< মথিঃ 5 >

1 অনন্তরং স জননিৱহং নিরীক্ষ্য ভূধরোপরি ৱ্রজিৎৱা সমুপৱিৱেশ|
இயேசு திரளான ஜனங்களைக் கண்டபோது, ஒரு மலைச்சரிவில் ஏறி அங்கே உட்கார்ந்தார். அப்பொழுது அவரது சீடர்கள் அவரருகே வந்தார்கள்,
2 তদানীং শিষ্যেষু তস্য সমীপমাগতেষু তেন তেভ্য এষা কথা কথ্যাঞ্চক্রে|
இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் சொன்னதாவது:
3 অভিমানহীনা জনা ধন্যাঃ, যতস্তে স্ৱর্গীযরাজ্যম্ অধিকরিষ্যন্তি|
“ஆவியில் எளிமையுள்ளோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்கு உரியது.
4 খিদ্যমানা মনুজা ধন্যাঃ, যস্মাৎ তে সান্ত্ৱনাং প্রাপ্সন্তি|
துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் ஆறுதல் அடைவார்கள்.
5 নম্রা মানৱাশ্চ ধন্যাঃ, যস্মাৎ তে মেদিনীম্ অধিকরিষ্যন্তি|
சாந்தமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் பூமியை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
6 ধর্ম্মায বুভুক্ষিতাঃ তৃষার্ত্তাশ্চ মনুজা ধন্যাঃ, যস্মাৎ তে পরিতর্প্স্যন্তি|
நீதியை நிலைநாட்ட பசி தாகம் உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் நிறைவு பெறுவார்கள்.
7 কৃপালৱো মানৱা ধন্যাঃ, যস্মাৎ তে কৃপাং প্রাপ্স্যন্তি|
இரக்கம் நிறைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
8 নির্ম্মলহৃদযা মনুজাশ্চ ধন্যাঃ, যস্মাৎ ত ঈশ্চরং দ্রক্ষ্যন্তি|
இருதயத்தில் தூய்மை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இறைவனைக் காண்பார்கள்.
9 মেলযিতারো মানৱা ধন্যাঃ, যস্মাৎ ত ঈশ্চরস্য সন্তানৎৱেন ৱিখ্যাস্যন্তি|
சமாதானம் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவார்கள்.
10 ১০ ধর্ম্মকারণাৎ তাডিতা মনুজা ধন্যা, যস্মাৎ স্ৱর্গীযরাজ্যে তেষামধিকরো ৱিদ্যতে|
நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்குரியதே.
11 ১১ যদা মনুজা মম নামকৃতে যুষ্মান্ নিন্দন্তি তাডযন্তি মৃষা নানাদুর্ৱ্ৱাক্যানি ৱদন্তি চ, তদা যুযং ধন্যাঃ|
“என் நிமித்தம் மனிதர் உங்களை இகழும்போதும், துன்புறுத்தும்போதும், உங்களுக்கு எதிராகப் பலவிதமான பொய்களைச் சொல்லி தீமைகளை விளைவிக்கும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள்.
12 ১২ তদা আনন্দত, তথা ভৃশং হ্লাদধ্ৱঞ্চ, যতঃ স্ৱর্গে ভূযাংসি ফলানি লপ্স্যধ্ৱে; তে যুষ্মাকং পুরাতনান্ ভৱিষ্যদ্ৱাদিনোঽপি তাদৃগ্ অতাডযন্|
மகிழ்ந்து களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும். ஏனெனில், இதைப்போலவே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினரையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
13 ১৩ যুযং মেদিন্যাং লৱণরূপাঃ, কিন্তু যদি লৱণস্য লৱণৎৱম্ অপযাতি, তর্হি তৎ কেন প্রকারেণ স্ৱাদুযুক্তং ভৱিষ্যতি? তৎ কস্যাপি কার্য্যস্যাযোগ্যৎৱাৎ কেৱলং বহিঃ প্রক্ষেপ্তুং নরাণাং পদতলেন দলযিতুঞ্চ যোগ্যং ভৱতি|
“நீங்கள் பூமியிலுள்ளோருக்கு உப்பாக இருக்கிறீர்கள். ஆனால் உப்பு அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? அது வேறொன்றுக்கும் பயன்படாது, வெளியே வீசப்பட்டு மனிதரால் மிதிக்கப்படும்.
14 ১৪ যূযং জগতি দীপ্তিরূপাঃ, ভূধরোপরি স্থিতং নগরং গুপ্তং ভৱিতুং নহি শক্ষ্যতি|
“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். ஒரு குன்றின்மேல் உள்ள பட்டணம் மறைவாயிருக்காது.
15 ১৫ অপরং মনুজাঃ প্রদীপান্ প্রজ্ৱাল্য দ্রোণাধো ন স্থাপযন্তি, কিন্তু দীপাধারোপর্য্যেৱ স্থাপযন্তি, তেন তে দীপা গেহস্থিতান্ সকলান্ প্রকাশযন্তি|
மக்கள் விளக்கைக் கொளுத்தி அதை ஒரு பாத்திரத்தினால் மூடி வைக்கமாட்டார்களே. அவர்கள் அதை விளக்குத்தண்டின் மேல் உயர்த்தி வைப்பார்கள், அப்பொழுது அது வீட்டிலுள்ள எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும்.
16 ১৬ যেন মানৱা যুষ্মাকং সৎকর্ম্মাণি ৱিলোক্য যুষ্মাকং স্ৱর্গস্থং পিতরং ধন্যং ৱদন্তি, তেষাং সমক্ষং যুষ্মাকং দীপ্তিস্তাদৃক্ প্রকাশতাম্|
அதைப் போலவே, உங்கள் வெளிச்சம் மனிதர் முன் பிரகாசிக்கட்டும், அப்பொழுது அவர்கள் உங்கள் நல்ல செயல்களைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்கள்.
17 ১৭ অহং ৱ্যৱস্থাং ভৱিষ্যদ্ৱাক্যঞ্চ লোপ্তুম্ আগতৱান্, ইত্থং মানুভৱত, তে দ্ৱে লোপ্তুং নাগতৱান্, কিন্তু সফলে কর্ত্তুম্ আগতোস্মি|
“நான் மோசேயின் சட்டத்தையும், இறைவாக்குகளையும் அழிக்க வந்தேன் என நினைக்கவேண்டாம்; நான் அவற்றை அழிக்க அல்ல நிறைவேற்றவே வந்தேன்.
18 ১৮ অপরং যুষ্মান্ অহং তথ্যং ৱদামি যাৱৎ ৱ্যোমমেদিন্যো র্ধ্ৱংসো ন ভৱিষ্যতি, তাৱৎ সর্ৱ্ৱস্মিন্ সফলে ন জাতে ৱ্যৱস্থাযা একা মাত্রা বিন্দুরেকোপি ৱা ন লোপ্স্যতে|
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், வானமும் பூமியும் அழிந்துபோனாலும், மோசேயின் சட்டத்தில் உள்ள ஒவ்வொன்றும் நிறைவேறும் வரைக்கும், அதில் உள்ள மிகச்சிறிய எழுத்தோ, எழுத்தின் சிறிய புள்ளியோ அழிந்துபோகாது.
19 ১৯ তস্মাৎ যো জন এতাসাম্ আজ্ঞানাম্ অতিক্ষুদ্রাম্ একাজ্ঞামপী লংঘতে মনুজাংঞ্চ তথৈৱ শিক্ষযতি, স স্ৱর্গীযরাজ্যে সর্ৱ্ৱেভ্যঃ ক্ষুদ্রৎৱেন ৱিখ্যাস্যতে, কিন্তু যো জনস্তাং পালযতি, তথৈৱ শিক্ষযতি চ, স স্ৱর্গীযরাজ্যে প্রধানৎৱেন ৱিখ্যাস্যতে|
இந்தக் கட்டளைகளில் சிறிதான ஒன்றையாகிலும் மீறி, அப்படிச் செய்யும்படி மற்றவர்களுக்கு போதிக்கிறவன், பரலோக அரசில் சிறியவன் எனக் கருதப்படுவான்; ஆனால் இந்தக் கட்டளைகளை தானும் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கும் போதிக்கிறவன் பரலோக அரசில் பெரியவன் எனக் கருதப்படுவான்.
20 ২০ অপরং যুষ্মান্ অহং ৱদামি, অধ্যাপকফিরূশিমানৱানাং ধর্ম্মানুষ্ঠানাৎ যুষ্মাকং ধর্ম্মানুষ্ঠানে নোত্তমে জাতে যূযম্ ঈশ্ৱরীযরাজ্যং প্রৱেষ্টুং ন শক্ষ্যথ|
நான் உங்களுக்குச் சொல்கிறேன் உங்களுடைய நீதியானது, பரிசேயர் மற்றும் மோசேயின் சட்ட ஆசிரியர்களின் நீதியைவிட மேலானதாய் இருக்கவேண்டும், இல்லையென்றால் நீங்கள் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள்.
21 ২১ অপরঞ্চ ৎৱং নরং মা ৱধীঃ, যস্মাৎ যো নরং হন্তি, স ৱিচারসভাযাং দণ্ডার্হো ভৱিষ্যতি, পূর্ৱ্ৱকালীনজনেভ্য ইতি কথিতমাসীৎ, যুষ্মাভিরশ্রাৱি|
“கொலை செய்யாதே, கொலை செய்கிறவன் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவான் என்று வெகுகாலத்திற்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
22 ২২ কিন্ত্ৱহং যুষ্মান্ ৱদামি, যঃ কশ্চিৎ কারণং ৱিনা নিজভ্রাত্রে কুপ্যতি, স ৱিচারসভাযাং দণ্ডার্হো ভৱিষ্যতি; যঃ কশ্চিচ্চ স্ৱীযসহজং নির্ব্বোধং ৱদতি, স মহাসভাযাং দণ্ডার্হো ভৱিষ্যতি; পুনশ্চ ৎৱং মূঢ ইতি ৱাক্যং যদি কশ্চিৎ স্ৱীযভ্রাতরং ৱক্তি, তর্হি নরকাগ্নৌ স দণ্ডার্হো ভৱিষ্যতি| (Geenna g1067)
ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால், அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவார்கள். மேலும், தனது சகோதரனை அல்லது சகோதரியை ‘பயித்தியம்!’ என்று சொல்கிறவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் யாரையாவது, ‘முட்டாள்!’ என்று சொல்லுகிறவர்கள், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள். (Geenna g1067)
23 ২৩ অতো ৱেদ্যাঃ সমীপং নিজনৈৱেদ্যে সমানীতেঽপি নিজভ্রাতরং প্রতি কস্মাচ্চিৎ কারণাৎ ৎৱং যদি দোষী ৱিদ্যসে, তদানীং তৱ তস্য স্মৃতি র্জাযতে চ,
“அதனால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்போது, உங்கள் சகோதரனுக்கோ அல்லது சகோதரிக்கோ உங்கள்மேல் ஏதாவது மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால்,
24 ২৪ তর্হি তস্যা ৱেদ্যাঃ সমীপে নিজনৈৱৈদ্যং নিধায তদৈৱ গৎৱা পূর্ৱ্ৱং তেন সার্দ্ধং মিল, পশ্চাৎ আগত্য নিজনৈৱেদ্যং নিৱেদয|
பலிபீடத்தின் முன்னே உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உங்கள் சகோதரனுடன் அல்லது சகோதரியுடன் ஒப்புரவாகுங்கள்; அதற்குப் பின்பு வந்து உங்களது காணிக்கையைச் செலுத்துங்கள்.
25 ২৫ অন্যঞ্চ যাৱৎ ৱিৱাদিনা সার্দ্ধং ৱর্ত্মনি তিষ্ঠসি, তাৱৎ তেন সার্দ্ধং মেলনং কুরু; নো চেৎ ৱিৱাদী ৱিচারযিতুঃ সমীপে ৎৱাং সমর্পযতি ৱিচারযিতা চ রক্ষিণঃ সন্নিধৌ সমর্পযতি তদা ৎৱং কারাযাং বধ্যেথাঃ|
“உங்களது பகைவர் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது. வழியிலேயே அவர்களோடு விரைவாகப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள், இல்லையெனில், அவர்கள் உங்களை நீதிபதியிடம் ஒப்படைக்கக்கூடும், நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் தள்ளப்படலாம்.
26 ২৬ তর্হি ৎৱামহং তথ্থং ব্রৱীমি, শেষকপর্দকেঽপি ন পরিশোধিতে তস্মাৎ স্থানাৎ কদাপি বহিরাগন্তুং ন শক্ষ্যসি|
உங்களிடத்திலிருக்கும், கடைசி காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்கு உண்மையாய்ச் சொல்லுகிறேன்.
27 ২৭ অপরং ৎৱং মা ৱ্যভিচর, যদেতদ্ ৱচনং পূর্ৱ্ৱকালীনলোকেভ্যঃ কথিতমাসীৎ, তদ্ যূযং শ্রুতৱন্তঃ;
“‘விபசாரம் செய்யாதே’ எனச் சொல்லப்பட்டிருப்பதை, நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
28 ২৮ কিন্ত্ৱহং যুষ্মান্ ৱদামি, যদি কশ্চিৎ কামতঃ কাঞ্চন যোষিতং পশ্যতি, তর্হি স মনসা তদৈৱ ৱ্যভিচরিতৱান্|
ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது ஒருவன் ஒரு பெண்ணைக் காம இச்சையுடன் பார்த்தாலே, அவன் அவளுடன் அப்போதே தன் இருதயத்தில் விபசாரம் செய்தவனாகிறான்.
29 ২৯ তস্মাৎ তৱ দক্ষিণং নেত্রং যদি ৎৱাং বাধতে, তর্হি তন্নেত্রম্ উৎপাট্য দূরে নিক্ষিপ, যস্মাৎ তৱ সর্ৱ্ৱৱপুষো নরকে নিক্ষেপাৎ তৱৈকাঙ্গস্য নাশো ৱরং| (Geenna g1067)
உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. (Geenna g1067)
30 ৩০ যদ্ৱা তৱ দক্ষিণঃ করো যদি ৎৱাং বাধতে, তর্হি তং করং ছিত্ত্ৱা দূরে নিক্ষিপ, যতঃ সর্ৱ্ৱৱপুষো নরকে নিক্ষেপাৎ একাঙ্গস্য নাশো ৱরং| (Geenna g1067)
உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது. (Geenna g1067)
31 ৩১ উক্তমাস্তে, যদি কশ্চিন্ নিজজাযাং পরিত্যক্ত্তুম্ ইচ্ছতি, তর্হি স তস্যৈ ত্যাগপত্রং দদাতু|
“தனது மனைவியை விவாகரத்து செய்கிறவன், ‘அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.’
32 ৩২ কিন্ত্ৱহং যুষ্মান্ ৱ্যাহরামি, ৱ্যভিচারদোষে ন জাতে যদি কশ্চিন্ নিজজাযাং পরিত্যজতি, তর্হি স তাং ৱ্যভিচারযতি; যশ্চ তাং ত্যক্তাং স্ত্রিযং ৱিৱহতি, সোপি ৱ্যভিচরতি|
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் யாராவது ஒருவன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் அவளை விவாகரத்து செய்தால், அவன் அவளை விபசாரத்துக்குள்ளாக்குகிறான். விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்பவனும் விபசாரம் செய்கிறான்.
33 ৩৩ পুনশ্চ ৎৱং মৃষা শপথম্ ন কুর্ৱ্ৱন্ ঈশ্চরায নিজশপথং পালয, পূর্ৱ্ৱকালীনলোকেভ্যো যৈষা কথা কথিতা, তামপি যূযং শ্রুতৱন্তঃ|
“மேலும், ‘நீங்கள் ஆணையிட்டதை மீற வேண்டாம், கர்த்தருடன் செய்துகொண்ட ஆணைகளை நிறைவேற்றுங்கள் என்று, வெகுகாலத்திற்கு முன்னே முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.’
34 ৩৪ কিন্ত্ৱহং যুষ্মান্ ৱদামি, কমপি শপথং মা কার্ষ্ট, অর্থতঃ স্ৱর্গনাম্না ন, যতঃ স ঈশ্ৱরস্য সিংহাসনং;
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் ஒருபோதும் ஆணையிட வேண்டாம்: பரலோகத்தின்மேல் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் அரியணை;
35 ৩৫ পৃথিৱ্যা নাম্নাপি ন, যতঃ সা তস্য পাদপীঠং; যিরূশালমো নাম্নাপি ন, যতঃ সা মহারাজস্য পুরী;
பூமியின்மேலும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் பாதபீடம்; எருசலேமைக்கொண்டும் ஆணையிட வேண்டாம், ஏனெனில், அது பேரரசரின் பட்டணம்.
36 ৩৬ নিজশিরোনাম্নাপি ন, যস্মাৎ তস্যৈকং কচমপি সিতম্ অসিতং ৱা কর্ত্তুং ৎৱযা ন শক্যতে|
உங்கள் தலையில் கை வைத்தும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் உங்களால் ஒரு தலைமுடியையாகிலும் வெண்மையாக்கவோ, கருமையாக்கவோ முடியாதே.
37 ৩৭ অপরং যূযং সংলাপসমযে কেৱলং ভৱতীতি ন ভৱতীতি চ ৱদত যত ইতোঽধিকং যৎ তৎ পাপাত্মনো জাযতে|
ஆகவே உங்களிடமிருந்து வரும் பதில், ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ என்றும், ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ என்றும் இருக்கட்டும்; இதற்கு மேலாக வருவதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது.
38 ৩৮ অপরং লোচনস্য ৱিনিমযেন লোচনং দন্তস্য ৱিনিমযেন দন্তঃ পূর্ৱ্ৱক্তমিদং ৱচনঞ্চ যুষ্মাভিরশ্রূযত|
“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39 ৩৯ কিন্ত্ৱহং যুষ্মান্ ৱদামি যূযং হিংসকং নরং মা ৱ্যাঘাতযত| কিন্তু কেনচিৎ তৱ দক্ষিণকপোলে চপেটাঘাতে কৃতে তং প্রতি ৱামং কপোলঞ্চ ৱ্যাঘোটয|
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்களை எதிர்க்கும் தீய நபருடன் போராட வேண்டாம். யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
40 ৪০ অপরং কেনচিৎ ৎৱযা সার্ধ্দং ৱিৱাদং কৃৎৱা তৱ পরিধেযৱসনে জিঘৃতিতে তস্মাযুত্তরীযৱসনমপি দেহি|
யாராவது உங்களுடன் வழக்காடி, உங்கள் ஆடையை எடுத்துக்கொள்ளுகிறவருக்கு, உங்கள் மேலுடையையும் கொடுத்துவிடுங்கள்.
41 ৪১ যদি কশ্চিৎ ৎৱাং ক্রোশমেকং নযনার্থং অন্যাযতো ধরতি, তদা তেন সার্ধ্দং ক্রোশদ্ৱযং যাহি|
யாராவது உங்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரும்படி வற்புறுத்தினால், அந்த நபரோடு இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்லுங்கள்.
42 ৪২ যশ্চ মানৱস্ত্ৱাং যাচতে, তস্মৈ দেহি, যদি কশ্চিৎ তুভ্যং ধারযিতুম্ ইচ্ছতি, তর্হি তং প্রতি পরাংমুখো মা ভূঃ|
உங்களிடத்தில் கேட்கிறவருக்குக் கொடுங்கள், உங்களிடம் கடன்வாங்க விரும்புகிறவரிடமிருந்து விலகிச்செல்ல வேண்டாம்.
43 ৪৩ নিজসমীপৱসিনি প্রেম কুরু, কিন্তু শত্রুং প্রতি দ্ৱেষং কুরু, যদেতৎ পুরোক্তং ৱচনং এতদপি যূযং শ্রুতৱন্তঃ|
“உங்கள் அயலானிடம் அன்பாயிருங்கள், உங்கள் பகைவனுக்குப் பகையைக் காட்டுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44 ৪৪ কিন্ত্ৱহং যুষ্মান্ ৱদামি, যূযং রিপুৱ্ৱপি প্রেম কুরুত, যে চ যুষ্মান্ শপন্তে, তান, আশিষং ৱদত, যে চ যুষ্মান্ ঋতীযন্তে, তেষাং মঙ্গলং কুরুত, যে চ যুষ্মান্ নিন্দন্তি, তাডযন্তি চ, তেষাং কৃতে প্রার্থযধ্ৱং|
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக மன்றாடுங்கள்.
45 ৪৫ তত্র যঃ সতামসতাঞ্চোপরি প্রভাকরম্ উদাযযতি, তথা ধার্ম্মিকানামধার্ম্মিকানাঞ্চোপরি নীরং ৱর্ষযতি তাদৃশো যো যুষ্মাকং স্ৱর্গস্থঃ পিতা, যূযং তস্যৈৱ সন্তানা ভৱিষ্যথ|
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கும் உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாய் இருப்பீர்கள். அவர் தீயவர்மேலும், நல்லவர்மேலும் தமது சூரியனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளவர்மேலும், அநீதியுள்ளவர்மேலும் மழையை அனுப்புகிறார்.
46 ৪৬ যে যুষ্মাসু প্রেম কুর্ৱ্ৱন্তি, যূযং যদি কেৱলং তেৱ্ৱেৱ প্রেম কুরুথ, তর্হি যুষ্মাকং কিং ফলং ভৱিষ্যতি? চণ্ডালা অপি তাদৃশং কিং ন কুর্ৱ্ৱন্তি?
உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், நீங்கள் பெறும் வெகுமதி என்ன? வரி வசூலிப்பவரும்கூட அப்படிச் செய்வதில்லையா?
47 ৪৭ অপরং যূযং যদি কেৱলং স্ৱীযভ্রাতৃৎৱেন নমত, তর্হি কিং মহৎ কর্ম্ম কুরুথ? চণ্ডালা অপি তাদৃশং কিং ন কুর্ৱ্ৱন্তি?
நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களை மட்டும் வாழ்த்துவீர்களானால் நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் மேலாகச் செய்வது என்ன? இறைவனை அறியாதவர்கூட அப்படிச் செய்வதில்லையா?
48 ৪৮ তস্মাৎ যুষ্মাকং স্ৱর্গস্থঃ পিতা যথা পূর্ণো ভৱতি, যূযমপি তাদৃশা ভৱত|
உங்கள் பரலோகப் பிதா நிறைவுடையவராய் இருக்கிறதுபோல, நீங்களும் நிறைவுடையவர்களாய் இருங்கள்.

< মথিঃ 5 >