< 1 யோவான் 3 >
1 ௧ நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரியது என்று உணர்ந்து பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.
పశ్యత వయమ్ ఈశ్వరస్య సన్తానా ఇతి నామ్నాఖ్యామహే, ఏతేన పితాస్మభ్యం కీదృక్ మహాప్రేమ ప్రదత్తవాన్, కిన్తు సంసారస్తం నాజానాత్ తత్కారణాదస్మాన్ అపి న జానాతి|
2 ௨ பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம், இனி எவ்விதமாக இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை; ஆனாலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற பிரகாரமாகவே நாம் அவரைக் காண்பதினால், அவருடைய சாயலாக இருப்போம் என்று அறிந்திருக்கிறோம்.
హే ప్రియతమాః, ఇదానీం వయమ్ ఈశ్వరస్య సన్తానా ఆస్మహే పశ్చాత్ కిం భవిష్యామస్తద్ అద్యాప్యప్రకాశితం కిన్తు ప్రకాశం గతే వయం తస్య సదృశా భవిష్యామి ఇతి జానీమః, యతః స యాదృశో ఽస్తి తాదృశో ఽస్మాభిర్దర్శిష్యతే|
3 ௩ அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவன் எவனும், அவர் சுத்தமுள்ளவராக இருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
తస్మిన్ ఏషా ప్రత్యాశా యస్య కస్యచిద్ భవతి స స్వం తథా పవిత్రం కరోతి యథా స పవిత్రో ఽస్తి|
4 ௪ பாவம் செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
యః కశ్చిత్ పాపమ్ ఆచరతి స వ్యవస్థాలఙ్ఘనం కరోతి యతః పాపమేవ వ్యవస్థాలఙ్ఘనం|
5 ௫ அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவம் இல்லை.
అపరం సో ఽస్మాకం పాపాన్యపహర్త్తుం ప్రాకాశతైతద్ యూయం జానీథ, పాపఞ్చ తస్మిన్ న విద్యతే|
6 ௬ அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவம் செய்கிறதில்லை; பாவம் செய்கிற எவனும் அவரைக் காணவும் இல்லை, அவரை அறியவும் இல்லை.
యః కశ్చిత్ తస్మిన్ తిష్ఠతి స పాపాచారం న కరోతి యః కశ్చిత్ పాపాచారం కరోతి స తం న దృష్టవాన్ న వావగతవాన్|
7 ௭ பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் ஏமாற்றப்படாமலிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராக இருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாக இருக்கிறான்.
హే ప్రియబాలకాః, కశ్చిద్ యుష్మాకం భ్రమం న జనయేత్, యః కశ్చిద్ ధర్మ్మాచారం కరోతి స తాదృగ్ ధార్మ్మికో భవతి యాదృక్ స ధామ్మికో ఽస్తి|
8 ௮ பாவம் செய்கிறவன் பிசாசினால் உண்டாயிருக்கிறான்; ஏனென்றால், பிசாசானவன் ஆரம்பமுதல் பாவம் செய்கிறான், பிசாசினுடைய செயல்களை அழிப்பதற்காக தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
యః పాపాచారం కరోతి స శయతానాత్ జాతో యతః శయతాన ఆదితః పాపాచారీ శయతానస్య కర్మ్మణాం లోపార్థమేవేశ్వరస్య పుత్రః ప్రాకాశత|
9 ௯ தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டன், ஏனென்றால், அவருடைய வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவம் செய்யமாட்டான்.
యః కశ్చిద్ ఈశ్వరాత్ జాతః స పాపాచారం న కరోతి యతస్తస్య వీర్య్యం తస్మిన్ తిష్ఠతి పాపాచారం కర్త్తుఞ్చ న శక్నోతి యతః స ఈశ్వరాత్ జాతః|
10 ௧0 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் யாரென்றும், பிசாசின் பிள்ளைகள் யாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவன் இல்லை.
ఇత్యనేనేశ్వరస్య సన్తానాః శయతానస్య చ సన్తానా వ్యక్తా భవన్తి| యః కశ్చిద్ ధర్మ్మాచారం న కరోతి స ఈశ్వరాత్ జాతో నహి యశ్చ స్వభ్రాతరి న ప్రీయతే సో ఽపీశ్వరాత్ జాతో నహి|
11 ௧௧ நாம் ஒருவரையொருவர் நேசிக்கவேண்டும் என்பதே நீங்கள் ஆரம்பமுதல் கேள்விப்பட்ட செய்தியாக இருக்கிறது.
యతస్తస్య య ఆదేశ ఆదితో యుష్మాభిః శ్రుతః స ఏష ఏవ యద్ అస్మాభిః పరస్పరం ప్రేమ కర్త్తవ్యం|
12 ௧௨ சாத்தானால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போல இருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் செய்கைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய செய்கைகள் நீதி உள்ளவைகளுமாக இருந்ததினிமித்தம்தானே.
పాపాత్మతో జాతో యః కాబిల్ స్వభ్రాతరం హతవాన్ తత్సదృశైరస్మాభి ర్న భవితవ్యం| స కస్మాత్ కారణాత్ తం హతవాన్? తస్య కర్మ్మాణి దుష్టాని తద్భ్రాతుశ్చ కర్మ్మాణి ధర్మ్మాణ్యాసన్ ఇతి కారణాత్|
13 ௧௩ என் சகோதர்களே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாமலிருங்கள்.
హే మమ భ్రాతరః, సంసారో యది యుష్మాన్ ద్వేష్టి తర్హి తద్ ఆశ్చర్య్యం న మన్యధ్వం|
14 ௧௪ நாம் சகோதரர்களிடம் அன்பு செலுத்துகிறபடியால், மரணத்தைவிட்டு விலகி ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைபெற்றிருக்கிறான்.
వయం మృత్యుమ్ ఉత్తీర్య్య జీవనం ప్రాప్తవన్తస్తద్ భ్రాతృషు ప్రేమకరణాత్ జానీమః| భ్రాతరి యో న ప్రీయతే స మృత్యౌ తిష్ఠతి|
15 ௧௫ தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனித கொலைபாதகனாக இருக்கிறான்; மனித கொலைபாதகன் எவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திருக்காது என்று அறிவீர்கள். (aiōnios )
యః కశ్చిత్ స్వభ్రాతరం ద్వేష్టి సం నరఘాతీ కిఞ్చానన్తజీవనం నరఘాతినః కస్యాప్యన్తరే నావతిష్ఠతే తద్ యూయం జానీథ| (aiōnios )
16 ௧௬ அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரர்களுக்காக ஜீவனைக் கொடுக்கக் கடனாளிகளாக இருக்கிறோம்.
అస్మాకం కృతే స స్వప్రాణాంస్త్యక్తవాన్ ఇత్యనేన వయం ప్రేమ్నస్తత్త్వమ్ అవగతాః, అపరం భ్రాతృణాం కృతే ఽస్మాభిరపి ప్రాణాస్త్యక్తవ్యాః|
17 ௧௭ ஒருவன் இந்த உலகத்தின் செல்வம் உடையவனாக இருந்து, தன் சகோதரனுக்கு வறுமை உண்டென்று அறிந்து, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவஅன்பு நிலைபெறுகிறது எப்படி?
సాంసారికజీవికాప్రాప్తో యో జనః స్వభ్రాతరం దీనం దృష్ట్వా తస్మాత్ స్వీయదయాం రుణద్ధి తస్యాన్తర ఈశ్వరస్య ప్రేమ కథం తిష్ఠేత్?
18 ௧௮ என் பிள்ளைகளே, வசனத்தினாலும் பேச்சினாலுமல்ல, செயல்களினாலும் உண்மையினாலும் அன்பு செலுத்துவோம்.
హే మమ ప్రియబాలకాః, వాక్యేన జిహ్వయా వాస్మాభిః ప్రేమ న కర్త్తవ్యం కిన్తు కార్య్యేణ సత్యతయా చైవ|
19 ௧௯ இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்கள் என்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
ఏతేన వయం యత్ సత్యమతసమ్బన్ధీయాస్తత్ జానీమస్తస్య సాక్షాత్ స్వాన్తఃకరణాని సాన్త్వయితుం శక్ష్యామశ్చ|
20 ௨0 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராக இருந்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
యతో ఽస్మదన్తఃకరణం యద్యస్మాన్ దూషయతి తర్హ్యస్మదన్తః కరణాద్ ఈశ్వరో మహాన్ సర్వ్వజ్ఞశ్చ|
21 ௨௧ பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காமலிருந்தால், நாம் தேவனிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்து,
హే ప్రియతమాః, అస్మదన్తఃకరణం యద్యస్మాన్ న దూషయతి తర్హి వయమ్ ఈశ్వరస్య సాక్షాత్ ప్రతిభాన్వితా భవామః|
22 ௨௨ அவருடைய கட்டளைகளை நாம் கடைபிடித்து அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் கேட்டுக்கொள்ளுகிறது எதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
యచ్చ ప్రార్థయామహే తత్ తస్మాత్ ప్రాప్నుమః, యతో వయం తస్యాజ్ఞాః పాలయామస్తస్య సాక్షాత్ తుష్టిజనకమ్ ఆచారం కుర్మ్మశ్చ|
23 ௨௩ நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாக இருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாக இருக்கவேண்டுமென்பதே அவருடைய கட்டளையாக இருக்கிறது.
అపరం తస్యేయమాజ్ఞా యద్ వయం పుత్రస్య యీశుఖ్రీష్టస్య నామ్ని విశ్వసిమస్తస్యాజ్ఞానుసారేణ చ పరస్పరం ప్రేమ కుర్మ్మః|
24 ௨௪ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியானவராலே அறிந்திருக்கிறோம்.
యశ్చ తస్యాజ్ఞాః పాలయతి స తస్మిన్ తిష్ఠతి తస్మిన్ సోఽపి తిష్ఠతి; స చాస్మాన్ యమ్ ఆత్మానం దత్తవాన్ తస్మాత్ సో ఽస్మాసు తిష్ఠతీతి జానీమః|