< ପ୍ରକାଶିତଂ 1 >
1 ଯତ୍ ପ୍ରକାଶିତଂ ୱାକ୍ୟମ୍ ଈଶ୍ୱରଃ ସ୍ୱଦାସାନାଂ ନିକଟଂ ଶୀଘ୍ରମୁପସ୍ଥାସ୍ୟନ୍ତୀନାଂ ଘଟନାନାଂ ଦର୍ଶନାର୍ଥଂ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟେ ସମର୍ପିତୱାନ୍ ତତ୍ ସ ସ୍ୱୀଯଦୂତଂ ପ୍ରେଷ୍ୟ ନିଜସେୱକଂ ଯୋହନଂ ଜ୍ଞାପିତୱାନ୍|
௧சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரர்களுக்குக் காண்பிப்பதற்காக, தேவன் இயேசுகிறிஸ்துவிற்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான காரியம்.
2 ସ ଚେଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟେ ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ସାକ୍ଷ୍ୟେ ଚ ଯଦ୍ୟଦ୍ ଦୃଷ୍ଟୱାନ୍ ତସ୍ୟ ପ୍ରମାଣଂ ଦତ୍ତୱାନ୍|
௨இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் பார்த்த எல்லாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.
3 ଏତସ୍ୟ ଭୱିଷ୍ୟଦ୍ୱକ୍ତୃଗ୍ରନ୍ଥସ୍ୟ ୱାକ୍ୟାନାଂ ପାଠକଃ ଶ୍ରୋତାରଶ୍ଚ ତନ୍ମଧ୍ୟେ ଲିଖିତାଜ୍ଞାଗ୍ରାହିଣଶ୍ଚ ଧନ୍ୟା ଯତଃ ସ କାଲଃ ସନ୍ନିକଟଃ|
௩இந்தத் தீர்க்கதரிசன வசனங்களைப் படிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளின்படி நடக்கிறவர்களும் பாக்கியவான்கள், காலம் நெருங்கிவிட்டது.
4 ଯୋହନ୍ ଆଶିଯାଦେଶସ୍ଥାଃ ସପ୍ତ ସମିତୀଃ ପ୍ରତି ପତ୍ରଂ ଲିଖତି| ଯୋ ୱର୍ତ୍ତମାନୋ ଭୂତୋ ଭୱିଷ୍ୟଂଶ୍ଚ ଯେ ଚ ସପ୍ତାତ୍ମାନସ୍ତସ୍ୟ ସିଂହାସନସ୍ୟ ସମ୍ମୁଖେ ତିଷ୍ଠନ୍ତି
௪யோவான் ஆசியாவில் உள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும்,
5 ଯଶ୍ଚ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟୋ ୱିଶ୍ୱସ୍ତଃ ସାକ୍ଷୀ ମୃତାନାଂ ମଧ୍ୟେ ପ୍ରଥମଜାତୋ ଭୂମଣ୍ଡଲସ୍ଥରାଜାନାମ୍ ଅଧିପତିଶ୍ଚ ଭୱତି, ଏତେଭ୍ୟୋ ଽନୁଗ୍ରହଃ ଶାନ୍ତିଶ୍ଚ ଯୁଷ୍ମାସୁ ୱର୍ତ୍ତତାଂ|
௫உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதலில் பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
6 ଯୋ ଽସ୍ମାସୁ ପ୍ରୀତୱାନ୍ ସ୍ୱରୁଧିରେଣାସ୍ମାନ୍ ସ୍ୱପାପେଭ୍ୟଃ ପ୍ରକ୍ଷାଲିତୱାନ୍ ତସ୍ୟ ପିତୁରୀଶ୍ୱରସ୍ୟ ଯାଜକାନ୍ କୃତ୍ୱାସ୍ମାନ୍ ରାଜୱର୍ଗେ ନିଯୁକ୍ତୱାଂଶ୍ଚ ତସ୍ମିନ୍ ମହିମା ପରାକ୍ରମଶ୍ଚାନନ୍ତକାଲଂ ଯାୱଦ୍ ୱର୍ତ୍ତତାଂ| ଆମେନ୍| (aiōn )
௬நம்மேல் அன்புவைத்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn )
7 ପଶ୍ୟତ ସ ମେଘୈରାଗଚ୍ଛତି ତେନୈକୈକସ୍ୟ ଚକ୍ଷୁସ୍ତଂ ଦ୍ରକ୍ଷ୍ୟତି ଯେ ଚ ତଂ ୱିଦ୍ଧୱନ୍ତସ୍ତେ ଽପି ତଂ ୱିଲୋକିଷ୍ୟନ୍ତେ ତସ୍ୟ କୃତେ ପୃଥିୱୀସ୍ଥାଃ ସର୍ୱ୍ୱେ ୱଂଶା ୱିଲପିଷ୍ୟନ୍ତି| ସତ୍ୟମ୍ ଆମେନ୍|
௭இதோ, மேகங்களோடு வருகிறார்; கண்கள் எல்லாம் அவரைப் பார்க்கும், அவரைக் குத்தினவர்களும் அவரைப் பார்ப்பார்கள்; பூமியில் உள்ள கோத்திரத்தார்கள் எல்லோரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே நடக்கும், ஆமென்.
8 ୱର୍ତ୍ତମାନୋ ଭୂତୋ ଭୱିଷ୍ୟଂଶ୍ଚ ଯଃ ସର୍ୱ୍ୱଶକ୍ତିମାନ୍ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରଃ ସ ଗଦତି, ଅହମେୱ କଃ କ୍ଷଶ୍ଚାର୍ଥତ ଆଦିରନ୍ତଶ୍ଚ|
௮இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், துவக்கமும், முடிவுமாக இருக்கிறேன் என்று உரைக்கிறார்.
9 ଯୁଷ୍ମାକଂ ଭ୍ରାତା ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ କ୍ଲେଶରାଜ୍ୟତିତିକ୍ଷାଣାଂ ସହଭାଗୀ ଚାହଂ ଯୋହନ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ୱାକ୍ୟହେତୋ ର୍ୟୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ସାକ୍ଷ୍ୟହେତୋଶ୍ଚ ପାତ୍ମନାମକ ଉପଦ୍ୱୀପ ଆସଂ|
௯உங்களுடைய சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்களுடைய உடன்பங்காளியுமாக இருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
10 ତତ୍ର ପ୍ରଭୋ ର୍ଦିନେ ଆତ୍ମନାୱିଷ୍ଟୋ ଽହଂ ସ୍ୱପଶ୍ଚାତ୍ ତୂରୀଧ୍ୱନିୱତ୍ ମହାରୱମ୍ ଅଶ୍ରୌଷଂ,
௧0கர்த்த்தரை ஆராதிக்கும் நாளில் நான் ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போல ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்.
11 ତେନୋକ୍ତମ୍, ଅହଂ କଃ କ୍ଷଶ୍ଚାର୍ଥତ ଆଦିରନ୍ତଶ୍ଚ| ତ୍ୱଂ ଯଦ୍ ଦ୍ରକ୍ଷ୍ୟସି ତଦ୍ ଗ୍ରନ୍ଥେ ଲିଖିତ୍ୱାଶିଯାଦେଶସ୍ଥାନାଂ ସପ୍ତ ସମିତୀନାଂ ସମୀପମ୍ ଇଫିଷଂ ସ୍ମୁର୍ଣାଂ ଥୁଯାତୀରାଂ ସାର୍ଦ୍ଦିଂ ଫିଲାଦିଲ୍ଫିଯାଂ ଲାଯଦୀକେଯାଞ୍ଚ ପ୍ରେଷଯ|
௧௧அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாக இருக்கிறேன். நீ பார்க்கிறதை ஒரு புத்தகத்தில் எழுதி, ஆசியாவில் இருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களில் உள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று சொன்னது.
12 ତତୋ ମଯା ସମ୍ଭାଷମାଣସ୍ୟ କସ୍ୟ ରୱଃ ଶ୍ରୂଯତେ ତଦ୍ଦର୍ଶନାର୍ଥଂ ମୁଖଂ ପରାୱର୍ତ୍ତିତଂ ତତ୍ ପରାୱର୍ତ୍ୟ ସ୍ୱର୍ଣମଯାଃ ସପ୍ତ ଦୀପୱୃକ୍ଷା ଦୃଷ୍ଟାଃ|
௧௨அப்பொழுது என்னோடு பேசின அந்த சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபொழுது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,
13 ତେଷାଂ ସପ୍ତ ଦୀପୱୃକ୍ଷାଣାଂ ମଧ୍ୟେ ଦୀର୍ଘପରିଚ୍ଛଦପରିହିତଃ ସୁୱର୍ଣଶୃଙ୍ଖଲେନ ୱେଷ୍ଟିତୱକ୍ଷଶ୍ଚ ମନୁଷ୍ୟପୁତ୍ରାକୃତିରେକୋ ଜନସ୍ତିଷ୍ଠତି,
௧௩அந்த ஏழு குத்துவிளக்குகளின் நடுவிலே, பாதம்வரை நீளமான அங்கி அணிந்து, மார்பில் பொற்கச்சை கட்டியிருந்த மனிதகுமாரனைப்போல ஒருவரைப் பார்த்தேன்.
14 ତସ୍ୟ ଶିରଃ କେଶଶ୍ଚ ଶ୍ୱେତମେଷଲୋମାନୀୱ ହିମୱତ୍ ଶ୍ରେତୌ ଲୋଚନେ ୱହ୍ନିଶିଖାସମେ
௧௪அவருடைய தலையும், தலைமுடியும் வெண்மையான பஞ்சைப்போலவும் உறைந்த பனியைப்போலவும் வெண்மையாக இருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போல இருந்தது;
15 ଚରଣୌ ୱହ୍ନିକୁଣ୍ଡେତାପିତସୁପିତ୍ତଲସଦୃଶୌ ରୱଶ୍ଚ ବହୁତୋଯାନାଂ ରୱତୁଲ୍ୟଃ|
௧௫அவருடைய பாதங்கள் உலையிலே காய்ந்த பிரகாசமான வெண்கலம்போல இருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போல இருந்தது.
16 ତସ୍ୟ ଦକ୍ଷିଣହସ୍ତେ ସପ୍ତ ତାରା ୱିଦ୍ୟନ୍ତେ ୱକ୍ତ୍ରାଚ୍ଚ ତୀକ୍ଷ୍ଣୋ ଦ୍ୱିଧାରଃ ଖଙ୍ଗୋ ନିର୍ଗଚ୍ଛତି ମୁଖମଣ୍ଡଲଞ୍ଚ ସ୍ୱତେଜସା ଦେଦୀପ୍ୟମାନସ୍ୟ ସୂର୍ୟ୍ୟସ୍ୟ ସଦୃଶଂ|
௧௬தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது.
17 ତଂ ଦୃଷ୍ଟ୍ୱାହଂ ମୃତକଲ୍ପସ୍ତଚ୍ଚରଣେ ପତିତସ୍ତତଃ ସ୍ୱଦକ୍ଷିଣକରଂ ମଯି ନିଧାଯ ତେନୋକ୍ତମ୍ ମା ଭୈଷୀଃ; ଅହମ୍ ଆଦିରନ୍ତଶ୍ଚ|
௧௭நான் அவரைப் பார்த்தபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலது கையை என்மேல் வைத்து, என்னைப் பார்த்து: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாக இருக்கிறேன்;
18 ଅହମ୍ ଅମରସ୍ତଥାପି ମୃତୱାନ୍ କିନ୍ତୁ ପଶ୍ୟାହମ୍ ଅନନ୍ତକାଲଂ ଯାୱତ୍ ଜୀୱାମି| ଆମେନ୍| ମୃତ୍ୟୋଃ ପରଲୋକସ୍ୟ ଚ କୁଞ୍ଜିକା ମମ ହସ୍ତଗତାଃ| (aiōn , Hadēs )
௧௮மரித்தேன், ஆனாலும், இதோ, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறேன், ஆமென்; நான் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை வைத்திருக்கிறேன். (aiōn , Hadēs )
19 ଅତୋ ଯଦ୍ ଭୱତି ଯଚ୍ଚେତଃ ପରଂ ଭୱିଷ୍ୟତି ତ୍ୱଯା ଦୃଷ୍ଟଂ ତତ୍ ସର୍ୱ୍ୱଂ ଲିଖ୍ୟତାଂ|
௧௯நீ பார்த்தவைகளையும் இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு நடக்கப்போகிறவைகளையும் எழுது;
20 ମମ ଦକ୍ଷିଣହସ୍ତେ ସ୍ଥିତା ଯାଃ ସପ୍ତ ତାରା ଯେ ଚ ସ୍ୱର୍ଣମଯାଃ ସପ୍ତ ଦୀପୱୃକ୍ଷାସ୍ତ୍ୱଯା ଦୃଷ୍ଟାସ୍ତତ୍ତାତ୍ପର୍ୟ୍ୟମିଦଂ ତାଃ ସପ୍ତ ତାରାଃ ସପ୍ତ ସମିତୀନାଂ ଦୂତାଃ ସୁୱର୍ଣମଯାଃ ସପ୍ତ ଦୀପୱୃକ୍ଷାଶ୍ଚ ସପ୍ତ ସମିତଯଃ ସନ୍ତି|
௨0என் வலது கையில் நீ பார்த்த ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்கள்; நீ பார்த்த ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகள்.