< Sáng Thế 43 >
1 Nạn đói càng thêm trầm trọng.
௧தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.
2 Khi gia đình ăn hết lương thực đem từ Ai Cập về, Gia-cốp bảo các con: “Hãy đi một chuyến nữa và mua ít lương thực về dùng.”
௨எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்களுடைய தகப்பன் அவர்களை நோக்கி: “நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றான்.
3 Giu-đa thưa: “Tể tướng ấy đã nghiêm khắc bảo chúng con: ‘Nếu không đem đứa út theo, đừng trở lại gặp mặt ta nữa.’
௩அதற்கு யூதா: “உங்கள் சகோதரன் உங்களோடுகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குக் கண்டிப்பாகச் சொன்னான்.
4 Nếu cha bằng lòng cho em đi, chúng con mới mua lương thực được.
௪எங்கள் சகோதரனை நீர் எங்களோடுகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம்.
5 Nếu không, chúng con không đi, vì tể tướng ấy nói quả quyết lắm.”
௫அனுப்பாவிட்டால். நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடுகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடு சொல்லியிருக்கிறான்” என்றான்.
6 Ít-ra-ên trách: “Sao chúng mày hại tao mà mách với ông ấy chúng mày còn một đứa em nữa.”
௬அதற்கு இஸ்ரவேல்: “உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள்” என்றான்.
7 Họ đáp: “Ông ấy hỏi chúng con rất kỹ về gia đình: ‘Cha các anh còn sống không? Còn người em nào nữa không?’ Chúng con cứ theo đó trả lời. Làm sao biết trước ông ấy bảo phải đem em xuống?”
௭அதற்கு அவர்கள்: “அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்களுடைய வம்சத்தையும் குறித்து விபரமாக விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடுகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா” என்றார்கள்.
8 Giu-đa thưa với Ít-ra-ên: “Xin cha giao em cho con, chúng con xin lên đường để tất cả chúng ta—cha, chúng con, và các cháu nhỏ—khỏi chết đói.
௮பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: “நீரும் நாங்களும் எங்களுடைய குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்க, நாங்கள் புறப்பட்டுப்போகிறோம், இளைய மகனை என்னோடு அனுப்பும்.
9 Con xin bảo lãnh em và chịu hoàn toàn trách nhiệm. Nếu con không đem em về cho cha, con sẽ mang tội với cha suốt đời.
௯அவனுக்காக நான் உத்திரவாதம் செய்வேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக.
10 Nếu không trì hoãn, chúng con đã đi được hai chuyến rồi.”
௧0நாங்கள் தாமதிக்காமல் இருந்தோமானால், இதற்குள்ளே இரண்டுமுறை போய்த் திரும்பி வந்திருப்போமே” என்றான்.
11 Ít-ra-ên nói: “Đã thế, các con phải chọn sản phẩm trong xứ làm lễ vật dâng cho ông ấy—nhựa thơm, mật ong, hương liệu, hạt đào, và hạnh nhân.
௧௧அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்த தேசத்தின் விலையுயர்ந்த பொருட்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
12 Các con cũng đem theo hai phần tiền để trả lại tiền trong miệng bao, vì có lẽ họ nhầm lẫn.
௧௨பணத்தை இருமடங்கு உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கை தவறி வந்திருக்கும்.
13 Các con hãy đem em xuống đó.
௧௩உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்திற்கு மறுபடியும் போங்கள்.
14 Cầu Đức Chúa Trời Toàn Năng cho các con được ông ấy thương xót, để tha cho Si-mê-ôn và Bên-gia-min về với các con. Còn cha nếu phải mất con, cũng đành chịu chứ biết sao.”
௧௪அந்த மனிதன், அங்கிருக்கிற உங்கள் மற்ற சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிட, சர்வவல்லமையுள்ள தேவன் அவனுடைய சமுகத்தில் உங்களுக்கு இரக்கம் கிடைக்கச் செய்வாராக; நானோ பிள்ளையில்லாதவனைப்போல் இருப்பேன்” என்றான்.
15 Các anh em đem lễ vật, hai phần bạc, và dẫn Bên-gia-min xuống Ai Cập; họ ra mắt Giô-sép.
௧௫அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இருமடங்கு பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பயணப்பட்டு, எகிப்திற்குப்போய், யோசேப்புக்கு முன்பாக வந்து நின்றார்கள்.
16 Thấy Bên-gia-min đi với các anh, Giô-sép bảo quản gia: “Anh đưa mấy người này vào nhà và chuẩn bị dọn tiệc, vì trưa nay họ sẽ ăn với ta.”
௧௬பென்யமீன் அவர்களோடுகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: “நீ இந்த மனிதர்களை வீட்டிற்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்செய், மத்தியானத்திலே இந்த மனிதர்கள் என்னோடு சாப்பிடுவார்கள்” என்றான்.
17 Quản gia vâng lệnh, dẫn các anh em vào tư dinh Giô-sép.
௧௭அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதர்களை யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான்.
18 Thấy mình bị dẫn vào nhà Giô-sép, mấy anh em sợ hãi và bảo nhau: “Vì số bạc để lại trong bao, mà họ dẫn chúng ta vào đây để bắt chúng ta làm nô lệ và cướp lừa của chúng ta.”
௧௮தாங்கள் யோசேப்பின் வீட்டிற்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, “முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்திற்காக நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ள நம்மைக்கொண்டுபோகிறார்கள்” என்று சொல்லி,
19 Các anh em bước đến gần cửa và trình với quản gia của Giô-sép:
௧௯யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரனிடம் வந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடு பேசி:
20 “Thưa ông, kỳ trước chúng tôi đến mua lương thực,
௨0“ஆண்டவனே, நாங்கள் தானியம் வாங்க முன்னே வந்துபோனோமே;
21 khi về quán trọ mở bao ra, chúng tôi thấy bạc mỗi người còn nguyên trong miệng bao. Hiện chúng tôi có đem bạc ấy theo đây,
௨௧நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்களுடைய சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கிலே இருந்ததைக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் கொண்டுவந்திருக்கிறோம்.
22 cùng với tiền mua lương thực kỳ này. Ai đã bỏ bạc vào bao, chúng tôi chẳng biết.”
௨௨மேலும், தானியம் வாங்க வேறே பணமும் கொண்டு வந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்களுடைய சாக்குகளில் போட்டது யாரென்று அறியோம்” என்றார்கள்.
23 Quản gia đáp: “Các anh cứ an tâm, đừng sợ. Đức Chúa Trời của các anh và cha của các anh đã cho các anh bạc đó. Còn bạc mua lúa, chúng tôi đã nhận đủ.” Tiếp đó, quản gia thả Si-mê-ôn và đem anh ấy đến với họ.
௨௩அதற்கு அவன்: “உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது” என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.
24 Tất cả anh em được vào dinh Giô-sép, được cho nước rửa chân, và lừa được ăn.
௨௪மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டிற்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான்.
25 Các anh em soạn lễ vật dâng Giô-sép trưa hôm ấy, vì họ được mời ăn tiệc tại dinh.
௨௫தாங்கள் அங்கே சாப்பிடப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டதால், மத்தியானத்தில் யோசேப்பு வரும்வரை காணிக்கையை ஆயத்தமாக வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
26 Khi Giô-sép về, các anh em đem lễ vật đến dâng và quỳ gối sấp mình trước mặt ông.
௨௬யோசேப்பு வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டிற்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைவரைக்கும் குனிந்து, அவனை வணங்கினார்கள்.
27 Ông chào thăm họ và hỏi: “Cha các anh còn sống không? Mạnh khỏe không?”
௨௭அப்பொழுது அவன்: “அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா”? என்று அவர்களிடத்தில் விசாரித்தான்.
28 Họ đáp: “Đầy tớ ông, thân phụ chúng tôi, vẫn còn sống mạnh khỏe.” Họ sấp mình tỏ lòng tôn kính.
௨௮அதற்கு அவர்கள்: “எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார்” என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள்.
29 Giô-sép nhìn thấy Bên-gia-min, em ruột mình, liền hỏi: “Đây có phải em út mà các anh đã hứa đem đến không?” Và tiếp: “Cầu xin Đức Chúa Trời ban phước lành cho em.”
௨௯அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற மகனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, “நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபை செய்யக்கடவர்” என்றான்.
30 Nhìn thấy em, Giô-sép vô cùng xúc động, vội đi vào phòng riêng mà khóc.
௩0யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினதால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, வேகமாக அறைக்குள்ளே போய், அங்கே அழுதான்.
31 Rửa mặt xong, ông bước ra, cố giữ vẻ điềm tĩnh, Giô-sép nói: “Dọn thức ăn đi.”
௩௧பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, “உணவு வையுங்கள்” என்றான்.
32 Người nhà dọn cho Giô-sép ăn riêng, các anh em ngồi bàn khác, và người Ai Cập dự tiệc cũng ngồi riêng, vì người Ai Cập ghê tởm người Hê-bơ-rơ nên không bao giờ ăn chung.
௩௨எகிப்தியர்கள் எபிரெயரோடு சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனியாகவும், அவர்களுக்குத் தனியாகவும், அவனோடு சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனியாகவும் வைத்தார்கள்.
33 Giô-sép xếp các anh em ngồi theo thứ tự, từ anh cả đến em út, khiến họ kinh ngạc nhìn nhau.
௩௩அவனுக்கு முன்பாக, மூத்தவன்முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்.
34 Thức ăn từ bàn Giô-sép đưa qua bàn các anh em. Phần của Bên-gia-min nhiều gấp năm lần của các anh. Ai nấy đều ăn uống vui vẻ với Giô-sép.
௩௪அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த உணவில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லோருடைய பங்குகளைவிட பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் குடித்து, அவனோடு சந்தோஷமாயிருந்தார்கள்.