.
ଯତ ଏତେଭ୍ୟଃ କର୍ମ୍ମଭ୍ୟ ଆଜ୍ଞାଲଙ୍ଘିନୋ ଲୋକାନ୍ ପ୍ରତୀଶ୍ୱରସ୍ୟ କ୍ରୋଧୋ ୱର୍ତ୍ତତେ|
7 ௭ நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
ପୂର୍ୱ୍ୱଂ ଯଦା ଯୂଯଂ ତାନ୍ୟୁପାଜୀୱତ ତଦା ଯୂଯମପି ତାନ୍ୟେୱାଚରତ;
8 ௮ இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
କିନ୍ତ୍ୱିଦାନୀଂ କ୍ରୋଧୋ ରୋଷୋ ଜିହିଂସିଷା ଦୁର୍ମୁଖତା ୱଦନନିର୍ଗତକଦାଲପଶ୍ଚୈତାନି ସର୍ୱ୍ୱାଣି ଦୂରୀକୁରୁଧ୍ୱଂ|
9 ௯ ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
ଯୂଯଂ ପରସ୍ପରଂ ମୃଷାକଥାଂ ନ ୱଦତ ଯତୋ ଯୂଯଂ ସ୍ୱକର୍ମ୍ମସହିତଂ ପୁରାତନପୁରୁଷଂ ତ୍ୟକ୍ତୱନ୍ତଃ
10 ௧0 தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே.
ସ୍ୱସ୍ରଷ୍ଟୁଃ ପ୍ରତିମୂର୍ତ୍ୟା ତତ୍ତ୍ୱଜ୍ଞାନାଯ ନୂତନୀକୃତଂ ନୱୀନପୁରୁଷଂ ପରିହିତୱନ୍ତଶ୍ଚ|
11 ௧௧ அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்.
ତେନ ଚ ଯିହୂଦିଭିନ୍ନଜାତୀଯଯୋଶ୍ଛିନ୍ନତ୍ୱଗଚ୍ଛିନ୍ନତ୍ୱଚୋ ର୍ମ୍ଲେଚ୍ଛସ୍କୁଥୀଯଯୋ ର୍ଦାସମୁକ୍ତଯୋଶ୍ଚ କୋଽପି ୱିଶେଷୋ ନାସ୍ତି କିନ୍ତୁ ସର୍ୱ୍ୱେଷୁ ସର୍ୱ୍ୱଃ ଖ୍ରୀଷ୍ଟ ଏୱାସ୍ତେ|
12 ௧௨ ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு;
ଅତଏୱ ଯୂଯମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ମନୋଭିଲଷିତାଃ ପୱିତ୍ରାଃ ପ୍ରିଯାଶ୍ଚ ଲୋକା ଇୱ ସ୍ନେହଯୁକ୍ତାମ୍ ଅନୁକମ୍ପାଂ ହିତୈଷିତାଂ ନମ୍ରତାଂ ତିତିକ୍ଷାଂ ସହିଷ୍ଣୁତାଞ୍ଚ ପରିଧଦ୍ଧ୍ୱଂ|
13 ௧௩ ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
ଯୂଯମ୍ ଏକୈକସ୍ୟାଚରଣଂ ସହଧ୍ୱଂ ଯେନ ଚ ଯସ୍ୟ କିମପ୍ୟପରାଧ୍ୟତେ ତସ୍ୟ ତଂ ଦୋଷଂ ସ କ୍ଷମତାଂ, ଖ୍ରୀଷ୍ଟୋ ଯୁଷ୍ମାକଂ ଦୋଷାନ୍ ଯଦ୍ୱଦ୍ କ୍ଷମିତୱାନ୍ ଯୂଯମପି ତଦ୍ୱତ୍ କୁରୁଧ୍ୱଂ|
14 ௧௪ இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள்.
ୱିଶେଷତଃ ସିଦ୍ଧିଜନକେନ ପ୍ରେମବନ୍ଧନେନ ବଦ୍ଧା ଭୱତ|
15 ௧௫ தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்.
ଯସ୍ୟାଃ ପ୍ରାପ୍ତଯେ ଯୂଯମ୍ ଏକସ୍ମିନ୍ ଶରୀରେ ସମାହୂତା ଅଭୱତ ସେଶ୍ୱରୀଯା ଶାନ୍ତି ର୍ୟୁଷ୍ମାକଂ ମନାଂସ୍ୟଧିତିଷ୍ଠତୁ ଯୂଯଞ୍ଚ କୃତଜ୍ଞା ଭୱତ|
16 ௧௬ கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி;
ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ୱାକ୍ୟଂ ସର୍ୱ୍ୱୱିଧଜ୍ଞାନାଯ ସମ୍ପୂର୍ଣରୂପେଣ ଯୁଷ୍ମଦନ୍ତରେ ନିୱମତୁ, ଯୂଯଞ୍ଚ ଗୀତୈ ର୍ଗାନୈଃ ପାରମାର୍ଥିକସଙ୍କୀର୍ତ୍ତନୈଶ୍ଚ ପରସ୍ପରମ୍ ଆଦିଶତ ପ୍ରବୋଧଯତ ଚ, ଅନୁଗୃହୀତତ୍ୱାତ୍ ପ୍ରଭୁମ୍ ଉଦ୍ଦିଶ୍ୟ ସ୍ୱମନୋଭି ର୍ଗାଯତ ଚ|
17 ௧௭ வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
ୱାଚା କର୍ମ୍ମଣା ୱା ଯଦ୍ ଯତ୍ କୁରୁତ ତତ୍ ସର୍ୱ୍ୱଂ ପ୍ରଭୋ ର୍ୟୀଶୋ ର୍ନାମ୍ନା କୁରୁତ ତେନ ପିତରମ୍ ଈଶ୍ୱରଂ ଧନ୍ୟଂ ୱଦତ ଚ|
18 ௧௮ மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
ହେ ଯୋଷିତଃ, ଯୂଯଂ ସ୍ୱାମିନାଂ ୱଶ୍ୟା ଭୱତ ଯତସ୍ତଦେୱ ପ୍ରଭୱେ ରୋଚତେ|
19 ௧௯ கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
ହେ ସ୍ୱାମିନଃ, ଯୂଯଂ ଭାର୍ୟ୍ୟାସୁ ପ୍ରୀଯଧ୍ୱଂ ତାଃ ପ୍ରତି ପରୁଷାଲାପଂ ମା କୁରୁଧ୍ୱଂ|
20 ௨0 பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது.
ହେ ବାଲାଃ, ଯୂଯଂ ସର୍ୱ୍ୱୱିଷଯେ ପିତ୍ରୋରାଜ୍ଞାଗ୍ରାହିଣୋ ଭୱତ ଯତସ୍ତଦେୱ ପ୍ରଭୋଃ ସନ୍ତୋଷଜନକଂ|
21 ௨௧ பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள்.
ହେ ପିତରଃ, ଯୁଷ୍ମାକଂ ସନ୍ତାନା ଯତ୍ କାତରା ନ ଭୱେଯୁସ୍ତଦର୍ଥଂ ତାନ୍ ପ୍ରତି ମା ରୋଷଯତ|
22 ௨௨ வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள்.
ହେ ଦାସାଃ, ଯୂଯଂ ସର୍ୱ୍ୱୱିଷଯ ଐହିକପ୍ରଭୂନାମ୍ ଆଜ୍ଞାଗ୍ରାହିଣୋ ଭୱତ ଦୃଷ୍ଟିଗୋଚରୀଯସେୱଯା ମାନୱେଭ୍ୟୋ ରୋଚିତୁଂ ମା ଯତଧ୍ୱଂ କିନ୍ତୁ ସରଲାନ୍ତଃକରଣୈଃ ପ୍ରଭୋ ର୍ଭାତ୍ୟା କାର୍ୟ୍ୟଂ କୁରୁଧ୍ୱଂ|
23 ௨௩ நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே, உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
ଯଚ୍ଚ କୁରୁଧ୍ୱେ ତତ୍ ମାନୁଷମନୁଦ୍ଦିଶ୍ୟ ପ୍ରଭୁମ୍ ଉଦ୍ଦିଶ୍ୟ ପ୍ରଫୁଲ୍ଲମନସା କୁରୁଧ୍ୱଂ,
24 ௨௪ எதைச்செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள்.
ଯତୋ ୱଯଂ ପ୍ରଭୁତଃ ସ୍ୱର୍ଗାଧିକାରରୂପଂ ଫଲଂ ଲପ୍ସ୍ୟାମହ ଇତି ଯୂଯଂ ଜାନୀଥ ଯସ୍ମାଦ୍ ଯୂଯଂ ପ୍ରଭୋଃ ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ଦାସା ଭୱଥ|
25 ௨௫ அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିଦ୍ ଅନୁଚିତଂ କର୍ମ୍ମ କରୋତି ସ ତସ୍ୟାନୁଚିତକର୍ମ୍ମଣଃ ଫଲଂ ଲପ୍ସ୍ୟତେ ତତ୍ର କୋଽପି ପକ୍ଷପାତୋ ନ ଭୱିଷ୍ୟତି|