< မာရ္ကး 14 >

1 တဒါ နိသ္တာရောတ္သဝကိဏွဟီနပူပေါတ္သဝယောရာရမ္ဘသျ ဒိနဒွယေ 'ဝၑိၐ္ဋေ ပြဓာနယာဇကာ အဓျာပကာၑ္စ ကေနာပိ ဆလေန ယီၑုံ ဓရ္တ္တာံ ဟန္တုဉ္စ မၖဂယာဉ္စကြိရေ;
இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள்.
2 ကိန္တု လောကာနာံ ကလဟဘယာဒူစိရေ, နစောတ္သဝကာလ ဥစိတမေတဒိတိ၊
ஆனாலும் மக்களுக்குள்ளே கலவரம் உண்டாகாதபடி, பண்டிகையிலே அப்படிச் செய்யக்கூடாது என்றார்கள்.
3 အနန္တရံ ဗဲထနိယာပုရေ ၑိမောနကုၐ္ဌိနော ဂၖဟေ ယောၑော် ဘောတ္ကုမုပဝိၐ္ဋေ သတိ ကာစိဒ် ယောၐိတ် ပါဏ္ဍရပါၐာဏသျ သမ္ပုဋကေန မဟာရ္ဃျောတ္တမတဲလမ် အာနီယ သမ္ပုဋကံ ဘံက္တွာ တသျောတ္တမာင်္ဂေ တဲလဓာရာံ ပါတယာဉ္စကြေ၊
அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.
4 တသ္မာတ် ကေစိတ် သွာန္တေ ကုပျန္တး ကထိတဝံန္တး ကုတောယံ တဲလာပဝျယး?
அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே கோபப்பட்டு: இந்தத் தைலத்தை இப்படி வீணாகச் செலவழிப்பது ஏன்?
5 ယဒျေတတ် တဲလ ဝျကြေၐျတ တရှိ မုဒြာပါဒၑတတြယာဒပျဓိကံ တသျ ပြာပ္တမူလျံ ဒရိဒြလောကေဘျော ဒါတုမၑက္ၐျတ, ကထာမေတာံ ကထယိတွာ တယာ ယောၐိတာ သာကံ ဝါစာယုဟျန်၊
இதை முந்நூறு வெள்ளிக்காசுகளுக்கு அதிகமான விலைக்கு விற்று, ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைப்பற்றி முறுமுறுத்தார்கள்.
6 ကိန္တု ယီၑုရုဝါစ, ကုတ ဧတသျဲ ကၖစ္ဆြံ ဒဒါသိ? မဟျမိယံ ကရ္မ္မောတ္တမံ ကၖတဝတီ၊
இயேசு அவர்களைப் பார்த்து: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு பண்ணுகிறீர்கள்? என்னிடம் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
7 ဒရိဒြား သရွွဒါ ယုၐ္မာဘိး သဟ တိၐ္ဌန္တိ, တသ္မာဒ် ယူယံ ယဒေစ္ဆထ တဒဲဝ တာနုပကရ္တ္တာံ ၑက္နုထ, ကိန္တွဟံ ယုဘာဘိး သဟ နိရန္တရံ န တိၐ္ဌာမိ၊
ஏழைகள் எப்பொழுதும் உங்களிடம் இருக்கிறார்கள், உங்களுக்கு விருப்பம் உண்டாகும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்பொழுதும் உங்களிடம் இருக்கமாட்டேன்.
8 အသျာ ယထာသာဓျံ တထဲဝါကရောဒိယံ, ၑ္မၑာနယာပနာတ် ပူရွွံ သမေတျ မဒွပုၐိ တဲလမ် အမရ္ဒ္ဒယတ်၊
இவள் தன்னால் முடிந்ததைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு அடையாளமாக, என் சரீரத்தில் தைலம் பூச முந்திக்கொண்டாள்.
9 အဟံ ယုၐ္မဘျံ ယထာရ္ထံ ကထယာမိ, ဇဂတာံ မဓျေ ယတြ ယတြ သုသံဝါဒေါယံ ပြစာရယိၐျတေ တတြ တတြ ယောၐိတ ဧတသျား သ္မရဏာရ္ထံ တတ္ကၖတကရ္မ္မဲတတ် ပြစာရယိၐျတေ၊
இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10 တတး ပရံ ဒွါဒၑာနာံ ၑိၐျာဏာမေက ဤၐ္ကရိယောတီယယိဟူဒါချော ယီၑုံ ပရကရေၐု သမရ္ပယိတုံ ပြဓာနယာဇကာနာံ သမီပမိယာယ၊
௧0அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியர்களுக்குக் காட்டிக்கொடுப்பதற்காக அவர்களிடம் போனான்.
11 တေ တသျ ဝါကျံ သမာကရ္ဏျ သန္တုၐ္ဋား သန္တသ္တသ္မဲ မုဒြာ ဒါတုံ ပြတျဇာနတ; တသ္မာတ် သ တံ တေၐာံ ကရေၐု သမရ္ပဏာယောပါယံ မၖဂယာမာသ၊
௧௧அவர்கள் அதைக்கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணம் கொடுக்கிறோம் என்று வாக்குக்கொடுத்தார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்ற நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
12 အနန္တရံ ကိဏွၑူနျပူပေါတ္သဝသျ ပြထမေ'ဟနိ နိသ္တာရောတ္မဝါရ္ထံ မေၐမာရဏာသမယေ ၑိၐျာသ္တံ ပပြစ္ဆး ကုတြ ဂတွာ ဝယံ နိသ္တာရောတ္သဝသျ ဘောဇျမာသာဒယိၐျာမး? ကိမိစ္ဆတိ ဘဝါန်?
௧௨பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற முதலாம் நாளில், அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்குபோய் ஆயத்தம்பண்ண விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
13 တဒါနီံ သ တေၐာံ ဒွယံ ပြေရယန် ဗဘာၐေ ယုဝယေား ပုရမဓျံ ဂတယေား သတော ရျော ဇနး သဇလကုမ္ဘံ ဝဟန် ယုဝါံ သာက္ၐာတ် ကရိၐျတိ တသျဲဝ ပၑ္စာဒ် ယာတံ;
௧௩அவர் தம்முடைய சீடர்களில் இரண்டுபேரைப் பார்த்து: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர் குடம் சுமந்துகொண்டு வருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிராக வருவான், அவன் பின்னே போங்கள்;
14 သ ယတ် သဒနံ ပြဝေက္ၐျတိ တဒ္ဘဝနပတိံ ဝဒတံ, ဂုရုရာဟ ယတြ သၑိၐျောဟံ နိသ္တာရောတ္သဝီယံ ဘောဇနံ ကရိၐျာမိ, သာ ဘောဇနၑာလာ ကုတြာသ္တိ?
௧௪அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.
15 တတး သ ပရိၐ္ကၖတာံ သုသဇ္ဇိတာံ ဗၖဟတီစဉ္စ ယာံ ၑာလာံ ဒရ္ၑယိၐျတိ တသျာမသ္မဒရ္ထံ ဘောဇျဒြဝျာဏျာသာဒယတံ၊
௧௫அவன் கம்பளம் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற வசதியான மேல்வீட்டறையை உங்களுக்குக் காட்டுவான்; அங்கே நமக்காக பஸ்காவை ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
16 တတး ၑိၐျော် ပြသ္ထာယ ပုရံ ပြဝိၑျ သ ယထောက္တဝါန် တထဲဝ ပြာပျ နိသ္တာရောတ္သဝသျ ဘောဇျဒြဝျာဏိ သမာသာဒယေတာမ်၊
௧௬அப்படியே, அவருடைய சீடர்கள் புறப்பட்டு நகரத்தில்போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
17 အနန္တရံ ယီၑုး သာယံကာလေ ဒွါဒၑဘိး ၑိၐျဲး သာရ္ဒ္ဓံ ဇဂါမ;
௧௭மாலைநேரத்தில், அவர் பன்னிரண்டுபேரோடு சேர்ந்து அந்த இடத்திற்கு வந்தார்.
18 သရွွေၐု ဘောဇနာယ ပြောပဝိၐ္ဋေၐု သ တာနုဒိတဝါန် ယုၐ္မာနဟံ ယထာရ္ထံ ဝျာဟရာမိ, အတြ ယုၐ္မာကမေကော ဇနော ယော မယာ သဟ ဘုံက္တေ မာံ ပရကေရေၐု သမရ္ပယိၐျတေ၊
௧௮அவர்கள் பந்தி உட்கார்ந்து சாப்பிடும்போது, இயேசு அவர்களைப் பார்த்து: என்னோடு சாப்பிடுகிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19 တဒါနီံ တေ ဒုးခိတား သန္တ ဧကဲကၑသ္တံ ပြၐ္ဋုမာရဗ္ဓဝန္တး သ ကိမဟံ? ပၑ္စာဒ် အနျ ဧကောဘိဒဓေ သ ကိမဟံ?
௧௯அப்பொழுது அவர்கள் துக்கப்பட்டு: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடம் கேட்கத்தொடங்கினார்கள்.
20 တတး သ ပြတျဝဒဒ် ဧတေၐာံ ဒွါဒၑာနာံ ယော ဇနော မယာ သမံ ဘောဇနာပါတြေ ပါဏိံ မဇ္ဇယိၐျတိ သ ဧဝ၊
௨0அவர் மறுமொழியாக: என்னோடு பாத்திரத்தில் கையைவிடுகிற பன்னிரண்டுபேர்களில் ஒருவனே என்று சொல்லி;
21 မနုဇတနယမဓိ ယာဒၖၑံ လိခိတမာသ္တေ တဒနုရူပါ ဂတိသ္တသျ ဘဝိၐျတိ, ကိန္တု ယော ဇနော မာနဝသုတံ သမရ္ပယိၐျတေ ဟန္တ တသျ ဇန္မာဘာဝေ သတိ ဘဒြမဘဝိၐျတ်၊
௨௧மனிதகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆனாலும், எந்த மனிதனால் மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனிதனுக்கு ஐயோ! அந்த மனிதன் பிறக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு நல்லதாக இருக்கும் என்றார்.
22 အပရဉ္စ တေၐာံ ဘောဇနသမယေ ယီၑုး ပူပံ ဂၖဟီတွေၑွရဂုဏာန် အနုကီရ္တျ ဘင်္က္တွာ တေဘျော ဒတ္တွာ ဗဘာၐေ, ဧတဒ် ဂၖဟီတွာ ဘုဉ္ဇီဓွမ် ဧတန္မမ ဝိဂြဟရူပံ၊
௨௨அவர்கள் சாப்பிடும்போது, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாக இருக்கிறது என்றார்.
23 အနန္တရံ သ ကံသံ ဂၖဟီတွေၑွရသျ ဂုဏာန် ကီရ္တ္တယိတွာ တေဘျော ဒဒေါ်, တတသ္တေ သရွွေ ပပုး၊
௨௩பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லோரும் அதிலே பானம்பண்ணினார்கள்.
24 အပရံ သ တာနဝါဒီဒ် ဗဟူနာံ နိမိတ္တံ ပါတိတံ မမ နဝီနနိယမရူပံ ၑောဏိတမေတတ်၊
௨௪அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாக இருக்கிறது.
25 ယုၐ္မာနဟံ ယထာရ္ထံ ဝဒါမိ, ဤၑွရသျ ရာဇျေ ယာဝတ် သဒျောဇာတံ ဒြာက္ၐာရသံ န ပါသျာမိ, တာဝဒဟံ ဒြာက္ၐာဖလရသံ ပုန ရ္န ပါသျာမိ၊
௨௫நான் தேவனுடைய ராஜ்யத்தில் புதிய இரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரை திராட்சைப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லை என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
26 တဒနန္တရံ တေ ဂီတမေကံ သံဂီယ ဗဟိ ရ္ဇဲတုနံ ၑိခရိဏံ ယယုး
௨௬அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.
27 အထ ယီၑုသ္တာနုဝါစ နိၑာယာမသျာံ မယိ ယုၐ္မာကံ သရွွေၐာံ ပြတျူဟော ဘဝိၐျတိ ယတော လိခိတမာသ္တေ ယထာ, မေၐာဏာံ ရက္ၐကဉ္စာဟံ ပြဟရိၐျာမိ ဝဲ တတး၊ မေၐာဏာံ နိဝဟော နူနံ ပြဝိကီရ္ဏော ဘဝိၐျတိ၊
௨௭அப்பொழுது, இயேசு அவர்களைப் பார்த்து: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லோரும் என்னால் இடறல் அடைவீர்கள்.
28 ကန္တု မဒုတ္ထာနေ ဇာတေ ယုၐ္မာကမဂြေ'ဟံ ဂါလီလံ ဝြဇိၐျာမိ၊
௨௮ஆனாலும் நான் உயிரோடு எழுந்தபின்பு, உங்களுக்கு முன்பாக கலிலேயாவிற்குப் போவேன் என்றார்.
29 တဒါ ပိတရး ပြတိဗဘာၐေ, ယဒျပိ သရွွေၐာံ ပြတျူဟော ဘဝတိ တထာပိ မမ နဲဝ ဘဝိၐျတိ၊
௨௯அதற்கு பேதுரு: உமதுநிமித்தம் எல்லோரும் இடறல் அடைந்தாலும், நான் இடறல் அடையமாட்டேன் என்றான்.
30 တတော ယီၑုရုက္တာဝါန် အဟံ တုဘျံ တထျံ ကထယာမိ, က္ၐဏာဒါယာမဒျ ကုက္ကုဋသျ ဒွိတီယဝါရရဝဏာတ် ပူရွွံ တွံ ဝါရတြယံ မာမပဟ္နောၐျသေ၊
௩0இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பு, நீ மூன்றுமுறை என்னை மறுதலிப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31 ကိန္တု သ ဂါဎံ ဝျာဟရဒ် ယဒျပိ တွယာ သာရ္ဒ္ဓံ မမ ပြာဏော ယာတိ တထာပိ ကထမပိ တွာံ နာပဟ္နောၐျေ; သရွွေ'ပီတရေ တထဲဝ ဗဘာၐိရေ၊
௩௧அதற்கு அவன்: நான் உம்மோடு மரித்துப்போவதாக இருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னான்; எல்லோரும் அப்படியே சொன்னார்கள்.
32 အပရဉ္စ တေၐု ဂေတ္ၑိမာနီနာမကံ သ္ထာန ဂတေၐု သ ၑိၐျာန် ဇဂါဒ, ယာဝဒဟံ ပြာရ္ထယေ တာဝဒတြ သ္ထာနေ ယူယံ သမုပဝိၑတ၊
௩௨பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களைப் பார்த்து: நான் ஜெபம்பண்ணும்வரை இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
33 အထ သ ပိတရံ ယာကူဗံ ယောဟနဉ္စ ဂၖဟီတွာ ဝဝြာဇ; အတျန္တံ တြာသိတော ဝျာကုလိတၑ္စ တေဘျး ကထယာမာသ,
௩௩பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.
34 နိဓနကာလဝတ် ပြာဏော မေ'တီဝ ဒးခမေတိ, ယူယံ ဇာဂြတောတြ သ္ထာနေ တိၐ္ဌတ၊
௩௪அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்திற்கான துக்கத்தில் உள்ளது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
35 တတး သ ကိဉ္စိဒ္ဒူရံ ဂတွာ ဘူမာဝဓောမုခး ပတိတွာ ပြာရ္ထိတဝါနေတတ်, ယဒိ ဘဝိတုံ ၑကျံ တရှိ ဒုးခသမယောယံ မတ္တော ဒူရီဘဝတု၊
௩௫சற்று தள்ளிப்போய், தரையிலே விழுந்து, அந்த நேரம் தம்மைவிட்டுக் கடந்துபோகக்கூடுமானால் அது கடந்துபோகவேண்டும் என்று வேண்டிக்கொண்டு:
36 အပရမုဒိတဝါန် ဟေ ပိတ ရှေ ပိတး သရွွေံ တွယာ သာဓျံ, တတော ဟေတောရိမံ ကံသံ မတ္တော ဒူရီကုရု, ကိန္တု တန် မမေစ္ဆာတော န တဝေစ္ဆာတော ဘဝတု၊
௩௬அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே முடியும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும் என்றார்.
37 တတး ပရံ သ ဧတျ တာန် နိဒြိတာန် နိရီက္ၐျ ပိတရံ ပြောဝါစ, ၑိမောန် တွံ ကိံ နိဒြာသိ? ဃဋိကာမေကာမ် အပိ ဇာဂရိတုံ န ၑက္နောၐိ?
௩௭பின்பு அவர் வந்து, அவர்கள் தூங்குகிறதைப் பார்த்து, பேதுருவைப் பார்த்து: சீமோனே, தூங்குகிறாயா? ஒருமணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?
38 ပရီက္ၐာယာံ ယထာ န ပတထ တဒရ္ထံ သစေတနား သန္တး ပြာရ္ထယဓွံ; မန ဥဒျုက္တမိတိ သတျံ ကိန္တု ဝပုရၑက္တိကံ၊
௩௮நீங்கள் சோதனையில் விழாமலிருக்க விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், சரீரமோ பலவீனமுள்ளது என்றார்.
39 အထ သ ပုနရွြဇိတွာ ပူရွွဝတ် ပြာရ္ထယာဉ္စကြေ၊
௩௯அவர் மீண்டும்போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
40 ပရာဝၖတျာဂတျ ပုနရပိ တာန် နိဒြိတာန် ဒဒရ္ၑ တဒါ တေၐာံ လောစနာနိ နိဒြယာ ပူရ္ဏာနိ, တသ္မာတ္တသ္မဲ ကာ ကထာ ကထယိတဝျာ တ ဧတဒ် ဗောဒ္ဓုံ န ၑေကုး၊
௪0அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள்.
41 တတးပရံ တၖတီယဝါရံ အာဂတျ တေဘျော 'ကထယဒ် ဣဒါနီမပိ ၑယိတွာ ဝိၑြာမျထ? ယထေၐ္ဋံ ဇာတံ, သမယၑ္စောပသ္ထိတး ပၑျတ မာနဝတနယး ပါပိလောကာနာံ ပါဏိၐု သမရ္ပျတေ၊
௪௧அவர் மூன்றாம்முறை வந்து: இன்னும் நித்திரைசெய்து இளைப்பாறுகிறீர்களா? போதும், நேரம்வந்தது, இதோ, மனிதகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
42 ဥတ္တိၐ္ဌတ, ဝယံ ဝြဇာမော ယော ဇနော မာံ ပရပါဏိၐု သမရ္ပယိၐျတေ ပၑျတ သ သမီပမာယာတး၊
௪௨என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போகலாம் என்றார்.
43 ဣမာံ ကထာံ ကထယတိ သ, ဧတရှိဒွါဒၑာနာမေကော ယိဟူဒါ နာမာ ၑိၐျး ပြဓာနယာဇကာနာမ် ဥပါဓျာယာနာံ ပြာစီနလောကာနာဉ္စ သန္နိဓေး ခင်္ဂလဂုဍဓာရိဏော ဗဟုလောကာန် ဂၖဟီတွာ တသျ သမီပ ဥပသ္ထိတဝါန်၊
௪௩உடனே, அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனுடன் பிரதான ஆசாரியர்களும், வேதபண்டிதர்களும் மூப்பர்களும் அனுப்பின மக்கள்கூட்டத்தினர், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டுவந்தார்கள்.
44 အပရဉ္စာသော် ပရပါဏိၐု သမရ္ပယိတာ ပူရွွမိတိ သင်္ကေတံ ကၖတဝါန် ယမဟံ စုမ္ဗိၐျာမိ သ ဧဝါသော် တမေဝ ဓၖတွာ သာဝဓာနံ နယတ၊
௪௪அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் யாரை முத்தம் செய்கிறேனோ அவன்தான், அவனைப் பிடித்துக் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.
45 အတော ဟေတေား သ အာဂတျဲဝ ယောၑေား သဝိဓံ ဂတွာ ဟေ ဂုရော ဟေ ဂုရော, ဣတျုက္တွာ တံ စုစုမ္ဗ၊
௪௫அவன் வந்தவுடனே, இயேசுவின் அருகில் சென்று: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தம்செய்தான்.
46 တဒါ တေ တဒုပရိ ပါဏီနရ္ပယိတွာ တံ ဒဓ္နုး၊
௪௬அப்பொழுது மக்கள்கூட்டத்தினர் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
47 တတသ္တသျ ပါရ္ၑွသ္ထာနာံ လောကာနာမေကး ခင်္ဂံ နိၐ္ကောၐယန် မဟာယာဇကသျ ဒါသမေကံ ပြဟၖတျ တသျ ကရ္ဏံ စိစ္ဆေဒ၊
௪௭அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான்.
48 ပၑ္စာဒ် ယီၑုသ္တာန် ဝျာဇဟာရ ခင်္ဂါန် လဂုဍာံၑ္စ ဂၖဟီတွာ မာံ ကိံ စော်ရံ ဓရ္တ္တာံ သမာယာတား?
௪௮இயேசு அவர்களைப் பார்த்து: திருடனைப்பிடிக்கப் போகிறதைப்போல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
49 မဓျေမန္ဒိရံ သမုပဒိၑန် ပြတျဟံ ယုၐ္မာဘိး သဟ သ္ထိတဝါနတဟံ, တသ္မိန် ကာလေ ယူယံ မာံ နာဒီဓရတ, ကိန္တွနေန ၑာသ္တြီယံ ဝစနံ သေဓနီယံ၊
௪௯நான் தினமும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாக இருக்கிறது என்றார்.
50 တဒါ သရွွေ ၑိၐျာသ္တံ ပရိတျဇျ ပလာယာဉ္စကြိရေ၊
௫0அப்பொழுது எல்லோரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
51 အထဲကော ယုဝါ မာနဝေါ နဂ္နကာယေ ဝသ္တြမေကံ နိဓာယ တသျ ပၑ္စာဒ် ဝြဇန် ယုဝလောကဲ ရ္ဓၖတော
௫௧ஒரு வாலிபன் ஒரு போர்வையைமட்டும் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னால் போனான்; அவனைப் பிடித்தார்கள்.
52 ဝသ္တြံ ဝိဟာယ နဂ္နး ပလာယာဉ္စကြေ၊
௫௨அவன் தன் போர்வையைப் போட்டுவிட்டு, நிர்வாணமாக அவர்களைவிட்டு ஓடிப்போனான்.
53 အပရဉ္စ ယသ္မိန် သ္ထာနေ ပြဓာနယာဇကာ ဥပါဓျာယား ပြာစီနလောကာၑ္စ မဟာယာဇကေန သဟ သဒသိ သ္ထိတာသ္တသ္မိန် သ္ထာနေ မဟာယာဇကသျ သမီပံ ယီၑုံ နိနျုး၊
௫௩இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள், வேதபண்டிதர்கள் எல்லோரும் கூடிவந்திருந்தார்கள்.
54 ပိတရော ဒူရေ တတ္ပၑ္စာဒ် ဣတွာ မဟာယာဇကသျာဋ္ဋာလိကာံ ပြဝိၑျ ကိင်္ကရဲး သဟောပဝိၑျ ဝဟ္နိတာပံ ဇဂြာဟ၊
௫௪பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்னேசென்று, பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்குள் வந்து, காவலர்களுடன் உட்கார்ந்து, நெருப்பின் அருகில் குளிர்க்காய்ந்துகொண்டிருந்தான்.
55 တဒါနီံ ပြဓာနယာဇကာ မန္တြိဏၑ္စ ယီၑုံ ဃာတယိတုံ တတ္ပြာတိကူလျေန သာက္ၐိဏော မၖဂယာဉ္စကြိရေ, ကိန္တု န ပြာပ္တား၊
௫௫அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் ஆலோசனை சங்கத்தினர்கள் அனைவரும் இயேசுவைக் கொலைசெய்கிறதற்கு அவருக்கு எதிராகச் சாட்சிகளைத் தேடினார்கள்; சாட்சிசொல்ல ஒருவரும் வரவில்லை.
56 အနေကဲသ္တဒွိရုဒ္ဓံ မၖၐာသာက္ၐျေ ဒတ္တေပိ တေၐာံ ဝါကျာနိ န သမဂစ္ဆန္တ၊
௫௬அநேகர் அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒத்துபோகவில்லை.
57 သရွွၑေၐေ ကိယန္တ ဥတ္ထာယ တသျ ပြာတိကူလျေန မၖၐာသာက္ၐျံ ဒတ္တွာ ကထယာမာသုး,
௫௭அப்பொழுது சிலர் எழுந்து, கைகளால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைகளால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாட்களுக்குள் கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,
58 ဣဒံ ကရကၖတမန္ဒိရံ ဝိနာၑျ ဒိနတြယမဓျေ ပုနရပရမ် အကရကၖတံ မန္ဒိရံ နိရ္မ္မာသျာမိ, ဣတိ ဝါကျမ် အသျ မုခါတ် ၑြုတမသ္မာဘိရိတိ၊
௫௮அவருக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னார்கள்.
59 ကိန္တု တတြာပိ တေၐာံ သာက္ၐျကထာ န သင်္ဂါတား၊
௫௯அப்படிச் சொல்லியும் அவர்களுடைய சாட்சிகள் ஒத்துபோகவில்லை.
60 အထ မဟာယာဇကော မဓျေသဘမ် ဥတ္ထာယ ယီၑုံ ဝျာဇဟာရ, ဧတေ ဇနာသ္တွယိ ယတ် သာက္ၐျမဒုး တွမေတသျ ကိမပျုတ္တရံ ကိံ န ဒါသျသိ?
௬0அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
61 ကိန္တု သ ကိမပျုတ္တရံ န ဒတွာ မော်နီဘူယ တသျော်; တတော မဟာယာဇကး ပုနရပိ တံ ပၖၐ္ဋာဝါန် တွံ သစ္စိဒါနန္ဒသျ တနယော 'ဘိၐိက္တသ္တြတာ?
௬௧அவரோ ஒரு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மீண்டும் பிரதான ஆசாரியன் அவரைப் பார்த்து: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
62 တဒါ ယီၑုသ္တံ ပြောဝါစ ဘဝါမျဟမ် ယူယဉ္စ သရွွၑက္တိမတော ဒက္ၐီဏပါရ္ၑွေ သမုပဝိၑန္တံ မေဃ မာရုဟျ သမာယာန္တဉ္စ မနုၐျပုတြံ သန္ဒြက္ၐျထ၊
௬௨அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனிதகுமாரன் சர்வவல்லவரின் வலதுபக்கத்தில் உட்கார்ந்து இருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.
63 တဒါ မဟာယာဇကး သွံ ဝမနံ ဆိတွာ ဝျာဝဟရတ္
௬௩பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு: இதைவிட வேறுசாட்சிகள் நமக்கு வேண்டுமா?
64 ကိမသ္မာကံ သာက္ၐိဘိး ပြယောဇနမ်? ဤၑွရနိန္ဒာဝါကျံ ယုၐ္မာဘိရၑြာဝိ ကိံ ဝိစာရယထ? တဒါနီံ သရွွေ ဇဂဒုရယံ နိဓနဒဏ္ဍမရှတိ၊
௬௪தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
65 တတး ကၑ္စိတ် ကၑ္စိတ် တဒွပုၐိ နိၐ္ဌီဝံ နိစိက္ၐေပ တထာ တန္မုခမာစ္ဆာဒျ စပေဋေန ဟတွာ ဂဒိတဝါန် ဂဏယိတွာ ဝဒ, အနုစရာၑ္စ စပေဋဲသ္တမာဇဃ္နုး
௬௫அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரை அடிக்கவும், தீர்க்கதரிசனம் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரர்களும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
66 တတး ပရံ ပိတရေ'ဋ္ဋာလိကာဓးကောၐ္ဌေ တိၐ္ဌတိ မဟာယာဇကသျဲကာ ဒါသီ သမေတျ
௬௬அந்தநேரத்தில் பேதுரு கீழே உள்ள அரண்மனை முற்றத்தில் இருக்கும்போது, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒரு பெண் வந்து,
67 တံ ဝိဟ္နိတာပံ ဂၖဟ္လန္တံ ဝိလောကျ တံ သုနိရီက္ၐျ ဗဘာၐေ တွမပိ နာသရတီယယီၑေား သင်္ဂိနာမ် ဧကော ဇန အာသီး၊
௬௭குளிர்க்காய்ந்துகொண்டிருந்த பேதுருவை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடு இருந்தவன் என்றாள்.
68 ကိန္တု သောပဟ္နုတျ ဇဂါဒ တမဟံ န ဝဒ္မိ တွံ ယတ် ကထယမိ တဒပျဟံ န ဗုဒ္ဓျေ၊ တဒါနီံ ပိတရေ စတွရံ ဂတဝတိ ကုက္ကုဋော ရုရာဝ၊
௬௮அதற்கு அவன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை; நீ சொல்வது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வாசல் மண்டபத்திற்கு வெளியேப் போனான்; அப்பொழுது சேவல் கூவியது.
69 အထာနျာ ဒါသီ ပိတရံ ဒၖၐ္ဋွာ သမီပသ္ထာန် ဇနာန် ဇဂါဒ အယံ တေၐာမေကော ဇနး၊
௬௯வேலைக்காரி அவனை மீண்டும் பார்த்து: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.
70 တတး သ ဒွိတီယဝါရမ် အပဟ္နုတဝါန် ပၑ္စာတ် တတြသ္ထာ လောကား ပိတရံ ပြောစုသ္တွမဝၑျံ တေၐာမေကော ဇနး ယတသ္တွံ ဂါလီလီယော နရ ဣတိ တဝေါစ္စာရဏံ ပြကာၑယတိ၊
௭0அவன் மீண்டும் மறுதலித்தான். சிறிதுநேரத்திற்குப்பின்பு மீண்டும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: உண்மையாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.
71 တဒါ သ ၑပထာဘိၑာပေါ် ကၖတွာ ပြောဝါစ ယူယံ ကထာံ ကထယထ တံ နရံ န ဇာနေ'ဟံ၊
௭௧அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனிதனை எனக்குத் தெரியாது என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் செய்யவும் தொடங்கினான்.
72 တဒါနီံ ဒွိတီယဝါရံ ကုက္ကုဋော 'ရာဝီတ်၊ ကုက္ကုဋသျ ဒွိတီယရဝါတ် ပူရွွံ တွံ မာံ ဝါရတြယမ် အပဟ္နောၐျသိ, ဣတိ ယဒွါကျံ ယီၑုနာ သမုဒိတံ တတ် တဒါ သံသ္မၖတျ ပိတရော ရောဒိတုမ် အာရဘတ၊
௭௨உடனே சேவல் இரண்டாம்முறை கூவியது. சேவல் இரண்டுமுறை கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையை பேதுரு நினைத்துப்பார்த்து, மிகவும் அழுதான்.

< မာရ္ကး 14 >