< លូកះ 11 >
1 អនន្តរំ ស កស្មិំឝ្ចិត៑ ស្ថានេ ប្រាត៌្ហយត តត្សមាប្តៅ សត្យាំ តស្យៃកះ ឝិឞ្យស្តំ ជគាទ ហេ ប្រភោ យោហន៑ យថា ស្វឝិឞ្យាន៑ ប្រាត៌្ហយិតុម៑ ឧបទិឞ្ដវាន៑ តថា ភវានប្យស្មាន៑ ឧបទិឝតុ។
ஒரு நாள் இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மன்றாடிக்கொண்டிருந்தார். அவர் மன்றாடி முடித்தபோது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, யோவான் தனது சீடருக்கு மன்றாடப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்கு மன்றாடப் போதியும்” என்றான்.
2 តស្មាត៑ ស កថយាមាស, ប្រាត៌្ហនកាលេ យូយម៑ ឥត្ថំ កថយធ្វំ, ហេ អស្មាកំ ស្វគ៌ស្ថបិតស្តវ នាម បូជ្យំ ភវតុ; តវ រាជត្វំ ភវតុ; ស្វគ៌េ យថា តថា ប្ឫថិវ្យាមបិ តវេច្ឆយា សវ៌្វំ ភវតុ។
அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்படியாக மன்றாடுங்கள், “‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய அரசு வருவதாக. உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்படுவதாக.
3 ប្រត្យហម៑ អស្មាកំ ប្រយោជនីយំ ភោជ្យំ ទេហិ។
எங்கள் அன்றாட ஆகாரத்தை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
4 យថា វយំ សវ៌្វាន៑ អបរាធិនះ ក្ឞមាមហេ តថា ត្វមបិ បាបាន្យស្មាកំ ក្ឞមស្វ។ អស្មាន៑ បរីក្ឞាំ មានយ កិន្តុ បាបាត្មនោ រក្ឞ។
எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். நாங்களும் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களுக்கு மன்னிக்கிறோமே. எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல். எங்களைத் தீமையிலிருந்து விடுவியும்,’” என்றார்.
5 បឝ្ចាត៑ សោបរមបិ កថិតវាន៑ យទិ យុឞ្មាកំ កស្យចិទ៑ ពន្ធុស្តិឞ្ឋតិ និឝីថេ ច តស្យ សមីបំ ស គត្វា វទតិ,
அதற்குப் பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது, “உங்களில் ஒருவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என வைத்துக்கொள்வோம். இவன் தன் நண்பனிடம் நள்ளிரவில் போய், ‘நண்பனே, எனக்கு மூன்று அப்பங்களைக் கடனாகக் கொடு.
6 ហេ ពន្ធោ បថិក ឯកោ ពន្ធុ រ្មម និវេឝនម៑ អាយាតះ កិន្តុ តស្យាតិថ្យំ កត៌្តុំ មមាន្តិកេ កិមបិ នាស្តិ, អតឯវ បូបត្រយំ មហ្យម៑ ឫណំ ទេហិ;
பயணம் செய்துகொண்டிருக்கும் எனது நண்பன் ஒருவன், என் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவனுக்கு உணவு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று சொன்னால்,
7 តទា ស យទិ គ្ឫហមធ្យាត៑ ប្រតិវទតិ មាំ មា ក្លិឝាន, ឥទានីំ ទ្វារំ រុទ្ធំ ឝយនេ មយា សហ ពាលកាឝ្ច តិឞ្ឋន្តិ តុភ្យំ ទាតុម៑ ឧត្ថាតុំ ន ឝក្នោមិ,
அப்பொழுது உள்ளே இருக்கிற அவன், தன் நண்பனுக்கு மறுமொழியாக, ‘என்னைத் தொந்தரவு செய்யாதே. கதவு ஏற்கெனவே பூட்டப்பட்டுவிட்டது. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். என்னால் எழுந்து, எதையும் உனக்குக் கொடுக்க முடியாது’ என்பானோ?
8 តហ៌ិ យុឞ្មានហំ វទាមិ, ស យទិ មិត្រតយា តស្មៃ កិមបិ ទាតុំ នោត្តិឞ្ឋតិ តថាបិ វារំ វារំ ប្រាត៌្ហនាត ឧត្ថាបិតះ សន៑ យស្មិន៑ តស្យ ប្រយោជនំ តទេវ ទាស្យតិ។
நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் தன்னுடைய நண்பனாய் இருப்பதன் நிமித்தம் எழுந்து அப்பத்தைக் கொடுக்காவிட்டாலும், வெட்கப்படாமல் அவன் கேட்டுக்கொண்டிருப்பதன் நிமித்தமாவது எழுந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான்.
9 អតះ ការណាត៑ កថយាមិ, យាចធ្វំ តតោ យុឞ្មភ្យំ ទាស្យតេ, ម្ឫគយធ្វំ តត ឧទ្ទេឝំ ប្រាប្ស្យថ, ទ្វារម៑ អាហត តតោ យុឞ្មភ្យំ ទ្វារំ មោក្ឞ្យតេ។
“ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறதாவது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டுகொள்வீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும்.
10 យោ យាចតេ ស ប្រាប្នោតិ, យោ ម្ឫគយតេ ស ឯវោទ្ទេឝំ ប្រាប្នោតិ, យោ ទ្វារម៑ អាហន្តិ តទត៌្ហំ ទ្វារំ មោច្យតេ។
ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவர்கள் கண்டடைகின்றனர்; தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படுகிறது.
11 បុត្រេណ បូបេ យាចិតេ តស្មៃ បាឞាណំ ទទាតិ វា មត្ស្យេ យាចិតេ តស្មៃ សប៌ំ ទទាតិ
“உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடம் மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்?
12 វា អណ្ឌេ យាចិតេ តស្មៃ វ្ឫឝ្ចិកំ ទទាតិ យុឞ្មាកំ មធ្យេ ក ឯតាទ្ឫឝះ បិតាស្តេ?
அல்லது அவன் ஒரு முட்டையைக் கேட்டால், யாராவது அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
13 តស្មាទេវ យូយមភទ្រា អបិ យទិ ស្វស្វពាលកេភ្យ ឧត្តមានិ ទ្រវ្យាណិ ទាតុំ ជានីថ តហ៌្យស្មាកំ ស្វគ៌ស្ថះ បិតា និជយាចកេភ្យះ កិំ បវិត្រម៑ អាត្មានំ ន ទាស្យតិ?
தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!”
14 អនន្តរំ យីឝុនា កស្មាច្ចិទ៑ ឯកស្មិន៑ មូកភូតេ ត្យាជិតេ សតិ ស ភូតត្យក្តោ មានុឞោ វាក្យំ វក្តុម៑ អារេភេ; តតោ លោកាះ សកលា អាឝ្ចយ៌្យំ មេនិរេ។
ஒரு நாள், ஊமையாய் இருந்த ஒருவனிடமிருந்து இயேசு பிசாசை துரத்தினார். பிசாசு பிடித்தவனிலிருந்து பிசாசு வெளியேறியபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் அதைக்கண்டு வியப்படைந்தார்கள்.
15 កិន្តុ តេឞាំ កេចិទូចុ រ្ជនោយំ ពាលសិពូពា អត៌្ហាទ៑ ភូតរាជេន ភូតាន៑ ត្យាជយតិ។
ஆனால் அவர்களில் சிலர், “பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள்.
16 តំ បរីក្ឞិតុំ កេចិទ៑ អាកាឝីយម៑ ឯកំ ចិហ្នំ ទឝ៌យិតុំ តំ ប្រាត៌្ហយាញ្ចក្រិរេ។
வேறுசிலர் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று கேட்டு, அவரைச் சோதித்தார்கள்.
17 តទា ស តេឞាំ មនះកល្បនាំ ជ្ញាត្វា កថយាមាស, កស្យចិទ៑ រាជ្យស្យ លោកា យទិ បរស្បរំ វិរុន្ធន្តិ តហ៌ិ តទ៑ រាជ្យម៑ នឝ្យតិ; កេចិទ៑ គ្ឫហស្ថា យទិ បរស្បរំ វិរុន្ធន្តិ តហ៌ិ តេបិ នឝ្យន្តិ។
இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களுக்குச் சொன்னதாவது: “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்தக் குடும்பமும் விழுந்துபோகும்.
18 តថៃវ ឝៃតានបិ ស្វលោកាន៑ យទិ វិរុណទ្ធិ តទា តស្យ រាជ្យំ កថំ ស្ថាស្យតិ? ពាលសិពូពាហំ ភូតាន៑ ត្យាជយាមិ យូយមិតិ វទថ។
சாத்தான் தனக்குத்தானே விரோதமாய்ப் பிளவுபட்டால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்? நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்வதனாலேயே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன்.
19 យទ្យហំ ពាលសិពូពា ភូតាន៑ ត្យាជយាមិ តហ៌ិ យុឞ្មាកំ សន្តានាះ កេន ត្យាជយន្តិ? តស្មាត៑ តឯវ កថាយា ឯតស្យា វិចារយិតារោ ភវិឞ្យន្តិ។
நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்களைப் பின்பற்றுகிறவர்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? அப்படியானால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள்.
20 កិន្តុ យទ្យហម៑ ឦឝ្វរស្យ បរាក្រមេណ ភូតាន៑ ត្យាជយាមិ តហ៌ិ យុឞ្មាកំ និកដម៑ ឦឝ្វរស្យ រាជ្យមវឝ្យម៑ ឧបតិឞ្ឋតិ។
ஆனால், நான் பிசாசுகளை இறைவனுடைய விரலினால் துரத்துகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது.
21 ពលវាន៑ បុមាន៑ សុសជ្ជមានោ យតិកាលំ និជាដ្ដាលិកាំ រក្ឞតិ តតិកាលំ តស្យ ទ្រវ្យំ និរុបទ្រវំ តិឞ្ឋតិ។
“ஒரு பலமுள்ளவன் ஆயுதம் தாங்கியவனாய் தன் வீட்டைக் காவல் காக்கும்போது, அவனுடைய உடைமைகள் பாதுகாப்பாய் இருக்கும்.
22 កិន្តុ តស្មាទ៑ អធិកពលះ កឝ្ចិទាគត្យ យទិ តំ ជយតិ តហ៌ិ យេឞុ ឝស្ត្រាស្ត្រេឞុ តស្យ វិឝ្វាស អាសីត៑ តានិ សវ៌្វាណិ ហ្ឫត្វា តស្យ ទ្រវ្យាណិ គ្ឫហ្លាតិ។
இவனைப் பார்க்கிலும் பலமுள்ள வேறொருவன் வந்து இவனைத் தாக்கி மேற்கொள்ளும்போது, அவன் சார்ந்திருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருட்களையும் பங்கிட்டுக் கொள்வான்.
23 អតះ ការណាទ៑ យោ មម សបក្ឞោ ន ស វិបក្ឞះ, យោ មយា សហ ន សំគ្ឫហ្លាតិ ស វិកិរតិ។
“என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
24 អបរញ្ច អមេធ្យភូតោ មានុឞស្យាន្តន៌ិគ៌ត្យ ឝុឞ្កស្ថានេ ភ្រាន្ត្វា វិឝ្រាមំ ម្ឫគយតេ កិន្តុ ន ប្រាប្យ វទតិ មម យស្មាទ៑ គ្ឫហាទ៑ អាគតោហំ បុនស្តទ៑ គ្ឫហំ បរាវ្ឫត្យ យាមិ។
“தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது, ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால், ‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும்.
25 តតោ គត្វា តទ៑ គ្ឫហំ មាជ៌ិតំ ឝោភិតញ្ច ទ្ឫឞ្ដ្វា
அது அந்த வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது, அந்த வீடு கூட்டிச் சுத்தப்படுத்தப்பட்டு, ஒழுங்காக இருப்பதைக் காணும்.
26 តត្ក្ឞណម៑ អបគត្យ ស្វស្មាទបិ ទុម៌្មតីន៑ អបរាន៑ សប្តភូតាន៑ សហានយតិ តេ ច តទ្គ្ឫហំ បវិឝ្យ និវសន្តិ។ តស្មាត៑ តស្យ មនុឞ្យស្យ ប្រថមទឝាតះ ឝេឞទឝា ទុះខតរា ភវតិ។
அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும்.”
27 អស្យាះ កថាយាះ កថនកាលេ ជនតាមធ្យស្ថា កាចិន្នារី តមុច្ចៃះស្វរំ ប្រោវាច, យា យោឞិត៑ ត្វាំ គព៌្ភេៜធារយត៑ ស្តន្យមបាយយច្ច សៃវ ធន្យា។
இயேசு இந்தக் காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் குரலெழுப்பி, “உம்மைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள்.
28 កិន្តុ សោកថយត៑ យេ បរមេឝ្វរស្យ កថាំ ឝ្រុត្វា តទនុរូបម៑ អាចរន្តិ តឯវ ធន្យាះ។
அவர் அதற்குப் பதிலாக, “ஆம்; ஆனால், இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிகிறவர்களே, அதிலும் மேலாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
29 តតះ បរំ តស្យាន្តិកេ ពហុលោកានាំ សមាគមេ ជាតេ ស វក្តុមារេភេ, អាធុនិកា ទុឞ្ដលោកាឝ្ចិហ្នំ ទ្រឞ្ដុមិច្ឆន្តិ កិន្តុ យូនស្ភវិឞ្យទ្វាទិនឝ្ចិហ្នំ វិនាន្យត៑ កិញ្ចិច្ចិហ្នំ តាន៑ ន ទឝ៌យិឞ្យតេ។
மக்கள் இன்னும் அதிகமாய்க் கூடிவந்தபோது, இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “இவர்கள் ஒரு கொடிய தலைமுறையினர். இவர்கள் ஒரு அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர, வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை.
30 យូនស៑ តុ យថា នីនិវីយលោកានាំ សមីបេ ចិហ្នរូបោភវត៑ តថា វិទ្យមានលោកានាម៑ ឯឞាំ សមីបេ មនុឞ្យបុត្រោបិ ចិហ្នរូបោ ភវិឞ្យតិ។
நினிவே பட்டணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யோனா அடையாளமாய் இருந்ததுபோல, இந்தத் தலைமுறையினருக்கு மானிடமகனாகிய நானும் அடையாளமாய் இருப்பேன்.
31 វិចារសមយេ ឥទានីន្តនលោកានាំ ប្រាតិកូល្យេន ទក្ឞិណទេឝីយា រាជ្ញី ប្រោត្ថាយ តាន៑ ទោឞិណះ ករិឞ្យតិ, យតះ សា រាជ្ញី សុលេមាន ឧបទេឝកថាំ ឝ្រោតុំ ប្ឫថិវ្យាះ សីមាត អាគច្ឆត៑ កិន្តុ បឝ្យត សុលេមានោបិ គុរុតរ ឯកោ ជនោៜស្មិន៑ ស្ថានេ វិទ្យតេ។
நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும்கூட இந்தத் தலைமுறை மக்களோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்.
32 អបរញ្ច វិចារសមយេ នីនិវីយលោកា អបិ វត៌្តមានកាលិកានាំ លោកានាំ វៃបរីត្យេន ប្រោត្ថាយ តាន៑ ទោឞិណះ ករិឞ្យន្តិ, យតោ ហេតោស្តេ យូនសោ វាក្យាត៑ ចិត្តានិ បរិវត៌្តយាមាសុះ កិន្តុ បឝ្យត យូនសោតិគុរុតរ ឯកោ ជនោៜស្មិន៑ ស្ថានេ វិទ្យតេ។
நியாயத்தீர்ப்பின்போது நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து, இவர்கள்மீது குற்றம் சுமத்துவார்கள்; ஏனெனில், அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்றார்.
33 ប្រទីបំ ប្រជ្វាល្យ ទ្រោណស្យាធះ កុត្រាបិ គុប្តស្ថានេ វា កោបិ ន ស្ថាបយតិ កិន្តុ គ្ឫហប្រវេឝិភ្យោ ទីប្តិំ ទាតំ ទីបាធារោបយ៌្យេវ ស្ថាបយតិ។
“யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை மறைந்திருக்கும்படி ஒரு இடத்திலோ, அல்லது ஒரு பாத்திரத்தால் மூடியோ வைப்பதில்லை. ஆனால் உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, அதை விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள்.
34 ទេហស្យ ប្រទីបឝ្ចក្ឞុស្តស្មាទេវ ចក្ឞុ រ្យទិ ប្រសន្នំ ភវតិ តហ៌ិ តវ សវ៌្វឝរីរំ ទីប្តិមទ៑ ភវិឞ្យតិ កិន្តុ ចក្ឞុ រ្យទិ មលីមសំ តិឞ្ឋតិ តហ៌ិ សវ៌្វឝរីរំ សាន្ធការំ ស្ថាស្យតិ។
உன்னுடைய கண் உன் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண்கள் நல்லதாய் இருக்கும்போது, உன் முழு உடலும் வெளிச்சம் நிறைந்ததாய் இருக்கும். ஆனால் அவை கெட்டதாய் இருந்தால், உன் உடலும் இருள் நிறைந்ததாய் இருக்கும்.
35 អស្មាត៑ ការណាត៑ តវាន្តះស្ថំ ជ្យោតិ រ្យថាន្ធការមយំ ន ភវតិ តទត៌្ហេ សាវធានោ ភវ។
ஆகவே, உனக்குள்ளே இருக்கும் வெளிச்சம் இருள் அடையாதபடி பார்த்துக்கொள்.
36 យតះ ឝរីរស្យ កុត្រាប្យំឝេ សាន្ធការេ ន ជាតេ សវ៌្វំ យទិ ទីប្តិមត៑ តិឞ្ឋតិ តហ៌ិ តុភ្យំ ទីប្តិទាយិប្រោជ្ជ្វលន៑ ប្រទីប ឥវ តវ សវវ៌ឝរីរំ ទីប្តិមទ៑ ភវិឞ្យតិ។
உன் முழு உடலும் வெளிச்சம் நிறைந்ததாய் இருந்து, அதன் ஒரு பகுதியும் இருள் அடையாதிருக்குமானால், விளக்கின் வெளிச்சம் உங்களில் பிரகாசிப்பது போல், உனது முழு உடலும் வெளிச்சம் உடையதாய் இருக்கும்” என்றார்.
37 ឯតត្កថាយាះ កថនកាលេ ផិរុឝ្យេកោ ភេជនាយ តំ និមន្ត្រយាមាស, តតះ ស គត្វា ភោក្តុម៑ ឧបវិវេឝ។
இயேசு பேசி முடித்தபோது, பரிசேயன் ஒருவன் இயேசுவைத் தன்னுடன் உணவு சாப்பிடவரும்படி அழைத்தான்; அப்படியே அவர் அவனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பாட்டுப் பந்தியில் உட்கார்ந்தார்.
38 កិន្តុ ភោជនាត៑ បូវ៌្វំ នាមាង្ក្ឞីត៑ ឯតទ៑ ទ្ឫឞ្ដ្វា ស ផិរុឝ្យាឝ្ចយ៌្យំ មេនេ។
சாப்பிடுவதற்கு முன்பு, இயேசு தன் கையைக் கழுவாததைக் கவனித்த பரிசேயன் ஆச்சரியம் அடைந்தான்.
39 តទា ប្រភុស្តំ ប្រោវាច យូយំ ផិរូឝិលោកាះ បានបាត្រាណាំ ភោជនបាត្រាណាញ្ច ពហិះ បរិឞ្កុរុថ កិន្តុ យុឞ្មាកមន្ត រ្ទៅរាត្ម្យៃ រ្ទុឞ្ក្រិយាភិឝ្ច បរិបូណ៌ំ តិឞ្ឋតិ។
அப்பொழுது கர்த்தர் அவனிடம் சொன்னதாவது, “பரிசேயரே, நீங்களோ போஜனபாத்திரத்தின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள். ஆனால், உங்களுடைய உட்புறமோ பேராசைகளினாலும், கொடுமைகளினாலும் நிறைந்திருக்கிறது.
40 ហេ សវ៌្វេ និព៌ោធា យោ ពហិះ សសជ៌ ស ឯវ កិមន្ត រ្ន សសជ៌?
மூடர்களே! வெளிப்புறத்தை உண்டாக்கியவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?
41 តត ឯវ យុឞ្មាភិរន្តះករណំ (ឦឝ្វរាយ) និវេទ្យតាំ តស្មិន៑ ក្ឫតេ យុឞ្មាកំ សវ៌្វាណិ ឝុចិតាំ យាស្យន្តិ។
பாத்திரத்தின் உள்ளே இருப்பதை ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு எல்லாம் சுத்தமாயிருக்கும்.
42 កិន្តុ ហន្ត ផិរូឝិគណា យូយំ ន្យាយម៑ ឦឝ្វរេ ប្រេម ច បរិត្យជ្យ បោទិនាយា អរុទាទីនាំ សវ៌្វេឞាំ ឝាកានាញ្ច ទឝមាំឝាន៑ ទត្ថ កិន្តុ ប្រថមំ បាលយិត្វា ឝេឞស្យាលង្ឃនំ យុឞ្មាកម៑ ឧចិតមាសីត៑។
“பரிசேயரே உங்களுக்கு ஐயோ, ஏனெனில் நீங்கள் உங்களுடைய புதினா கீரையிலும், கறிவேப்பிலையிலும், தோட்டத்தின் மரக்கறிவகையிலும் பத்திலொன்றை இறைவனுக்குக் கொடுக்கிறீர்கள். ஆனால் நீதி செய்வதையும், இறைவனிடம் அன்பு கூறுவதையும், அலட்சியம் செய்கிறீர்கள். இதையே, நீங்கள் முதலில் செய்திருக்கவேண்டும். முன்பு செய்ததையும் கைவிடக்கூடாது.
43 ហា ហា ផិរូឝិនោ យូយំ ភជនគេហេ ប្រោច្ចាសនេ អាបណេឞុ ច នមស្ការេឞុ ប្រីយធ្វេ។
“பரிசேயரே உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், சந்தைகூடும் இடங்களில் வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறீர்கள்.
44 វត កបដិនោៜធ្យាបកាះ ផិរូឝិនឝ្ច លោកាយត៑ ឝ្មឝានម៑ អនុបលភ្យ តទុបរិ គច្ឆន្តិ យូយម៑ តាទ្ឫគប្រកាឝិតឝ្មឝានវាទ៑ ភវថ។
“உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் அடையாளச்சின்னம் இல்லாமலே, மூடப்பட்ட சவக்குழிகளைப் போல் இருக்கிறீர்கள். அதனால், மனிதர்கள் அது என்ன என்பதை அறியாமல், அதன்மேல் நடந்து போகிறார்கள்.”
45 តទានីំ វ្យវស្ថាបកានាម៑ ឯកា យីឝុមវទត៑, ហេ ឧបទេឝក វាក្យេនេទ្ឫឝេនាស្មាស្វបិ ទោឞម៑ អារោបយសិ។
மோசேயின் சட்ட அறிஞரில் ஒருவன் அவரிடம், “போதகரே, நீர் இவற்றைச் சொல்லுகிறபோது, எங்களையும் அவமானப்படுத்துகிறீர்” என்றான்.
46 តតះ ស ឧវាច, ហា ហា វ្យវស្ថាបកា យូយម៑ មានុឞាណាម៑ ឧបរិ ទុះសហ្យាន៑ ភារាន៑ ន្យស្យថ កិន្តុ ស្វយម៑ ឯកាង្គុល្យាបិ តាន៑ ភារាន៑ ន ស្ប្ឫឝថ។
அதற்கு இயேசு, “மோசேயின் சட்ட அறிஞர்களே, உங்களுக்கு ஐயோ! ஏனெனில், மக்களால் சுமக்க முடியாத சமயச்சடங்குகளை நீங்கள் அவர்கள்மேல் சுமத்துகிறீர்கள். நீங்களோ, அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் ஒரு விரலைக்கூட அசைப்பதில்லை.
47 ហន្ត យុឞ្មាកំ បូវ៌្វបុរុឞា យាន៑ ភវិឞ្យទ្វាទិនោៜវធិឞុស្តេឞាំ ឝ្មឝានានិ យូយំ និម៌្មាថ។
“உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் இறைவாக்கினர்களுக்காக கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். அவர்களைக் கொலைசெய்தவர்கள், உங்கள் முற்பிதாக்களே.
48 តេនៃវ យូយំ ស្វបូវ៌្វបុរុឞាណាំ កម៌្មាណិ សំមន្យធ្វេ តទេវ សប្រមាណំ កុរុថ ច, យតស្តេ តានវធិឞុះ យូយំ តេឞាំ ឝ្មឝានានិ និម៌្មាថ។
உங்கள் முற்பிதாக்கள் செய்ததை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று இவ்விதமாய்ச் சாட்சி கொடுக்கிறீர்கள்; அவர்களோ, இறைவாக்கினரைக் கொன்றார்கள். நீங்களோ, அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
49 អតឯវ ឦឝ្វរស្យ ឝាស្ត្រេ ប្រោក្តមស្តិ តេឞាមន្តិកេ ភវិឞ្យទ្វាទិនះ ប្រេរិតាំឝ្ច ប្រេឞយិឞ្យាមិ តតស្តេ តេឞាំ កាំឝ្ចន ហនិឞ្យន្តិ កាំឝ្ចន តាឌឝ្ឞ្យិន្តិ។
இதன் காரணமாகவே, இறைவன் தம்முடைய ஞானத்தின்படி சொன்னதாவது, ‘நான் அவர்களிடம் இறைவாக்கினரையும், அப்போஸ்தலரையும் அனுப்புவேன். அவர்களில் சிலரை, இவர்கள் கொலைசெய்வார்கள். மற்றவர்களையோ இவர்கள் துன்புறுத்துவார்கள்’ என்றார்.
50 ឯតស្មាត៑ ការណាត៑ ហាពិលះ ឝោណិតបាតមារភ្យ មន្ទិរយជ្ញវេទ្យោ រ្មធ្យេ ហតស្យ សិខរិយស្យ រក្តបាតបយ៌្យន្តំ
ஆகையால், உலகம் தொடங்கியதிலிருந்து இறைவாக்கினர் அனைவருடைய சிந்தப்பட்ட இரத்தத்திற்கும், இந்தத் தலைமுறையினரிடமே கணக்குக் கேட்கப்படும்.
51 ជគតះ ស្ឫឞ្ដិមារភ្យ ប្ឫថិវ្យាំ ភវិឞ្យទ្វាទិនាំ យតិរក្តបាតា ជាតាស្តតីនាម៑ អបរាធទណ្ឌា ឯឞាំ វត៌្តមានលោកានាំ ភវិឞ្យន្តិ, យុឞ្មានហំ និឝ្ចិតំ វទាមិ សវ៌្វេ ទណ្ឌា វំឝស្យាស្យ ភវិឞ្យន្តិ។
ஆபேலுடைய இரத்தம் முதல், ஆலயத்தில் பலிபீடத்திற்கும் பரிசுத்த இடத்திற்கும் இடையே கொலைசெய்யப்பட்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும், இவர்களிடமே கணக்குக் கேட்கப்படும். ஆம், இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடமே இவையெல்லாவற்றிற்கும் கணக்குக் கேட்கப்படும்.
52 ហា ហា វ្យវស្ថបកា យូយំ ជ្ញានស្យ កុញ្ចិកាំ ហ្ឫត្វា ស្វយំ ន ប្រវិឞ្ដា យេ ប្រវេឞ្ដុញ្ច ប្រយាសិនស្តានបិ ប្រវេឞ្ដុំ វារិតវន្តះ។
“மோசேயின் சட்ட அறிஞரே உங்களுக்கு ஐயோ, அறிவிற்குரிய சாவியை மக்களிடமிருந்து நீங்கள் எடுத்துப்போட்டீர்கள். அதற்குள் நீங்களும் செல்வதில்லை. செல்கிறவர்களையும் தடைசெய்து விடுகிறீர்கள்” என்றார்.
53 ឥត្ថំ កថាកថនាទ៑ អធ្យាបកាះ ផិរូឝិនឝ្ច សតក៌ាះ
இயேசு அங்கிருந்து புறப்படும்போது பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரைக் கடுமையாக எதிர்க்கவும், பல கேள்விகளைக் கேட்டுத் தாக்கவும் தொடங்கினார்கள்.
54 សន្តស្តមបវទិតុំ តស្យ កថាយា ទោឞំ ធត៌្តមិច្ឆន្តោ នានាខ្យានកថនាយ តំ ប្រវត៌្តយិតុំ កោបយិតុញ្ច ប្រារេភិរេ។
அவருடைய வார்த்தைகளிலிருந்தே, இயேசுவைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.