< ଅନବ୍ଜନାବର୍ 5 >
1 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ କୁର୍ସିଲୋଙନ୍ ଆତଙ୍କୁମ୍ ଆ ମନ୍ରା ଆର୍ଜଡ଼ୋମ୍ସିଗଡ୍ ଞେନ୍ ଅବୟ୍ ବଇନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ତିଆତେ ବାର୍ମିଡ଼ିୟ୍ତାଲନ୍ ଆଇଡିଡ୍ ଡକୋଏନ୍ ଆରି ସାତଟା ଅରବ୍ଜିଡନ୍ ବାତ୍ତେ ଆବ୍ଜିଡ୍ ଡକୋଏନ୍ ।
௧பின்னும், உள்ளேயும் வெளியேயும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரை போடப்பட்டிருந்த ஒரு புத்தகத்தை சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கையிலே பார்த்தேன்.
2 ଆରି, ଞେନ୍ ଅବୟ୍ ସୋଡ଼ା ରନପ୍ତିମର୍ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରନ୍ ଗିୟ୍ଲାୟ୍, ଆନିନ୍ ଅବ୍ସର୍ରଙ୍ଲନ୍ ବର୍ରନେ, “କେନ୍ ଅରବ୍ଜିଡଞ୍ଜି ପାଲ୍ଲେ କେନ୍ ବଇନ୍ ରୋରୋନ୍ ଆସନ୍ ଆନା ଜିଞ୍ଜିନ୍ ଡକୋ?”
௨புத்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதியானவர் யார்? என்று அதிக சத்தமாகக் கேட்கிற பலமுள்ள ஒரு தூதனையும் பார்த்தேன்.
3 ବନ୍ଡ ରୁଆଙ୍ଲୋଙନ୍ କି ପୁର୍ତିଲୋଙନ୍ କି ପାତାଡ଼ଲୋଙନ୍ ଆନ୍ନିଙ୍ ତି ଆ ବଇ ରୋଲେ ଅଃର୍ରପ୍ତିଲଜି, ଆରି ତିଆତେ ଗିୟ୍ଲେ ନିୟ୍ ଅଃର୍ରପ୍ତିଲଜି ।
௩வானத்திலோ, பூமியிலோ, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும், அதைப் படிக்கவும் முடியாமல் இருந்தது.
4 ତି ଆ ବଇ ରୋରୋନ୍ ଆସନ୍ ଡ ତିଆତେ ଗିୟ୍ଗିଜନ୍ ଆସନ୍ ନିୟ୍ ଆନ୍ନିଙ୍ ଜିଞ୍ଜିନ୍ ଅଃଗିୟ୍ତାଲଞ୍ଜି, ଞେନ୍ ମୁସୁକ୍କାମଲିଁୟ୍ କି ୟେଲାୟ୍ ।
௪ஒருவனும் அந்தப் புத்தகத்தைத் திறக்கவும் படிக்கவும் தகுதியானவனாக இல்லாததினால் நான் மிகவும் அழுதேன்.
5 ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ପାପୁର୍ମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ଞେନ୍ଆଡଙ୍ ବର୍ରିଁୟ୍, “ୟେଡଙେ, ଗିଜା, ଦାଉଦନ୍ ଆ କେଜ୍ଜା, ଜିଉଦାନ୍ ଆ କୁତ୍ତମ୍ମାଲୋଙ୍ ସିଅଁକିଡନ୍ ଡକୋ, ଆନିନ୍ କେନ୍ ସାତଟା ଅରବ୍ଜିଡନ୍ ପାଲ୍ଲେ ବଇନ୍ ରୋରୋନ୍ ଆସନ୍ ଜିନୟ୍ଡାଲେ ଜିର୍ରାୟ୍ ।”
௫அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்தின் சிங்கமும், தாவீதின் வேருமானவர் புத்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.
6 କୁର୍ସିନ୍, ଉଞ୍ଜି ପରାନ୍ନାନ୍ ଡ ପାପୁର୍ମରଞ୍ଜି ଆମୁକ୍କାବା ଅବୟ୍ ମେଣ୍ଡାଅନନ୍ ଆତନଙ୍ ଆଡ୍ରକୋଲନ୍ ଗିୟ୍ଲାୟ୍ । ମେଣ୍ଡାଅନନ୍ ଆର୍ରବ୍ବୁଏଞ୍ଜି ଅନ୍ତମ୍ ଗିୟ୍ତାଏନ୍, ଆ ଡେରିଙନ୍ ସାତଟା, ଅମଡନ୍ ସାତଟା ଡକୋଏନ୍, ତି ଆମଡ୍ଜି ସମ୍ପରା ପୁର୍ତିନ୍ ଅନାପ୍ପାୟନ୍ ଆଡ୍ରେନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ପୁରାଡ଼ାଜି ସାତଟା ।
௬அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் நடுவிலே நிற்பதைக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாக இருந்தது; அந்தக் கண்கள் பூமியெல்லாம் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளே.
7 ମେଣ୍ଡାଅନନ୍ କୁର୍ସିଲୋଙନ୍ ଆତଙ୍କୁମନ୍ ଆ ମନ୍ରା ଆମଙ୍ ଜିର୍ରେ ଆର୍ଜଡ଼ୋମ୍ସିଗଡ୍ ସିଲଡ୍ ବଇନ୍ ପାଙେନ୍ ।
௭அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினார்.
8 ଆନିନ୍ ବଇନ୍ ଆପ୍ରାଙେନ୍ ଆସନ୍ ଉଞ୍ଜି ପରାନ୍ନାନ୍ ଡ ବକୁଡ଼ି ଉଞ୍ଜି ପାପୁର୍ମରଞ୍ଜି ମେଣ୍ଡାଅନନ୍ ଆମୁକ୍କାବା ତୁଡ଼ୁମେଞ୍ଜି; ଡିଲେ ମନ୍ରାନ୍ ଆସିଲୋଙ୍ ତଙ୍ବୟ୍ ତଙ୍ବୟ୍ ଗଡେରାଜନ୍ ଡ ବୟ୍ଲେମରଞ୍ଜି ଆ ପାର୍ତନା ଅନ୍ତମ୍ ତରୋମ୍ମୋଡନ୍ ସୁନା ଗିଲ୍ଲଲୋଙନ୍ ଆବରିୟ୍ ଡକୋଏନ୍ ।
௮அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து:
9 ଆନିଞ୍ଜି ଅବୟ୍ ରଙ୍ କନନନ୍ କନେଞ୍ଜି; “ବଇନ୍ ପାଙ୍ଲେ ଅରବ୍ଜିଡଞ୍ଜି ପାଲ୍ପାଲନ୍ ଆସନ୍ ଆମନ୍ ମା ଜିଞ୍ଜିନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆମନ୍ ରବୁଲମ୍, ଆରି ମିଞାମ୍ନମ୍ ବାତ୍ତେ ଅଡ଼୍କୋ କେଜ୍ଜାନ୍, ଅଡ଼୍କୋ ଲଙ୍ଲଙ୍ମରଞ୍ଜି, ଡ ଅଡ଼୍କୋ ଜାତିମରଞ୍ଜି ଆମଙ୍ ସିଲଡ୍ ଇସ୍ୱରନ୍ ଆସନ୍ ମନ୍ରାଞ୍ଜି ଞିଏନ୍ ।
௯“தேவரீர் புத்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் தகுதி உள்ளவராக இருக்கிறீர்; ஏனென்றால், நீர் அடிக்கப்பட்டு, எல்லாக் கோத்திரங்களிலும், மொழிகளிலும், மக்களிலும், தேசங்களிலும் இருந்து எங்களை தேவனுக்காக உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10 ଆରି ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ସନେବାନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବୟ୍ ରାଜ୍ୟନ୍ ଡ ରାଓଡ଼ା କେଜ୍ଜାନ୍ ଏମ୍ମେଏଞ୍ଜି ଆରି ଆନିଞ୍ଜି ପୁର୍ତିଲୋଙନ୍ ରାଜାତଞ୍ଜି ।”
௧0எங்களுடைய தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்” என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
11 ଞେନ୍ ଆରି ଗିୟ୍ଲାୟ୍, କୁର୍ସିନ୍, ଆମେଙ୍ ପରାନ୍ନାଞ୍ଜି ଡ ପାପୁର୍ମରଞ୍ଜି ଏର୍ରେ ଅଜାର ଅଜାର, ଲକ୍ୟ ଲକ୍ୟ, ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଆ ସର୍ରଙ୍ ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍ ।
௧௧பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சுற்றியிருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய எண்ணிக்கை கோடானகோடியாக இருந்தது.
12 ଆନିଞ୍ଜି ସୋଡ଼ା ସର୍ରଙନ୍ ବାତ୍ତେ ବର୍ରଞ୍ଜି; “ଆର୍ରବୁଏନ୍ ଆ ମେଣ୍ଡାଅନ୍, ବୋର୍ସାନ୍, ଅନର୍ଜେନ୍, ବୁଡ୍ଡିନ୍, ରନପ୍ତିନ୍ ମନାନ୍ନେନ୍, ଗନୁଗୁନ୍, ସନେଙ୍କେନ୍ ଆଞନାଙ୍ ଆସନ୍ ଜିଞ୍ଜିନ୍ ।”
௧௨அவர்களும் அதிக சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவராக இருக்கிறார் என்று சொன்னார்கள்.
13 ତିଆଡିଡ୍ ରୁଆଙନ୍, ପୁର୍ତିନ୍, ପାତାଡ଼ନ୍ ଡ ସମେଁୟ୍ଣ୍ଡ୍ରାଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଅଡ଼୍କୋ ପରାନ୍ନାଞ୍ଜି ଡ ପୁର୍ତିଲୋଙନ୍ ଆଡ୍ରକୋତଞ୍ଜି ଅଡ଼୍କୋ ପରାନ୍ନାଞ୍ଜି କନନନ୍ ଆକ୍ରନେଞ୍ଜି ଞେନ୍ ଅମ୍ଡଙ୍ଲାୟ୍, ଆନିଞ୍ଜି କନେଞ୍ଜି; “କୁର୍ସିଲୋଙନ୍ ଆତଙ୍କୁମ୍ ଆ ମନ୍ରା ଡ ମେଣ୍ଡାଅନନ୍ ସନେଙ୍କେନ୍ ଡେଏତୋ, ଆନିନ୍ ମନାନ୍ନେନ୍, ଗନୁଗୁନ୍, ରନପ୍ତିନ୍ ଡ ବୋର୍ସାନ୍ ଆଏଡ଼ର୍ ଡକୋନେତୋ ।” (aiōn )
௧௩அப்பொழுது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் இருக்கிற படைப்புகளும், கடலில் உள்ள எல்லா ஜீவன்களும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்வதைக்கேட்டேன். (aiōn )
14 ଆରି ଉଞ୍ଜି ପରାନ୍ନାନ୍ ବର୍ରଞ୍ଜି, “ଆମେନ୍” ଆରି ପାପୁର୍ମରଞ୍ଜି ତୁଡ଼ୁମ୍ଲେ ଲୋମେଞ୍ଜି ।
௧௪அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புறவிழுந்து எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.