< 1 யோவான் 1 >

1 ஆரம்பமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டும், எங்களுடைய கண்களினாலே கண்டதும், நாங்கள் ஏறெடுத்துப் பார்த்ததும், எங்களுடைய கைகளினாலே தொட்டதுமாக இருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்.
ಆದಿತೋ ಯ ಆಸೀದ್ ಯಸ್ಯ ವಾಗ್ ಅಸ್ಮಾಭಿರಶ್ರಾವಿ ಯಞ್ಚ ವಯಂ ಸ್ವನೇತ್ರೈ ರ್ದೃಷ್ಟವನ್ತೋ ಯಞ್ಚ ವೀಕ್ಷಿತವನ್ತಃ ಸ್ವಕರೈಃ ಸ್ಪೃಷ್ಟವನ್ತಶ್ಚ ತಂ ಜೀವನವಾದಂ ವಯಂ ಜ್ಞಾಪಯಾಮಃ|
2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்தில் இருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாக இருக்கிற அந்த ஜீவனை நாங்கள் பார்த்து, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். (aiōnios g166)
ಸ ಜೀವನಸ್ವರೂಪಃ ಪ್ರಕಾಶತ ವಯಞ್ಚ ತಂ ದೃಷ್ಟವನ್ತಸ್ತಮಧಿ ಸಾಕ್ಷ್ಯಂ ದದ್ಮಶ್ಚ, ಯಶ್ಚ ಪಿತುಃ ಸನ್ನಿಧಾವವರ್ತ್ತತಾಸ್ಮಾಕಂ ಸಮೀಪೇ ಪ್ರಕಾಶತ ಚ ತಮ್ ಅನನ್ತಜೀವನಸ್ವರೂಪಂ ವಯಂ ಯುಷ್ಮಾನ್ ಜ್ಞಾಪಯಾಮಃ| (aiōnios g166)
3 நீங்களும் எங்களோடு ஐக்கியம் உள்ளவர்களாகும்படி, நாங்கள் பார்த்தும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.
ಅಸ್ಮಾಭಿ ರ್ಯದ್ ದೃಷ್ಟಂ ಶ್ರುತಞ್ಚ ತದೇವ ಯುಷ್ಮಾನ್ ಜ್ಞಾಪ್ಯತೇ ತೇನಾಸ್ಮಾಭಿಃ ಸಹಾಂಶಿತ್ವಂ ಯುಷ್ಮಾಕಂ ಭವಿಷ್ಯತಿ| ಅಸ್ಮಾಕಞ್ಚ ಸಹಾಂಶಿತ್ವಂ ಪಿತ್ರಾ ತತ್ಪುತ್ರೇಣ ಯೀಶುಖ್ರೀಷ್ಟೇನ ಚ ಸಾರ್ದ್ಧಂ ಭವತಿ|
4 உங்களுடைய சந்தோஷம் நிறைவாக இருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.
ಅಪರಞ್ಚ ಯುಷ್ಮಾಕಮ್ ಆನನ್ದೋ ಯತ್ ಸಮ್ಪೂರ್ಣೋ ಭವೇದ್ ತದರ್ಥಂ ವಯಮ್ ಏತಾನಿ ಲಿಖಾಮಃ|
5 தேவன் ஒளியாக இருக்கிறார், அவரிடம் கொஞ்சம்கூட இருள் இல்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற செய்தியாக இருக்கிறது.
ವಯಂ ಯಾಂ ವಾರ್ತ್ತಾಂ ತಸ್ಮಾತ್ ಶ್ರುತ್ವಾ ಯುಷ್ಮಾನ್ ಜ್ಞಾಪಯಾಮಃ ಸೇಯಮ್| ಈಶ್ವರೋ ಜ್ಯೋತಿಸ್ತಸ್ಮಿನ್ ಅನ್ಧಕಾರಸ್ಯ ಲೇಶೋಽಪಿ ನಾಸ್ತಿ|
6 நாம் அவரோடு ஐக்கியம் உள்ளவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாக இருந்தால், சத்தியத்தின்படி நடக்காமல் பொய் சொல்லுகிறவர்களாக இருப்போம்.
ವಯಂ ತೇನ ಸಹಾಂಶಿನ ಇತಿ ಗದಿತ್ವಾ ಯದ್ಯನ್ಧಾಕಾರೇ ಚರಾಮಸ್ತರ್ಹಿ ಸತ್ಯಾಚಾರಿಣೋ ನ ಸನ್ತೋ ಽನೃತವಾದಿನೋ ಭವಾಮಃ|
7 அவர் ஒளியில் இருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியம் உள்ளவர்களாக இருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
ಕಿನ್ತು ಸ ಯಥಾ ಜ್ಯೋತಿಷಿ ವರ್ತ್ತತೇ ತಥಾ ವಯಮಪಿ ಯದಿ ಜ್ಯೋತಿಷಿ ಚರಾಮಸ್ತರ್ಹಿ ಪರಸ್ಪರಂ ಸಹಭಾಗಿನೋ ಭವಾಮಸ್ತಸ್ಯ ಪುತ್ರಸ್ಯ ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ರುಧಿರಞ್ಚಾಸ್ಮಾನ್ ಸರ್ವ್ವಸ್ಮಾತ್ ಪಾಪಾತ್ ಶುದ್ಧಯತಿ|
8 நமக்குப் பாவம் இல்லை என்று சொல்வோமானால், நம்மைநாமே ஏமாற்றிக்கொள்ளுகிறவர்களாக இருப்போம், சத்தியம் நமக்குள் இருக்காது.
ವಯಂ ನಿಷ್ಪಾಪಾ ಇತಿ ಯದಿ ವದಾಮಸ್ತರ್ಹಿ ಸ್ವಯಮೇವ ಸ್ವಾನ್ ವಞ್ಚಯಾಮಃ ಸತ್ಯಮತಞ್ಚಾಸ್ಮಾಕಮ್ ಅನ್ತರೇ ನ ವಿದ್ಯತೇ|
9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராக இருக்கிறார்.
ಯದಿ ಸ್ವಪಾಪಾನಿ ಸ್ವೀಕುರ್ಮ್ಮಹೇ ತರ್ಹಿ ಸ ವಿಶ್ವಾಸ್ಯೋ ಯಾಥಾರ್ಥಿಕಶ್ಚಾಸ್ತಿ ತಸ್ಮಾದ್ ಅಸ್ಮಾಕಂ ಪಾಪಾನಿ ಕ್ಷಮಿಷ್ಯತೇ ಸರ್ವ್ವಸ್ಮಾದ್ ಅಧರ್ಮ್ಮಾಚ್ಚಾಸ್ಮಾನ್ ಶುದ್ಧಯಿಷ್ಯತಿ|
10 ௧0 நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாக இருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இருக்காது.
ವಯಮ್ ಅಕೃತಪಾಪಾ ಇತಿ ಯದಿ ವದಾಮಸ್ತರ್ಹಿ ತಮ್ ಅನೃತವಾದಿನಂ ಕುರ್ಮ್ಮಸ್ತಸ್ಯ ವಾಕ್ಯಞ್ಚಾಸ್ಮಾಕಮ್ ಅನ್ತರೇ ನ ವಿದ್ಯತೇ|

< 1 யோவான் 1 >