< எபிரேயர் 3 >

1 ஆகையால் பரலோக அழைப்பில் பங்குகொள்கிறவர்களான பரிசுத்த சகோதரர்களே, நாம் அறிக்கையிடுகிற நமது அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாகிய இயேசுவைப்பற்றி சிந்தியுங்கள்.
ಹೇ ಸ್ವರ್ಗೀಯಸ್ಯಾಹ್ವಾನಸ್ಯ ಸಹಭಾಗಿನಃ ಪವಿತ್ರಭ್ರಾತರಃ, ಅಸ್ಮಾಕಂ ಧರ್ಮ್ಮಪ್ರತಿಜ್ಞಾಯಾ ದೂತೋಽಗ್ರಸರಶ್ಚ ಯೋ ಯೀಶುಸ್ತಮ್ ಆಲೋಚಧ್ವಂ|
2 இறைவனுடைய வீட்டில் அனைத்திலும் மோசே உண்மையுள்ளவனாய் இருந்ததுபோல, இயேசுவும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார்.
ಮೂಸಾ ಯದ್ವತ್ ತಸ್ಯ ಸರ್ವ್ವಪರಿವಾರಮಧ್ಯೇ ವಿಶ್ವಾಸ್ಯ ಆಸೀತ್, ತದ್ವತ್ ಅಯಮಪಿ ಸ್ವನಿಯೋಜಕಸ್ಯ ಸಮೀಪೇ ವಿಶ್ವಾಸ್ಯೋ ಭವತಿ|
3 ஒரு வீட்டைக் கட்டுகிறவன், அந்த வீட்டைப்பார்க்கிலும் அதிக மதிப்புக்குரியவனாய் இருப்பதுபோலவே, இயேசுவும் மோசேயைப்பார்க்கிலும், அதிக மதிப்புக்குரியவராய் இருக்கிறார்;
ಪರಿವಾರಾಚ್ಚ ಯದ್ವತ್ ತತ್ಸ್ಥಾಪಯಿತುರಧಿಕಂ ಗೌರವಂ ಭವತಿ ತದ್ವತ್ ಮೂಸಸೋಽಯಂ ಬಹುತರಗೌರವಸ್ಯ ಯೋಗ್ಯೋ ಭವತಿ|
4 ஏனெனில் ஒவ்வொரு வீடும் யாரோ ஒருவனாலே கட்டப்படுகிறது. அதுபோல, எல்லாவற்றையும் கட்டுகிறவரோ இறைவனே.
ಏಕೈಕಸ್ಯ ನಿವೇಶನಸ್ಯ ಪರಿಜನಾನಾಂ ಸ್ಥಾಪಯಿತಾ ಕಶ್ಚಿದ್ ವಿದ್ಯತೇ ಯಶ್ಚ ಸರ್ವ್ವಸ್ಥಾಪಯಿತಾ ಸ ಈಶ್ವರ ಏವ|
5 மோசே இறைவனுடைய வீட்டின் எல்லாவற்றிலும் ஒரு உண்மையுள்ள வேலைக்காரனாய் இருந்து, இனிவரப்போகும் காலத்தில் வெளிப்படப் போகிறவற்றிற்கு சாட்சிகொடுக்கிறவனாகவே இருந்தான்.
ಮೂಸಾಶ್ಚ ವಕ್ಷ್ಯಮಾಣಾನಾಂ ಸಾಕ್ಷೀ ಭೃತ್ಯ ಇವ ತಸ್ಯ ಸರ್ವ್ವಪರಿಜನಮಧ್ಯೇ ವಿಶ್ವಾಸ್ಯೋಽಭವತ್ ಕಿನ್ತು ಖ್ರೀಷ್ಟಸ್ತಸ್ಯ ಪರಿಜನಾನಾಮಧ್ಯಕ್ಷ ಇವ|
6 ஆனால் கிறிஸ்துவோ, இறைவனுடைய வீட்டில் உண்மையுள்ள மகனாய் இருக்கிறார். அப்படியிருக்கும்படியே, நாம் நமது மனத்தைரியத்தையும் நாம் பெருமிதங்கொள்ளும் எதிர்பார்ப்பையும் உறுதியாய்ப் பற்றிக்கொண்டால், நாமே இறைவனுடைய வீடாயிருப்போம்.
ವಯಂ ತು ಯದಿ ವಿಶ್ವಾಸಸ್ಯೋತ್ಸಾಹಂ ಶ್ಲಾಘನಞ್ಚ ಶೇಷಂ ಯಾವದ್ ಧಾರಯಾಮಸ್ತರ್ಹಿ ತಸ್ಯ ಪರಿಜನಾ ಭವಾಮಃ|
7 ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்கிறபடி: “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,
ಅತೋ ಹೇತೋಃ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಯದ್ವತ್ ಕಥಿತಂ, ತದ್ವತ್, "ಅದ್ಯ ಯೂಯಂ ಕಥಾಂ ತಸ್ಯ ಯದಿ ಸಂಶ್ರೋತುಮಿಚ್ಛಥ|
8 நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். பாலைவனத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில் கலகம் செய்ததுபோல் நடந்துகொள்ள வேண்டாம்.
ತರ್ಹಿ ಪುರಾ ಪರೀಕ್ಷಾಯಾ ದಿನೇ ಪ್ರಾನ್ತರಮಧ್ಯತಃ| ಮದಾಜ್ಞಾನಿಗ್ರಹಸ್ಥಾನೇ ಯುಷ್ಮಾಭಿಸ್ತು ಕೃತಂ ಯಥಾ| ತಥಾ ಮಾ ಕುರುತೇದಾನೀಂ ಕಠಿನಾನಿ ಮನಾಂಸಿ ವಃ|
9 அங்கே உங்கள் முன்னோர்கள் நான் செய்தவைகளைக் கண்டிருந்தும், நாற்பது ஆண்டுகளாக என் பொறுமையைச் சோதித்தார்கள்.
ಯುಷ್ಮಾಕಂ ಪಿತರಸ್ತತ್ರ ಮತ್ಪರೀಕ್ಷಾಮ್ ಅಕುರ್ವ್ವತ| ಕುರ್ವ್ವದ್ಭಿ ರ್ಮೇಽನುಸನ್ಧಾನಂ ತೈರದೃಶ್ಯನ್ತ ಮತ್ಕ್ರಿಯಾಃ| ಚತ್ವಾರಿಂಶತ್ಸಮಾ ಯಾವತ್ ಕ್ರುದ್ಧ್ವಾಹನ್ತು ತದನ್ವಯೇ|
10 அதனாலேயே நான் நாற்பது வருடங்களாக அந்தச் சந்ததியோடு கோபமாயிருந்தேன்; அவர்களைக்குறித்து, ‘இவர்கள் எப்பொழுதும் தங்கள் இருதயங்களில் வழிவிலகிப் போகிறார்கள், இவர்கள் என்னுடைய வழிகளை அறியாதவர்கள்’
ಅವಾದಿಷಮ್ ಇಮೇ ಲೋಕಾ ಭ್ರಾನ್ತಾನ್ತಃಕರಣಾಃ ಸದಾ| ಮಾಮಕೀನಾನಿ ವರ್ತ್ಮಾನಿ ಪರಿಜಾನನ್ತಿ ನೋ ಇಮೇ|
11 ஆகவே, என்னுடைய கோபத்திலே, ‘என்னுடைய இளைப்பாறுதலுக்குள் அவர்கள் ஒருபோதும் பிரவேசிப்பதில்லை’ என்றும் ஆணையிட்டு அறிவித்தேன்.”
ಇತಿ ಹೇತೋರಹಂ ಕೋಪಾತ್ ಶಪಥಂ ಕೃತವಾನ್ ಇಮಂ| ಪ್ರೇವೇಕ್ಷ್ಯತೇ ಜನೈರೇತೈ ರ್ನ ವಿಶ್ರಾಮಸ್ಥಲಂ ಮಮ|| "
12 ஆகையால் பிரியமானவர்களே, உங்களில் ஒருவரும் ஜீவனுள்ள இறைவனிடமிருந்து வழிவிலகச் செய்கிறதான, விசுவாசமற்ற, பாவ இருதயம் உள்ளவனாய் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
ಹೇ ಭ್ರಾತರಃ ಸಾವಧಾನಾ ಭವತ, ಅಮರೇಶ್ವರಾತ್ ನಿವರ್ತ್ತಕೋ ಯೋಽವಿಶ್ವಾಸಸ್ತದ್ಯುಕ್ತಂ ದುಷ್ಟಾನ್ತಃಕರಣಂ ಯುಷ್ಮಾಕಂ ಕಸ್ಯಾಪಿ ನ ಭವತು|
13 “இன்று” என்று தற்காலத்தையே குறிப்பிட்டிருப்பதால், இக்காலம் நீடிக்குமளவும் ஒவ்வொரு நாளும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். அப்பொழுதே பாவத்தின் ஏமாற்றத்தினால், நீங்கள் ஒருவரும் மனக்கடினம் அடையாது இருப்பீர்கள்.
ಕಿನ್ತು ಯಾವದ್ ಅದ್ಯನಾಮಾ ಸಮಯೋ ವಿದ್ಯತೇ ತಾವದ್ ಯುಷ್ಮನ್ಮಧ್ಯೇ ಕೋಽಪಿ ಪಾಪಸ್ಯ ವಞ್ಚನಯಾ ಯತ್ ಕಠೋರೀಕೃತೋ ನ ಭವೇತ್ ತದರ್ಥಂ ಪ್ರತಿದಿನಂ ಪರಸ್ಪರಮ್ ಉಪದಿಶತ|
14 நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தை முடிவுவரை பற்றிக்கொண்டால்தான், நாம் கிறிஸ்துவின் பங்காளிகளாயிருப்போம்.
ಯತೋ ವಯಂ ಖ್ರೀಷ್ಟಸ್ಯಾಂಶಿನೋ ಜಾತಾಃ ಕಿನ್ತು ಪ್ರಥಮವಿಶ್ವಾಸಸ್ಯ ದೃಢತ್ವಮ್ ಅಸ್ಮಾಭಿಃ ಶೇಷಂ ಯಾವದ್ ಅಮೋಘಂ ಧಾರಯಿತವ್ಯಂ|
15 “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால், நீங்கள் கலகம் செய்தபோது நடந்துகொண்டதைப்போல் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ಅದ್ಯ ಯೂಯಂ ಕಥಾಂ ತಸ್ಯ ಯದಿ ಸಂಶ್ರೋತುಮಿಚ್ಛಥ, ತರ್ಹ್ಯಾಜ್ಞಾಲಙ್ಘನಸ್ಥಾನೇ ಯುಷ್ಮಾಭಿಸ್ತು ಕೃತಂ ಯಥಾ, ತಥಾ ಮಾ ಕುರುತೇದಾನೀಂ ಕಠಿನಾನಿ ಮನಾಂಸಿ ವ ಇತಿ ತೇನ ಯದುಕ್ತಂ,
16 இறைவனுடைய குரலைக் கேட்டும், அவருக்கு விரோதமாகக் கலகம் செய்தவர்கள் யார்? அவர்கள் எல்லோரும், எகிப்திலிருந்து மோசேயினால் வழிநடத்திக் கொண்டுவரப்பட்டவர்கள் அல்லவா?
ತದನುಸಾರಾದ್ ಯೇ ಶ್ರುತ್ವಾ ತಸ್ಯ ಕಥಾಂ ನ ಗೃಹೀತವನ್ತಸ್ತೇ ಕೇ? ಕಿಂ ಮೂಸಸಾ ಮಿಸರದೇಶಾದ್ ಆಗತಾಃ ಸರ್ವ್ವೇ ಲೋಕಾ ನಹಿ?
17 இறைவன் நாற்பது வருடங்களாக யார்மேல் கோபமாயிருந்தார்? பாவம் செய்தவர்கள்மேல் அல்லவா? அவர்களுடைய உடல்களும் பாலைவனத்தில் விழுந்து கிடந்தனவே?
ಕೇಭ್ಯೋ ವಾ ಸ ಚತ್ವಾರಿಂಶದ್ವರ್ಷಾಣಿ ಯಾವದ್ ಅಕ್ರುಧ್ಯತ್? ಪಾಪಂ ಕುರ್ವ್ವತಾಂ ಯೇಷಾಂ ಕುಣಪಾಃ ಪ್ರಾನ್ತರೇ ಽಪತನ್ ಕಿಂ ತೇಭ್ಯೋ ನಹಿ?
18 இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலுக்குள் ஒருபோதும் செல்லமாட்டார்கள் என்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாமல் போனவர்களைக் குறித்தல்லவா?
ಪ್ರವೇಕ್ಷ್ಯತೇ ಜನೈರೇತೈ ರ್ನ ವಿಶ್ರಾಮಸ್ಥಲಂ ಮಮೇತಿ ಶಪಥಃ ಕೇಷಾಂ ವಿರುದ್ಧಂ ತೇನಾಕಾರಿ? ಕಿಮ್ ಅವಿಶ್ವಾಸಿನಾಂ ವಿರುದ್ಧಂ ನಹಿ?
19 ஆகவே அவர்களுடைய அவிசுவாசத்தின் காரணமாகவே அவர்களால் பிரவேசிக்க முடியாமல் போயிற்று என்று நாம் காண்கிறோம்.
ಅತಸ್ತೇ ತತ್ ಸ್ಥಾನಂ ಪ್ರವೇಷ್ಟುಮ್ ಅವಿಶ್ವಾಸಾತ್ ನಾಶಕ್ನುವನ್ ಇತಿ ವಯಂ ವೀಕ್ಷಾಮಹೇ|

< எபிரேயர் 3 >