< ମଥିଃ 13 >
1 ଅପରଞ୍ଚ ତସ୍ମିନ୍ ଦିନେ ଯୀଶୁଃ ସଦ୍ମନୋ ଗତ୍ୱା ସରିତ୍ପତେ ରୋଧସି ସମୁପୱିୱେଶ|
௧இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
2 ତତ୍ର ତତ୍ସନ୍ନିଧୌ ବହୁଜନାନାଂ ନିୱହୋପସ୍ଥିତେଃ ସ ତରଣିମାରୁହ୍ୟ ସମୁପାୱିଶତ୍, ତେନ ମାନୱା ରୋଧସି ସ୍ଥିତୱନ୍ତଃ|
௨திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள்.
3 ତଦାନୀଂ ସ ଦୃଷ୍ଟାନ୍ତୈସ୍ତାନ୍ ଇତ୍ଥଂ ବହୁଶ ଉପଦିଷ୍ଟୱାନ୍| ପଶ୍ୟତ, କଶ୍ଚିତ୍ କୃଷୀୱଲୋ ବୀଜାନି ୱପ୍ତୁଂ ବହିର୍ଜଗାମ,
௩அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4 ତସ୍ୟ ୱପନକାଲେ କତିପଯବୀଜେଷୁ ମାର୍ଗପାର୍ଶ୍ୱେ ପତିତେଷୁ ୱିହଗାସ୍ତାନି ଭକ୍ଷିତୱନ୍ତଃ|
௪அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன.
5 ଅପରଂ କତିପଯବୀଜେଷୁ ସ୍ତୋକମୃଦ୍ୟୁକ୍ତପାଷାଣେ ପତିତେଷୁ ମୃଦଲ୍ପତ୍ୱାତ୍ ତତ୍କ୍ଷଣାତ୍ ତାନ୍ୟଙ୍କୁରିତାନି,
௫சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன.
6 କିନ୍ତୁ ରୱାୱୁଦିତେ ଦଗ୍ଧାନି ତେଷାଂ ମୂଲାପ୍ରୱିଷ୍ଟତ୍ୱାତ୍ ଶୁଷ୍କତାଂ ଗତାନି ଚ|
௬வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின.
7 ଅପରଂ କତିପଯବୀଜେଷୁ କଣ୍ଟକାନାଂ ମଧ୍ୟେ ପତିତେଷୁ କଣ୍ଟକାନ୍ୟେଧିତ୍ୱା ତାନି ଜଗ୍ରସୁଃ|
௭சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது.
8 ଅପରଞ୍ଚ କତିପଯବୀଜାନି ଉର୍ୱ୍ୱରାଯାଂ ପତିତାନି; ତେଷାଂ ମଧ୍ୟେ କାନିଚିତ୍ ଶତଗୁଣାନି କାନିଚିତ୍ ଷଷ୍ଟିଗୁଣାନି କାନିଚିତ୍ ତ୍ରିଂଶଗୁଂଣାନି ଫଲାନି ଫଲିତୱନ୍ତି|
௮சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன, சில விதைகள் நூறாகவும், சில விதைகள் அறுபதாகவும், சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன.
9 ଶ୍ରୋତୁଂ ଯସ୍ୟ ଶ୍ରୁତୀ ଆସାତେ ସ ଶୃଣୁଯାତ୍|
௯கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.
10 ଅନନ୍ତରଂ ଶିଷ୍ୟୈରାଗତ୍ୟ ସୋଽପୃଚ୍ଛ୍ୟତ, ଭୱତା ତେଭ୍ୟଃ କୁତୋ ଦୃଷ୍ଟାନ୍ତକଥା କଥ୍ୟତେ?
௧0அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
11 ତତଃ ସ ପ୍ରତ୍ୟୱଦତ୍, ସ୍ୱର୍ଗରାଜ୍ୟସ୍ୟ ନିଗୂଢାଂ କଥାଂ ୱେଦିତୁଂ ଯୁଷ୍ମଭ୍ୟଂ ସାମର୍ଥ୍ୟମଦାଯି, କିନ୍ତୁ ତେଭ୍ୟୋ ନାଦାଯି|
௧௧அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
12 ଯସ୍ମାଦ୍ ଯସ୍ୟାନ୍ତିକେ ୱର୍ଦ୍ଧତେ, ତସ୍ମାଯେୱ ଦାଯିଷ୍ୟତେ, ତସ୍ମାତ୍ ତସ୍ୟ ବାହୁଲ୍ୟଂ ଭୱିଷ୍ୟତି, କିନ୍ତୁ ଯସ୍ୟାନ୍ତିକେ ନ ୱର୍ଦ୍ଧତେ, ତସ୍ୟ ଯତ୍ କିଞ୍ଚନାସ୍ତେ, ତଦପି ତସ୍ମାଦ୍ ଆଦାଯିଷ୍ୟତେ|
௧௨உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13 ତେ ପଶ୍ୟନ୍ତୋପି ନ ପଶ୍ୟନ୍ତି, ଶୃଣ୍ୱନ୍ତୋପି ନ ଶୃଣ୍ୱନ୍ତି, ବୁଧ୍ୟମାନା ଅପି ନ ବୁଧ୍ୟନ୍ତେ ଚ, ତସ୍ମାତ୍ ତେଭ୍ୟୋ ଦୃଷ୍ଟାନ୍ତକଥା କଥ୍ୟତେ|
௧௩அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன்.
14 ଯଥା କର୍ଣୈଃ ଶ୍ରୋଷ୍ୟଥ ଯୂଯଂ ୱୈ କିନ୍ତୁ ଯୂଯଂ ନ ଭୋତ୍ସ୍ୟଥ| ନେତ୍ରୈର୍ଦ୍ରକ୍ଷ୍ୟଥ ଯୂଯଞ୍ଚ ପରିଜ୍ଞାତୁଂ ନ ଶକ୍ଷ୍ୟଥ| ତେ ମାନୁଷା ଯଥା ନୈୱ ପରିପଶ୍ୟନ୍ତି ଲୋଚନୈଃ| କର୍ଣୈ ର୍ୟଥା ନ ଶୃଣ୍ୱନ୍ତି ନ ବୁଧ୍ୟନ୍ତେ ଚ ମାନସୈଃ| ୱ୍ୟାୱର୍ତ୍ତିତେଷୁ ଚିତ୍ତେଷୁ କାଲେ କୁତ୍ରାପି ତୈର୍ଜନୈଃ| ମତ୍ତସ୍ତେ ମନୁଜାଃ ସ୍ୱସ୍ଥା ଯଥା ନୈୱ ଭୱନ୍ତି ଚ| ତଥା ତେଷାଂ ମନୁଷ୍ୟାଣାଂ କ୍ରିଯନ୍ତେ ସ୍ଥୂଲବୁଦ୍ଧଯଃ| ବଧିରୀଭୂତକର୍ଣାଶ୍ଚ ଜାତାଶ୍ଚ ମୁଦ୍ରିତା ଦୃଶଃ|
௧௪ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
15 ଯଦେତାନି ୱଚନାନି ଯିଶଯିଯଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନା ପ୍ରୋକ୍ତାନି ତେଷୁ ତାନି ଫଲନ୍ତି|
௧௫இந்த மக்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாகக் கேட்டு, தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.
16 କିନ୍ତୁ ଯୁଷ୍ମାକଂ ନଯନାନି ଧନ୍ୟାନି, ଯସ୍ମାତ୍ ତାନି ୱୀକ୍ଷନ୍ତେ; ଧନ୍ୟାଶ୍ଚ ଯୁଷ୍ମାକଂ ଶବ୍ଦଗ୍ରହାଃ, ଯସ୍ମାତ୍ ତୈରାକର୍ଣ୍ୟତେ|
௧௬உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
17 ମଯା ଯୂଯଂ ତଥ୍ୟଂ ୱଚାମି ଯୁଷ୍ମାଭି ର୍ୟଦ୍ୟଦ୍ ୱୀକ୍ଷ୍ୟତେ, ତଦ୍ ବହୱୋ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନୋ ଧାର୍ମ୍ମିକାଶ୍ଚ ମାନୱା ଦିଦୃକ୍ଷନ୍ତୋପି ଦ୍ରଷ୍ଟୁଂ ନାଲଭନ୍ତ, ପୁନଶ୍ଚ ଯୂଯଂ ଯଦ୍ୟତ୍ ଶୃଣୁଥ, ତତ୍ ତେ ଶୁଶ୍ରୂଷମାଣା ଅପି ଶ୍ରୋତୁଂ ନାଲଭନ୍ତ|
௧௭அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
18 କୃଷୀୱଲୀଯଦୃଷ୍ଟାନ୍ତସ୍ୟାର୍ଥଂ ଶୃଣୁତ|
௧௮ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
19 ମାର୍ଗପାର୍ଶ୍ୱେ ବୀଜାନ୍ୟୁପ୍ତାନି ତସ୍ୟାର୍ଥ ଏଷଃ, ଯଦା କଶ୍ଚିତ୍ ରାଜ୍ୟସ୍ୟ କଥାଂ ନିଶମ୍ୟ ନ ବୁଧ୍ୟତେ, ତଦା ପାପାତ୍ମାଗତ୍ୟ ତଦୀଯମନସ ଉପ୍ତାଂ କଥାଂ ହରନ୍ ନଯତି|
௧௯ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
20 ଅପରଂ ପାଷାଣସ୍ଥଲେ ବୀଜାନ୍ୟୁପ୍ତାନି ତସ୍ୟାର୍ଥ ଏଷଃ; କଶ୍ଚିତ୍ କଥାଂ ଶ୍ରୁତ୍ୱୈୱ ହର୍ଷଚିତ୍ତେନ ଗୃହ୍ଲାତି,
௨0கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்;
21 କିନ୍ତୁ ତସ୍ୟ ମନସି ମୂଲାପ୍ରୱିଷ୍ଟତ୍ୱାତ୍ ସ କିଞ୍ଚିତ୍କାଲମାତ୍ରଂ ସ୍ଥିରସ୍ତିଷ୍ଠତି; ପଶ୍ଚାତ ତତ୍କଥାକାରଣାତ୍ କୋପି କ୍ଲେସ୍ତାଡନା ୱା ଚେତ୍ ଜାଯତେ, ତର୍ହି ସ ତତ୍କ୍ଷଣାଦ୍ ୱିଘ୍ନମେତି|
௨௧ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
22 ଅପରଂ କଣ୍ଟକାନାଂ ମଧ୍ୟେ ବୀଜାନ୍ୟୁପ୍ତାନି ତଦର୍ଥ ଏଷଃ; କେନଚିତ୍ କଥାଯାଂ ଶ୍ରୁତାଯାଂ ସାଂସାରିକଚିନ୍ତାଭି ର୍ଭ୍ରାନ୍ତିଭିଶ୍ଚ ସା ଗ୍ରସ୍ୟତେ, ତେନ ସା ମା ୱିଫଲା ଭୱତି| (aiōn )
௨௨முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn )
23 ଅପରମ୍ ଉର୍ୱ୍ୱରାଯାଂ ବୀଜାନ୍ୟୁପ୍ତାନି ତଦର୍ଥ ଏଷଃ; ଯେ ତାଂ କଥାଂ ଶ୍ରୁତ୍ୱା ୱୁଧ୍ୟନ୍ତେ, ତେ ଫଲିତାଃ ସନ୍ତଃ କେଚିତ୍ ଶତଗୁଣାନି କେଚିତ ଷଷ୍ଟିଗୁଣାନି କେଚିଚ୍ଚ ତ୍ରିଂଶଦ୍ଗୁଣାନି ଫଲାନି ଜନଯନ୍ତି|
௨௩நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.
24 ଅନନ୍ତରଂ ସୋପରାମେକାଂ ଦୃଷ୍ଟାନ୍ତକଥାମୁପସ୍ଥାପ୍ୟ ତେଭ୍ୟଃ କଥଯାମାସ; ସ୍ୱର୍ଗୀଯରାଜ୍ୟଂ ତାଦୃଶେନ କେନଚିଦ୍ ଗୃହସ୍ଥେନୋପମୀଯତେ, ଯେନ ସ୍ୱୀଯକ୍ଷେତ୍ରେ ପ୍ରଶସ୍ତବୀଜାନ୍ୟୌପ୍ୟନ୍ତ|
௨௪வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது.
25 କିନ୍ତୁ କ୍ଷଣଦାଯାଂ ସକଲଲୋକେଷୁ ସୁପ୍ତେଷୁ ତସ୍ୟ ରିପୁରାଗତ୍ୟ ତେଷାଂ ଗୋଧୂମବୀଜାନାଂ ମଧ୍ୟେ ୱନ୍ୟଯୱମବୀଜାନ୍ୟୁପ୍ତ୍ୱା ୱୱ୍ରାଜ|
௨௫மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.
26 ତତୋ ଯଦା ବୀଜେଭ୍ୟୋଽଙ୍କରା ଜାଯମାନାଃ କଣିଶାନି ଘୃତୱନ୍ତଃ; ତଦା ୱନ୍ୟଯୱସାନ୍ୟପି ଦୃଶ୍ୟମାନାନ୍ୟଭୱନ୍|
௨௬பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
27 ତତୋ ଗୃହସ୍ଥସ୍ୟ ଦାସେଯା ଆଗମ୍ୟ ତସ୍ମୈ କଥଯାଞ୍ଚକ୍ରୁଃ, ହେ ମହେଚ୍ଛ, ଭୱତା କିଂ କ୍ଷେତ୍ରେ ଭଦ୍ରବୀଜାନି ନୌପ୍ୟନ୍ତ? ତଥାତ୍ୱେ ୱନ୍ୟଯୱସାନି କୃତ ଆଯନ୍?
௨௭வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
28 ତଦାନୀଂ ତେନ ତେ ପ୍ରତିଗଦିତାଃ, କେନଚିତ୍ ରିପୁଣା କର୍ମ୍ମଦମକାରି| ଦାସେଯାଃ କଥଯାମାସୁଃ, ୱଯଂ ଗତ୍ୱା ତାନ୍ୟୁତ୍ପାଯ୍ୟ କ୍ଷିପାମୋ ଭୱତଃ କୀଦୃଶୀଚ୍ଛା ଜାଯତେ?
௨௮அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.
29 ତେନାୱାଦି, ନହି, ଶଙ୍କେଽହଂ ୱନ୍ୟଯୱସୋତ୍ପାଟନକାଲେ ଯୁଷ୍ମାଭିସ୍ତୈଃ ସାକଂ ଗୋଧୂମା ଅପ୍ୟୁତ୍ପାଟିଷ୍ୟନ୍ତେ|
௨௯அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
30 ଅତଃ ଶ୍ସ୍ୟକର୍ତ୍ତନକାଲଂ ଯାୱଦ୍ ଉଭଯାନ୍ୟପି ସହ ୱର୍ଦ୍ଧନ୍ତାଂ, ପଶ୍ଚାତ୍ କର୍ତ୍ତନକାଲେ କର୍ତ୍ତକାନ୍ ୱକ୍ଷ୍ୟାମି, ଯୂଯମାଦୌ ୱନ୍ୟଯୱସାନି ସଂଗୃହ୍ୟ ଦାହଯିତୁଂ ୱୀଟିକା ବଦ୍ୱ୍ୱା ସ୍ଥାପଯତ; କିନ୍ତୁ ସର୍ୱ୍ୱେ ଗୋଧୂମା ଯୁଷ୍ମାଭି ର୍ଭାଣ୍ଡାଗାରଂ ନୀତ୍ୱା ସ୍ଥାପ୍ୟନ୍ତାମ୍|
௩0அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
31 ଅନନ୍ତରଂ ସୋପରାମେକାଂ ଦୃଷ୍ଟାନ୍ତକଥାମୁତ୍ଥାପ୍ୟ ତେଭ୍ୟଃ କଥିତୱାନ୍ କଶ୍ଚିନ୍ମନୁଜଃ ସର୍ଷପବୀଜମେକଂ ନୀତ୍ୱା ସ୍ୱକ୍ଷେତ୍ର ଉୱାପ|
௩௧வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
32 ସର୍ଷପବୀଜଂ ସର୍ୱ୍ୱସ୍ମାଦ୍ ବୀଜାତ୍ କ୍ଷୁଦ୍ରମପି ସଦଙ୍କୁରିତଂ ସର୍ୱ୍ୱସ୍ମାତ୍ ଶାକାତ୍ ବୃହଦ୍ ଭୱତି; ସ ତାଦୃଶସ୍ତରୁ ର୍ଭୱତି, ଯସ୍ୟ ଶାଖାସୁ ନଭସଃ ଖଗା ଆଗତ୍ୟ ନିୱସନ୍ତି; ସ୍ୱର୍ଗୀଯରାଜ୍ୟଂ ତାଦୃଶସ୍ୟ ସର୍ଷପୈକସ୍ୟ ସମମ୍|
௩௨அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
33 ପୁନରପି ସ ଉପମାକଥାମେକାଂ ତେଭ୍ୟଃ କଥଯାଞ୍ଚକାର; କାଚନ ଯୋଷିତ୍ ଯତ୍ କିଣ୍ୱମାଦାଯ ଦ୍ରୋଣତ୍ରଯମିତଗୋଧୂମଚୂର୍ଣାନାଂ ମଧ୍ୟେ ସର୍ୱ୍ୱେଷାଂ ମିଶ୍ରୀଭୱନପର୍ୟ୍ୟନ୍ତଂ ସମାଚ୍ଛାଦ୍ୟ ନିଧତ୍ତୱତୀ, ତତ୍କିଣ୍ୱମିୱ ସ୍ୱର୍ଗରାଜ୍ୟଂ|
௩௩வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார்.
34 ଇତ୍ଥଂ ଯୀଶୁ ର୍ମନୁଜନିୱହାନାଂ ସନ୍ନିଧାୱୁପମାକଥାଭିରେତାନ୍ୟାଖ୍ୟାନାନି କଥିତୱାନ୍ ଉପମାଂ ୱିନା ତେଭ୍ୟଃ କିମପି କଥାଂ ନାକଥଯତ୍|
௩௪இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை.
35 ଏତେନ ଦୃଷ୍ଟାନ୍ତୀଯେନ ୱାକ୍ୟେନ ୱ୍ୟାଦାଯ ୱଦନଂ ନିଜଂ| ଅହଂ ପ୍ରକାଶଯିଷ୍ୟାମି ଗୁପ୍ତୱାକ୍ୟଂ ପୁରାଭୱଂ| ଯଦେତଦ୍ୱଚନଂ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନା ପ୍ରୋକ୍ତମାସୀତ୍, ତତ୍ ସିଦ୍ଧମଭୱତ୍|
௩௫என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
36 ସର୍ୱ୍ୱାନ୍ ମନୁଜାନ୍ ୱିସୃଜ୍ୟ ଯୀଶୌ ଗୃହଂ ପ୍ରୱିଷ୍ଟେ ତଚ୍ଛିଷ୍ୟା ଆଗତ୍ୟ ଯୀଶୱେ କଥିତୱନ୍ତଃ, କ୍ଷେତ୍ରସ୍ୟ ୱନ୍ୟଯୱସୀଯଦୃଷ୍ଟାନ୍ତକଥାମ୍ ଭୱାନ ଅସ୍ମାନ୍ ସ୍ପଷ୍ଟୀକୃତ୍ୟ ୱଦତୁ|
௩௬அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள்.
37 ତତଃ ସ ପ୍ରତ୍ୟୁୱାଚ, ଯେନ ଭଦ୍ରବୀଜାନ୍ୟୁପ୍ୟନ୍ତେ ସ ମନୁଜପୁତ୍ରଃ,
௩௭அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்;
38 କ୍ଷେତ୍ରଂ ଜଗତ୍, ଭଦ୍ରବୀଜାନୀ ରାଜ୍ୟସ୍ୟ ସନ୍ତାନାଃ,
௩௮நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்;
39 ୱନ୍ୟଯୱସାନି ପାପାତ୍ମନଃ ସନ୍ତାନାଃ| ଯେନ ରିପୁଣା ତାନ୍ୟୁପ୍ତାନି ସ ଶଯତାନଃ, କର୍ତ୍ତନସମଯଶ୍ଚ ଜଗତଃ ଶେଷଃ, କର୍ତ୍ତକାଃ ସ୍ୱର୍ଗୀଯଦୂତାଃ| (aiōn )
௩௯அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn )
40 ଯଥା ୱନ୍ୟଯୱସାନି ସଂଗୃହ୍ୟ ଦାହ୍ୟନ୍ତେ, ତଥା ଜଗତଃ ଶେଷେ ଭୱିଷ୍ୟତି; (aiōn )
௪0ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn )
41 ଅର୍ଥାତ୍ ମନୁଜସୁତଃ ସ୍ୱାଂଯଦୂତାନ୍ ପ୍ରେଷଯିଷ୍ୟତି, ତେନ ତେ ଚ ତସ୍ୟ ରାଜ୍ୟାତ୍ ସର୍ୱ୍ୱାନ୍ ୱିଘ୍ନକାରିଣୋଽଧାର୍ମ୍ମିକଲୋକାଂଶ୍ଚ ସଂଗୃହ୍ୟ
௪௧மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து,
42 ଯତ୍ର ରୋଦନଂ ଦନ୍ତଘର୍ଷଣଞ୍ଚ ଭୱତି, ତତ୍ରାଗ୍ନିକୁଣ୍ଡେ ନିକ୍ଷେପ୍ସ୍ୟନ୍ତି|
௪௨அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
43 ତଦାନୀଂ ଧାର୍ମ୍ମିକଲୋକାଃ ସ୍ୱେଷାଂ ପିତୂ ରାଜ୍ୟେ ଭାସ୍କରଇୱ ତେଜସ୍ୱିନୋ ଭୱିଷ୍ୟନ୍ତି| ଶ୍ରୋତୁଂ ଯସ୍ୟ ଶ୍ରୁତୀ ଆସାତେ, ମ ଶୃଣୁଯାତ୍|
௪௩அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
44 ଅପରଞ୍ଚ କ୍ଷେତ୍ରମଧ୍ୟେ ନିଧିଂ ପଶ୍ୟନ୍ ଯୋ ଗୋପଯତି, ତତଃ ପରଂ ସାନନ୍ଦୋ ଗତ୍ୱା ସ୍ୱୀଯସର୍ୱ୍ୱସ୍ୱଂ ୱିକ୍ରୀଯ ତ୍ତକ୍ଷେତ୍ରଂ କ୍ରୀଣାତି, ସ ଇୱ ସ୍ୱର୍ଗରାଜ୍ୟଂ|
௪௪அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்.
45 ଅନ୍ୟଞ୍ଚ ଯୋ ୱଣିକ୍ ଉତ୍ତମାଂ ମୁକ୍ତାଂ ଗୱେଷଯନ୍
௪௫மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது.
46 ମହାର୍ଘାଂ ମୁକ୍ତାଂ ୱିଲୋକ୍ୟ ନିଜସର୍ୱ୍ୱସ୍ୱଂ ୱିକ୍ରୀଯ ତାଂ କ୍ରୀଣାତି, ସ ଇୱ ସ୍ୱର୍ଗରାଜ୍ୟଂ|
௪௬அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
47 ପୁନଶ୍ଚ ସମୁଦ୍ରୋ ନିକ୍ଷିପ୍ତଃ ସର୍ୱ୍ୱପ୍ରକାରମୀନସଂଗ୍ରାହ୍ୟାନାଯଇୱ ସ୍ୱର୍ଗରାଜ୍ୟଂ|
௪௭அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது.
48 ତସ୍ମିନ୍ ଆନାଯେ ପୂର୍ଣେ ଜନା ଯଥା ରୋଧସ୍ୟୁତ୍ତୋଲ୍ୟ ସମୁପୱିଶ୍ୟ ପ୍ରଶସ୍ତମୀନାନ୍ ସଂଗ୍ରହ୍ୟ ଭାଜନେଷୁ ନିଦଧତେ, କୁତ୍ସିତାନ୍ ନିକ୍ଷିପନ୍ତି;
௪௮அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள்.
49 ତଥୈୱ ଜଗତଃ ଶେଷେ ଭୱିଷ୍ୟତି, ଫଲତଃ ସ୍ୱର୍ଗୀଯଦୂତା ଆଗତ୍ୟ ପୁଣ୍ୟୱଜ୍ଜନାନାଂ ମଧ୍ୟାତ୍ ପାପିନଃ ପୃଥକ୍ କୃତ୍ୱା ୱହ୍ନିକୁଣ୍ଡେ ନିକ୍ଷେପ୍ସ୍ୟନ୍ତି, (aiōn )
௪௯இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn )
50 ତତ୍ର ରୋଦନଂ ଦନ୍ତୈ ର୍ଦନ୍ତଘର୍ଷଣଞ୍ଚ ଭୱିଷ୍ୟତଃ|
௫0அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
51 ଯୀଶୁନା ତେ ପୃଷ୍ଟା ଯୁଷ୍ମାଭିଃ କିମେତାନ୍ୟାଖ୍ୟାନାନ୍ୟବୁଧ୍ୟନ୍ତ? ତଦା ତେ ପ୍ରତ୍ୟୱଦନ୍, ସତ୍ୟଂ ପ୍ରଭୋ|
௫௧பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள்.
52 ତଦାନୀଂ ସ କଥିତୱାନ୍, ନିଜଭାଣ୍ଡାଗାରାତ୍ ନୱୀନପୁରାତନାନି ୱସ୍ତୂନି ନିର୍ଗମଯତି ଯୋ ଗୃହସ୍ଥଃ ସ ଇୱ ସ୍ୱର୍ଗରାଜ୍ୟମଧି ଶିକ୍ଷିତାଃ ସ୍ୱର୍ୱ ଉପଦେଷ୍ଟାରଃ|
௫௨அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இப்படி இருக்கிறபடியால், பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபண்டிதன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான் என்றார்.
53 ଅନନ୍ତରଂ ଯୀଶୁରେତାଃ ସର୍ୱ୍ୱା ଦୃଷ୍ଟାନ୍ତକଥାଃ ସମାପ୍ୟ ତସ୍ମାତ୍ ସ୍ଥାନାତ୍ ପ୍ରତସ୍ଥେ| ଅପରଂ ସ୍ୱଦେଶମାଗତ୍ୟ ଜନାନ୍ ଭଜନଭୱନ ଉପଦିଷ୍ଟୱାନ୍;
௫௩இயேசு இந்த உவமைகளைச் சொல்லிமுடித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு,
54 ତେ ୱିସ୍ମଯଂ ଗତ୍ୱା କଥିତୱନ୍ତ ଏତସ୍ୟୈତାଦୃଶଂ ଜ୍ଞାନମ୍ ଆଶ୍ଚର୍ୟ୍ୟଂ କର୍ମ୍ମ ଚ କସ୍ମାଦ୍ ଅଜାଯତ?
௫௪தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
55 କିମଯଂ ସୂତ୍ରଧାରସ୍ୟ ପୁତ୍ରୋ ନହି? ଏତସ୍ୟ ମାତୁ ର୍ନାମ ଚ କିଂ ମରିଯମ୍ ନହି? ଯାକୁବ୍-ଯୂଷଫ୍-ଶିମୋନ୍-ଯିହୂଦାଶ୍ଚ କିମେତସ୍ୟ ଭ୍ରାତରୋ ନହି?
௫௫இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா?
56 ଏତସ୍ୟ ଭଗିନ୍ୟଶ୍ଚ କିମସ୍ମାକଂ ମଧ୍ୟେ ନ ସନ୍ତି? ତର୍ହି କସ୍ମାଦଯମେତାନି ଲବ୍ଧୱାନ୍? ଇତ୍ଥଂ ସ ତେଷାଂ ୱିଘ୍ନରୂପୋ ବଭୂୱ;
௫௬இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
57 ତତୋ ଯୀଶୁନା ନିଗଦିତଂ ସ୍ୱଦେଶୀଯଜନାନାଂ ମଧ୍ୟଂ ୱିନା ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀ କୁତ୍ରାପ୍ୟନ୍ୟତ୍ର ନାସମ୍ମାନ୍ୟୋ ଭୱତୀ|
௫௭அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார்.
58 ତେଷାମୱିଶ୍ୱାସହେତୋଃ ସ ତତ୍ର ସ୍ଥାନେ ବହ୍ୱାଶ୍ଚର୍ୟ୍ୟକର୍ମ୍ମାଣି ନ କୃତୱାନ୍|
௫௮அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.