< அப்போஸ்தலர் 16 >

1 அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவிற்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீடன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதப்பெண், அவன் தகப்பன் கிரேக்கன்.
तेबे से दिरबे और लुस्त्रा नगरो रे बी गया, और देखो, तेती तीमुथियुस नाओं रा एक चेला था, जो केसी विश्वासी यहूदिणिया रा पाऊ था, पर तेसरा पिता यूनान देशो रा रणे वाल़ा था।
2 அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரர்களாலே நற்சாட்சிப் பெற்றவனாக இருந்தான்.
से लुस्त्रा और इकुनियुम नगरो रे विश्वासी पाईया बीचे जाणेया-मानेया रा था।
3 அவனைப் பவுல் தன்னோடுகூட கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அங்கிருந்த யூதர்களெல்லோருக்கும் தெரிந்திருந்தபடியால், அவர்களின் பொருட்டு அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான்.
पौलुसो री इच्छा थी की ये बी मां साथे चलो और जो यहूदी लोक तिना जगा रे थे तिना री बजअ ते तेसरा खतना कित्तेया, कऊँकि सेयो सब जाणो थे कि एसरा पिता यूनान देशो रा रणे वाल़ा था।
4 அவர்கள் பட்டணங்களுக்குப் போகும்போது, எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலர்களாலும் மூப்பர்களாலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொண்டு நடக்கும்படி அவர்களுக்குச் சொன்னார்கள்.
तेबे पौलुस और तिना रे साथी नगरो-नगरो रे जांदे ऊए तिना बिधिया खे, जो यरूशलेमो रे प्रेरिते और बुजुर्गे ठराई राखी थी, मानणे खे तिना खे पऊँछांदे जाओ थे।
5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.
ईंयां मण्डल़ी विश्वासो रे मजबूत ऊँदी रई और गिणतिया रे हर रोज बड़दी गयी।
6 அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துச்சென்றபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லவேண்டாமென்று பரிசுத்த ஆவியானவராலே தடைசெய்யப்பட்டு,
तेबे सेयो फूगिया और गलातिया रे प्रदेशो रिये ऊँदे ऊए गये और पवित्र आत्मे तिना खे आसिया प्रदेशो रे वचन सुनाणे खे ना कित्ती।
7 மீசியா தேசம்வரை வந்து, பித்தினியா நாட்டிற்குப் போக விரும்பினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவிடவில்லை.
तेबे तिने मूसिया प्रदेशो रे नेड़े पऊँछी की बितूनिया नगरो खे जाणा चाया, पर प्रभु यीशुए रे पवित्र आत्मे सेयो जाणे नि दित्ते।
8 அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாகப்போய், துரோவாவிற்கு வந்தார்கள்.
तेबे सेयो मूसिया प्रदेशो रे ऊई की त्रोआसो नगरो खे आए।
9 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டானது; அது என்னவென்றால், மக்கெதோனியா தேசத்தைச் சேர்ந்த ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவிற்கு வந்து எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று பவுலை வேண்டிக்கொண்டதாக இருந்தது.
तेबे पौलुसे राथियो खे दर्शन देखेया कि एक मकदुनी मर्द खड़े रा, तेसते बिनती करी की बोलोआ, “पार उतरी की मकिदुनिया खे आओ और आसा री मताद कर।”
10 ௧0 அந்த தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்கு நற்செய்தியைத் தெரிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தார் என்று நாங்கள் உறுதிப்படுத்திக்கொண்டு, உடனே மக்கெதோனியாவிற்குப் புறப்பட்டோம்.
तेसरा ये दर्शन देखदे ई तिने फटाफट मकिदुनिया प्रदेशो खे जाणा चाया, ये समजी की कि परमेशरे सेयो सुसमाचार सुनाणे खे तेती बुलाई राखे।
11 ௧௧ நாங்கள் துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவிற்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்திற்கும் சென்று,
तेबे त्रोआसो नगरो ते जाह्ज खोली की आसे सीदे सुमात्राके टापूए खे और दूजे दिने नियापुलिस नगरो खे आए।
12 ௧௨ அங்கிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ரோமர்கள் குடியேறின பிலிப்பி பட்டணத்திற்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாட்கள் தங்கியிருந்தோம்.
तेथा ते आसे फिलिप्पिया रे पऊँछे, जो मकिदुनिया प्रान्तो रा खास नगर और रोमिया री बस्ती थी और आसे तेस नगरो रे कई दिन तक रये।
13 ௧௩ ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்திற்கு வெளியேபோய் ஆற்றின் அருகே வழக்கமாக ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த பெண்களுக்குப் போதித்தோம்.
आरामो रे दिने आसे नगरो रे फाटको ते बारे नदिया रे कनारे ये समजी की गये कि तेती प्रार्थना करने खे जगा ऊणी और बैठी की तिना जवाणसा साथे, जो कट्ठिया ऊईया थिया, गल्ला करने लगे।
14 ௧௪ அப்பொழுது தியத்தீரா ஊரைச்சேர்ந்த விலையுயர்ந்த சிவப்பு கம்பளம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பெயருள்ள ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொன்னவைகளைக் கவனிப்பதற்காக கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தார்.
लुदिया नाओं री थुआतीरा नगरो री, बैंगणी टाले बेचणे वाल़ी परमेशरो री एक भक्त जवाणस सुणने लगी री थी और प्रभुए तेसा रा मन खोलेया, ताकि से पौलुसो री गल्ला खे त्यान करी की सुणो।
15 ௧௫ அவளும் அவள் குடும்பத்தில் உள்ளவர்களும் ஞானஸ்நானம் பெற்றப்பின்பு, அவள் எங்களைப் பார்த்து: நான் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று நீங்கள் நினைத்தால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை மிகவும் வேண்டிக் கேட்டுக்கொண்டாள்.
जेबे तेसे आपणे कराने समेत बपतिस्मा लया, तेबे तेसे बिनती कित्ती, “जे तुसे माखे प्रभुए री विश्वासणी समजोए तो चली की मेरे कअरे रओ।”
16 ௧௬ நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்திற்குப் போகும்போது குறிசொல்லுகிற ஆவியினால், குறிசொல்லி தன் எஜமான்களுக்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் ஒரு பெண் எங்களுக்கு எதிரே வந்தாள்.
जेबे सेयो प्रार्थना करने री जगा रे जाणे लगी रे थे, तेबे आसा खे एक दासी मिली, जेसा रे आऊणे वाल़े बखतो रे बारे रे बताणे वाल़ी दुष्टात्मा थी और जो एड़ा करने ते से आपणे स्वामिया खे बऊत कुछ कमाई की ली आओ थी।
17 ௧௭ அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனிதர்கள் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர்கள், இரட்சிப்பின் வழியை நமக்குத் தெரிவிக்கிறவர்கள் என்று சத்தமாக சொன்னாள்.
से पौलुस और आसा पीछे आयी की चींगणे लगी कि, “यो मांणू परमप्रदान परमेशरो रे दास ए, जो आसा खे उद्धारो री कथा सुणाओए।”
18 ௧௮ அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: நீ இவளைவிட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளைக் கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியேபோனது.
से बऊत दिन तक एड़ा ई करदी रई। पर पौलुस दु: खी ऊईगा और मूँ फेरी की तेसा दुष्टात्मा खे बोलेया, “आऊँ ताखे प्रभु यीशु मसीह रे नाओं ते आज्ञा देऊँआ कि एसा बीचा ते निकल़ी जा और से तेसी बखते ई निकल़ी गी।”
19 ௧௯ அவளுடைய எஜமான்கள் தங்களுடைய வருமானத்திற்கான நம்பிக்கை போய்விட்டதால், பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.
जेबे तेसा रे स्वामिए देखेया कि आसा री कमाईया री उम्मीद चली गी, तेबे सेयो पौलुस और सीलासो के पकड़ी की चौको रे प्रदाना गे खिंजी की लयी गे
20 ௨0 அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்படைத்து: யூதர்களாகிய இந்த மனிதர்கள் நம்முடைய பட்டணத்தில் குழப்பம் உண்டாக்கி,
और तिना खे यहूदिया रे हाकिमा गे लयी जाई की बोलेया, “यो लोक जो यहूदी ए, आसा रे नगरो रे बऊत जादा शोर-शराबा लगी रे करने।
21 ௨௧ ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் முடியாத தவறான பழக்கவழக்கங்களைப் போதிக்கிறார்கள் என்றனர்.
और एड़िया रवाजा बताणे लगी रे जिना खे ग्रहण करना या मानणा आसा रोमिया खे ठीक निए।”
22 ௨௨ அப்பொழுது மக்கள் கூட்டம்கூடி, அவர்களுக்கு விரோதமாக வந்தார்கள். அதிகாரிகள் அவர்களுடைய ஆடைகளைக் கிழிக்கவும், அவர்களை அடிக்கவும் சொல்லி;
तेबे पीड़ा रे लोक पौलुस और सीलासो रे बिरोदो रे कट्ठे ऊई की चढ़ी गे और हाकिमे तिना रे टाले फाड़ी की खोली ते और तिना खे डण्डे बाणे री आज्ञा दित्ती।
23 ௨௩ அவர்களை அதிகமாக அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாகக் காவல்காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளைக் கொடுத்தார்கள்.
तेबे तिना खे बऊत डण्डे बाई की सेयो जेला रे पाई ते और जेलरो खे आज्ञा दित्ती कि इना री चौकसी राखणी।
24 ௨௪ அவன் இப்படிப்பட்டக் கட்டளையைப் பெற்றுக்கொண்டு, அவர்களை உள்காவல் அறையிலே அடைத்து, அவர்கள் கால்களை அசைக்க முடியாதபடிக்கு தொழுமரத்தின் ஓட்டைகளில் மாட்டிவைத்தான்.
तिने एड़ी आज्ञा पाई की सेयो पीतरो री कोठरिया रे राखे और तिना रे पैर काठो रे ठोकी ते।
25 ௨௫ நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக்கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
तकरीबन आदी राथियो तक पौलुस और सीलास प्रार्थना करदे ऊए परमेशरो रे पजन लगी रे थे गाणे और बन्दुए तिना खे सुणने लगी रे थे।
26 ௨௬ திடீரென்று சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையத்தக்கதாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே சிறைச்சாலை கதவுகளெல்லாம் திறந்தன; எல்லோருடைய கட்டுகளும் கழன்றுபோனது.
तदुओ की एकदम बऊत बड़ा इल्लण ऊआ, एथो तक कि जेला री निऊँआ तक इल्ली गिया और फटाफट सब द्वार खुली गे और सबी रे बन्दन खुली गे।
27 ௨௭ சிறைச்சாலைக்காரன் தூக்கம் தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருப்பதைப் பார்த்து, கட்டப்பட்டு இருந்தவர்கள் ஓடிப்போனார்கள் என்று நினைத்து, வாளை எடுத்து தற்கொலை செய்துகொள்ளப்போனான்.
तेबे जेलर जागी गा और जेला रे द्वार खुले देखी की समजेया कि बन्दुए नठीगे रे, तेबे तिने तलवार खिंजी की आपू खेई बाणी चायी।
28 ௨௮ அப்பொழுது, பவுல் சத்தமிட்டு: நீ உனக்கு எந்தத் தீங்கையும் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம் என்றான்.
पर तदुओ कि पौलुसे जोरे की बोलेया, “आपणे आपू खे कुछ बी नुकशाण नि पऊँचा, कऊँकि आसे सब एथी ए।”
29 ௨௯ அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடிப்போய், நடுங்கி, பவுலுக்கும் சீலாவிற்கும் முன்பாக விழுந்து,
तेबे जेलरे दिऊआ मंगवाई की पीतरो खे लमखणे लगेया और थरथरांदा ऊआ पौलुस और सीलासो रे आगे रूड़ेया।
30 ௩0 அவர்களை வெளியே கூட்டிக்கொண்டுவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்னசெய்யவேண்டும் என்றான்.
तेबे तिने तिना खे बारे ल्याई की बोलेया, “ओ सज्जनो! उद्धार पाणे खे आऊँ क्या करुँ?”
31 ௩௧ அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி,
तिने बोलेया, “प्रभु यीशुए पाँदे विश्वास कर, तेबे ताखे और तेरे कराने खे उद्धार मिलणा।”
32 ௩௨ அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.
तेबे पौलुस और सिलासे तेसखे और तेसरे सारे कअरो रे लोका खे प्रभुए रा वचन सुणाया।
33 ௩௩ மேலும் அந்த இராத்திரி நேரத்திலே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனோடுகூட இருந்தவர்களும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
तेबे राथियो खे तेसी कअड़िया रे जेलरे पौलुस और सिलास निए और तिना रे जख्म तोए और तिने आपणे लोका समेत फटाफट बपतिस्मा लया।
34 ௩௪ பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு உணவுகொடுத்து, தன் குடும்பத்தார் அனைவரோடும் தேவனிடத்தில் விசுவாசம் வைத்து மனமகிழ்ச்சியாக இருந்தான்.
तेबे तिने सेयो आपणे कअरे निए और तिना खे रोटी खुल़ाई और सारा कराना परमेशरो पाँदे विश्वास करी की खुश ऊआ।
35 ௩௫ பொழுதுவிடிந்தபின்பு: அந்த மனிதர்களை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் காவலர்களை அனுப்பினார்கள்.
जेबे दिन ऊआ, तेबे हाकिमे सिपाईया गे सन्देशा पेजेया, “तिना मांणूआ खे छाडी देओ।”
36 ௩௬ சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலைசெய்யும்படி அதிகாரிகள் கட்டளைக் கொடுத்து அனுப்பியுள்ளார்கள்; எனவே நீங்கள் இப்பொழுது புறப்பட்டு சமாதானத்தோடு போங்கள் என்றான்.
जेलरे यो गल्ला पौलुसो गे बोलिया, “हाकिमे तुसा खे छाडणे खे बोली ता रा, तो एबे निकल़ी की बेफिकर ऊई की चली जाओ।”
37 ௩௭ அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரிக்காமல், வெளிப்படையாக அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாக எங்களை விடுதலை செய்கிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை விடுதலைசெய்து வெளியே அனுப்பிவிடட்டும் என்றான்.
पर पौलुसे तेसखे बोलेया, “तिने आसे, हालाँकि रोमी मांणू ए, दोषो ते बिना, लोका सामणे कुटे और जेला रे पाईते। एबे क्या चोरिए-चोरिए निकयाल़ी देओए? एड़ा नि ऊणा, पर सेयो आपू आयी की आसा खे बारे निकयाल़ी की लयी जाओ।”
38 ௩௮ காவலர்கள் இந்த வார்த்தைகளைச் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் ரோமர்கள் என்று அதிகாரிகள் கேட்டபொழுது பயந்துவந்து,
सिपाईए ये गल्ल हाकिमा खे बोली ती और सेयो ये सुणी की सेयो कि रोमी ए, डरी गे।
39 ௩௯ அவர்களோடு தயவாகப்பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.
तेबे तिने आयी की तिना ते माफी मांगी और बारे लयी जाई की बिनती कित्ती कि नगरो ते बारे चली जाओ।
40 ௪0 அப்படியே அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளின் வீட்டிற்குப்போய், சகோதரர்களைப் பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டுப்போனார்கள்.
तेबे सेयो जेला ते निकल़ी की लुदिया रे कअरे गये और विश्वासी पाईया साथे मिली की तिना खे बोलेया तुसा खे शान्ति मिलो और चली गे।

< அப்போஸ்தலர் 16 >