< அப்போஸ்தலர் 7 >
1 ௧ பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியா இருக்கிறது என்று கேட்டான்.
ತತಃ ಪರಂ ಮಹಾಯಾಜಕಃ ಪೃಷ್ಟವಾನ್, ಏಷಾ ಕಥಾಂ ಕಿಂ ಸತ್ಯಾ?
2 ௨ அதற்கு அவன்: சகோதரர்களே, தகப்பன்மார்களே, கேளுங்கள். நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்பே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:
ತತಃ ಸ ಪ್ರತ್ಯವದತ್, ಹೇ ಪಿತರೋ ಹೇ ಭ್ರಾತರಃ ಸರ್ವ್ವೇ ಲಾಕಾ ಮನಾಂಸಿ ನಿಧದ್ಧ್ವಂ| ಅಸ್ಮಾಕಂ ಪೂರ್ವ್ವಪುರುಷ ಇಬ್ರಾಹೀಮ್ ಹಾರಣ್ನಗರೇ ವಾಸಕರಣಾತ್ ಪೂರ್ವ್ವಂ ಯದಾ ಅರಾಮ್-ನಹರಯಿಮದೇಶೇ ಆಸೀತ್ ತದಾ ತೇಜೋಮಯ ಈಶ್ವರೋ ದರ್ಶನಂ ದತ್ವಾ
3 ௩ நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார்.
ತಮವದತ್ ತ್ವಂ ಸ್ವದೇಶಜ್ಞಾತಿಮಿತ್ರಾಣಿ ಪರಿತ್ಯಜ್ಯ ಯಂ ದೇಶಮಹಂ ದರ್ಶಯಿಷ್ಯಾಮಿ ತಂ ದೇಶಂ ವ್ರಜ|
4 ௪ அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே குடியிருந்தான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இந்த தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
ಅತಃ ಸ ಕಸ್ದೀಯದೇಶಂ ವಿಹಾಯ ಹಾರಣ್ನಗರೇ ನ್ಯವಸತ್, ತದನನ್ತರಂ ತಸ್ಯ ಪಿತರಿ ಮೃತೇ ಯತ್ರ ದೇಶೇ ಯೂಯಂ ನಿವಸಥ ಸ ಏನಂ ದೇಶಮಾಗಚ್ಛತ್|
5 ௫ இதிலே ஒரு அடி நிலத்தையாவது அவனுக்கு சொத்தாகக் கொடுக்காமல், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதை சொத்தாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார்.
ಕಿನ್ತ್ವೀಶ್ವರಸ್ತಸ್ಮೈ ಕಮಪ್ಯಧಿಕಾರಮ್ ಅರ್ಥಾದ್ ಏಕಪದಪರಿಮಿತಾಂ ಭೂಮಿಮಪಿ ನಾದದಾತ್; ತದಾ ತಸ್ಯ ಕೋಪಿ ಸನ್ತಾನೋ ನಾಸೀತ್ ತಥಾಪಿ ಸನ್ತಾನೈಃ ಸಾರ್ದ್ಧಮ್ ಏತಸ್ಯ ದೇಶಸ್ಯಾಧಿಕಾರೀ ತ್ವಂ ಭವಿಷ್ಯಸೀತಿ ತಮ್ಪ್ರತ್ಯಙ್ಗೀಕೃತವಾನ್|
6 ௬ அப்படியே, தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் வேறு தேசத்தில் குடியிருப்பார்கள்; அந்த தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருடங்கள் துன்பப்படுத்துவார்கள்.
ಈಶ್ವರ ಇತ್ಥಮ್ ಅಪರಮಪಿ ಕಥಿತವಾನ್ ತವ ಸನ್ತಾನಾಃ ಪರದೇಶೇ ನಿವತ್ಸ್ಯನ್ತಿ ತತಸ್ತದ್ದೇಶೀಯಲೋಕಾಶ್ಚತುಃಶತವತ್ಸರಾನ್ ಯಾವತ್ ತಾನ್ ದಾಸತ್ವೇ ಸ್ಥಾಪಯಿತ್ವಾ ತಾನ್ ಪ್ರತಿ ಕುವ್ಯವಹಾರಂ ಕರಿಷ್ಯನ್ತಿ|
7 ௭ அவர்களை அடிமைப்படுத்தும் மக்களை நான் தண்டிப்பேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இந்த இடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார்.
ಅಪರಮ್ ಈಶ್ವರ ಏನಾಂ ಕಥಾಮಪಿ ಕಥಿತವಾನ್, ಯೇ ಲೋಕಾಸ್ತಾನ್ ದಾಸತ್ವೇ ಸ್ಥಾಪಯಿಷ್ಯನ್ತಿ ತಾಲ್ಲೋಕಾನ್ ಅಹಂ ದಣ್ಡಯಿಷ್ಯಾಮಿ, ತತಃ ಪರಂ ತೇ ಬಹಿರ್ಗತಾಃ ಸನ್ತೋ ಮಾಮ್ ಅತ್ರ ಸ್ಥಾನೇ ಸೇವಿಷ್ಯನ್ತೇ|
8 ௮ மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள்.
ಪಶ್ಚಾತ್ ಸ ತಸ್ಮೈ ತ್ವಕ್ಛೇದಸ್ಯ ನಿಯಮಂ ದತ್ತವಾನ್, ಅತ ಇಸ್ಹಾಕನಾಮ್ನಿ ಇಬ್ರಾಹೀಮ ಏಕಪುತ್ರೇ ಜಾತೇ, ಅಷ್ಟಮದಿನೇ ತಸ್ಯ ತ್ವಕ್ಛೇದಮ್ ಅಕರೋತ್| ತಸ್ಯ ಇಸ್ಹಾಕಃ ಪುತ್ರೋ ಯಾಕೂಬ್, ತತಸ್ತಸ್ಯ ಯಾಕೂಬೋಽಸ್ಮಾಕಂ ದ್ವಾದಶ ಪೂರ್ವ್ವಪುರುಷಾ ಅಜಾಯನ್ತ|
9 ௯ அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள்.
ತೇ ಪೂರ್ವ್ವಪುರುಷಾ ಈರ್ಷ್ಯಯಾ ಪರಿಪೂರ್ಣಾ ಮಿಸರದೇಶಂ ಪ್ರೇಷಯಿತುಂ ಯೂಷಫಂ ವ್ಯಕ್ರೀಣನ್|
10 ௧0 தேவனோ அவனோடிருந்து, எல்லா உபத்திரவங்களில் இருந்தும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் அவனுக்கு தயவையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடு அனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.
ಕಿನ್ತ್ವೀಶ್ವರಸ್ತಸ್ಯ ಸಹಾಯೋ ಭೂತ್ವಾ ಸರ್ವ್ವಸ್ಯಾ ದುರ್ಗತೇ ರಕ್ಷಿತ್ವಾ ತಸ್ಮೈ ಬುದ್ಧಿಂ ದತ್ತ್ವಾ ಮಿಸರದೇಶಸ್ಯ ರಾಜ್ಞಃ ಫಿರೌಣಃ ಪ್ರಿಯಪಾತ್ರಂ ಕೃತವಾನ್ ತತೋ ರಾಜಾ ಮಿಸರದೇಶಸ್ಯ ಸ್ವೀಯಸರ್ವ್ವಪರಿವಾರಸ್ಯ ಚ ಶಾಸನಪದಂ ತಸ್ಮೈ ದತ್ತವಾನ್|
11 ௧௧ பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் அதிக வருத்தமும் உண்டாகி, நம்முடைய முற்பிதாக்களுக்கு ஆகாரம் கிடைக்காமல்போனது.
ತಸ್ಮಿನ್ ಸಮಯೇ ಮಿಸರ-ಕಿನಾನದೇಶಯೋ ರ್ದುರ್ಭಿಕ್ಷಹೇತೋರತಿಕ್ಲಿಷ್ಟತ್ವಾತ್ ನಃ ಪೂರ್ವ್ವಪುರುಷಾ ಭಕ್ಷ್ಯದ್ರವ್ಯಂ ನಾಲಭನ್ತ|
12 ௧௨ அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டு என்று யாக்கோபு கேள்விப்பட்டு, யோசேப்புடைய மூத்த சகோதரர்களை முதல்முறை அனுப்பினான்.
ಕಿನ್ತು ಮಿಸರದೇಶೇ ಶಸ್ಯಾನಿ ಸನ್ತಿ, ಯಾಕೂಬ್ ಇಮಾಂ ವಾರ್ತ್ತಾಂ ಶ್ರುತ್ವಾ ಪ್ರಥಮಮ್ ಅಸ್ಮಾಕಂ ಪೂರ್ವ್ವಪುರುಷಾನ್ ಮಿಸರಂ ಪ್ರೇಷಿತವಾನ್|
13 ௧௩ இரண்டாம்முறை யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது.
ತತೋ ದ್ವಿತೀಯವಾರಗಮನೇ ಯೂಷಫ್ ಸ್ವಭ್ರಾತೃಭಿಃ ಪರಿಚಿತೋಽಭವತ್; ಯೂಷಫೋ ಭ್ರಾತರಃ ಫಿರೌಣ್ ರಾಜೇನ ಪರಿಚಿತಾ ಅಭವನ್|
14 ௧௪ பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபையும் தன்னுடைய இனத்தார் எழுபத்தைந்துபேரையும் அழைத்துவரும்படி அனுப்பினான்.
ಅನನ್ತರಂ ಯೂಷಫ್ ಭ್ರಾತೃಗಣಂ ಪ್ರೇಷ್ಯ ನಿಜಪಿತರಂ ಯಾಕೂಬಂ ನಿಜಾನ್ ಪಞ್ಚಾಧಿಕಸಪ್ತತಿಸಂಖ್ಯಕಾನ್ ಜ್ಞಾತಿಜನಾಂಶ್ಚ ಸಮಾಹೂತವಾನ್|
15 ௧௫ அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய முற்பிதாக்களும் மரித்து,
ತಸ್ಮಾದ್ ಯಾಕೂಬ್ ಮಿಸರದೇಶಂ ಗತ್ವಾ ಸ್ವಯಮ್ ಅಸ್ಮಾಕಂ ಪೂರ್ವ್ವಪುರುಷಾಶ್ಚ ತಸ್ಮಿನ್ ಸ್ಥಾನೇಽಮ್ರಿಯನ್ತ|
16 ௧௬ அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் விலைக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள்.
ತತಸ್ತೇ ಶಿಖಿಮಂ ನೀತಾ ಯತ್ ಶ್ಮಶಾನಮ್ ಇಬ್ರಾಹೀಮ್ ಮುದ್ರಾದತ್ವಾ ಶಿಖಿಮಃ ಪಿತು ರ್ಹಮೋರಃ ಪುತ್ರೇಭ್ಯಃ ಕ್ರೀತವಾನ್ ತತ್ಶ್ಮಶಾನೇ ಸ್ಥಾಪಯಾಞ್ಚಕ್ರಿರೇ|
17 ௧௭ ஆபிரகாமுக்கு தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறும் நேரம் நெருங்கியபோது,
ತತಃ ಪರಮ್ ಈಶ್ವರ ಇಬ್ರಾಹೀಮಃ ಸನ್ನಿಧೌ ಶಪಥಂ ಕೃತ್ವಾ ಯಾಂ ಪ್ರತಿಜ್ಞಾಂ ಕೃತವಾನ್ ತಸ್ಯಾಃ ಪ್ರತಿಜ್ಞಾಯಾಃ ಫಲನಸಮಯೇ ನಿಕಟೇ ಸತಿ ಇಸ್ರಾಯೇಲ್ಲೋಕಾ ಸಿಮರದೇಶೇ ವರ್ದ್ಧಮಾನಾ ಬಹುಸಂಖ್ಯಾ ಅಭವನ್|
18 ௧௮ யோசேப்பைத் தெரியாத வேறொரு ராஜா தோன்றின காலம்வரையிலும், மக்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள்.
ಶೇಷೇ ಯೂಷಫಂ ಯೋ ನ ಪರಿಚಿನೋತಿ ತಾದೃಶ ಏಕೋ ನರಪತಿರುಪಸ್ಥಾಯ
19 ௧௯ அவன் நம்முடைய மக்களை வஞ்சகமாக நடப்பித்து, நம்முடைய முற்பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான்.
ಅಸ್ಮಾಕಂ ಜ್ಞಾತಿಭಿಃ ಸಾರ್ದ್ಧಂ ಧೂರ್ತ್ತತಾಂ ವಿಧಾಯ ಪೂರ್ವ್ವಪುರುಷಾನ್ ಪ್ರತಿ ಕುವ್ಯವಹರಣಪೂರ್ವ್ವಕಂ ತೇಷಾಂ ವಂಶನಾಶನಾಯ ತೇಷಾಂ ನವಜಾತಾನ್ ಶಿಶೂನ್ ಬಹಿ ರ್ನಿರಕ್ಷೇಪಯತ್|
20 ௨0 அக்காலத்திலே மோசே பிறந்து, மிகுந்த அழகுள்ளவனாக இருந்து, மூன்று மாதங்கள் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.
ಏತಸ್ಮಿನ್ ಸಮಯೇ ಮೂಸಾ ಜಜ್ಞೇ, ಸ ತು ಪರಮಸುನ್ದರೋಽಭವತ್ ತಥಾ ಪಿತೃಗೃಹೇ ಮಾಸತ್ರಯಪರ್ಯ್ಯನ್ತಂ ಪಾಲಿತೋಽಭವತ್|
21 ௨௧ அவன் வீட்டிற்கு வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய மகள் அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள்.
ಕಿನ್ತು ತಸ್ಮಿನ್ ಬಹಿರ್ನಿಕ್ಷಿಪ್ತೇ ಸತಿ ಫಿರೌಣರಾಜಸ್ಯ ಕನ್ಯಾ ತಮ್ ಉತ್ತೋಲ್ಯ ನೀತ್ವಾ ದತ್ತಕಪುತ್ರಂ ಕೃತ್ವಾ ಪಾಲಿತವತೀ|
22 ௨௨ மோசே எகிப்தியருடைய எல்லா சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.
ತಸ್ಮಾತ್ ಸ ಮೂಸಾ ಮಿಸರದೇಶೀಯಾಯಾಃ ಸರ್ವ್ವವಿದ್ಯಾಯಾಃ ಪಾರದೃಷ್ವಾ ಸನ್ ವಾಕ್ಯೇ ಕ್ರಿಯಾಯಾಞ್ಚ ಶಕ್ತಿಮಾನ್ ಅಭವತ್|
23 ௨௩ அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேலின் பிள்ளைகளாகிய தன்னுடைய சகோதரர்களைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் தோன்றியது.
ಸ ಸಮ್ಪೂರ್ಣಚತ್ವಾರಿಂಶದ್ವತ್ಸರವಯಸ್ಕೋ ಭೂತ್ವಾ ಇಸ್ರಾಯೇಲೀಯವಂಶನಿಜಭ್ರಾತೃನ್ ಸಾಕ್ಷಾತ್ ಕರ್ತುಂ ಮತಿಂ ಚಕ್ರೇ|
24 ௨௪ அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாக நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணையாக இருந்து, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயம் செய்தான்.
ತೇಷಾಂ ಜನಮೇಕಂ ಹಿಂಸಿತಂ ದೃಷ್ಟ್ವಾ ತಸ್ಯ ಸಪಕ್ಷಃ ಸನ್ ಹಿಂಸಿತಜನಮ್ ಉಪಕೃತ್ಯ ಮಿಸರೀಯಜನಂ ಜಘಾನ|
25 ௨௫ தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு விடுதலையைத் தருவார் என்பதைத் தன்னுடைய சகோதரர்கள் தெரிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை தெரிந்துகொள்ளவில்லை.
ತಸ್ಯ ಹಸ್ತೇನೇಶ್ವರಸ್ತಾನ್ ಉದ್ಧರಿಷ್ಯತಿ ತಸ್ಯ ಭ್ರಾತೃಗಣ ಇತಿ ಜ್ಞಾಸ್ಯತಿ ಸ ಇತ್ಯನುಮಾನಂ ಚಕಾರ, ಕಿನ್ತು ತೇ ನ ಬುಬುಧಿರೇ|
26 ௨௬ மறுநாளிலே சண்டைபண்ணிக்கொண்டிருக்கிற இரண்டுபேரை அவன் கண்டு: மனிதர்களே, நீங்கள் சகோதரர்களாக இருக்கிறீர்கள்; ஒருவருக்கொருவர் அநியாயம் செய்கிறது என்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான்.
ತತ್ಪರೇ ಽಹನಿ ತೇಷಾಮ್ ಉಭಯೋ ರ್ಜನಯೋ ರ್ವಾಕ್ಕಲಹ ಉಪಸ್ಥಿತೇ ಸತಿ ಮೂಸಾಃ ಸಮೀಪಂ ಗತ್ವಾ ತಯೋ ರ್ಮೇಲನಂ ಕರ್ತ್ತುಂ ಮತಿಂ ಕೃತ್ವಾ ಕಥಯಾಮಾಸ, ಹೇ ಮಹಾಶಯೌ ಯುವಾಂ ಭ್ರಾತರೌ ಪರಸ್ಪರಮ್ ಅನ್ಯಾಯಂ ಕುತಃ ಕುರುಥಃ?
27 ௨௭ ஆனால் மற்றவனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை நியமித்தவன் யார்?
ತತಃ ಸಮೀಪವಾಸಿನಂ ಪ್ರತಿ ಯೋ ಜನೋಽನ್ಯಾಯಂ ಚಕಾರ ಸ ತಂ ದೂರೀಕೃತ್ಯ ಕಥಯಾಮಾಸ, ಅಸ್ಮಾಕಮುಪರಿ ಶಾಸ್ತೃತ್ವವಿಚಾರಯಿತೃತ್ವಪದಯೋಃ ಕಸ್ತ್ವಾಂ ನಿಯುಕ್ತವಾನ್?
28 ௨௮ நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான்.
ಹ್ಯೋ ಯಥಾ ಮಿಸರೀಯಂ ಹತವಾನ್ ತಥಾ ಕಿಂ ಮಾಮಪಿ ಹನಿಷ್ಯಸಿ?
29 ௨௯ இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே வசித்து வந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்.
ತದಾ ಮೂಸಾ ಏತಾದೃಶೀಂ ಕಥಾಂ ಶ್ರುತ್ವಾ ಪಲಾಯನಂ ಚಕ್ರೇ, ತತೋ ಮಿದಿಯನದೇಶಂ ಗತ್ವಾ ಪ್ರವಾಸೀ ಸನ್ ತಸ್ಥೌ, ತತಸ್ತತ್ರ ದ್ವೌ ಪುತ್ರೌ ಜಜ್ಞಾತೇ|
30 ௩0 நாற்பது வருடங்கள் முடிந்தபின்பு, சீனாய்மலையின் வனாந்திரத்திலே கர்த்தருடைய தூதன் முட்செடி எரிகிற அக்கினிஜூவாலையிலே அவனுக்குத் தரிசனமானார்.
ಅನನ್ತರಂ ಚತ್ವಾರಿಂಶದ್ವತ್ಸರೇಷು ಗತೇಷು ಸೀನಯಪರ್ವ್ವತಸ್ಯ ಪ್ರಾನ್ತರೇ ಪ್ರಜ್ವಲಿತಸ್ತಮ್ಬಸ್ಯ ವಹ್ನಿಶಿಖಾಯಾಂ ಪರಮೇಶ್ವರದೂತಸ್ತಸ್ಮೈ ದರ್ಶನಂ ದದೌ|
31 ௩௧ மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி அருகில் வரும்போது:
ಮೂಸಾಸ್ತಸ್ಮಿನ್ ದರ್ಶನೇ ವಿಸ್ಮಯಂ ಮತ್ವಾ ವಿಶೇಷಂ ಜ್ಞಾತುಂ ನಿಕಟಂ ಗಚ್ಛತಿ,
32 ௩௨ நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் முற்பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன் என்று கர்த்தர் உரைத்த சத்தம் அவனுக்குக் கேட்டது. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணிச்சல் இல்லாமலிருந்தான்.
ಏತಸ್ಮಿನ್ ಸಮಯೇ, ಅಹಂ ತವ ಪೂರ್ವ್ವಪುರುಷಾಣಾಮ್ ಈಶ್ವರೋಽರ್ಥಾದ್ ಇಬ್ರಾಹೀಮ ಈಶ್ವರ ಇಸ್ಹಾಕ ಈಶ್ವರೋ ಯಾಕೂಬ ಈಶ್ವರಶ್ಚ, ಮೂಸಾಮುದ್ದಿಶ್ಯ ಪರಮೇಶ್ವರಸ್ಯೈತಾದೃಶೀ ವಿಹಾಯಸೀಯಾ ವಾಣೀ ಬಭೂವ, ತತಃ ಸ ಕಮ್ಪಾನ್ವಿತಃ ಸನ್ ಪುನ ರ್ನಿರೀಕ್ಷಿತುಂ ಪ್ರಗಲ್ಭೋ ನ ಬಭೂವ|
33 ௩௩ பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாக இருக்கிறது.
ಪರಮೇಶ್ವರಸ್ತಂ ಜಗಾದ, ತವ ಪಾದಯೋಃ ಪಾದುಕೇ ಮೋಚಯ ಯತ್ರ ತಿಷ್ಠಸಿ ಸಾ ಪವಿತ್ರಭೂಮಿಃ|
34 ௩௪ எகிப்திலிருக்கிற என் மக்களின் உபத்திரவத்தை நான் கண்டு, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகவே, நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.
ಅಹಂ ಮಿಸರದೇಶಸ್ಥಾನಾಂ ನಿಜಲೋಕಾನಾಂ ದುರ್ದ್ದಶಾಂ ನಿತಾನ್ತಮ್ ಅಪಶ್ಯಂ, ತೇಷಾಂ ಕಾತರ್ಯ್ಯೋಕ್ತಿಞ್ಚ ಶ್ರುತವಾನ್ ತಸ್ಮಾತ್ ತಾನ್ ಉದ್ಧರ್ತ್ತುಮ್ ಅವರುಹ್ಯಾಗಮಮ್; ಇದಾನೀಮ್ ಆಗಚ್ಛ ಮಿಸರದೇಶಂ ತ್ವಾಂ ಪ್ರೇಷಯಾಮಿ|
35 ௩௫ உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் நியமித்தவன் யார் என்று சொல்லி அவர்கள் நிராகரித்த இந்த மோசேயைத்தான் தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார்.
ಕಸ್ತ್ವಾಂ ಶಾಸ್ತೃತ್ವವಿಚಾರಯಿತೃತ್ವಪದಯೋ ರ್ನಿಯುಕ್ತವಾನ್, ಇತಿ ವಾಕ್ಯಮುಕ್ತ್ವಾ ತೈ ರ್ಯೋ ಮೂಸಾ ಅವಜ್ಞಾತಸ್ತಮೇವ ಈಶ್ವರಃ ಸ್ತಮ್ಬಮಧ್ಯೇ ದರ್ಶನದಾತ್ರಾ ತೇನ ದೂತೇನ ಶಾಸ್ತಾರಂ ಮುಕ್ತಿದಾತಾರಞ್ಚ ಕೃತ್ವಾ ಪ್ರೇಷಯಾಮಾಸ|
36 ௩௬ இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் செங்கடலிலேயும், நாற்பது வருடகாலமாக வனாந்திரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
ಸ ಚ ಮಿಸರದೇಶೇ ಸೂಫ್ನಾಮ್ನಿ ಸಮುದ್ರೇ ಚ ಪಶ್ಚಾತ್ ಚತ್ವಾರಿಂಶದ್ವತ್ಸರಾನ್ ಯಾವತ್ ಮಹಾಪ್ರಾನ್ತರೇ ನಾನಾಪ್ರಕಾರಾಣ್ಯದ್ಭುತಾನಿ ಕರ್ಮ್ಮಾಣಿ ಲಕ್ಷಣಾನಿ ಚ ದರ್ಶಯಿತ್ವಾ ತಾನ್ ಬಹಿಃ ಕೃತ್ವಾ ಸಮಾನಿನಾಯ|
37 ௩௭ இஸ்ரவேல் மக்களை நோக்கி: உங்களுடைய தேவனாகிய கர்த்தர் உங்களுடைய சகோதரர்களிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக ஏற்படுத்துவார், அவர் சொல்வதை கேட்பீர்களாக என்று சொன்னவனும் இந்த மோசேயே.
ಪ್ರಭುಃ ಪರಮೇಶ್ವರೋ ಯುಷ್ಮಾಕಂ ಭ್ರಾತೃಗಣಸ್ಯ ಮಧ್ಯೇ ಮಾದೃಶಮ್ ಏಕಂ ಭವಿಷ್ಯದ್ವಕ್ತಾರಮ್ ಉತ್ಪಾದಯಿಷ್ಯತಿ ತಸ್ಯ ಕಥಾಯಾಂ ಯೂಯಂ ಮನೋ ನಿಧಾಸ್ಯಥ, ಯೋ ಜನ ಇಸ್ರಾಯೇಲಃ ಸನ್ತಾನೇಭ್ಯ ಏನಾಂ ಕಥಾಂ ಕಥಯಾಮಾಸ ಸ ಏಷ ಮೂಸಾಃ|
38 ௩௮ சீனாய்மலையில் தன்னோடு பேசின தூதனோடும் நம்முடைய முற்பிதாக்களோடும் வனாந்திரத்தில் இருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவார்த்தைகளைப் பெற்றவனும் இவனே.
ಮಹಾಪ್ರಾನ್ತರಸ್ಥಮಣ್ಡಲೀಮಧ್ಯೇಽಪಿ ಸ ಏವ ಸೀನಯಪರ್ವ್ವತೋಪರಿ ತೇನ ಸಾರ್ದ್ಧಂ ಸಂಲಾಪಿನೋ ದೂತಸ್ಯ ಚಾಸ್ಮತ್ಪಿತೃಗಣಸ್ಯ ಮಧ್ಯಸ್ಥಃ ಸನ್ ಅಸ್ಮಭ್ಯಂ ದಾತವ್ಯನಿ ಜೀವನದಾಯಕಾನಿ ವಾಕ್ಯಾನಿ ಲೇಭೇ|
39 ௩௯ இவனுக்கு நம்முடைய முற்பிதாக்கள் கீழ்ப்படிய மனமில்லாமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்களுடைய இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி,
ಅಸ್ಮಾಕಂ ಪೂರ್ವ್ವಪುರುಷಾಸ್ತಮ್ ಅಮಾನ್ಯಂ ಕತ್ವಾ ಸ್ವೇಭ್ಯೋ ದೂರೀಕೃತ್ಯ ಮಿಸರದೇಶಂ ಪರಾವೃತ್ಯ ಗನ್ತುಂ ಮನೋಭಿರಭಿಲಷ್ಯ ಹಾರೋಣಂ ಜಗದುಃ,
40 ௪0 ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன ஆனதோ தெரியாது; ஆதலால் எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி;
ಅಸ್ಮಾಕಮ್ ಅಗ್ರೇಽಗ್ರೇ ಗನ್ತುಮ್ ಅಸ್ಮದರ್ಥಂ ದೇವಗಣಂ ನಿರ್ಮ್ಮಾಹಿ ಯತೋ ಯೋ ಮೂಸಾ ಅಸ್ಮಾನ್ ಮಿಸರದೇಶಾದ್ ಬಹಿಃ ಕೃತ್ವಾನೀತವಾನ್ ತಸ್ಯ ಕಿಂ ಜಾತಂ ತದಸ್ಮಾಭಿ ರ್ನ ಜ್ಞಾಯತೇ|
41 ௪௧ அந்த நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்களுடைய கைவேலைகளில் மகிழ்ந்திருந்தார்கள்.
ತಸ್ಮಿನ್ ಸಮಯೇ ತೇ ಗೋವತ್ಸಾಕೃತಿಂ ಪ್ರತಿಮಾಂ ನಿರ್ಮ್ಮಾಯ ತಾಮುದ್ದಿಶ್ಯ ನೈವೇದ್ಯಮುತ್ಮೃಜ್ಯ ಸ್ವಹಸ್ತಕೃತವಸ್ತುನಾ ಆನನ್ದಿತವನ್ತಃ|
42 ௪௨ அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானத்தின் கோள்களுக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்திரத்திலிருந்த நாற்பது வருடங்கள்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும்,
ತಸ್ಮಾದ್ ಈಶ್ವರಸ್ತೇಷಾಂ ಪ್ರತಿ ವಿಮುಖಃ ಸನ್ ಆಕಾಶಸ್ಥಂ ಜ್ಯೋತಿರ್ಗಣಂ ಪೂಜಯಿತುಂ ತೇಭ್ಯೋಽನುಮತಿಂ ದದೌ, ಯಾದೃಶಂ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನಾಂ ಗ್ರನ್ಥೇಷು ಲಿಖಿತಮಾಸ್ತೇ, ಯಥಾ, ಇಸ್ರಾಯೇಲೀಯವಂಶಾ ರೇ ಚತ್ವಾರಿಂಶತ್ಸಮಾನ್ ಪುರಾ| ಮಹತಿ ಪ್ರಾನ್ತರೇ ಸಂಸ್ಥಾ ಯೂಯನ್ತು ಯಾನಿ ಚ| ಬಲಿಹೋಮಾದಿಕರ್ಮ್ಮಾಣಿ ಕೃತವನ್ತಸ್ತು ತಾನಿ ಕಿಂ| ಮಾಂ ಸಮುದ್ದಿಶ್ಯ ಯುಷ್ಮಾಭಿಃ ಪ್ರಕೃತಾನೀತಿ ನೈವ ಚ|
43 ௪௩ பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்களுடைய தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகவே, உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன்’ என்றும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே.
ಕಿನ್ತು ವೋ ಮೋಲಕಾಖ್ಯಸ್ಯ ದೇವಸ್ಯ ದೂಷ್ಯಮೇವ ಚ| ಯುಷ್ಮಾಕಂ ರಿಮ್ಫನಾಖ್ಯಾಯಾ ದೇವತಾಯಾಶ್ಚ ತಾರಕಾ| ಏತಯೋರುಭಯೋ ರ್ಮೂರ್ತೀ ಯುಷ್ಮಾಭಿಃ ಪರಿಪೂಜಿತೇ| ಅತೋ ಯುಷ್ಮಾಂಸ್ತು ಬಾಬೇಲಃ ಪಾರಂ ನೇಷ್ಯಾಮಿ ನಿಶ್ಚಿತಂ|
44 ௪௪ மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணு என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்டபடி, அந்தக் கூடாரம் வனாந்திரத்திலே நம்முடைய முற்பிதாக்களோடு இருந்தது.
ಅಪರಞ್ಚ ಯನ್ನಿದರ್ಶನಮ್ ಅಪಶ್ಯಸ್ತದನುಸಾರೇಣ ದೂಷ್ಯಂ ನಿರ್ಮ್ಮಾಹಿ ಯಸ್ಮಿನ್ ಈಶ್ವರೋ ಮೂಸಾಮ್ ಏತದ್ವಾಕ್ಯಂ ಬಭಾಷೇ ತತ್ ತಸ್ಯ ನಿರೂಪಿತಂ ಸಾಕ್ಷ್ಯಸ್ವರೂಪಂ ದೂಷ್ಯಮ್ ಅಸ್ಮಾಕಂ ಪೂರ್ವ್ವಪುರುಷೈಃ ಸಹ ಪ್ರಾನ್ತರೇ ತಸ್ಥೌ|
45 ௪௫ மேலும், யோசுவாவோடுகூட நம்முடைய முற்பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட யூதரல்லாதவர்களுடைய தேசத்தை அவர்கள் கைப்பற்றிக்கொள்ளும்போது, அதை அந்த தேசத்திற்கு கொண்டுவந்து தாவீதின் நாள்வரை வைத்திருந்தார்கள்.
ಪಶ್ಚಾತ್ ಯಿಹೋಶೂಯೇನ ಸಹಿತೈಸ್ತೇಷಾಂ ವಂಶಜಾತೈರಸ್ಮತ್ಪೂರ್ವ್ವಪುರುಷೈಃ ಸ್ವೇಷಾಂ ಸಮ್ಮುಖಾದ್ ಈಶ್ವರೇಣ ದೂರೀಕೃತಾನಾಮ್ ಅನ್ಯದೇಶೀಯಾನಾಂ ದೇಶಾಧಿಕೃತಿಕಾಲೇ ಸಮಾನೀತಂ ತದ್ ದೂಷ್ಯಂ ದಾಯೂದೋಧಿಕಾರಂ ಯಾವತ್ ತತ್ರ ಸ್ಥಾನ ಆಸೀತ್|
46 ௪௬ இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு ஆலயத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான்.
ಸ ದಾಯೂದ್ ಪರಮೇಶ್ವರಸ್ಯಾನುಗ್ರಹಂ ಪ್ರಾಪ್ಯ ಯಾಕೂಬ್ ಈಶ್ವರಾರ್ಥಮ್ ಏಕಂ ದೂಷ್ಯಂ ನಿರ್ಮ್ಮಾತುಂ ವವಾಞ್ಛ;
47 ௪௭ சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
ಕಿನ್ತು ಸುಲೇಮಾನ್ ತದರ್ಥಂ ಮನ್ದಿರಮ್ ಏಕಂ ನಿರ್ಮ್ಮಿತವಾನ್|
48 ௪௮ ஆனாலும் உன்னதமான தேவன் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசம்பண்ணுவதில்லை.
ತಥಾಪಿ ಯಃ ಸರ್ವ್ವೋಪರಿಸ್ಥಃ ಸ ಕಸ್ಮಿಂಶ್ಚಿದ್ ಹಸ್ತಕೃತೇ ಮನ್ದಿರೇ ನಿವಸತೀತಿ ನಹಿ, ಭವಿಷ್ಯದ್ವಾದೀ ಕಥಾಮೇತಾಂ ಕಥಯತಿ, ಯಥಾ,
49 ௪௯ வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது;
ಪರೇಶೋ ವದತಿ ಸ್ವರ್ಗೋ ರಾಜಸಿಂಹಾಸನಂ ಮಮ| ಮದೀಯಂ ಪಾದಪೀಠಞ್ಚ ಪೃಥಿವೀ ಭವತಿ ಧ್ರುವಂ| ತರ್ಹಿ ಯೂಯಂ ಕೃತೇ ಮೇ ಕಿಂ ಪ್ರನಿರ್ಮ್ಮಾಸ್ಯಥ ಮನ್ದಿರಂ| ವಿಶ್ರಾಮಾಯ ಮದೀಯಂ ವಾ ಸ್ಥಾನಂ ಕಿಂ ವಿದ್ಯತೇ ತ್ವಿಹ|
50 ௫0 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா’ என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
ಸರ್ವ್ವಾಣ್ಯೇತಾನಿ ವಸ್ತೂನಿ ಕಿಂ ಮೇ ಹಸ್ತಕೃತಾನಿ ನ||
51 ௫௧ “வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் காதுகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்களுடைய முற்பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்த ஆவியானவருக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
ಹೇ ಅನಾಜ್ಞಾಗ್ರಾಹಕಾ ಅನ್ತಃಕರಣೇ ಶ್ರವಣೇ ಚಾಪವಿತ್ರಲೋಕಾಃ ಯೂಯಮ್ ಅನವರತಂ ಪವಿತ್ರಸ್ಯಾತ್ಮನಃ ಪ್ರಾತಿಕೂಲ್ಯಮ್ ಆಚರಥ, ಯುಷ್ಮಾಕಂ ಪೂರ್ವ್ವಪುರುಷಾ ಯಾದೃಶಾ ಯೂಯಮಪಿ ತಾದೃಶಾಃ|
52 ௫௨ தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள்.
ಯುಷ್ಮಾಕಂ ಪೂರ್ವ್ವಪುರುಷಾಃ ಕಂ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನಂ ನಾತಾಡಯನ್? ಯೇ ತಸ್ಯ ಧಾರ್ಮ್ಮಿಕಸ್ಯ ಜನಸ್ಯಾಗಮನಕಥಾಂ ಕಥಿತವನ್ತಸ್ತಾನ್ ಅಘ್ನನ್ ಯೂಯಮ್ ಅಧೂನಾ ವಿಶ್ವಾಸಘಾತಿನೋ ಭೂತ್ವಾ ತಂ ಧಾರ್ಮ್ಮಿಕಂ ಜನಮ್ ಅಹತ|
53 ௫௩ தேவதூதர்களைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கடைபிடிக்காமல்போனீர்கள்” என்றான்.
ಯೂಯಂ ಸ್ವರ್ಗೀಯದೂತಗಣೇನ ವ್ಯವಸ್ಥಾಂ ಪ್ರಾಪ್ಯಾಪಿ ತಾಂ ನಾಚರಥ|
54 ௫௪ இவைகளை அவர்கள் கேட்டபொழுது மிகுந்த கோபமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள்.
ಇಮಾಂ ಕಥಾಂ ಶ್ರುತ್ವಾ ತೇ ಮನಃಸು ಬಿದ್ಧಾಃ ಸನ್ತಸ್ತಂ ಪ್ರತಿ ದನ್ತಘರ್ಷಣಮ್ ಅಕುರ್ವ್ವನ್|
55 ௫௫ அவன் பரிசுத்த ஆவியானவராலே நிறைந்தவனாக, வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபக்கத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் பார்த்து:
ಕಿನ್ತು ಸ್ತಿಫಾನಃ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಪೂರ್ಣೋ ಭೂತ್ವಾ ಗಗಣಂ ಪ್ರತಿ ಸ್ಥಿರದೃಷ್ಟಿಂ ಕೃತ್ವಾ ಈಶ್ವರಸ್ಯ ದಕ್ಷಿಣೇ ದಣ್ಡಾಯಮಾನಂ ಯೀಶುಞ್ಚ ವಿಲೋಕ್ಯ ಕಥಿತವಾನ್;
56 ௫௬ அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், இயேசுவானவர் தேவனுடைய வலதுபக்கத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
ಪಶ್ಯ, ಮೇಘದ್ವಾರಂ ಮುಕ್ತಮ್ ಈಶ್ವರಸ್ಯ ದಕ್ಷಿಣೇ ಸ್ಥಿತಂ ಮಾನವಸುತಞ್ಚ ಪಶ್ಯಾಮಿ|
57 ௫௭ அப்பொழுது அவர்கள் உரத்த சத்தமாகக் கூக்குரலிட்டுத் தங்களுடைய காதுகளை அடைத்துக்கொண்டு, ஒன்றுசேர்ந்து அவன்மேல் பாய்ந்து,
ತದಾ ತೇ ಪ್ರೋಚ್ಚೈಃ ಶಬ್ದಂ ಕೃತ್ವಾ ಕರ್ಣೇಷ್ವಙ್ಗುಲೀ ರ್ನಿಧಾಯ ಏಕಚಿತ್ತೀಭೂಯ ತಮ್ ಆಕ್ರಮನ್|
58 ௫௮ அவனை நகரத்திற்கு வெளியே தள்ளி, அவன் மீது கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர்கள் தங்களுடைய ஆடைகளைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தின் அருகே வைத்தார்கள்.
ಪಶ್ಚಾತ್ ತಂ ನಗರಾದ್ ಬಹಿಃ ಕೃತ್ವಾ ಪ್ರಸ್ತರೈರಾಘ್ನನ್ ಸಾಕ್ಷಿಣೋ ಲಾಕಾಃ ಶೌಲನಾಮ್ನೋ ಯೂನಶ್ಚರಣಸನ್ನಿಧೌ ನಿಜವಸ್ತ್ರಾಣಿ ಸ್ಥಾಪಿತವನ್ತಃ|
59 ௫௯ அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளும்போது, அவனைக் கல்லெறிந்தார்கள்.
ಅನನ್ತರಂ ಹೇ ಪ್ರಭೋ ಯೀಶೇ ಮದೀಯಮಾತ್ಮಾನಂ ಗೃಹಾಣ ಸ್ತಿಫಾನಸ್ಯೇತಿ ಪ್ರಾರ್ಥನವಾಕ್ಯವದನಸಮಯೇ ತೇ ತಂ ಪ್ರಸ್ತರೈರಾಘ್ನನ್|
60 ௬0 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப்பாவத்தைச் சுமத்தாமல் இரும் என்று அதிக சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி உயிரைவிட்டான்.
ತಸ್ಮಾತ್ ಸ ಜಾನುನೀ ಪಾತಯಿತ್ವಾ ಪ್ರೋಚ್ಚೈಃ ಶಬ್ದಂ ಕೃತ್ವಾ, ಹೇ ಪ್ರಭೇ ಪಾಪಮೇತದ್ ಏತೇಷು ಮಾ ಸ್ಥಾಪಯ, ಇತ್ಯುಕ್ತ್ವಾ ಮಹಾನಿದ್ರಾಂ ಪ್ರಾಪ್ನೋತ್|