< எபிரேயர் 7 >
1 இந்த மெல்கிசேதேக்கு, சாலேமின் அரசனும், மகா உன்னதமான இறைவனின் ஆசாரியனுமாயிருந்தான். ஆபிரகாம் அரசர்களைத் தோற்கடித்து திரும்பிவந்து கொண்டிருந்தபோது, இவன் ஆபிரகாமைச் சந்தித்து ஆசீர்வதித்தான்.
ଇ ମଲ୍କିସେଦକ୍ ସାଲେମ୍ନି ରାଜା ଆରି ରୱାନ୍ ମତର୍ ଇସ୍ୱର୍ତି ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ମାଚାନ୍ । ଅବ୍ରାହାମ୍ ଆରି ତା ହାଙ୍ଗ୍ୱାରି ଚାରି ଜାଣ୍ ରାଜାରିଂ ଅସ୍ତି ମାସ୍ଦି ହାନି ୱେଡ଼ାଲିଂ, ମଲ୍କିସେଦକ୍ ହେୱାନ୍ତି ଲାହାଂ ବେଟ୍ ଆଜ଼ି ଆସିର୍ବାଦ୍ କିଜ଼ି ମାଚାନ୍;
2 ஆபிரகாம் எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்குக் கொடுத்தான். மெல்கிசேதேக்கினுடைய முதற்பெயரின் பொருள், “நீதியின் அரசன்” எனப்படுகிறது. அத்துடன், “சாலேமின் அரசன்” என்றால், “சமாதானத்தின் அரசன்” என்ற அர்த்தமும் இருக்கிறது.
ଅବ୍ରାହାମ୍ ପା ହେୱାନିଂ ୱିଜ଼ୁ ଜୁଜ୍ନି ଦାନ୍ତାଂ ଦସ୍ବାଗ୍ ହିଜ଼ି ମାଚାନ୍ । ବିଡ଼ାୟ୍ କିତିସ୍ ମଲ୍କିସେଦକ୍ତି ଇୱାନ୍ତି ତର୍ନି ଅରତ୍ “ଦାର୍ମି ରାଜା,” ସାଲେମତି ରାଜା, ଇଚିସ୍, “ସୁସ୍ତା ରାଜା ।”
3 தந்தையோ, தாயோ, வம்சவரலாறோ மெல்கிசேதேக்கிற்கு இல்லை. வாழ்நாட்களின் தொடக்கமோ, முடிவோ இல்லாத இவன், இறைவனுடைய மகனைப்போல், என்றென்றும் ஒரு ஆசாரியனாய் நிலைத்திருக்கிறான்.
ମଲକିସାଦକ୍ତି ଆବା କି ଆୟା କି ବଁସ୍ତ କି ଆଇଁସ୍ ଆରମ୍ ଆରି ଜିବୁନ୍ନି ୱିଜ଼୍ନାକା ମୁଡ଼େ ଜାଣା ଆକାୟ୍; ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତି ମାଜ଼ି ଲାକେ କିୟାଆଜ଼ି ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ଆଜ଼ି ମାନ୍ଗାତାନ୍ନା ।
4 மெல்கிசேதேக்கு எவ்வளவு பெரியவனாயிருந்தான் என்று யோசித்துப் பாருங்கள்: நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம்கூட தான் போர்க்களத்தில் கைப்பற்றிய எல்லாவற்றிலும் பத்தில் ஒரு பங்கை இவனுக்குக் கொடுத்தானே.
ଲାଗିଂ ବାବି କିଜ଼ି ହୁଡ଼ାଟ୍, ଇ ମୁଣିକା ଇନେସ୍ତିଂ ଗାଜାକାନ୍ । ଆବା ଲାତ୍ରା କାଜିଂ ଅବ୍ରାହାମ୍ ହେୱାନିଂ ୱିଜ଼ୁତିଂ ହାର୍ଦି ଚର୍ କିତି ଦନ୍ ପା ଦସ୍ ବାଗ୍ ହିଜ଼ି ମାଚାନ୍ ।
5 லேவியின் தலைமுறையினர்களில் ஆசாரியர்களாகிறவர்கள், மக்களிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்ளும்படி, மோசேயின் சட்டம் வலியுறுத்துகிறது. அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளும், லேவியர்களின் சகோதரர்களாயிருந்தும், இப்படிக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.
ଲେବିର୍ତି ହିମ୍ଣାଙ୍ଗ୍ ବିତ୍ରେ ଇମ୍ଣାକାର୍ ମାପ୍ରୁହେବାକିନାକାର୍ ପାଦ୍ ପାୟାନାର୍, ହେୱାର୍ ମସାତି ବିଦି ଇସାପ୍ରେ ଲକାର୍ତାଂ ଇଚିସ୍ ହେୱାର୍ତି ଟଣ୍ଡାର୍ତାଂ ଦସ୍ ବାଗ୍ ଅଦେଂ ବଲ୍ ପାୟାତାର୍ଣ୍ଣା, ହେୱାର୍ ଅବ୍ରାହାମ୍ତି ନେତେର୍ତ ଜଲମ୍ ଆତିସ୍ ପା ହେୱାର୍ତାଂ ଇଦାଂ ଇଡ଼୍ନାର୍,
6 ஆனால், இந்த மெல்கிசேதேக்கோ லேவியின் சந்ததிகள் அல்ல. அப்படியிருந்தும், ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டு, இறைவனிடமிருந்து வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த ஆபிரகாமை இவன் ஆசீர்வதித்தான்.
ମାତର୍ ମଲ୍କିସେଦକ୍ ଲେବି ଲାତ୍ରାନି ହିଲିତିସ୍ ପା, ହେୱାନ୍ ଇସ୍ୱର୍ତାଂ ପାର୍ମାଣ୍ନି ଅବ୍ରାହାମ୍ତାଂ ର ଦସ୍ ବାଗ୍ ଅଜ଼ି ଆସିର୍ବାଦ୍ କିଜ଼ି ମାଚାନ୍ ।
7 உயர்ந்த நிலையில் உள்ளவனே தாழ்ந்த நிலையில் உள்ளவனை ஆசீர்வதிக்க வேண்டும். அதில் சந்தேகமேயில்லை.
ଆସିର୍ବାଦ୍ ପାୟାନି ମାନାୟ୍ତାଂ ଏଚେକ୍ ଗାଜାକାନ୍ ଇବେ ପାର୍ତି କିୱାତାଂ ।
8 ஆசாரியர்களைப் பொறுத்தவரையில், இவர்கள் இறந்துபோகிறவர்களாக இருந்தும், பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் மெல்கிசேதேக்கைப் பொறுத்தவரையிலோ, இவன் என்றும் வாழ்கிறவன் என அறிவிக்கப்பட்டு, பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொண்டான்.
ର ଦସ୍ ବାଗ୍ ଇଟ୍ନାକା ମାପ୍ରୁହେବାକିନାକାର୍ ହାନି ମାନାୟାର୍ ମାତର୍ ମଲ୍କିସେଦକ୍ ସାକି ହିନାନ୍ ହେୱାର୍ତାଂ ଗାଜାକାନ୍ ଇନେକିଦେଂକି ସାସ୍ତର୍ ଇସାପ୍ରେ ହେୱାନ୍ ନଙ୍ଗ୍ ପା ଜିତାନ୍ ।
9 ஒரு வகையில் பத்தில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்கிற லேவியும்கூட ஆபிரகாமின் மூலமாய், பத்தில் ஒரு பங்கை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தான் என்று சொல்லலாம்.
ଆରେ ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ହାଚିସ୍ ଇମ୍ଣି ଲେବି ଦସ୍ ବାଗ୍ ଅନାର୍, ହେୱାନ୍ ପା ଅବ୍ରାହାମ୍ତି ହୁଦାଂ ଦସ୍ ବାଗ୍ ହିତାର୍ଣ୍ଣା;
10 ஏனெனில் மெல்கிசேதேக்கு ஆபிரகாமைச் சந்தித்தபோது, லேவி தன்னுடைய முற்பிதாவான ஆபிரகாமின் உடலுக்குள் இருந்தார் என்று எடுத்துக்கொள்ளலாம்.
ଇନାକିଦେଂକି ମଲ୍କିସେଦକ୍ ଲାହାଂ ଅବ୍ରାହାମ୍ ବେଟ୍ ଆନି ଲେବି ଜଲମ୍ ଆୱାଦାଂ ହେୱାନ୍ତି ୱାକ୍ତ ମାଚାନ୍ ।
11 லேவியரின் ஆசாரிய முறையின் அடிப்படையிலேயே, மோசேயின் சட்டம் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. லேவிய ஆசாரியன் முறையின் மூலமாகவே பூரண நிலையை அடையக்கூடியதாக இருந்திருந்தால், வேறொரு ஆசாரியன் வரவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? ஆரோனுடைய முறையில் இல்லாது, மெல்கிசேதேக்கின் முறையின்படி, ஒரு ஆசாரியமுறை ஏன் ஏற்படுத்தப்பட்டது?
ଇ ଲେବିୟର୍ତି ମାପ୍ରୁହେବା କିନାକାନ୍ତି ପିସ୍ତି ଇସ୍ରାଏଲ୍ ଜାତିତିଂ ତା ବିଦି ହିୟାଜ଼ି ମାଚାତ୍ । ଲେବିୟର୍ତି କାମାୟ୍ ଜଦି କୁଲାସ୍ ଆତାତ୍ମା, ତେବେ ହାରଣ୍ତି ମାଜ଼ି ଇ ଲେବିୟ ମାପ୍ରୁହେବାକିନାକାରିଂ ପିସ୍ତି, ମଲ୍କିସେଦକ୍ତି ମାଜ଼ି ଲାକେ ବିନ୍ ର ମାପ୍ରୁହେବାକିନାକାର୍ କୁଟୁମ୍ନି ଲଡ଼ା ହିଲ୍ୱାତାତ୍ ।
12 ஆசாரிய முறையே மாற்றப்படுகிறபோது, மோசேயின் சட்டத்திலும் மாற்றம் ஏற்படவேண்டியதாயிருக்கிறது.
ଇନାକିଦେଂକି ମାପ୍ରୁହେବାକିନି କାମାୟ୍ ଜଦି ବାଦ୍ଲା ଆନାତ୍, ୱାଟିଂ ମସାତି ବିଦି ପା ବାଦ୍ଲା ଆନାତ୍ ।
13 இவையெல்லாம் கிறிஸ்துவைக்குறித்தே சொல்லப்படுகின்றன. அவரோ வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர், அந்த கோத்திரத்தைச் சேர்ந்த யாருமே பலிபீடத்தில் பணியாற்றவில்லை.
ଲାଗିଂ ଇନେର୍ତି ବିସ୍ରେ ଇ ୱିଜ଼ୁ ଇନ୍ୟାତିସ୍, ହେୱାନ୍ ବିନେନି ରୱାନ୍ କୁଟୁମ୍ନି ଲଗୁ, ଇମ୍ଣି କୁଟୁମ୍ନି ଇନେର୍ ଗାର୍ଣିନି ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ କାମାୟ୍ କିୱାତାର୍ଣ୍ଣା ।
14 நம்முடைய கர்த்தர் யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. மோசே ஆசாரியர்களைக் குறித்துப் பேசியபொழுது, இந்தக் கோத்திரத்தைக் குறித்து எதுவுமே சொல்லவில்லை.
ଇନାକିଦେଂକି ଇଦାଂ ପୁନ୍ୟାନାତ୍ ଜେ, ମା ମାପ୍ରୁ ଜିହୁଦା କୁଟୁମ୍ତାଂ ଉବ୍ଜାଣ୍ ଆତାନ୍ନା, ଇମ୍ଣି କୁଟୁମ୍ନି ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ବିସ୍ରେ ମସା ଇନାକା ଇନ୍ୱାତାନ୍ନା ।
15 மெல்கிசேதேக்குக்கு ஒப்பான வேறொரு ஆசாரியர் தோன்றியபடியால், இந்தக் காரியத்தில் இன்னும் அதிக தெளிவாகின்றது.
ଆରେ ଇଦାଂ ଇବେ ପା ଆରେ ଆଦିକ୍ ପୁନ୍ୟାନାତା, ମଲ୍କିସେଦକ୍ ଲାକେ ଆରେ ରୱାନ୍ ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ଉବ୍ଜାଣ୍ ଆତାନ୍ନା,
16 அப்படியே சந்ததியைப் பொறுத்தமட்டில், மனிதருடைய விதிமுறைகளுக்கு இணங்க ஆசாரியர் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் முடிவில்லாத வாழ்வின் வல்லமையின்படியே கிறிஸ்து ஆசாரியனாய் ஏற்படுத்தப்பட்டார்.
ହେୱାନ୍ ଗାଗାଡ଼୍ନି ମସାତି ବିଦି ବଲ୍ ଇସାପ୍ରେ ବାଚିକିୟାୱାଦାଂ ୱିଜ଼୍ୱି ଜିବୁନ୍ ସାକ୍ତି ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ବାଚି କିଆତାନ୍ନା ।
17 ஏனெனில், “மெல்கிசேதேக்கின் முறையின்படி, நீர் என்றென்றைக்கும் ஆசாரியனாய் இருக்கிறீர்” என்று அவரைக்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. (aiōn )
ଇନାକିଦେଂକି ହେୱାନ୍ତି ବିସ୍ରେ ଇ ସାକି ହିଆନାତ୍, “ଏନ୍ ମଲ୍କିସେଦକ୍ତି ମୁଣିକା ଲାକେ ଜୁଗ୍ ଜୁଗ୍ନି ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ଆନାୟ୍ ।” (aiōn )
18 இவ்வாறு முந்திய கட்டளை பலவீனமானதாயும் பயனற்றதாயும் இருந்ததால் அது மாற்றப்பட்டது.
ଇବେ ର ପାକ୍ୟାତ ଆଗେନି ବଲ୍ ନାଦାର୍ ଆରି ଲେମ୍ୱିତିଲେ ହେଦାଂ ବୁଡା ଆତାତ୍
19 மோசேயின் சட்டமோ எதையும் முழுநிறைவுள்ளதாய் செய்வதில்லை. ஆனால் நாம் இப்பொழுது இறைவனை அணுகும்படி ஒரு மேன்மையான எதிர்பார்ப்பு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ଇନାକିଦେଂକି ବିଦି ଇମ୍ଣାକା ପା ବିସ୍ରେ ବାର୍ତି ଲାବ୍ କିୱାଦାଂ ମାଚାତ୍ ବିନ୍ ପାକ୍ୟାତ ନିଜେନି ବାର୍ସି ହଟାତ୍ନା, ତାହୁଦାଂ ଆସେଙ୍ଗ୍ ଇସ୍ୱର୍ତି ଲାଗାୟ୍ ଆନାସ୍ ।
20 அன்றியும், மற்றவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாகிறார்கள்.
ଆଦିକ୍ତାଂ ମା କାଜିଂ ଇସ୍ୱର୍ ପାର୍ମାଣ୍ ପା ମାନାତ୍ । ହାରଣ୍ ଆରେ ଇଦାଂ ଇନେସ୍ବାନି ପିସ୍ତି ପାର୍ମାଣ୍ତ ଆୱାତାତ୍
21 ஆனால் இயேசுவோ, ஆசாரியராய் ஏற்படுத்தப்பட்டபோது, இறைவனுடைய ஆணையின் மூலமாய் ஏற்படுத்தப்பட்டார். இறைவன் அவரைக்குறித்துச் சொன்னதாவது: “கர்த்தர் ஆணையிட்டிருக்கிறார். அவர் தனது மனதை மாற்றமாட்டார்: ‘நீர் என்றென்றைக்கும் ஆசாரியராய் இருக்கிறீர்.’” (aiōn )
ମତର୍ ଇନେର୍ ହେୱାନ୍ତି ବିସ୍ରେ ଇଦାଂ ଇଚାନ୍ନା, “ମାପ୍ରୁ ପାର୍ମାଣ୍ କିତାନ୍ନ୍ନା, ଆରେ ହେୱାନ୍ ମାନ୍ତଏତ୍ କିଉନ୍, ଏନ୍ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ନି ମାପ୍ରୁ ହେବା କିନାକାୟ୍, ଆନାୟ୍ ହେୱାନ୍ତି ହୁଦାଂ ହେୱାନ୍ ପାର୍ମାଣ୍ ଲାହାଙ୍ଗ୍ ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ଆତାନ୍ନା ।” (aiōn )
22 இந்த ஆணையின்படி இயேசு ஒரு மேன்மையான உடன்படிக்கையின் உத்திரவாதம் அளிப்பவராயிருக்கிறார்.
ଇ ପାର୍ମାଣ୍ କାଜିଂ ଜିସୁ ର ମୁଡ଼୍ଦାକା ନିୟମ୍ ହାତ୍ପାନେ ହିନାନ୍ ।
23 மேலும், அநேக ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தைத் தொடர்ந்து செய்யமுடியாதபடி மரணம் அவர்களைத் தடுத்தது.
ପ୍ଡାନି ନିୟମ୍ ବିନ୍ ମାପ୍ରୁହେବାକିନାକାର୍ ତ ଜବର୍ତ ବାଚିକିୟା ଆତାର୍ଣ୍ଣା, ଇନାକିଦେଂକି ହାକି ହେୱାରିଂ ନିତ୍ରେ ଜିଦେଂ ହିୱାତାତ୍,
24 ஆனால் இயேசுவோ என்றென்றும் வாழ்கிறபடியால், அவருக்கு நித்திய ஆசாரியமுறை உள்ளவராயிருக்கிறார். (aiōn )
ମାତର୍ ଜିସୁ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ଜିବୁନ୍ । ଇଚିସ୍ ହେୱାନ୍ତି ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ପାଦ୍ତ ବିନେ ଇନେର୍ ବାଚି କିୟାଦେଂ ପର୍ସନ୍ ଆକାୟ୍ । (aiōn )
25 ஆதலால், தம் மூலமாக இறைவனிடத்தில் வருகிறவர்களை பரிபூரணமாய் இரட்சிக்க இயேசு வல்லவராய் இருக்கிறார். ஏனெனில், அவர்களுக்காக இறைவனிடத்தில் பரிந்து பேசுவதற்காக இயேசு என்றென்றும் வாழ்கிறார்.
ଲାଗିଂ ହେୱାନ୍ତି ହୁଦାଂ ଇମ୍ଣାକାର୍ ଇସ୍ୱର୍ତି ଲାଗେ ଆନାର୍, ହେୱାରିଂ ହେୱାନ୍ ୱିଜ଼ୁରଚେ ମୁକ୍ତି କିଦେଙ୍ଗ୍ ଆଡ୍ନାକାନ୍ ଆତାନ୍ନା, ଇସ୍ୱର୍ତି ଲାଗାଂ ହେୱାର୍ କାଜିଂ ପାର୍ତାନା କିନି କାଜିଂ ହେୱାନ୍ ନିତ୍ରେ ଜିବୁନ୍ନିକାନ୍ ।
26 இப்படிப்பட்ட பிரதான ஆசாரியர், நமது தேவைக்குப் பொருத்தமானவராகவே இருக்கிறார். இவர் பரிசுத்தமுள்ளவரும், குற்றம் சாட்டப்படாதவரும், தூய்மையானவரும், பாவிகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டவரும், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவருமாக இருக்கிறார்.
ଇନାକିଦେଂକି ଏଲେଙ୍ଗ୍ ବାନି ମୁଡ଼୍ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ମା ପାକ୍ୟାତ ହାର୍ଦାକାନ୍, ଇନେନ୍କି ପୁଇପୁୟା, ଦସ୍ହିଲ୍ୱାକାନ୍, ପ୍ରାଲ୍ହିଲ୍ୱାକାନ୍, ପାପିର୍ତାଂ ବିନେ, ଆରେ ଆକାସିଂ ଜପି ଉଚ୍ନିକାନ୍ ।
27 மற்ற பிரதான ஆசாரியர்கள், முதலாவது தங்களுடைய பாவங்களுக்காகவும், பின்பு மனிதருடைய பாவங்களுக்காகவும் ஒவ்வொரு நாளும் பலிகளைச் செலுத்தினார்கள். ஆனால் அவர்களைப்போல், அப்படி இயேசு பலிசெலுத்த வேண்டியதில்லை. இவரோ தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தபோது, அவர்களுடைய பாவங்களுக்காக ஒரேமுறை பலியானார்.
ହେ ମୁଡ଼୍ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ଲାକେ ଦିନ୍କେ ପର୍ତୁମ୍ତ ଜାର୍ ପାପ୍ କାଜିଂ ଆରି ପାଚେ ଲକାର୍ ପାପ୍ କାଜିଂ ପୁଜାକିନାକା ହୁଦାଂ ହେୱାନ୍ ରଞ୍ଜେ ମାଡ୍ ଇଦାଂ କିତାନ୍ନ୍ନା ।
28 ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, மோசேயின் சட்டம் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கிறது; ஆனால் மோசேயின் சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பூரணரான மகனையே நியமித்தது. (aiōn )
ଲାଗିଂ ମସାତି ବିଦି ନାଦାର୍ନିକା ମାନୟାରିଂ ମୁଡ଼୍ମାପ୍ରୁହେବାକିନାକାନ୍ ପାଦ୍ତ ବାଚି କିତାନ୍, ମତର୍ ଇମ୍ଣି ପାର୍ମାଣ୍କାତା ବିଦି ପାଚେ ଆଜ଼ି ମାଚାତ୍, ହେଦାଂ ୱିଜ଼୍ୱି କାଡ଼୍ ପାତେକ୍ ବାର୍ତି ପାୟାତି ମାଜ଼ିଙ୍ଗ୍ ବାଚି କିନାତ୍ । (aiōn )