< அப்போஸ்தலர் 17 >
1 ௧ அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்திற்கு வந்தார்கள்; அங்கே யூதர்களுக்கு ஒரு ஜெப ஆலயம் இருந்தது.
तेबे पौलुस और सीलास अम्फिपुलिस और अपुल्लोनिया नगरो रिये ऊई की थिस्सलुनीके नगरो खे आए, जेती यहूदिया रा एक प्रार्थना रा कअर था।
2 ௨ பவுல் தன் வழக்கத்தின்படியே அங்குபோய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களோடு பேசி,
तेबे पौलुस आपणी रवाजा रे मुताबिक तिना गे गया और तिना रे आरामो रे दिने पवित्र शास्त्रो बीचा ते तिना साथे बईस कित्ती
3 ௩ கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டுமென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் வேதவாக்கியங்களிலிருந்து காண்பித்தான்.
और से तिना रा मतलब तिना रा उदारण देई-देई की समजयाओ था कि मसीह रा दु: ख उठाणा और मरे रेया बीचा ते जिऊँदा ऊणा जरूरी था, “येई यीशु, जेसरी आऊँ तुसा खे कथा सुणाऊँआ, मसीह ए।”
4 ௪ அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கர்களில் அநேகரும், கனம்பெற்ற பெண்களில் அநேகரும் விசுவாசித்து, பவுல் சீலாவிடம் சேர்ந்துகொண்டார்கள்.
तिना बीचा ते कुछ यहूदिये और कई यूनानी भक्ते और बऊत सारी तर्मी जवाणसे मानी ला और पौलुस और सीलासो साथे, मिली गे।
5 ௫ விசுவாசிக்காத யூதர்கள் வைராக்கியத்தோடு பொல்லாத மனிதர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, பட்டணத்தில் கலவரம் உண்டாக்கி, யாசோனுடைய வீட்டைச் சுற்றிவளைத்து, அவர்களைப் பட்டணத்து மக்களிடம் இழுத்துக்கொண்டுவரப் பார்த்தார்கள்.
पर यहूदिया खे जल़न ऊईगी और तिने बजारू मांणूआ बीचा ते कई दुष्ट मांणू आपू साथे मलाई ते और पीड़ (भीड़) लगाई की नगरो रे शोर-शराबा करने लगे और यासोनो रे कअरो रे चढ़ाई करी की पौलुस और सीलास लोका सामणे ल्याऊणा चाए।
6 ௬ அவர்கள் அங்கு இல்லாததால், யாசோனையும் சில சகோதரர்களையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள்.
तेबे तिना रे तेती ना मिलणे ते बाद सेयो जोरे-जोरे साथे ये बोली की यासोन और कई ओर विश्वासी पाईया खे नगरो रे हाकिमो सामणे खिंजी की ली आए, “यो लोक, जिने दुनिया बी उल्ट-पुल्ट करी ती री, एती बी आईगे रे
7 ௭ இவர்களை யாசோன் தன் வீட்டில் சேர்த்துக்கொண்டான். இவர்கள் எல்லோரும் இயேசு என்னும் வேறு ஒருவனை ராஜா என்று சொல்லி, பேரரசனுடைய கட்டளைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று சத்தமிட்டு,
और यासोने यो आपणे कअरे राखी राखे और यो सब के सब बोलोए कि यीशु राजा ए और महाराजा कैसरो री आज्ञा रा बिरोद करोए।”
8 ௮ இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள்.
तिने लोका खे और नगरो रे हाकिमो खे ये सुणाई की सेयो डराई ते।
9 ௯ பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள்.
तेबे तिने यासोन और बाकि लोका ते जमानत लयी की सेयो छाडी ते।
10 ௧0 அன்று இரவிலே சகோதரர்கள் பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்திற்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சென்று, யூதர்களுடைய ஜெப ஆலயத்திற்குப் போனார்கள்.
विश्वासी पाईए रातो-रात पौलुस और सीलास बिरिया नगरो खे पेजी ते और सेयो तेती पऊँछी की यहूदिया रे प्रार्थना रे कअरो रे गये।
11 ௧௧ அந்தப் பட்டணத்து மக்கள் வசனத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டு, விஷயங்கள் இப்படியிருக்கிறதா என்று தினமும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைவிட நற்பண்பு உடையவர்களாக இருந்தார்கள்.
यो लोक तो थिस्सलुनीके नगरो रे यहूदिया ते ठीक थे और तिने बड़ी लालसा साथे वचन ग्रहण कित्तेया और हर रोज पवित्र शास्त्रो रे टोल़दे रये कि यो गल्ला सच्चिया कि नई।
12 ௧௨ அதனால் அவர்களில் அநேகரும், கிரேக்கர்களில் கனம்பெற்ற அநேக ஆண்களும் பெண்களும் விசுவாசித்தார்கள்.
तेबे तिना बीचा ते कई जणे और यूनानी दमदार जवाणसा बीचा ते और मर्दा बीचा ते बी कई जणे विश्वास कित्तेया।
13 ௧௩ பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறது என்று தெசலோனிக்கேயரான யூதர்களுக்கு தெரிந்தபோது, அங்கேயும் வந்து, மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
पर जेबे थिस्सलुनीके रे यहूदी जाणी गे कि पौलुस बिरिया नगरो रे बी परमेशरो रा सुसमाचार सुनाणे लगी रा, तेबे सेयो तेती बी आईगे और लोका खे उकसाणे लगे और आल्ला-गोल्ला करने लगे।
14 ௧௪ உடனே சகோதரர்கள் பவுலைக் கடல்வழியாக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயுவும் அங்கே தங்கியிருந்தார்கள்.
तेबे विश्वासी पाईए पौलुस फटाफट बिदा कित्तेया कि समुद्रो रे कनारे चली जा, पर सीलास और तीमुथियुस बिरिया रेई रईगे।
15 ௧௫ பவுலைக் கூட்டிச்சென்றவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் கூட்டிக்கொண்டுபோனார்கள். அங்கே பவுல், சீலாவையும் தீமோத்தேயுவையும் சீக்கிரமாக என்னிடம் வரச் சொல்லுங்கள் என்று அவர்களுக்குச் சொல்லி அனுப்பினான்.
पौलुसो खे पऊँछाणे वाल़े तेसखे एथेंस नगरो तक लयी गे और सीलास और तीमुथियुसो खे ये आज्ञा लयी की बिदा ऊआ कि मांगे फटाफट आयी जाओ।
16 ௧௬ அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது, அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைப் பார்த்து, தன் மனதில் அதிக வைராக்கியம் கொண்டு,
जेबे पौलुस एथेंस नगरो रे सीलास और तीमुथियुसो खे न्याल़ने लगी रा था, तेबे नगरो खे मूर्तिया साथे परे रा देखी की तेसरा जिऊ बऊत दु: खी ऊईगा।
17 ௧௭ ஜெப ஆலயத்தில் யூதர்களோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தையில் பார்ப்பவர்களோடும் தினமும் பேசிக்கொண்டிருந்தான்.
तेबे से प्रार्थना रे कअरो रे यहूदिया खे और भक्ता खे और चौको रे जो बी लोक मिलो थे, तिना साथे हर रोज बईस करो था।
18 ௧௮ அப்பொழுது எப்பிக்கூரர்களும் ஸ்தோயிக்கர்களுமான ஞானிகளில் சிலர் அவனோடுகூட வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனைப்போல இருக்கிறான் என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் போதித்ததினால் அப்படிச் சொன்னார்கள்.
तेबे इपिकूरी और स्तोईकी ज्ञानिया बीचा ते कई जणे तेस साथे बईस करने लगे और बऊत जणेया बोलेया, “ये बकवासी क्या बोलणा चाओआ?” पर ओरी बोलेया, “ये ओरी देवतेया रा प्रचार करने वाल़ा लगोआ, कऊँकि ये यीशुए रा और दुबारा जिऊँदा ऊणे रा सुसमाचार सुणाओआ।”
19 ௧௯ அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு கூட்டிக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற இந்த புதிய உபதேசம் என்ன என்று நாங்கள் தெரிந்துகொள்ளலாமா?
तेबे सेयो तेसखे आपू साथे अरियुपगुस नाओं रे प्रार्थना रे कअरो रे लयी गे और पूछेया, “क्या आसे जाणी सकूँए कि ये जो नौखी गल्ला, जो तूँ सुणाएया, क्या ए?
20 ௨0 நீ சொன்ன அநேக வினோதமான காரியங்களை எங்களுடைய காதுகளில் கேட்டோம்; அதின் விளக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம் என்றார்கள்.
कऊँकि तूँ आसा खे नऊखिया ई गल्ला सुणाएया, इजी री खातर आसे जाणना चाऊँए कि इना रा मतलब क्या ए?”
21 ௨௧ அந்த அத்தேனே பட்டணத்து மக்கள், அங்கே தங்குகிற வெளிமக்கள் எல்லோரும், வினோதமான காரியங்களைச் சொல்லுவதிலும் கேட்பதிலுமே தங்களுடைய நேரத்தைச் செலவழித்தார்கள்.
(कऊँकि बऊत सारे एथेंस रे लोक और परदेशी जो तेती रओ थे, नईया-नईया गल्ला बोलणे और सुणने ते अलावा ओर कोई बी कामो रे आपणा बखत नि बिताओ थे।)
22 ௨௨ அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனே பட்டணத்தாரே, எல்லாக் காரியத்திலும் உங்களை அதிக பக்தியுள்ளவர்களாகப் பார்க்கிறேன்.
तेबे पौलुसे अरियुपगुस प्रार्थना रे कअरो रे खड़े ऊई की बोलेया, “ओ एथेंस नगरो रे लोको! आऊँ देखूँआ कि तुसे हर गल्ला रे देवतेया खे बड़ा मानणे वाल़े ए।
23 ௨௩ எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்களுடைய ஆராதனைகளை கவனித்துப் பார்த்தபொழுது, “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைப் பார்த்தேன்; நீங்கள் அறியாமல் ஆராதனை செய்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
कऊँकि जेबे आऊँ कूमदे-फिरदे ऊए तुसा री पूजणे रिया चीजा खे देखणे लगी रा था, तेबे एक एड़ी बेदी बी देखी, जेतेरे लिखी राखेया रा था, अणजाणे ईश्वरो खे। तो जेसखे तुसे बिना जाणे पूजोए, आऊँ तुसा खे तेसरा समाचार सुणाऊँआ।
24 ௨௪ உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறபடியால், கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை.
“जिने परमेशरे तरती और तिजी री हर चीज बणाई, से स्वर्ग और तरतिया रा स्वामी ऊई की आथो रे बणाए रे मन्दरो रे नि रंदा
25 ௨௫ எல்லோருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் எல்லாவற்றையும் கொடுக்கிற ஆண்டவர், தமக்கு ஏதாவது தேவையென்றால், மனிதர்கள் கைகளினால் பெற்றுக்கொள்வதில்லை.
और ना ई किजी बी चीजा ते मतलब राखी की मांणूआ रे आथो री सेवा लओआ, कऊँकि से आपू ई सबी खे जीवन, श्वास और सब कुछ देओआ।
26 ௨௬ மனித இனமான எல்லா மக்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே உண்டாக்கி, பூமியெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருக்கும் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;
तिने एक ई मूल़ो ते मांणूआ री सब जातिया, सारी तरतिया रे रणे खे बणाई राखिया और तिना रे बणाए रे बखत और रणे री सीमा इजी री खातर बानी राखिया।
27 ௨௭ கர்த்தராகிய அவரை மக்கள் தடவியாவது தேடிக் கண்டுபிடிக்கும்படி அப்படிச் செய்தார்; அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகில் உள்ளார்.
परमेशरे एड़ा तेबे कित्तेया ताकि लोक तेसखे टोल़ो, उम्मीद राखो कि तेसखे टटोल़ी की पायी सकोए, तेबे बी से आसा बीचा ते केसी ते बी दूर निए।
28 ௨௮ ஏனென்றால், அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்களுடைய புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய வம்சத்தார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
कऊँकि आसे तेसदे ई जिऊँदे, चलदे-फिरदे और खड़े रऊँए, जेड़ा तुसा रे कितणे कविये बी बोली राखेया कि, आसे तो तेसरे ई वंश ए।
29 ௨௯ நாம் தேவனுடைய வம்சமாக இருப்பதினால், மனிதனுடைய யோசனையினாலும் சித்திரவேலையினாலும் உருவாக்கின தங்கம், வெள்ளி, கல் ஆகியவற்றிக்கு தெய்வம் ஒப்பாவார் என்று நாம் நினைக்கக்கூடாது.
तेबे परमेशरो रा वंश ऊई की आसा खे ये समजणा ठीक निए कि ईश्वर, सुईना, रूपा या पात्थरो जेड़ा ए, जो मांणूआ री कारीगरिया ते और सोच-विचारा ते गढ़ी राखे।
30 ௩0 மக்களின் அறியாமையின் நாட்களை தேவன் பார்க்காதவர்போல இருந்தார்; இப்பொழுது மனம் மாறவேண்டும் என்று எல்லா மனிதர்களுக்கும் கட்டளையிடுகிறார்.
“तेबेई परमेशरे लोका री अज्ञानता रे बखतो खे त्यान नि दित्तेया, पर एबे हर जगा रे सबी मांणूआ खे मन फिराणे री आज्ञा देओआ।
31 ௩௧ ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அந்த நாளிலே அவர் தாம் நியமித்த மனிதனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாக நியாயந்தீர்ப்பார்; அந்த மனிதனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லோருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.
कऊँकि तिने एक दिन बणाई राखेया, जिदे तेस, तेस मांणूए रे जरिए तर्मो साथे एसा दुनिया रा न्याय करना, जो तिने बणाई राखी और तेसखे मरे रेया बीचा ते जिऊँदा करी की ये गल्ल सबी पाँदे परमाणित करी ती री।”
32 ௩௨ மரித்தவர்களின் உயிர்த்தெழுதலைக்குறித்து பவுல் சொல்வதை அவர்கள் கேட்டபோது, சிலர் கேலிசெய்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை வேறொரு நாளில் கேட்போம் என்றார்கள்.
मरे रेया दुबारा जिऊँदा ऊणे री गल्ल सुणी की बऊत जणे तेसरा मजाक करने लगे और बऊत जणे बोलणे लगे, “ये गल्ल आसे तांते फेर कदी सुणुंगे।”
33 ௩௩ எனவே, பவுல் அவர்களைவிட்டுப் போய்விட்டான்.
तेबे पौलुस तिना बीचा ते निकल़ी गा।
34 ௩௪ சிலர் பவுலோடு சேர்ந்துகொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பெயருள்ள ஒரு பெண்ணும், வேறு சிலரும் இருந்தார்கள்.
पर कई सारे मांणू तेस साथे मिली गे और तिने प्रभु यीशुए पाँदे विश्वास कित्तेया, जिना बीचा ते दियुनुसियुस अरियुपगुस था और दमरिस नाओं री एक जवाणस थी और तिना साथे ओर बी बऊत मांणू थे।