< 1 பேதுரு 3 >

1 மனைவிகளே, அவ்வாறே நீங்களும் உங்கள் சொந்த கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது வசனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்தாலும், வசனமில்லாமலே அவர்களின் மனைவியின் நடத்தையினால் ஒருவேளை ஆதாயப்படுத்தக்கூடும்.
ಹೇ ಯೋಷಿತಃ, ಯೂಯಮಪಿ ನಿಜಸ್ವಾಮಿನಾಂ ವಶ್ಯಾ ಭವತ ತಥಾ ಸತಿ ಯದಿ ಕೇಚಿದ್ ವಾಕ್ಯೇ ವಿಶ್ವಾಸಿನೋ ನ ಸನ್ತಿ ತರ್ಹಿ
2 தூய்மையும் பயபக்தியுமுள்ள உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் காணட்டும்.
ತೇ ವಿನಾವಾಕ್ಯಂ ಯೋಷಿತಾಮ್ ಆಚಾರೇಣಾರ್ಥತಸ್ತೇಷಾಂ ಪ್ರತ್ಯಕ್ಷೇಣ ಯುಷ್ಮಾಕಂ ಸಭಯಸತೀತ್ವಾಚಾರೇಣಾಕ್ರಷ್ಟುಂ ಶಕ್ಷ್ಯನ್ತೇ|
3 உங்கள் அழகு, வெளி அலங்காரத்தில் தங்கியிருக்கக் கூடாது. தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலையுயர்ந்த உடைகளை உடுத்துதல் ஆகிய வெளியான அலங்காரத்தினாலல்ல.
ಅಪರಂ ಕೇಶರಚನಯಾ ಸ್ವರ್ಣಾಲಙ್ಕಾರಧಾರಣೋನ ಪರಿಚ್ಛದಪರಿಧಾನೇನ ವಾ ಯುಷ್ಮಾಕಂ ವಾಹ್ಯಭೂಷಾ ನ ಭವತು,
4 அது உங்கள் உள்ளத்தின் அழகாகவே இருக்கவேண்டும். சாந்தமும் அமைதியும் உள்ள ஆவியே, அழிந்துபோகாத அழகைக் கொடுக்கிறது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது.
ಕಿನ್ತ್ವೀಶ್ವರಸ್ಯ ಸಾಕ್ಷಾದ್ ಬಹುಮೂಲ್ಯಕ್ಷಮಾಶಾನ್ತಿಭಾವಾಕ್ಷಯರತ್ನೇನ ಯುಕ್ತೋ ಗುಪ್ತ ಆನ್ತರಿಕಮಾನವ ಏವ|
5 ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய், முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அலங்கரித்தார்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கணவர்களிடம் பணிவுடன் நடந்தார்கள்.
ಯತಃ ಪೂರ್ವ್ವಕಾಲೇ ಯಾಃ ಪವಿತ್ರಸ್ತ್ರಿಯ ಈಶ್ವರೇ ಪ್ರತ್ಯಾಶಾಮಕುರ್ವ್ವನ್ ತಾ ಅಪಿ ತಾದೃಶೀಮೇವ ಭೂಷಾಂ ಧಾರಯನ್ತ್ಯೋ ನಿಜಸ್ವಾಮಿನಾಂ ವಶ್ಯಾ ಅಭವನ್|
6 அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாய் இருப்பீர்கள்.
ತಥೈವ ಸಾರಾ ಇಬ್ರಾಹೀಮೋ ವಶ್ಯಾ ಸತೀ ತಂ ಪತಿಮಾಖ್ಯಾತವತೀ ಯೂಯಞ್ಚ ಯದಿ ಸದಾಚಾರಿಣ್ಯೋ ಭವಥ ವ್ಯಾಕುಲತಯಾ ಚ ಭೀತಾ ನ ಭವಥ ತರ್ಹಿ ತಸ್ಯಾಃ ಕನ್ಯಾ ಆಧ್ವೇ|
7 கணவர்களே, அதுபோலவே உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துகொள்ளுதலோடு, அக்கறையுடன் வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாயும் இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருப்பதனால், அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாட்டுகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது.
ಹೇ ಪುರುಷಾಃ, ಯೂಯಂ ಜ್ಞಾನತೋ ದುರ್ಬ್ಬಲತರಭಾಜನೈರಿವ ಯೋಷಿದ್ಭಿಃ ಸಹವಾಸಂ ಕುರುತ, ಏಕಸ್ಯ ಜೀವನವರಸ್ಯ ಸಹಭಾಗಿನೀಭ್ಯತಾಭ್ಯಃ ಸಮಾದರಂ ವಿತರತ ಚ ನ ಚೇದ್ ಯುಷ್ಮಾಕಂ ಪ್ರಾರ್ಥನಾನಾಂ ಬಾಧಾ ಜನಿಷ್ಯತೇ|
8 இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் ஒருமனப்பட்டிருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதரரைப்போல் அன்பு காட்டுகிறவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மையுடையவர்களாய் இருங்கள்.
ವಿಶೇಷತೋ ಯೂಯಂ ಸರ್ವ್ವ ಏಕಮನಸಃ ಪರದುಃಖೈ ರ್ದುಃಖಿತಾ ಭ್ರಾತೃಪ್ರಮಿಣಃ ಕೃಪಾವನ್ತಃ ಪ್ರೀತಿಭಾವಾಶ್ಚ ಭವತ|
9 தீமைக்குப் பதிலாக தீமை செய்யவேண்டாம்; ஏளனத்திற்கு பதிலாக ஏளனம் செய்யவேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள்.
ಅನಿಷ್ಟಸ್ಯ ಪರಿಶೋಧೇನಾನಿಷ್ಟಂ ನಿನ್ದಾಯಾ ವಾ ಪರಿಶೋಧೇನ ನಿನ್ದಾಂ ನ ಕುರ್ವ್ವನ್ತ ಆಶಿಷಂ ದತ್ತ ಯತೋ ಯೂಯಮ್ ಆಶಿರಧಿಕಾರಿಣೋ ಭವಿತುಮಾಹೂತಾ ಇತಿ ಜಾನೀಥ|
10 ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கிறதாவது: “வாழ்வை நேசித்து, நல்ல நாட்களைக் காணவிரும்புகிறவன் எவனோ, அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி, தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுகளிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும்.
ಅಪರಞ್ಚ, ಜೀವನೇ ಪ್ರೀಯಮಾಣೋ ಯಃ ಸುದಿನಾನಿ ದಿದೃಕ್ಷತೇ| ಪಾಪಾತ್ ಜಿಹ್ವಾಂ ಮೃಷಾವಾಕ್ಯಾತ್ ಸ್ವಾಧರೌ ಸ ನಿವರ್ತ್ತಯೇತ್|
11 அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்யவேண்டும்; சமாதானத்தைத் தேடி, அதை நாடிச்செல்ல வேண்டும்.
ಸ ತ್ಯಜೇದ್ ದುಷ್ಟತಾಮಾರ್ಗಂ ಸತ್ಕ್ರಿಯಾಞ್ಚ ಸಮಾಚರೇತ್| ಮೃಗಯಾಣಶ್ಚ ಶಾನ್ತಿಂ ಸ ನಿತ್ಯಮೇವಾನುಧಾವತು|
12 ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கவனமாய் கேட்கின்றன. ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கிறவர்களுக்கு எதிராய் இருக்கிறது.”
ಲೋಚನೇ ಪರಮೇಶಸ್ಯೋನ್ಮೀಲಿತೇ ಧಾರ್ಮ್ಮಿಕಾನ್ ಪ್ರತಿ| ಪ್ರಾರ್ಥನಾಯಾಃ ಕೃತೇ ತೇಷಾಃ ತಚ್ಛ್ರೋತ್ರೇ ಸುಗಮೇ ಸದಾ| ಕ್ರೋಧಾಸ್ಯಞ್ಚ ಪರೇಶಸ್ಯ ಕದಾಚಾರಿಷು ವರ್ತ್ತತೇ|
13 நீங்கள் நன்மைசெய்ய ஆவலுள்ளவர்களாய் இருந்தால், யார் உங்களுக்குத் தீமை செய்வான்?
ಅಪರಂ ಯದಿ ಯೂಯಮ್ ಉತ್ತಮಸ್ಯಾನುಗಾಮಿನೋ ಭವಥ ತರ್ಹಿ ಕೋ ಯುಷ್ಮಾನ್ ಹಿಂಸಿಷ್ಯತೇ?
14 ஆனால் நீங்கள் நீதியானதைச் செய்வதனால் துன்பத்தை அனுபவித்தாலும், நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எனவே, “அவர்களுடைய பயமுறுத்துதலுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; கலக்கமடையவும் வேண்டாம்.”
ಯದಿ ಚ ಧರ್ಮ್ಮಾರ್ಥಂ ಕ್ಲಿಶ್ಯಧ್ವಂ ತರ್ಹಿ ಧನ್ಯಾ ಭವಿಷ್ಯಥ| ತೇಷಾಮ್ ಆಶಙ್ಕಯಾ ಯೂಯಂ ನ ಬಿಭೀತ ನ ವಿಙ್ಕ್ತ ವಾ|
15 ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை கர்த்தராக ஏற்று, அவரை கனம்பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் பதில்சொல்வதற்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள்; ஆனால் தயவுடனும் மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்லவேண்டும்.
ಮನೋಭಿಃ ಕಿನ್ತು ಮನ್ಯಧ್ವಂ ಪವಿತ್ರಂ ಪ್ರಭುಮೀಶ್ವರಂ| ಅಪರಞ್ಚ ಯುಷ್ಮಾಕಮ್ ಆನ್ತರಿಕಪ್ರತ್ಯಾಶಾಯಾಸ್ತತ್ತ್ವಂ ಯಃ ಕಶ್ಚಿತ್ ಪೃಚ್ಛತಿ ತಸ್ಮೈ ಶಾನ್ತಿಭೀತಿಭ್ಯಾಮ್ ಉತ್ತರಂ ದಾತುಂ ಸದಾ ಸುಸಜ್ಜಾ ಭವತ|
16 நீங்கள் நல்மனசாட்சி உடையவர்களாயும் இருக்கவேண்டும்; அப்பொழுது கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் நல்ல நடத்தைக்கு எதிராக, தீய எண்ணத்துடன் பேசுகிறவர்கள், தங்கள் அவதூறுப் பேச்சைக்குறித்து வெட்கமடைவார்கள்.
ಯೇ ಚ ಖ್ರೀಷ್ಟಧರ್ಮ್ಮೇ ಯುಷ್ಮಾಕಂ ಸದಾಚಾರಂ ದೂಷಯನ್ತಿ ತೇ ದುಷ್ಕರ್ಮ್ಮಕಾರಿಣಾಮಿವ ಯುಷ್ಮಾಕಮ್ ಅಪವಾದೇನ ಯತ್ ಲಜ್ಜಿತಾ ಭವೇಯುಸ್ತದರ್ಥಂ ಯುಷ್ಮಾಕಮ್ ಉತ್ತಮಃ ಸಂವೇದೋ ಭವತು|
17 தீமை செய்து துன்பப்படுவதைப் பார்க்கிலும், இறைவனுக்கு சித்தமானால் நன்மை செய்து துன்பப்படுவதே சிறந்தது.
ಈಶ್ವರಸ್ಯಾಭಿಮತಾದ್ ಯದಿ ಯುಷ್ಮಾಭಿಃ ಕ್ಲೇಶಃ ಸೋಢವ್ಯಸ್ತರ್ಹಿ ಸದಾಚಾರಿಭಿಃ ಕ್ಲೇಶಸಹನಂ ವರಂ ನ ಚ ಕದಾಚಾರಿಭಿಃ|
18 ஏனெனில், கிறிஸ்து பாவங்களுக்காக ஒரே முறையாக இறந்தார். உங்களை இறைவனிடம் கொண்டுவரும்படியாக, நீதிமானான அவர், நீதியற்றவர்களுக்காக இறந்தார். அவரது உடல் கொல்லப்பட்டது, ஆனால் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார்.
ಯಸ್ಮಾದ್ ಈಶ್ವರಸ್ಯ ಸನ್ನಿಧಿಮ್ ಅಸ್ಮಾನ್ ಆನೇತುಮ್ ಅಧಾರ್ಮ್ಮಿಕಾಣಾಂ ವಿನಿಮಯೇನ ಧಾರ್ಮ್ಮಿಕಃ ಖ್ರೀಷ್ಟೋ ಽಪ್ಯೇಕಕೃತ್ವಃ ಪಾಪಾನಾಂ ದಣ್ಡಂ ಭುಕ್ತವಾನ್, ಸ ಚ ಶರೀರಸಮ್ಬನ್ಧೇ ಮಾರಿತಃ ಕಿನ್ತ್ವಾತ್ಮನಃ ಸಮ್ಬನ್ಧೇ ಪುನ ರ್ಜೀವಿತೋ ಽಭವತ್|
19 அந்த ஆவியிலே அவர் போய், சிறையில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தார்.
ತತ್ಸಮ್ಬನ್ಧೇ ಚ ಸ ಯಾತ್ರಾಂ ವಿಧಾಯ ಕಾರಾಬದ್ಧಾನಾಮ್ ಆತ್ಮನಾಂ ಸಮೀಪೇ ವಾಕ್ಯಂ ಘೋಷಿತವಾನ್|
20 அந்த ஆவிகளே வெகுகாலத்திற்கு முன்பு, நோவா பேழை செய்துகொண்டிருந்த நாட்களில், இறைவன் பொறுமையோடு இருந்தும் கீழ்ப்படியாதவைகள். அந்தப் பேழையில், எல்லாமாக எட்டுப் பேராகிய சிலரே தண்ணீரின் வழியாகக் காப்பாற்றப்பட்டார்கள்.
ಪುರಾ ನೋಹಸ್ಯ ಸಮಯೇ ಯಾವತ್ ಪೋತೋ ನಿರಮೀಯತ ತಾವದ್ ಈಶ್ವರಸ್ಯ ದೀರ್ಘಸಹಿಷ್ಣುತಾ ಯದಾ ವ್ಯಲಮ್ಬತ ತದಾ ತೇಽನಾಜ್ಞಾಗ್ರಾಹಿಣೋಽಭವನ್| ತೇನ ಪೋತೋನಾಲ್ಪೇಽರ್ಥಾದ್ ಅಷ್ಟಾವೇವ ಪ್ರಾಣಿನಸ್ತೋಯಮ್ ಉತ್ತೀರ್ಣಾಃ|
21 அதற்கு ஒப்பான இந்த திருமுழுக்கு உடலில் அழுக்கை நீக்குவதற்கு அல்ல, அது இறைவனைப் பற்றும் தெளிவான மனசாட்சியுடன் இருப்போம் என செய்துகொள்ளும் வாக்குறுதியாகும். இந்த திருமுழுக்கு இப்பொழுது இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினாலே, உங்களை இரட்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
ತನ್ನಿದರ್ಶನಞ್ಚಾವಗಾಹನಂ (ಅರ್ಥತಃ ಶಾರೀರಿಕಮಲಿನತಾಯಾ ಯಸ್ತ್ಯಾಗಃ ಸ ನಹಿ ಕಿನ್ತ್ವೀಶ್ವರಾಯೋತ್ತಮಸಂವೇದಸ್ಯ ಯಾ ಪ್ರತಜ್ಞಾ ಸೈವ) ಯೀಶುಖ್ರೀಷ್ಟಸ್ಯ ಪುನರುತ್ಥಾನೇನೇದಾನೀಮ್ ಅಸ್ಮಾನ್ ಉತ್ತಾರಯತಿ,
22 கிறிஸ்து பரலோகத்திற்குப் போய், இறைவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார். இறைத்தூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்கு அடங்கியிருக்கின்றன.
ಯತಃ ಸ ಸ್ವರ್ಗಂ ಗತ್ವೇಶ್ವರಸ್ಯ ದಕ್ಷಿಣೇ ವಿದ್ಯತೇ ಸ್ವರ್ಗೀಯದೂತಾಃ ಶಾಸಕಾ ಬಲಾನಿ ಚ ತಸ್ಯ ವಶೀಭೂತಾ ಅಭವನ್|

< 1 பேதுரு 3 >

A Dove is Sent Forth from the Ark
A Dove is Sent Forth from the Ark