< গালাতিনঃ 2 >

1 অনন্তৰং চতুৰ্দশসু ৱৎসৰেষু গতেষ্ৱহং বৰ্ণব্বা সহ যিৰূশালমনগৰং পুনৰগচ্ছং, তদানোং তীতমপি স্ৱসঙ্গিনম্ অকৰৱং|
பதினான்கு வருடங்களுக்குப்பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவோடு மீண்டும் எருசலேமுக்குப் போனேன்.
2 তৎকালেঽহম্ ঈশ্ৱৰদৰ্শনাদ্ যাত্ৰাম্ অকৰৱং মযা যঃ পৰিশ্ৰমোঽকাৰি কাৰিষ্যতে ৱা স যন্নিষ্ফলো ন ভৱেৎ তদৰ্থং ভিন্নজাতীযানাং মধ্যে মযা ঘোষ্যমাণঃ সুসংৱাদস্তত্ৰত্যেভ্যো লোকেভ্যো ৱিশেষতো মান্যেভ্যো নৰেভ্যো মযা ন্যৱেদ্যত|
நான் தேவ அறிவிப்பினாலே அங்குபோய், யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கிற நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்; ஆனாலும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகப் போகாதபடி சபையை நடத்துகிற தலைவர்களுக்கே தனிமையாக விளக்கிச் சொன்னேன்.
3 ততো মম সহচৰস্তীতো যদ্যপি যূনানীয আসীৎ তথাপি তস্য ৎৱক্ছেদোঽপ্যাৱশ্যকো ন বভূৱ|
ஆனாலும் என்னோடு இருந்த தீத்து கிரேக்கனாக இருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுவதற்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை.
4 যতশ্ছলেনাগতা অস্মান্ দাসান্ কৰ্ত্তুম্ ইচ্ছৱঃ কতিপযা ভাক্তভ্ৰাতৰঃ খ্ৰীষ্টেন যীশুনাস্মভ্যং দত্তং স্ৱাতন্ত্ৰ্যম্ অনুসন্ধাতুং চাৰা ইৱ সমাজং প্ৰাৱিশন্|
கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு உண்டான சுதந்திரத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குவதற்காக குறுக்குவழியாக நுழைந்த கள்ளச் சகோதரர்களினால் அப்படியானது.
5 অতঃ প্ৰকৃতে সুসংৱাদে যুষ্মাকম্ অধিকাৰো যৎ তিষ্ঠেৎ তদৰ্থং ৱযং দণ্ডৈকমপি যাৱদ্ আজ্ঞাগ্ৰহণেন তেষাং ৱশ্যা নাভৱাম|
நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக, நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
6 পৰন্তু যে লোকা মান্যাস্তে যে কেচিদ্ ভৱেযুস্তানহং ন গণযামি যত ঈশ্ৱৰঃ কস্যাপি মানৱস্য পক্ষপাতং ন কৰোতি, যে চ মান্যাস্তে মাং কিমপি নৱীনং নাজ্ঞাপযন্|
அல்லாமலும் அங்கிருந்த சபைத் தலைவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனிதர்களிடம் பட்சபாதம் உள்ளவர் இல்லையே.
7 কিন্তু ছিন্নৎৱচাং মধ্যে সুসংৱাদপ্ৰচাৰণস্য ভাৰঃ পিতৰি যথা সমৰ্পিতস্তথৈৱাচ্ছিন্নৎৱচাং মধ্যে সুসংৱাদপ্ৰচাৰণস্য ভাৰো মযি সমৰ্পিত ইতি তৈ ৰ্বুবুধে|
அதுமட்டுமல்லாமல், விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக பேதுருவைப் பலப்படுத்தினவர், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக என்னையும் பலப்படுத்தினதினால்,
8 যতশ্ছিন্নৎৱচাং মধ্যে প্ৰেৰিতৎৱকৰ্ম্মণে যস্য যা শক্তিঃ পিতৰমাশ্ৰিতৱতী তস্যৈৱ সা শক্তি ৰ্ভিন্নজাতীযানাং মধ্যে তস্মৈ কৰ্ম্মণে মামপ্যাশ্ৰিতৱতী|
விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பேதுருவிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக எனக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று அவர்கள் பார்த்து;
9 অতো মহ্যং দত্তম্ অনুগ্ৰহং প্ৰতিজ্ঞায স্তম্ভা ইৱ গণিতা যে যাকূব্ কৈফা যোহন্ চৈতে সহাযতাসূচকং দক্ষিণহস্তগ্ৰহংণ ৱিধায মাং বৰ্ণব্বাঞ্চ জগদুঃ, যুৱাং ভিন্নজাতীযানাং সন্নিধিং গচ্ছতং ৱযং ছিন্নৎৱচা সন্নিধিং গচ্ছামঃ,
எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக நினைக்கப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், நாங்கள் யூதரல்லாத மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக, நெருங்கிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவிற்கும் வலது கரம் கொடுத்து,
10 ১০ কেৱলং দৰিদ্ৰা যুৱাভ্যাং স্মৰণীযা ইতি| অতস্তদেৱ কৰ্ত্তুম্ অহং যতে স্ম|
௧0ஏழைகளை நினைத்துக்கொள்ளச் சொன்னார்கள்; அப்படிச் செய்வதற்காக அதற்கு முன்னமே நானும் ஆவலாக இருந்தேன்.
11 ১১ অপৰম্ আন্তিযখিযানগৰং পিতৰ আগতেঽহং তস্য দোষিৎৱাৎ সমক্ষং তম্ অভৰ্ত্সযং|
௧௧மேலும், பேதுரு அந்தியோகியாவிற்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமத்தினால், நான் அவனை முகமுகமாக எதிர்த்தேன்.
12 ১২ যতঃ স পূৰ্ৱ্ৱম্ অন্যজাতীযৈঃ সাৰ্দ্ধম্ আহাৰমকৰোৎ ততঃ পৰং যাকূবঃ সমীপাৎ কতিপযজনেষ্ৱাগতেষু স ছিন্নৎৱঙ্মনুষ্যেভ্যো ভযেন নিৱৃত্য পৃথগ্ অভৱৎ|
௧௨எப்படியென்றால், யாக்கோபினிடமிருந்து சிலர் வருகிறதற்கு முன்பே அவன் யூதரல்லாத மக்களோடு சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனம் உள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
13 ১৩ ততোঽপৰে সৰ্ৱ্ৱে যিহূদিনোঽপি তেন সাৰ্দ্ধং কপটাচাৰম্ অকুৰ্ৱ্ৱন্ বৰ্ণব্বা অপি তেষাং কাপট্যেন ৱিপথগাম্যভৱৎ|
௧௩மற்ற யூதர்களும் அவனோடுகூட இணைந்து மாய்மாலம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாய்மாலத்தினாலே பர்னபாவும் ஈர்க்கப்பட்டான்.
14 ১৪ ততস্তে প্ৰকৃতসুসংৱাদৰূপে সৰলপথে ন চৰন্তীতি দৃষ্ট্ৱাহং সৰ্ৱ্ৱেষাং সাক্ষাৎ পিতৰম্ উক্তৱান্ ৎৱং যিহূদী সন্ যদি যিহূদিমতং ৱিহায ভিন্নজাতীয ইৱাচৰসি তৰ্হি যিহূদিমতাচৰণায ভিন্নজাতীযান্ কুতঃ প্ৰৱৰ্ত্তযসি?
௧௪இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?
15 ১৫ আৱাং জন্মনা যিহূদিনৌ ভৱাৱো ভিন্নজাতীযৌ পাপিনৌ ন ভৱাৱঃ
௧௫யூதரல்லாதவர்களில் பிறந்த பாவிகளாக இல்லாமல், பிறப்பின்படி யூதர்களாக இருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலேதவிர, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே மனிதன் நீதிமானாக்கப்படுவது இல்லை என்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினால் இல்லை, கிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
16 ১৬ কিন্তু ৱ্যৱস্থাপালনেন মনুষ্যঃ সপুণ্যো ন ভৱতি কেৱলং যীশৌ খ্ৰীষ্টে যো ৱিশ্ৱাসস্তেনৈৱ সপুণ্যো ভৱতীতি বুদ্ধ্ৱাৱামপি ৱ্যৱস্থাপালনং ৱিনা কেৱলং খ্ৰীষ্টে ৱিশ্ৱাসেন পুণ্যপ্ৰাপ্তযে খ্ৰীষ্টে যীশৌ ৱ্যশ্ৱসিৱ যতো ৱ্যৱস্থাপালনেন কোঽপি মানৱঃ পুণ্যং প্ৰাপ্তুং ন শক্নোতি|
௧௬நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
17 ১৭ পৰন্তু যীশুনা পুণ্যপ্ৰাপ্তযে যতমানাৱপ্যাৱাং যদি পাপিনৌ ভৱাৱস্তৰ্হি কিং ৱক্তৱ্যং? খ্ৰীষ্টঃ পাপস্য পৰিচাৰক ইতি? তন্ন ভৱতু|
௧௭கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே.
18 ১৮ মযা যদ্ ভগ্নং তদ্ যদি মযা পুনৰ্নিৰ্ম্মীযতে তৰ্হি মযৈৱাত্মদোষঃ প্ৰকাশ্যতে|
௧௮நான் இடித்துப்போட்டவைகளையே நான் மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனாக இருப்பேன்.
19 ১৯ অহং যদ্ ঈশ্ৱৰায জীৱামি তদৰ্থং ৱ্যৱস্থযা ৱ্যৱস্থাযৈ অম্ৰিযে|
௧௯தேவனுக்கென்று பிழைப்பதற்காக நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
20 ২০ খ্ৰীষ্টেন সাৰ্দ্ধং ক্ৰুশে হতোঽস্মি তথাপি জীৱামি কিন্ত্ৱহং জীৱামীতি নহি খ্ৰীষ্ট এৱ মদন্ত ৰ্জীৱতি| সাম্প্ৰতং সশৰীৰেণ মযা যজ্জীৱিতং ধাৰ্য্যতে তৎ মম দযাকাৰিণি মদৰ্থং স্ৱীযপ্ৰাণত্যাগিনি চেশ্ৱৰপুত্ৰে ৱিশ্ৱসতা মযা ধাৰ্য্যতে|
௨0கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
21 ২১ অহমীশ্ৱৰস্যানুগ্ৰহং নাৱজানামি যস্মাদ্ ৱ্যৱস্থযা যদি পুণ্যং ভৱতি তৰ্হি খ্ৰীষ্টো নিৰৰ্থকমম্ৰিযত|
௨௧நான் தேவனுடைய கிருபையை வீணாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

< গালাতিনঃ 2 >