< எபிரேயர் 2 >
1 எனவே நாம் கேட்டறிந்த உண்மைகளை அதிக கவனமாய் பற்றிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், நாம் அவைகளிலிருந்து விலகிப்போகாமல் இருப்போம்.
ಅತೋ ವಯಂ ಯದ್ ಭ್ರಮಸ್ರೋತಸಾ ನಾಪನೀಯಾಮಹೇ ತದರ್ಥಮಸ್ಮಾಭಿ ರ್ಯದ್ಯದ್ ಅಶ್ರಾವಿ ತಸ್ಮಿನ್ ಮನಾಂಸಿ ನಿಧಾತವ್ಯಾನಿ|
2 இறைவனின் தூதர்கள் மூலமாய் பேசப்பட்டசெய்தி உறுதிப்படுத்தியபடியால், அதை மீறியதற்கும், கீழ்ப்படியாததற்கும் நீதியான தண்டனை கொடுக்கப்பட்டது.
ಯತೋ ಹೇತೋ ದೂತೈಃ ಕಥಿತಂ ವಾಕ್ಯಂ ಯದ್ಯಮೋಘಮ್ ಅಭವದ್ ಯದಿ ಚ ತಲ್ಲಙ್ಘನಕಾರಿಣೇ ತಸ್ಯಾಗ್ರಾಹಕಾಯ ಚ ಸರ್ವ್ವಸ್ಮೈ ಸಮುಚಿತಂ ದಣ್ಡಮ್ ಅದೀಯತ,
3 அப்படியானால், இப்படிப்பட்ட பெரிதான இரட்சிப்பை நாம் அலட்சியம் செய்தால், நாம் எப்படித் தப்பமுடியும்? இந்த இரட்சிப்போ முதலாவது கர்த்தராகிய இயேசுவினாலேயே அறிவிக்கப்பட்டது. அவர் சொன்னதைக் கேட்டவர்கள் அதை நமக்கு உறுதிப்படுத்தினார்கள்.
ತರ್ಹ್ಯಸ್ಮಾಭಿಸ್ತಾದೃಶಂ ಮಹಾಪರಿತ್ರಾಣಮ್ ಅವಜ್ಞಾಯ ಕಥಂ ರಕ್ಷಾ ಪ್ರಾಪ್ಸ್ಯತೇ, ಯತ್ ಪ್ರಥಮತಃ ಪ್ರಭುನಾ ಪ್ರೋಕ್ತಂ ತತೋಽಸ್ಮಾನ್ ಯಾವತ್ ತಸ್ಯ ಶ್ರೋತೃಭಿಃ ಸ್ಥಿರೀಕೃತಂ,
4 இறைவனும் அடையாளங்களினாலும், அதிசயங்களினாலும், பலவித அற்புதங்களினாலும், தம்முடைய திட்டத்தின்படியே, பரிசுத்த ஆவியானவருடைய வரங்களையும் பகிர்ந்துகொடுத்து, அதற்குச் சாட்சி அளித்தார்.
ಅಪರಂ ಲಕ್ಷಣೈರದ್ಭುತಕರ್ಮ್ಮಭಿ ರ್ವಿವಿಧಶಕ್ತಿಪ್ರಕಾಶೇನ ನಿಜೇಚ್ಛಾತಃ ಪವಿತ್ರಸ್ಯಾತ್ಮನೋ ವಿಭಾಗೇನ ಚ ಯದ್ ಈಶ್ವರೇಣ ಪ್ರಮಾಣೀಕೃತಮ್ ಅಭೂತ್|
5 வரப்போகும் உலகத்தைக்குறித்து நாம் பேசுகிறோமே, அதை இறைவன் தமது தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை.
ವಯಂ ತು ಯಸ್ಯ ಭಾವಿರಾಜ್ಯಸ್ಯ ಕಥಾಂ ಕಥಯಾಮಃ, ತತ್ ತೇನ್ ದಿವ್ಯದೂತಾನಾಮ್ ಅಧೀನೀಕೃತಮಿತಿ ನಹಿ|
6 ஒரு இடத்திலே ஒருவர் சாட்சியாய் சொல்லுகையில், “இறைவனே, மனிதனில் நீர் கரிசனை கொள்வதற்கும், மானிடமகனில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவன் எம்மாத்திரம்?
ಕಿನ್ತು ಕುತ್ರಾಪಿ ಕಶ್ಚಿತ್ ಪ್ರಮಾಣಮ್ ಈದೃಶಂ ದತ್ತವಾನ್, ಯಥಾ, "ಕಿಂ ವಸ್ತು ಮಾನವೋ ಯತ್ ಸ ನಿತ್ಯಂ ಸಂಸ್ಮರ್ಯ್ಯತೇ ತ್ವಯಾ| ಕಿಂ ವಾ ಮಾನವಸನ್ತಾನೋ ಯತ್ ಸ ಆಲೋಚ್ಯತೇ ತ್ವಯಾ|
7 நீர் அவர்களைத் தேவதூதர்களைப்பார்க்கிலும் சற்றுச் சிறியவர்களாகப் படைத்து, அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.
ದಿವ್ಯದತಗಣೇಭ್ಯಃ ಸ ಕಿಞ್ಚಿನ್ ನ್ಯೂನಃ ಕೃತಸ್ತ್ವಯಾ| ತೇಜೋಗೌರವರೂಪೇಣ ಕಿರೀಟೇನ ವಿಭೂಷಿತಃ| ಸೃಷ್ಟಂ ಯತ್ ತೇ ಕರಾಭ್ಯಾಂ ಸ ತತ್ಪ್ರಭುತ್ವೇ ನಿಯೋಜಿತಃ|
8 எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.” இதில் இறைவன் எல்லாவற்றையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தினார் என்பதிலிருந்து, அவர் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தாமல் எதையுமே விட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதும் எல்லாம் அவர்களுக்கு இன்னும் அடிபணியவில்லை.
ಚರಣಾಧಶ್ಚ ತಸ್ಯೈವ ತ್ವಯಾ ಸರ್ವ್ವಂ ವಶೀಕೃತಂ|| " ತೇನ ಸರ್ವ್ವಂ ಯಸ್ಯ ವಶೀಕೃತಂ ತಸ್ಯಾವಶೀಭೂತಂ ಕಿಮಪಿ ನಾವಶೇಷಿತಂ ಕಿನ್ತ್ವಧುನಾಪಿ ವಯಂ ಸರ್ವ್ವಾಣಿ ತಸ್ಯ ವಶೀಭೂತಾನಿ ನ ಪಶ್ಯಾಮಃ|
9 ஆனாலும் சிறிது காலத்திற்கு இறைத்தூதர்களிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்ட இயேசுவோ, மரண வேதனையடைந்தவராய் இறைவனுடைய கிருபையினாலே, ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்தபடியால் இப்பொழுது மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
ತಥಾಪಿ ದಿವ್ಯದೂತಗಣೇಭ್ಯೋ ಯಃ ಕಿಞ್ಚಿನ್ ನ್ಯೂನೀಕೃತೋಽಭವತ್ ತಂ ಯೀಶುಂ ಮೃತ್ಯುಭೋಗಹೇತೋಸ್ತೇಜೋಗೌರವರೂಪೇಣ ಕಿರೀಟೇನ ವಿಭೂಷಿತಂ ಪಶ್ಯಾಮಃ, ಯತ ಈಶ್ವರಸ್ಯಾನುಗ್ರಹಾತ್ ಸ ಸರ್ವ್ವೇಷಾಂ ಕೃತೇ ಮೃತ್ಯುಮ್ ಅಸ್ವದತ|
10 அநேக பிள்ளைகளை மகிமைக்குள் கொண்டுவரும் பொருட்டு, அவர்களது இரட்சிப்பின் மூலகாரணரான கிறிஸ்துவை, வேதனை அனுபவிப்பதன் மூலமாக, முழுநிறைவுள்ள மூலகாரணராய் இறைவன் ஆக்கியது அவருக்கேற்ற செயலே. இறைவனுக்காகவும், இறைவனின் மூலமாகவுமே எல்லாம் இருக்கின்றன.
ಅಪರಞ್ಚ ಯಸ್ಮೈ ಯೇನ ಚ ಕೃತ್ಸ್ನಂ ವಸ್ತು ಸೃಷ್ಟಂ ವಿದ್ಯತೇ ಬಹುಸನ್ತಾನಾನಾಂ ವಿಭವಾಯಾನಯನಕಾಲೇ ತೇಷಾಂ ಪರಿತ್ರಾಣಾಗ್ರಸರಸ್ಯ ದುಃಖಭೋಗೇನ ಸಿದ್ಧೀಕರಣಮಪಿ ತಸ್ಯೋಪಯುಕ್ತಮ್ ಅಭವತ್|
11 பரிசுத்தமாக்குகிற அவரும், பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தினரே. அதனாலேயே இயேசு அவர்களைச் சகோதரர் என்று அழைப்பதற்கு வெட்கப்படாதிருக்கிறார்.
ಯತಃ ಪಾವಕಃ ಪೂಯಮಾನಾಶ್ಚ ಸರ್ವ್ವೇ ಏಕಸ್ಮಾದೇವೋತ್ಪನ್ನಾ ಭವನ್ತಿ, ಇತಿ ಹೇತೋಃ ಸ ತಾನ್ ಭ್ರಾತೃನ್ ವದಿತುಂ ನ ಲಜ್ಜತೇ|
12 இயேசு அவர்களைக்குறித்து சொல்லுகிறதாவது, “நான் உம்முடைய பெயரை, எனது சகோதரர்களுக்கு அறிவிப்பேன்; திருச்சபையின் முன்னிலையில் உம்முடைய துதிகளைப் பாடுவேன்.”
ತೇನ ಸ ಉಕ್ತವಾನ್, ಯಥಾ, "ದ್ಯೋತಯಿಷ್ಯಾಮಿ ತೇ ನಾಮ ಭ್ರಾತೃಣಾಂ ಮಧ್ಯತೋ ಮಮ| ಪರನ್ತು ಸಮಿತೇ ರ್ಮಧ್ಯೇ ಕರಿಷ್ಯೇ ತೇ ಪ್ರಶಂಸನಂ|| "
13 மேலும், “நான் அவரில் என் நம்பிக்கையை வைப்பேன், இதோ நானும் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.
ಪುನರಪಿ, ಯಥಾ, "ತಸ್ಮಿನ್ ವಿಶ್ವಸ್ಯ ಸ್ಥಾತಾಹಂ| " ಪುನರಪಿ, ಯಥಾ, "ಪಶ್ಯಾಹಮ್ ಅಪತ್ಯಾನಿ ಚ ದತ್ತಾನಿ ಮಹ್ಯಮ್ ಈಶ್ವರಾತ್| "
14 பிள்ளைகள் இரத்தமும், மாம்சமும் உடையவர்களாய் இருக்கிறபடியால், அவர்களுடைய மனித இயல்பில் இயேசுவும் பங்குகொண்டார். அவருடைய மரணத்தினால், மரணத்தின் அதிகாரத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டிருந்த பிசாசை அழிக்கும்படிக்கும்,
ತೇಷಾಮ್ ಅಪತ್ಯಾನಾಂ ರುಧಿರಪಲಲವಿಶಿಷ್ಟತ್ವಾತ್ ಸೋಽಪಿ ತದ್ವತ್ ತದ್ವಿಶಿಷ್ಟೋಽಭೂತ್ ತಸ್ಯಾಭಿಪ್ರಾಯೋಽಯಂ ಯತ್ ಸ ಮೃತ್ಯುಬಲಾಧಿಕಾರಿಣಂ ಶಯತಾನಂ ಮೃತ್ಯುನಾ ಬಲಹೀನಂ ಕುರ್ಯ್ಯಾತ್
15 தங்களுடைய வாழ்நாள் எல்லாம் சாவைக்குறித்த பயத்தினாலே, அடிமைகளாய் இருந்தவர்களை விடுதலை செய்யும்படிக்கும் அவர் மனித இயல்பில் பங்குகொண்டார்.
ಯೇ ಚ ಮೃತ್ಯುಭಯಾದ್ ಯಾವಜ್ಜೀವನಂ ದಾಸತ್ವಸ್ಯ ನಿಘ್ನಾ ಆಸನ್ ತಾನ್ ಉದ್ಧಾರಯೇತ್|
16 இயேசு உதவிசெய்வது இறைத்தூதர்களுக்கு அல்ல, ஆபிரகாமின் சந்ததிக்கே.
ಸ ದೂತಾನಾಮ್ ಉಪಕಾರೀ ನ ಭವತಿ ಕಿನ್ತ್ವಿಬ್ರಾಹೀಮೋ ವಂಶಸ್ಯೈವೋಪಕಾರೀ ಭವತೀ|
17 இதன் காரணமாகவே, இயேசு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல் ஆகவேண்டியிருந்தது. இறைவனுடைய ஊழியத்தில், அவர் இரக்கமும் உண்மையுள்ள பிரதான ஆசாரியன் ஆவதற்காகவும், மக்களுடைய பாவங்களுக்கான பாவநிவிர்த்தியைச் செய்வதற்காகவுமே, அவர் தம்முடைய சகோதரர்களைப் போலானார்.
ಅತೋ ಹೇತೋಃ ಸ ಯಥಾ ಕೃಪಾವಾನ್ ಪ್ರಜಾನಾಂ ಪಾಪಶೋಧನಾರ್ಥಮ್ ಈಶ್ವರೋದ್ದೇಶ್ಯವಿಷಯೇ ವಿಶ್ವಾಸ್ಯೋ ಮಹಾಯಾಜಕೋ ಭವೇತ್ ತದರ್ಥಂ ಸರ್ವ್ವವಿಷಯೇ ಸ್ವಭ್ರಾತೃಣಾಂ ಸದೃಶೀಭವನಂ ತಸ್ಯೋಚಿತಮ್ ಆಸೀತ್|
18 இயேசு சோதனைக்குட்பட்டபோது, வேதனைகளை அனுபவித்தபடியால், இப்பொழுது சோதிக்கப்படுகிறவர்களுக்கு, அவர் உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்.
ಯತಃ ಸ ಸ್ವಯಂ ಪರೀಕ್ಷಾಂ ಗತ್ವಾ ಯಂ ದುಃಖಭೋಗಮ್ ಅವಗತಸ್ತೇನ ಪರೀಕ್ಷಾಕ್ರಾನ್ತಾನ್ ಉಪಕರ್ತ್ತುಂ ಶಕ್ನೋತಿ|