< মথিঃ 4 >

1 ততঃ পরং যীশুঃ প্রতারকেণ পরীক্ষিতো ভৱিতুম্ আত্মনা প্রান্তরম্ আকৃষ্টঃ
அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார்.
2 সন্ চৎৱারিংশদহোরাত্রান্ অনাহারস্তিষ্ঠন্ ক্ষুধিতো বভূৱ|
இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின், பசியாயிருந்தார்.
3 তদানীং পরীক্ষিতা তৎসমীপম্ আগত্য ৱ্যাহৃতৱান্, যদি ৎৱমীশ্ৱরাত্মজো ভৱেস্তর্হ্যাজ্ঞযা পাষাণানেতান্ পূপান্ ৱিধেহি|
சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து, “நீர் இறைவனின் மகன் என்றால், இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.
4 ততঃ স প্রত্যব্রৱীৎ, ইত্থং লিখিতমাস্তে, "মনুজঃ কেৱলপূপেন ন জীৱিষ্যতি, কিন্ত্ৱীশ্ৱরস্য ৱদনাদ্ যানি যানি ৱচাংসি নিঃসরন্তি তৈরেৱ জীৱিষ্যতি| "
அதற்கு இயேசு, “‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” எனப் பதிலளித்தார்.
5 তদা প্রতারকস্তং পুণ্যনগরং নীৎৱা মন্দিরস্য চূডোপরি নিধায গদিতৱান্,
பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான்.
6 ৎৱং যদিশ্ৱরস্য তনযো ভৱেস্তর্হীতোঽধঃ পত, যত ইত্থং লিখিতমাস্তে, আদেক্ষ্যতি নিজান্ দূতান্ রক্ষিতুং ৎৱাং পরমেশ্ৱরঃ| যথা সর্ৱ্ৱেষু মার্গেষু ৎৱদীযচরণদ্ৱযে| ন লগেৎ প্রস্তরাঘাতস্ত্ৱাং ঘরিষ্যন্তি তে করৈঃ||
அவன், “நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும். ஏனெனில்: “‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே,’” என்றான்.
7 তদানীং যীশুস্তস্মৈ কথিতৱান্ এতদপি লিখিতমাস্তে, "ৎৱং নিজপ্রভুং পরমেশ্ৱরং মা পরীক্ষস্ৱ| "
அதற்கு இயேசு, “உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.
8 অনন্তরং প্রতারকঃ পুনরপি তম্ অত্যুঞ্চধরাধরোপরি নীৎৱা জগতঃ সকলরাজ্যানি তদৈশ্ৱর্য্যাণি চ দর্শযাশ্চকার কথযাঞ্চকার চ,
மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.
9 যদি ৎৱং দণ্ডৱদ্ ভৱন্ মাং প্রণমেস্তর্হ্যহম্ এতানি তুভ্যং প্রদাস্যামি|
“நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.”
10 ১০ তদানীং যীশুস্তমৱোচৎ, দূরীভৱ প্রতারক, লিখিতমিদম্ আস্তে, "ৎৱযা নিজঃ প্রভুঃ পরমেশ্ৱরঃ প্রণম্যঃ কেৱলঃ স সেৱ্যশ্চ| "
இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’” என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னார்.
11 ১১ ততঃ প্রতারকেণ স পর্য্যত্যাজি, তদা স্ৱর্গীযদূতৈরাগত্য স সিষেৱে|
அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்.
12 ১২ তদনন্তরং যোহন্ কারাযাং ববন্ধে, তদ্ৱার্ত্তাং নিশম্য যীশুনা গালীল্ প্রাস্থীযত|
யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார்.
13 ১৩ ততঃ পরং স নাসরন্নগরং ৱিহায জলঘেস্তটে সিবূলূন্নপ্তালী এতযোরুৱভযোঃ প্রদেশযোঃ সীম্নোর্মধ্যৱর্ত্তী য: কফর্নাহূম্ তন্নগরম্ ইৎৱা ন্যৱসৎ|
அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது.
14 ১৪ তস্মাৎ, অন্যাদেশীযগালীলি যর্দ্দন্পারেঽব্ধিরোধসি| নপ্তালিসিবূলূন্দেশৌ যত্র স্থানে স্থিতৌ পুরা|
இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்:
15 ১৫ তত্রত্যা মনুজা যে যে পর্য্যভ্রাম্যন্ তমিস্রকে| তৈর্জনৈর্বৃহদালোকঃ পরিদর্শিষ্যতে তদা| অৱসন্ যে জনা দেশে মৃত্যুচ্ছাযাস্ৱরূপকে| তেষামুপরি লোকানামালোকঃ সংপ্রকাশিতঃ||
“செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே,
16 ১৬ যদেতদ্ৱচনং যিশযিযভৱিষ্যদ্ৱাদিনা প্রোক্তং, তৎ তদা সফলম্ অভূৎ|
இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
17 ১৭ অনন্তরং যীশুঃ সুসংৱাদং প্রচারযন্ এতাং কথাং কথযিতুম্ আরেভে, মনাংসি পরাৱর্ত্তযত, স্ৱর্গীযরাজৎৱং সৱিধমভৱৎ|
அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18 ১৮ ততঃ পরং যীশু র্গালীলো জলধেস্তটেন গচ্ছন্ গচ্ছন্ আন্দ্রিযস্তস্য ভ্রাতা শিমোন্ অর্থতো যং পিতরং ৱদন্তি এতাৱুভৌ জলঘৌ জালং ক্ষিপন্তৌ দদর্শ, যতস্তৌ মীনধারিণাৱাস্তাম্|
இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
19 ১৯ তদা স তাৱাহূয ৱ্যাজহার, যুৱাং মম পশ্চাদ্ আগচ্ছতং, যুৱামহং মনুজধারিণৌ করিষ্যামি|
இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
20 ২০ তেনৈৱ তৌ জালং ৱিহায তস্য পশ্চাৎ আগচ্ছতাম্|
உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
21 ২১ অনন্তরং তস্মাৎ স্থানাৎ ৱ্রজন্ ৱ্রজন্ সিৱদিযস্য সুতৌ যাকূব্ যোহন্নামানৌ দ্ৱৌ সহজৌ তাতেন সার্দ্ধং নৌকোপরি জালস্য জীর্ণোদ্ধারং কুর্ৱ্ৱন্তৌ ৱীক্ষ্য তাৱাহূতৱান্|
இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார்.
22 ২২ তৎক্ষণাৎ তৌ নাৱং স্ৱতাতঞ্চ ৱিহায তস্য পশ্চাদ্গামিনৌ বভূৱতুঃ|
உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
23 ২৩ অনন্তরং ভজনভৱনে সমুপদিশন্ রাজ্যস্য সুসংৱাদং প্রচারযন্ মনুজানাং সর্ৱ্ৱপ্রকারান্ রোগান্ সর্ৱ্ৱপ্রকারপীডাশ্চ শমযন্ যীশুঃ কৃৎস্নং গালীল্দেশং ভ্রমিতুম্ আরভত|
இயேசு கலிலேயா முழுவதும் சென்று, யூதரின் ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார், மக்களுக்கு இருந்த எல்லா விதமான வியாதிகளையும் நோய்களையும் குணமாக்கினார்.
24 ২৪ তেন কৃৎস্নসুরিযাদেশস্য মধ্যং তস্য যশো ৱ্যাপ্নোৎ, অপরং ভূতগ্রস্তা অপস্মারর্গীণঃ পক্ষাধাতিপ্রভৃতযশ্চ যাৱন্তো মনুজা নানাৱিধৱ্যাধিভিঃ ক্লিষ্টা আসন্, তেষু সর্ৱ্ৱেষু তস্য সমীপম্ আনীতেষু স তান্ স্ৱস্থান্ চকার|
இயேசுவைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வேதனையுற்ற நோயாளிகளையும், தீய ஆவி பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்களைக் குணமாக்கினார்.
25 ২৫ এতেন গালীল্-দিকাপনি-যিরূশালম্-যিহূদীযদেশেভ্যো যর্দ্দনঃ পারাঞ্চ বহৱো মনুজাস্তস্য পশ্চাদ্ আগচ্ছন্|
கலிலேயா, தெக்கப்போலி எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுபக்கத்திலுமிருந்து பெருந்திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.

< মথিঃ 4 >