< தீத்து 1 >

1 பவுலாகிய நான் இறைவனின் ஊழியனாகவும், இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகவும் இருக்கிறேன். நான் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய விசுவாசத்திற்காகவும், இறை பக்திக்கு வழிநடத்தும் சத்தியத்தைப் பற்றிய அறிவிற்காகவுமே இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.
ये चिट्ठी मां पौलुसो री तरफा ते ए। आँऊ परमेशरो रा दास और यीशु मसीह रा प्रेरित ए। आँऊ परमेशरो रे तिना चूणे रे लोका रा विश्वास मजबूत करने खे पेजी राखेया और तिना खे सिखाणे खे कि सेयो सच्चो खे जाणो ताकि सेयो ईश्वरीय जिन्दगी जी सको।
2 இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார். (aiōnios g166)
नतीजन तिना परमेशरो साथे सदा री जिन्दगी जिऊणे री उम्मीद करनी। कऊँकि परमेशर कदी बी चूठ नि बोलदा, तिने दुनिया बनाणे ते पईले ये वादा कित्तेया था कि तेसरे लोका सदा कालो री जिन्दगी जिऊणी। (aiōnios g166)
3 இப்பொழுது அவரால் நியமிக்கப்பட்ட காலத்தில், தம்முடைய வார்த்தையை வெளியரங்கமாக்கினார். நம்முடைய இரட்சகராகிய இறைவனுடைய கட்டளையினாலேயே என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பிரசங்கத்தின் மூலமாய் இது வெளியரங்கமாக்கப்பட்டது.
और एबे एकदम ठीक बखतो पाँदे परमेशरे ए सुसमाचार आसा पाँदे प्रकट करी राखेया और आसे इजी खे सबी लोका खे प्रचार करूँए। परमेशर जो म्हारा उद्धारकर्ता ए तिने माखे ये जिम्मेवारी दित्ती कि आँऊ तिना खे ये काम करूँ।
4 பவுலாகிய நான் நமது பொதுவான விசுவாசத்தில் என் உண்மையுள்ள மகனான தீத்துவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய இறைவனாலும், இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
आँऊ ये चिट्ठी तीतुसो खे लिखणे लगी रा जो विश्वासो रे मेरे सच्चे पाऊए जेड़ा ए। आँऊ प्रार्थना करूँआ कि परमेशर पिता और म्हारे उद्धारकर्ता यीशु मसीह री तरफा ते ताखे कृपा और शान्ति मिलदी रओ।
5 கிரேத்தா தீவில் முடிவுபெறாதிருக்கிற வேலைகளை, ஒழுங்குபடுத்தி முடிப்பதற்காகவே நான் உன்னை அங்கு விட்டுவந்தேன். நான் உனக்குக் கூறியதுபோல, எல்லாப் பட்டணங்களிலும் நீ சபைத்தலைவர்களை நியமி.
आऊँ ताखे क्रेते टापूए रे इजी खे छाडी आया था कि तूँ बाकि बची रिया गल्ला खे सुदारे और जेड़ा मैं बोली राखेया तिजी रे मुताबिक नगर-नगरो रे बुजुर्गा खे ठराई दे।
6 ஒரு சபைத்தலைவன் குற்றம் காணப்படாதவனாகவும், ஒரே மனைவியை மட்டும் உடைய கணவனாகவும் இருக்கவேண்டும். அவனுடைய பிள்ளைகளும் முரட்டுகுணமுடையவர்கள் என்றோ, கீழ்ப்படியாதவர்கள் என்றோ குற்றம் சாட்டப்படுகிறவர்களாய் இருக்கக்கூடாது. ஆனால் அவர்கள் விசுவாசிகளாய் இருக்கவேண்டும்.
ये जरूरी ए कि बुजुर्ग निर्दोष और एक ई लाड़िया रा लाड़ा ओ। तिना रे बच्चे विश्वासी ओ और तिना पाँदे लुचपण और आज्ञा ना मानणे रा दोष नि ओ।
7 ஏனெனில், ஒரு திருச்சபைக்குப் பொறுப்பாயிருக்கும் ஊழியன், இறைவனின் வேலை அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருப்பதால், அவன் குற்றம் காணப்படாதவனாக இருக்கவேண்டும். அவன் கர்வம் பிடித்தவனாகவோ, முற்கோபம் உள்ளவனாகவோ, மதுபான வெறிக்கு அடிமையானவனாகவோ இருக்கக்கூடாது. அவன் வன்முறையில் ஈடுபடுகிறவனாகவோ, நேர்மையற்ற முறையில் இலாபம் ஈட்டுகிறவனாகவோ இருக்கக்கூடாது.
कऊँकि एक अध्यक्ष परमेशरो रे कराने रा पण्डारी ओआ, इजी खे तेसखे पक्का ई निर्दोष जिन्दगी जिऊणी चाईयो। बुजुर्गो खे ना टीठ, ना रोष करने वाल़ा, ना पियक्कड़, ना मार-पीट करने वाल़ा और ना ई नीच कमाईया रा लोबी ऊणा चाईयो।
8 அவன் மற்றவர்களை உபசரிக்கிறவனாகவும், நன்மையை நேசிக்கிறவனாகவும், சுயக்கட்டுப்பாடு உடையவனாகவும், நீதிமானாகவும் இருக்கவேண்டும். அவன் பரிசுத்தமுள்ளவனாகவும், ஒழுக்கமுடையவனாகவும் இருக்கவேண்டும்.
बल्कि से पराऊणचारी करने वाल़ा, ओरी री पलाई चाणे वाल़ा, सब्र राखणे वाल़ा, न्यायी, पवित्र और आपू पाँदे काबू राखणे वाल़ा ऊणा चाइयो।
9 தனக்குப் போதித்துக் கொடுக்கப்பட்ட நம்பத்தக்க இந்தச் செய்தியை அவன் உறுதியாய் நம்பியிருக்கவேண்டும். அப்பொழுதே அவன் ஆரோக்கியமான போதனையினால் மற்றவர்களை உற்சாகப்படுத்துவான். அதற்கு முரண்பாடாய் இருக்கிறவர்களையும் எதிர்த்துச் சரியானதை எடுத்துச்சொல்வான்.
से जरूर मसीह रे तेस संदेशो रा विश्वासो साथे पालण करो। जो तर्मो रे उपदेशो रे मुताबिक ए और जो आसे सिखाई राखेया। ताकि से ओरी खे खरी शिक्षा ते उपदेश देई सको और बरोद करने वाल़ेया रा मूँ बी बंद करी सको।
10 ஏனெனில், அநேகர் சரியான போதனையை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் பயனற்றவைகளைப் பேசுகிறவர்களும், ஏமாற்றுகிறவர்களுமாய் இருக்கிறார்கள். விசேஷமாக விருத்தசேதனத்தை வலியுறுத்துகிறவர்கள் இப்படியானவர்களாய் இருக்கிறார்கள்.
आँऊ ये इजी खे बोलणे लगी रा कऊँकि बऊत सारे लोक खास करी की जो यहूदिया बीचा ते विश्वासो रे आयी रे सेयो सई शिक्षा रा बरोद करोए और से मूर्खता री गल्ला सिखाओए और ओरी खे तोखा देओए।
11 அவர்களுடைய வாய்களை அடக்கவேண்டும். ஏனெனில் அவர்கள் போதிக்கக்கூடாத காரியங்களை போதித்து, முழுக் குடும்பங்களையும் பாழாக்குகிறார்கள். இழிவான விதத்தில் தாங்கள் ஆதாயம் பெறவே, இப்படிச் செய்கிறார்கள்.
इना लोका खे विश्वासिया बीचे चूठी शिक्षा नि देणे देओ। कऊँकि यो लोक एड़ी शिक्षा देओए जो नि देणी चाईयो और सेयो लोक कअरो-कअरो रे विश्वासो खे बिगाड़ी देओए। सेयो लोक नीच कमाईया खे एड़ा करोए।
12 அவர்களைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசியே அவர்களைக்குறித்து, “கிரேத்தா தீவைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் பொய் பேசுகிறார்கள். அவர்கள் கொடிய மிருகங்கள். சோம்பேறிகளான உணவுப்பிரியர்” என்று கூறியிருக்கிறான்.
तिना ई बीचा ते एक मांणू क्रेते टापूए राए, जेसखे सेयो लोक आपणा भविष्यबक्ता समजोए, तिने बोली राखेया, “क्रेते रे लोक सदा चूठ बोलोए। सेयो दुष्ट डांगरा जेड़ा बर्ताव करोए। सेयो लोक आल़सी और पेटू ए।”
13 இந்த சாட்சி உண்மையானதே. ஆகவே அவர்களைக் கடுமையாய் கடிந்துகொள். அப்பொழுதுதான் அவர்கள் விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருந்து,
क्रेते रे लोका खे ये गवाई सच्ची ए। इजी री खातर तिना खे कड़क ऊई की चेतावणी देया कर, ताकि सेयो विश्वासो रे पक्के ऊई जाओ।
14 யூதருடைய கட்டுக் கதைகளுக்கும், சத்தியத்தைப் புறக்கணிப்பவர்களின் கட்டளைகளுக்கும் செவிகொடாதிருப்பார்கள்.
तिना लोका खे सखया कि सेयो यहूदिया री मनकड़न्त काणियां पाँदे मन नि लगाओ और तिना लोका री आज्ञा खे नि मानो जो सच्चो ते पटकी गे रे।
15 தூய்மையானவர்களுக்கு எல்லாம் தூய்மையானதே. ஆனால் சீர்கெட்டுப் போனவர்களுக்கும், விசுவாசிக்காதவர்களுக்கும் எதுவுமே தூய்மையானதல்ல. உண்மையாகவே அவர்களுடைய புத்தியும் மனசாட்சியும் சீர்கெட்டிருக்கின்றன.
जेसरा मन शुद्ध ए तिना खे सब कुछ शुद्ध ए। पर प्रष्ट और अविश्वासिया खे कोई बी चीज शुद्ध निए, कऊँकि तिना रा दमाक और विवेक दोनो ई प्रष्ट ए।
16 அவர்கள் தாங்கள் இறைவனை அறிந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்களினாலேயே, இறைவனை மறுதலிக்கிறார்கள். அவர்கள் அருவருப்புக்குரியவர்கள், கீழ்ப்படியாதவர்கள், நன்மையான எதையுமே செய்யத் தகுதியற்றவர்கள்.
सेयो चूठे शिक्षक बोलोए कि आसे परमेशरो खे जाणूंए पर आपणे चाल-चलणो ते दखाओ कि सेयो परमेशरो खे नि जाणदे। कऊँकि सेयो लोक घृणित और आज्ञा नि मानणे वाल़े ए और केसी बी खरे कामो जोगे निए।

< தீத்து 1 >