< លូកះ 12 >
1 តទានីំ លោកាះ សហស្រំ សហស្រម៑ អាគត្យ សមុបស្ថិតាស្តត ឯកៃកោ ៜន្យេឞាមុបរិ បតិតុម៑ ឧបចក្រមេ; តទា យីឝុះ ឝិឞ្យាន៑ ពភាឞេ, យូយំ ផិរូឝិនាំ កិណ្វរូបកាបដ្យេ វិឝេឞេណ សាវធានាស្តិឞ្ឋត។
அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி, ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு, முதலாவதாக தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் வெளிவேஷமாகிய புளித்தமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள்.
2 យតោ យន្ន ប្រកាឝយិឞ្យតេ តទាច្ឆន្នំ វស្តុ កិមបិ នាស្តិ; តថា យន្ន ជ្ញាស្យតេ តទ៑ គុប្តំ វស្តុ កិមបិ នាស្តិ។
மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
3 អន្ធការេ តិឞ្ឋនតោ យាះ កថា អកថយត តាះ សវ៌្វាះ កថា ទីប្តៅ ឝ្រោឞ្យន្តេ និជ៌នេ កណ៌េ ច យទកថយត គ្ឫហប្ឫឞ្ឋាត៑ តត៑ ប្រចារយិឞ្យតេ។
நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து இரகசியமாய் பேசியது, வீட்டின் கூரையின்மேல் அறிவிக்கப்படும்.
4 ហេ ពន្ធវោ យុឞ្មានហំ វទាមិ, យេ ឝរីរស្យ នាឝំ វិនា កិមប្យបរំ កត៌្តុំ ន ឝក្រុវន្តិ តេភ្យោ មា ភៃឞ្ដ។
“என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், உடலைக் கொல்லுகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். அதற்குப் பிறகு, அவர்களால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது.
5 តហ៌ិ កស្មាទ៑ ភេតវ្យម៑ ឥត្យហំ វទាមិ, យះ ឝរីរំ នាឝយិត្វា នរកំ និក្ឞេប្តុំ ឝក្នោតិ តស្មាទេវ ភយំ កុរុត, បុនរបិ វទាមិ តស្មាទេវ ភយំ កុរុត។ (Geenna )
ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். (Geenna )
6 បញ្ច ចដកបក្ឞិណះ កិំ ទ្វាភ្យាំ តាម្រខណ្ឌាភ្យាំ ន វិក្រីយន្តេ? តថាបីឝ្វរស្តេឞាម៑ ឯកមបិ ន វិស្មរតិ។
ஐந்து சிட்டுக் குருவிகளை இரண்டு காசுக்கு விற்பதில்லையா? ஆனால், அவற்றில் ஒன்றேனும் இறைவனால் மறக்கப்படுவதில்லை.
7 យុឞ្មាកំ ឝិរះកេឝា អបិ គណិតាះ សន្តិ តស្មាត៑ មា វិភីត ពហុចដកបក្ឞិភ្យោបិ យូយំ ពហុមូល្យាះ។
உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.
8 អបរំ យុឞ្មភ្យំ កថយាមិ យះ កឝ្ចិន៑ មានុឞាណាំ សាក្ឞាន៑ មាំ ស្វីករោតិ មនុឞ្យបុត្រ ឦឝ្វរទូតានាំ សាក្ឞាត៑ តំ ស្វីករិឞ្យតិ។
“நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதருக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கிறவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மானிடமகனாகிய நான் ஏற்றுக்கொள்வேன்.
9 កិន្តុ យះ កឝ្ចិន្មានុឞាណាំ សាក្ឞាន្មាម៑ អស្វីករោតិ តម៑ ឦឝ្វរស្យ ទូតានាំ សាក្ឞាទ៑ អហម៑ អស្វីករិឞ្យាមិ។
ஆனால், மனிதருக்கு முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
10 អន្យច្ច យះ កឝ្ចិន៑ មនុជសុតស្យ និន្ទាភាវេន កាញ្ចិត៑ កថាំ កថយតិ តស្យ តត្បាបស្យ មោចនំ ភវិឞ្យតិ កិន្តុ យទិ កឝ្ចិត៑ បវិត្រម៑ អាត្មានំ និន្ទតិ តហ៌ិ តស្យ តត្បាបស្យ មោចនំ ន ភវិឞ្យតិ។
யாராவது மானிடமகனாகிய எனக்கு எதிராய்ப் பேசுகிற வார்த்தை, அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அது அவர்களுக்கு மன்னிக்கப்பட மாட்டாது.
11 យទា លោកា យុឞ្មាន៑ ភជនគេហំ វិចារកត៌្ឫរាជ្យកត៌្ឫណាំ សម្មុខញ្ច នេឞ្យន្តិ តទា កេន ប្រការេណ កិមុត្តរំ វទិឞ្យថ កិំ កថយិឞ្យថ ចេត្យត្រ មា ចិន្តយត;
“நீங்கள் ஜெப ஆலயத்திற்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, என்னத்தைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள்.
12 យតោ យុឞ្មាភិយ៌ទ៑ យទ៑ វក្តវ្យំ តត៑ តស្មិន៑ សមយឯវ បវិត្រ អាត្មា យុឞ្មាន៑ ឝិក្ឞយិឞ្យតិ។
ஏனெனில், அந்த வேளையில் என்ன சொல்லவேண்டும் என்பதை, உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரே போதிப்பார்” என்றார்.
13 តតះ បរំ ជនតាមធ្យស្ថះ កឝ្ចិជ្ជនស្តំ ជគាទ ហេ គុរោ មយា សហ បៃត្ឫកំ ធនំ វិភក្តុំ មម ភ្រាតរមាជ្ញាបយតុ ភវាន៑។
கூடியிருந்த மக்களில் ஒருவன் இயேசுவிடம், “போதகரே, எங்கள் உரிமைச்சொத்தை என்னுடன் பிரித்துக்கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான்.
14 កិន្តុ ស តមវទត៑ ហេ មនុឞ្យ យុវយោ រ្វិចារំ វិភាគញ្ច កត៌្តុំ មាំ កោ និយុក្តវាន៑?
அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார்.
15 អនន្តរំ ស លោកានវទត៑ លោភេ សាវធានាះ សតក៌ាឝ្ច តិឞ្ឋត, យតោ ពហុសម្បត្តិប្រាប្ត្យា មនុឞ្យស្យាយុ រ្ន ភវតិ។
பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லா விதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார்.
16 បឝ្ចាទ៑ ទ្ឫឞ្ដាន្តកថាមុត្ថាប្យ កថយាមាស, ឯកស្យ ធនិនោ ភូមៅ ពហូនិ ឝស្យានិ ជាតានិ។
மேலும் அவர், அவர்களுக்கு இந்த கதையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது.
17 តតះ ស មនសា ចិន្តយិត្វា កថយាម្ពភូវ មមៃតានិ សមុត្បន្នានិ ទ្រវ្យាណិ ស្ថាបយិតុំ ស្ថានំ នាស្តិ កិំ ករិឞ្យាមិ?
அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
18 តតោវទទ៑ ឥត្ថំ ករិឞ្យាមិ, មម សវ៌្វភាណ្ឌាគារាណិ ភង្ក្ត្វា ព្ឫហទ្ភាណ្ឌាគារាណិ និម៌្មាយ តន្មធ្យេ សវ៌្វផលានិ ទ្រវ្យាណិ ច ស្ថាបយិឞ្យាមិ។
“பின்பு அவன், ‘நான் ஒன்றுசெய்வேன்; என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைத்து.
19 អបរំ និជមនោ វទិឞ្យាមិ, ហេ មនោ ពហុវត្សរាត៌្ហំ នានាទ្រវ្យាណិ សញ្ចិតានិ សន្តិ វិឝ្រាមំ កុរុ ភុក្ត្វា បីត្វា កៅតុកញ្ច កុរុ។ កិន្ត្វីឝ្វរស្តម៑ អវទត៑,
பின்பு நான், என் ஆத்துமாவிடம், உனக்கென்று பல வருடங்களுக்குப் போதுமான நல்ல பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீ வாழ்வை அனுபவி; சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்திரு என்று சொல்வேன்’ என்றான்.
20 រេ និព៌ោធ អទ្យ រាត្រៅ តវ ប្រាណាស្ត្វត្តោ នេឞ្យន្តេ តត ឯតានិ យានិ ទ្រវ្យាណិ ត្វយាសាទិតានិ តានិ កស្យ ភវិឞ្យន្តិ?
“அப்பொழுது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவிலேயே உன் உயிர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவைகள் யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார்.
21 អតឯវ យះ កឝ្ចិទ៑ ឦឝ្វរស្យ សមីបេ ធនសញ្ចយមក្ឫត្វា កេវលំ ស្វនិកដេ សញ្ចយំ ករោតិ សោបិ តាទ្ឫឝះ។
“தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கிறது” என்றார்.
22 អថ ស ឝិឞ្យេភ្យះ កថយាមាស, យុឞ្មានហំ វទាមិ, កិំ ខាទិឞ្យាមះ? កិំ បរិធាស្យាមះ? ឥត្យុក្ត្វា ជីវនស្យ ឝរីរស្យ ចាត៌្ហំ ចិន្តាំ មា កាឞ៌្ដ។
பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவோம் என்று உங்கள் வாழ்வைக்குறித்தும் அல்லது எதை உடுப்போம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானது.
23 ភក្ឞ្យាជ្ជីវនំ ភូឞណាច្ឆរីរញ្ច ឝ្រេឞ្ឋំ ភវតិ។
ஏனெனில், வாழ்க்கை உண்பதிலும், உடுத்துவதிலும் மட்டுமல்ல; அதிலும் மேலான காரியங்களைக் கொண்டுள்ளது.
24 កាកបក្ឞិណាំ កាយ៌្យំ វិចារយត, តេ ន វបន្តិ ឝស្យានិ ច ន ឆិន្ទន្តិ, តេឞាំ ភាណ្ឌាគារាណិ ន សន្តិ កោឞាឝ្ច ន សន្តិ, តថាបីឝ្វរស្តេភ្យោ ភក្ឞ្យាណិ ទទាតិ, យូយំ បក្ឞិភ្យះ ឝ្រេឞ្ឋតរា ន កិំ?
காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைக்கிறதுமில்லை, அறுவடை செய்கிறதுமில்லை. அவற்றிற்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனால், இறைவன் அவற்றிற்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்பு வாய்ந்தவர்களாய் இருக்கிறீர்களே!
25 អបរញ្ច ភាវយិត្វា និជាយុឞះ ក្ឞណមាត្រំ វទ៌្ធយិតុំ ឝក្នោតិ, ឯតាទ្ឫឝោ លាកោ យុឞ្មាកំ មធ្យេ កោស្តិ?
கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டுவான்?
26 អតឯវ ក្ឞុទ្រំ កាយ៌្យំ សាធយិតុម៑ អសមត៌្ហា យូយម៑ អន្យស្មិន៑ កាយ៌្យេ កុតោ ភាវយថ?
இல்லையே! இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்யமுடியாதிருக்கிறதே. அப்படியிருக்க, பெருங்காரியங்களைக் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
27 អន្យច្ច កាម្បិលបុឞ្បំ កថំ វទ៌្ធតេ តទាបិ វិចារយត, តត៑ កញ្ចន ឝ្រមំ ន ករោតិ តន្តូំឝ្ច ន ជនយតិ កិន្តុ យុឞ្មភ្យំ យថាត៌្ហំ កថយាមិ សុលេមាន៑ ពហ្វៃឝ្វយ៌្យាន្វិតោបិ បុឞ្បស្យាស្យ សទ្ឫឝោ វិភូឞិតោ នាសីត៑។
“காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை.
28 អទ្យ ក្ឞេត្រេ វត៌្តមានំ ឝ្វឝ្ចូល្ល្យាំ ក្ឞេប្ស្យមានំ យត៑ ត្ឫណំ, តស្មៃ យទីឝ្វរ ឥត្ថំ ភូឞយតិ តហ៌ិ ហេ អល្បប្រត្យយិនោ យុឞ្មាន កិំ ន បរិធាបយិឞ្យតិ?
விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு எவ்வளவு அதிகமாய் அவர் உங்களுக்கு உடுத்துவிப்பார்.
29 អតឯវ កិំ ខាទិឞ្យាមះ? កិំ បរិធាស្យាមះ? ឯតទត៌្ហំ មា ចេឞ្ដធ្វំ មា សំទិគ្ធ្វញ្ច។
விசுவாசம் குறைந்தவர்களே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்; என்று அவைகளிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக்குறித்து கவலைப்படாதிருங்கள்.
30 ជគតោ ទេវាច៌្ចកា ឯតានិ សវ៌្វាណិ ចេឞ្ដនតេ; ឯឞុ វស្តុឞុ យុឞ្មាកំ ប្រយោជនមាស្តេ ឥតិ យុឞ្មាកំ បិតា ជានាតិ។
ஏனெனில், இறைவனை அறியாதவர்கள் இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவை எல்லாம் உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார்.
31 អតឯវេឝ្វរស្យ រាជ្យាត៌្ហំ សចេឞ្ដា ភវត តថា ក្ឫតេ សវ៌្វាណ្យេតានិ ទ្រវ្យាណិ យុឞ្មភ្យំ ប្រទាយិឞ្យន្តេ។
எனவே முதலாவதாக இறைவனுடைய அரசைத் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குகூடக் கொடுக்கப்படும்.
32 ហេ ក្ឞុទ្រមេឞវ្រជ យូយំ មា ភៃឞ្ដ យុឞ្មភ្យំ រាជ្យំ ទាតុំ យុឞ្មាកំ បិតុះ សម្មតិរស្តិ។
“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார்.
33 អតឯវ យុឞ្មាកំ យា យា សម្បត្តិរស្តិ តាំ តាំ វិក្រីយ វិតរត, យត៑ ស្ថានំ ចៅរា នាគច្ឆន្តិ, កីដាឝ្ច ន ក្ឞាយយន្តិ តាទ្ឫឝេ ស្វគ៌េ និជាត៌្ហម៑ អជរេ សម្បុដកេ ៜក្ឞយំ ធនំ សញ្ចិនុត ច;
உங்கள் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுங்கள். இவ்விதமாய் பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் உங்களுக்கென உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தையும் பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை.
34 យតោ យត្រ យុឞ្មាកំ ធនំ វត៌្តតេ តត្រេវ យុឞ្មាកំ មនះ។
ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
35 អបរញ្ច យូយំ ប្រទីបំ ជ្វាលយិត្វា ពទ្ធកដយស្តិឞ្ឋត;
“பணிசெய்வதற்கு ஆயத்தமாய், உங்கள் உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி, உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள்.
36 ប្រភុ រ្វិវាហាទាគត្យ យទៃវ ទ្វារមាហន្តិ តទៃវ ទ្វារំ មោចយិតុំ យថា ភ្ឫត្យា អបេក្ឞ្យ តិឞ្ឋន្តិ តថា យូយមបិ តិឞ្ឋត។
திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேலைகாரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால்தான், எஜமான் வந்து கதவைத் தட்டும்போது, உடனே அவர்கள் கதவை அவனுக்காகத் திறக்க முடியும்.
37 យតះ ប្រភុរាគត្យ យាន៑ ទាសាន៑ សចេតនាន៑ តិឞ្ឋតោ ទ្រក្ឞ្យតិ តឯវ ធន្យាះ; អហំ យុឞ្មាន៑ យថាត៌្ហំ វទាមិ ប្រភុស្តាន៑ ភោជនាត៌្ហម៑ ឧបវេឝ្យ ស្វយំ ពទ្ធកដិះ សមីបមេត្យ បរិវេឞយិឞ្យតិ។
எஜமான் வரும்போது, அவனுடைய வேலைக்காரர் விழிப்பாயிருப்பதை அவன் கண்டால், அது அவர்களுக்கு நல்லது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எஜமான் உடையை உடுத்திக்கொண்டு, தன் வேலைக்காரர்களைச் சாப்பாட்டுப் பந்தியில் உட்காரச்செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணிசெய்வான்.
38 យទិ ទ្វិតីយេ ត្ឫតីយេ វា ប្រហរេ សមាគត្យ តថៃវ បឝ្យតិ, តហ៌ិ តឯវ ទាសា ធន្យាះ។
அந்த எஜமான் இரவு ஒன்பது மணிக்கு அல்லது நள்ளிரவு வந்தாலும், அவனுடைய வேலையாட்கள் ஆயத்தமாயிருப்பதை அவன் காண்பானானால், அது அவர்களுக்கு நல்லது.
39 អបរញ្ច កស្មិន៑ ក្ឞណេ ចៅរា អាគមិឞ្យន្តិ ឥតិ យទិ គ្ឫហបតិ រ្ជ្ញាតុំ ឝក្នោតិ តទាវឝ្យំ ជាគ្រន៑ និជគ្ឫហេ សន្ធិំ កត៌្តយិតុំ វារយតិ យូយមេតទ៑ វិត្ត។
இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீட்டை திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே.
40 អតឯវ យូយមបិ សជ្ជមានាស្តិឞ្ឋត យតោ យស្មិន៑ ក្ឞណេ តំ នាប្រេក្ឞធ្វេ តស្មិន្នេវ ក្ឞណេ មនុឞ្យបុត្រ អាគមិឞ្យតិ។
நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில் மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன்” என்றார்.
41 តទា បិតរះ បប្រច្ឆ, ហេ ប្រភោ ភវាន៑ កិមស្មាន៑ ឧទ្ទិឝ្យ កិំ សវ៌្វាន៑ ឧទ្ទិឝ្យ ទ្ឫឞ្ដាន្តកថាមិមាំ វទតិ?
அப்பொழுது பேதுரு அவரிடம், “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குத் தான் சொல்கிறீரோ? அல்லது எல்லோருக்கும் சொல்கிறீரோ?” என்று கேட்டான்.
42 តតះ ប្រភុះ ប្រោវាច, ប្រភុះ សមុចិតកាលេ និជបរិវារាត៌្ហំ ភោជ្យបរិវេឞណាយ យំ តត្បទេ និយោក្ឞ្យតិ តាទ្ឫឝោ វិឝ្វាស្យោ ពោទ្ធា កម៌្មាធីឝះ កោស្តិ?
கர்த்தர் அதற்கு மறுமொழியாக, “உண்மையும் ஞானமும் உள்ள நிர்வாகி யார்? அந்த எஜமான், அவனையே தன்னுடைய வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும்படி, அவர்களுக்கு மேலாக வைப்பான்.
43 ប្រភុរាគត្យ យម៑ ឯតាទ្ឫឝេ កម៌្មណិ ប្រវ្ឫត្តំ ទ្រក្ឞ្យតិ សឯវ ទាសោ ធន្យះ។
தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
44 អហំ យុឞ្មាន៑ យថាត៌្ហំ វទាមិ ស តំ និជសវ៌្វស្វស្យាធិបតិំ ករិឞ្យតិ។
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான்.
45 កិន្តុ ប្រភុវ៌ិលម្ពេនាគមិឞ្យតិ, ឥតិ វិចិន្ត្យ ស ទាសោ យទិ តទន្យទាសីទាសាន៑ ប្រហត៌្តុម៑ ភោក្តុំ បាតុំ មទិតុញ្ច ប្រារភតេ,
ஆனால் அந்த நிர்வாகி, ‘என் எஜமான் வருவதற்கு நீண்டகாலம் ஆகிறதே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் பொறுப்பிலுள்ள வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால்,
46 តហ៌ិ យទា ប្រភុំ នាបេក្ឞិឞ្យតេ យស្មិន៑ ក្ឞណេ សោៜចេតនឝ្ច ស្ថាស្យតិ តស្មិន្នេវ ក្ឞណេ តស្យ ប្រភុរាគត្យ តំ បទភ្រឞ្ដំ ក្ឫត្វា វិឝ្វាសហីនៃះ សហ តស្យ អំឝំ និរូបយិឞ្យតិ។
அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, உண்மையற்றவர்களுக்குரிய இடத்திலே அவனைத் தள்ளிவிடுவான்.
47 យោ ទាសះ ប្រភេរាជ្ញាំ ជ្ញាត្វាបិ សជ្ជិតោ ន តិឞ្ឋតិ តទាជ្ញានុសារេណ ច កាយ៌្យំ ន ករោតិ សោនេកាន៑ ប្រហារាន៑ ប្រាប្ស្យតិ;
“வேலைக்காரன் தனது எஜமானின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமாகாமலும், தனது எஜமான் விரும்புவதை செய்யாமலும் இருந்தால், அவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
48 កិន្តុ យោ ជនោៜជ្ញាត្វា ប្រហារាហ៌ំ កម៌្ម ករោតិ សោល្បប្រហារាន៑ ប្រាប្ស្យតិ។ យតោ យស្មៃ ពាហុល្យេន ទត្តំ តស្មាទេវ ពាហុល្យេន គ្រហីឞ្យតេ, មានុឞា យស្យ និកដេ ពហុ សមប៌យន្តិ តស្មាទ៑ ពហុ យាចន្តេ។
ஆனால் எஜமானின் விருப்பத்தை அறியாதவனாய், தண்டனைக்குரிய காரியங்களைச் செய்கிறவனோ, சில அடிகளே அடிக்கப்படுவான். அதிகமாய் கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரிடத்திலிருந்தும் அதிகமாய்க் கேட்கப்படும்; அப்படியே அதிகம் கொடுக்கப்பட்டவனிடமிருந்து, இன்னும் அதிகமாய் கேட்கப்படும்.
49 អហំ ប្ឫថិវ្យាម៑ អនៃក្យរូបំ វហ្និ និក្ឞេប្តុម៑ អាគតោស្មិ, ស ចេទ៑ ឥទានីមេវ ប្រជ្វលតិ តត្រ មម កា ចិន្តា?
“பூமியிலே நெருப்பைப்போட வந்தேன். அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
50 កិន្តុ យេន មជ្ជនេនាហំ មគ្នោ ភវិឞ្យាមិ យាវត្កាលំ តស្យ សិទ្ធិ រ្ន ភវិឞ្យតិ តាវទហំ កតិកឞ្ដំ ប្រាប្ស្យាមិ។
ஆனால், நான் கட்டாயமாக பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று இருக்கிறது. அது நிறைவேறும்வரை, நான் எவ்வளவு மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.
51 មេលនំ កត៌្តុំ ជគទ៑ អាគតោស្មិ យូយំ កិមិត្ថំ ពោធធ្វេ? យុឞ្មាន៑ វទាមិ ន តថា, កិន្ត្វហំ មេលនាភាវំ កត៌្តុំម៑ អាគតោស្មិ។
பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன்.
52 យស្មាទេតត្កាលមារភ្យ ឯកត្រស្ថបរិជនានាំ មធ្យេ បញ្ចជនាះ ប្ឫថគ៑ ភូត្វា ត្រយោ ជនា ទ្វយោជ៌នយោះ ប្រតិកូលា ទ្វៅ ជនៅ ច ត្រយាណាំ ជនានាំ ប្រតិកូលៅ ភវិឞ្យន្តិ។
இப்போதிருந்தே, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திலே, ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்றுபேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டுபேர் மூன்றுபேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள்.
53 បិតា បុត្រស្យ វិបក្ឞះ បុត្រឝ្ច បិតុ រ្វិបក្ឞោ ភវិឞ្យតិ មាតា កន្យាយា វិបក្ឞា កន្យា ច មាតុ រ្វិបក្ឞា ភវិឞ្យតិ, តថា ឝ្វឝ្រូព៌ធ្វា វិបក្ឞា ពធូឝ្ច ឝ្វឝ្រ្វា វិបក្ឞា ភវិឞ្យតិ។
தகப்பனுக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தகப்பனும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராகத் தாயும், மருமகளுக்கு எதிராக மாமியாரும், மாமியாருக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார்.
54 ស លោកេភ្យោបរមបិ កថយាមាស, បឝ្ចិមទិឝិ មេឃោទ្គមំ ទ្ឫឞ្ដ្វា យូយំ ហឋាទ៑ វទថ វ្ឫឞ្ដិ រ្ភវិឞ្យតិ តតស្តថៃវ ជាយតេ។
மேலும் இயேசு கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, நீங்கள் உடனே, ‘இதோ மழை பெய்யப் போகிறது’ என்கிறீர்கள், அப்படியே மழையும் பெய்கிறது.
55 អបរំ ទក្ឞិណតោ វាយៅ វាតិ សតិ វទថ និទាឃោ ភវិឞ្យតិ តតះ សោបិ ជាយតេ។
தென்காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகிறது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கிறது.
56 រេ រេ កបដិន អាកាឝស្យ ភូម្យាឝ្ច លក្ឞណំ ពោទ្ធុំ ឝក្នុថ,
வேஷக்காரர்களே! பூமியின் தோற்றத்திற்கும், ஆகாயத்தின் தோற்றத்திற்கும் விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே. ஆனால் தற்போதுள்ள இந்த காலத்தையோ, நீங்கள் அறியாமல் இருப்பது எப்படி?
57 កិន្តុ កាលស្យាស្យ លក្ឞណំ កុតោ ពោទ្ធុំ ន ឝក្នុថ? យូយញ្ច ស្វយំ កុតោ ន ន្យាឞ្យំ វិចារយថ?
“சரியானது எது என்று உங்களையே நீங்கள் நிதானிக்காமல் இருக்கிறீர்களே, ஏன்?
58 អបរញ្ច វិវាទិនា សាទ៌្ធំ វិចារយិតុះ សមីបំ គច្ឆន៑ បថិ តស្មាទុទ្ធារំ ប្រាប្តុំ យតស្វ នោចេត៑ ស ត្វាំ ធ្ឫត្វា វិចារយិតុះ សមីបំ នយតិ។ វិចារយិតា យទិ ត្វាំ ប្រហត៌្តុះ សមីបំ សមប៌យតិ ប្រហត៌្តា ត្វាំ ការាយាំ ពធ្នាតិ
நீங்கள் உங்களது பகைவருடன் நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்; இல்லையெனில் அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக்கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையிலே போடக்கூடும்.
59 តហ៌ិ ត្វាមហំ វទាមិ ត្វយា និះឝេឞំ កបទ៌កេឞុ ន បរិឝោធិតេឞុ ត្វំ តតោ មុក្តិំ ប្រាប្តុំ ន ឝក្ឞ្យសិ។
உங்களிடத்திலிருக்கும் கடைசிக் காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”