< ମଥିଃ 16 >

1 ତଦାନୀଂ ଫିରୂଶିନଃ ସିଦୂକିନଶ୍ଚାଗତ୍ୟ ତଂ ପରୀକ୍ଷିତୁଂ ନଭମୀଯଂ କିଞ୍ଚନ ଲକ୍ଷ୍ମ ଦର୍ଶଯିତୁଂ ତସ୍ମୈ ନିୱେଦଯାମାସୁଃ|
பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
2 ତତଃ ସ ଉକ୍ତୱାନ୍, ସନ୍ଧ୍ୟାଯାଂ ନଭସୋ ରକ୍ତତ୍ୱାଦ୍ ଯୂଯଂ ୱଦଥ, ଶ୍ୱୋ ନିର୍ମ୍ମଲଂ ଦିନଂ ଭୱିଷ୍ୟତି;
அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
3 ପ୍ରାତଃକାଲେ ଚ ନଭସୋ ରକ୍ତତ୍ୱାତ୍ ମଲିନତ୍ୱାଞ୍ଚ ୱଦଥ, ଝଞ୍ଭ୍ଶଦ୍ୟ ଭୱିଷ୍ୟତି| ହେ କପଟିନୋ ଯଦି ଯୂଯମ୍ ଅନ୍ତରୀକ୍ଷସ୍ୟ ଲକ୍ଷ୍ମ ବୋଦ୍ଧୁଂ ଶକ୍ନୁଥ, ତର୍ହି କାଲସ୍ୟୈତସ୍ୟ ଲକ୍ଷ୍ମ କଥଂ ବୋଦ୍ଧୁଂ ନ ଶକ୍ନୁଥ?
உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
4 ଏତତ୍କାଲସ୍ୟ ଦୁଷ୍ଟୋ ୱ୍ୟଭିଚାରୀ ଚ ୱଂଶୋ ଲକ୍ଷ୍ମ ଗୱେଷଯତି, କିନ୍ତୁ ଯୂନସୋ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନୋ ଲକ୍ଷ୍ମ ୱିନାନ୍ୟତ୍ କିମପି ଲକ୍ଷ୍ମ ତାନ୍ ନ ଦର୍ଶଯିଯ୍ୟତେ| ତଦାନୀଂ ସ ତାନ୍ ୱିହାଯ ପ୍ରତସ୍ଥେ|
இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
5 ଅନନ୍ତରମନ୍ୟପାରଗମନକାଲେ ତସ୍ୟ ଶିଷ୍ୟାଃ ପୂପମାନେତୁଂ ୱିସ୍ମୃତୱନ୍ତଃ|
அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
6 ଯୀଶୁସ୍ତାନୱାଦୀତ୍, ଯୂଯଂ ଫିରୂଶିନାଂ ସିଦୂକିନାଞ୍ଚ କିଣ୍ୱଂ ପ୍ରତି ସାୱଧାନାଃ ସତର୍କାଶ୍ଚ ଭୱତ|
இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.
7 ତେନ ତେ ପରସ୍ପରଂ ୱିୱିଚ୍ୟ କଥଯିତୁମାରେଭିରେ, ୱଯଂ ପୂପାନାନେତୁଂ ୱିସ୍ମୃତୱନ୍ତ ଏତତ୍କାରଣାଦ୍ ଇତି କଥଯତି|
நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
8 କିନ୍ତୁ ଯୀଶୁସ୍ତଦ୍ୱିଜ୍ଞାଯ ତାନୱୋଚତ୍, ହେ ସ୍ତୋକୱିଶ୍ୱାସିନୋ ଯୂଯଂ ପୂପାନାନଯନମଧି କୁତଃ ପରସ୍ପରମେତଦ୍ ୱିୱିଂକ୍ୟ?
இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
9 ଯୁଷ୍ମାଭିଃ କିମଦ୍ୟାପି ନ ଜ୍ଞାଯତେ? ପଞ୍ଚଭିଃ ପୂପୈଃ ପଞ୍ଚସହସ୍ରପୁରୁଷେଷୁ ଭୋଜିତେଷୁ ଭକ୍ଷ୍ୟୋଚ୍ଛିଷ୍ଟପୂର୍ଣାନ୍ କତି ଡଲକାନ୍ ସମଗୃହ୍ଲୀତଂ;
இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
10 ତଥା ସପ୍ତଭିଃ ପୂପୈଶ୍ଚତୁଃସହସ୍ରପୁରୁଷେଷୁ ଭେଜିତେଷୁ କତି ଡଲକାନ୍ ସମଗୃହ୍ଲୀତ, ତତ୍ କିଂ ଯୁଷ୍ମାଭିର୍ନ ସ୍ମର୍ୟ୍ୟତେ?
௧0ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
11 ତସ୍ମାତ୍ ଫିରୂଶିନାଂ ସିଦୂକିନାଞ୍ଚ କିଣ୍ୱଂ ପ୍ରତି ସାୱଧାନାସ୍ତିଷ୍ଠତ, କଥାମିମାମ୍ ଅହଂ ପୂପାନଧି ନାକଥଯଂ, ଏତଦ୍ ଯୂଯଂ କୁତୋ ନ ବୁଧ୍ୟଧ୍ୱେ?
௧௧பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
12 ତଦାନୀଂ ପୂପକିଣ୍ୱଂ ପ୍ରତି ସାୱଧାନାସ୍ତିଷ୍ଠତେତି ନୋକ୍ତ୍ୱା ଫିରୂଶିନାଂ ସିଦୂକିନାଞ୍ଚ ଉପଦେଶଂ ପ୍ରତି ସାୱଧାନାସ୍ତିଷ୍ଠତେତି କଥିତୱାନ୍, ଇତି ତୈରବୋଧି|
௧௨அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
13 ଅପରଞ୍ଚ ଯୀଶୁଃ କୈସରିଯା-ଫିଲିପିପ୍ରଦେଶମାଗତ୍ୟ ଶିଷ୍ୟାନ୍ ଅପୃଚ୍ଛତ୍, ଯୋଽହଂ ମନୁଜସୁତଃ ସୋଽହଂ କଃ? ଲୋକୈରହଂ କିମୁଚ୍ୟେ?
௧௩பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14 ତଦାନୀଂ ତେ କଥିତୱନ୍ତଃ, କେଚିଦ୍ ୱଦନ୍ତି ତ୍ୱଂ ମଜ୍ଜଯିତା ଯୋହନ୍, କେଚିଦ୍ୱଦନ୍ତି, ତ୍ୱମ୍ ଏଲିଯଃ, କେଚିଚ୍ଚ ୱଦନ୍ତି, ତ୍ୱଂ ଯିରିମିଯୋ ୱା କଶ୍ଚିଦ୍ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀତି|
௧௪அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
15 ପଶ୍ଚାତ୍ ସ ତାନ୍ ପପ୍ରଚ୍ଛ, ଯୂଯଂ ମାଂ କଂ ୱଦଥ? ତତଃ ଶିମୋନ୍ ପିତର ଉୱାଚ,
௧௫அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
16 ତ୍ୱମମରେଶ୍ୱରସ୍ୟାଭିଷିକ୍ତପୁତ୍ରଃ|
௧௬சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
17 ତତୋ ଯୀଶୁଃ କଥିତୱାନ୍, ହେ ଯୂନସଃ ପୁତ୍ର ଶିମୋନ୍ ତ୍ୱଂ ଧନ୍ୟଃ; ଯତଃ କୋପି ଅନୁଜସ୍ତ୍ୱଯ୍ୟେତଜ୍ଜ୍ଞାନଂ ନୋଦପାଦଯତ୍, କିନ୍ତୁ ମମ ସ୍ୱର୍ଗସ୍ୟଃ ପିତୋଦପାଦଯତ୍|
௧௭இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
18 ଅତୋଽହଂ ତ୍ୱାଂ ୱଦାମି, ତ୍ୱଂ ପିତରଃ (ପ୍ରସ୍ତରଃ) ଅହଞ୍ଚ ତସ୍ୟ ପ୍ରସ୍ତରସ୍ୟୋପରି ସ୍ୱମଣ୍ଡଲୀଂ ନିର୍ମ୍ମାସ୍ୟାମି, ତେନ ନିରଯୋ ବଲାତ୍ ତାଂ ପରାଜେତୁଂ ନ ଶକ୍ଷ୍ୟତି| (Hadēs g86)
௧௮மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs g86)
19 ଅହଂ ତୁଭ୍ୟଂ ସ୍ୱର୍ଗୀଯରାଜ୍ୟସ୍ୟ କୁଞ୍ଜିକାଂ ଦାସ୍ୟାମି, ତେନ ଯତ୍ କିଞ୍ଚନ ତ୍ୱଂ ପୃଥିୱ୍ୟାଂ ଭଂତ୍ସ୍ୟସି ତତ୍ସ୍ୱର୍ଗେ ଭଂତ୍ସ୍ୟତେ, ଯଚ୍ଚ କିଞ୍ଚନ ମହ୍ୟାଂ ମୋକ୍ଷ୍ୟସି ତତ୍ ସ୍ୱର୍ଗେ ମୋକ୍ଷ୍ୟତେ|
௧௯பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
20 ପଶ୍ଚାତ୍ ସ ଶିଷ୍ୟାନାଦିଶତ୍, ଅହମଭିଷିକ୍ତୋ ଯୀଶୁରିତି କଥାଂ କସ୍ମୈଚିଦପି ଯୂଯଂ ମା କଥଯତ|
௨0அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
21 ଅନ୍ୟଞ୍ଚ ଯିରୂଶାଲମ୍ନଗରଂ ଗତ୍ୱା ପ୍ରାଚୀନଲୋକେଭ୍ୟଃ ପ୍ରଧାନଯାଜକେଭ୍ୟ ଉପାଧ୍ୟାଯେଭ୍ୟଶ୍ଚ ବହୁଦୁଃଖଭୋଗସ୍ତୈ ର୍ହତତ୍ୱଂ ତୃତୀଯଦିନେ ପୁନରୁତ୍ଥାନଞ୍ଚ ମମାୱଶ୍ୟକମ୍ ଏତାଃ କଥା ଯୀଶୁସ୍ତତ୍କାଲମାରଭ୍ୟ ଶିଷ୍ୟାନ୍ ଜ୍ଞାପଯିତୁମ୍ ଆରବ୍ଧୱାନ୍|
௨௧அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
22 ତଦାନୀଂ ପିତରସ୍ତସ୍ୟ କରଂ ଘୃତ୍ୱା ତର୍ଜଯିତ୍ୱା କଥଯିତୁମାରବ୍ଧୱାନ୍, ହେ ପ୍ରଭୋ, ତତ୍ ତ୍ୱତ୍ତୋ ଦୂରଂ ଯାତୁ, ତ୍ୱାଂ ପ୍ରତି କଦାପି ନ ଘଟିଷ୍ୟତେ|
௨௨அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
23 କିନ୍ତୁ ସ ୱଦନଂ ପରାୱର୍ତ୍ୟ ପିତରଂ ଜଗାଦ, ହେ ୱିଘ୍ନକାରିନ୍, ମତ୍ସମ୍ମୁଖାଦ୍ ଦୂରୀଭୱ, ତ୍ୱଂ ମାଂ ବାଧସେ, ଈଶ୍ୱରୀଯକାର୍ୟ୍ୟାତ୍ ମାନୁଷୀଯକାର୍ୟ୍ୟଂ ତୁଭ୍ୟଂ ରୋଚତେ|
௨௩அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
24 ଅନନ୍ତରଂ ଯୀଶୁଃ ସ୍ୱୀଯଶିଷ୍ୟାନ୍ ଉକ୍ତୱାନ୍ ଯଃ କଶ୍ଚିତ୍ ମମ ପଶ୍ଚାଦ୍ଗାମୀ ଭୱିତୁମ୍ ଇଚ୍ଛତି, ସ ସ୍ୱଂ ଦାମ୍ୟତୁ, ତଥା ସ୍ୱକ୍ରୁଶଂ ଗୃହ୍ଲନ୍ ମତ୍ପଶ୍ଚାଦାଯାତୁ|
௨௪அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
25 ଯତୋ ଯଃ ପ୍ରାଣାନ୍ ରକ୍ଷିତୁମିଚ୍ଛତି, ସ ତାନ୍ ହାରଯିଷ୍ୟତି, କିନ୍ତୁ ଯୋ ମଦର୍ଥଂ ନିଜପ୍ରାଣାନ୍ ହାରଯତି, ସ ତାନ୍ ପ୍ରାପ୍ସ୍ୟତି|
௨௫தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
26 ମାନୁଷୋ ଯଦି ସର୍ୱ୍ୱଂ ଜଗତ୍ ଲଭତେ ନିଜପ୍ରଣାନ୍ ହାରଯତି, ତର୍ହି ତସ୍ୟ କୋ ଲାଭଃ? ମନୁଜୋ ନିଜପ୍ରାଣାନାଂ ୱିନିମଯେନ ୱା କିଂ ଦାତୁଂ ଶକ୍ନୋତି?
௨௬மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
27 ମନୁଜସୁତଃ ସ୍ୱଦୂତୈଃ ସାକଂ ପିତୁଃ ପ୍ରଭାୱେଣାଗମିଷ୍ୟତି; ତଦା ପ୍ରତିମନୁଜଂ ସ୍ୱସ୍ୱକର୍ମ୍ମାନୁସାରାତ୍ ଫଲଂ ଦାସ୍ୟତି|
௨௭மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
28 ଅହଂ ଯୁଷ୍ମାନ୍ ତଥ୍ୟଂ ୱଚ୍ମି, ସରାଜ୍ୟଂ ମନୁଜସୁତମ୍ ଆଗତଂ ନ ପଶ୍ୟନ୍ତୋ ମୃତ୍ୟୁଂ ନ ସ୍ୱାଦିଷ୍ୟନ୍ତି, ଏତାଦୃଶାଃ କତିପଯଜନା ଅତ୍ରାପି ଦଣ୍ଡାଯମାନାଃ ସନ୍ତି|
௨௮இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

< ମଥିଃ 16 >