< Зәбур 112 >

1 Һәмдусана! Пәрвәрдигардин әйминидиған, Униң әмирлирини зор хурсәнлик дәп билидиған адәм бәхитликтур!
அல்லேலூயா. யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும், அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
2 Униң нәсли зиминда туруп күч-қудрәтлик болиду; Дурусларниң дәври бәхитлик болиду.
அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்; நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.
3 Униң өйидә дөләт һәм байлиқлар болиду; Һәққанийлиғи мәңгүгә туриду.
செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.
4 Қараңғулуқта турған дурус адәмгә нур пәйда болиду; У шәпқәтлик, рәһимдил һәм һәққанийдур.
நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்; ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள்.
5 Хәйрхаһ, өтнә берип туридиған адәмниң бәхити болиду; У өз ишлирини адиллиқ билән жүргүзиду.
தாராள மனதுடன் கடன்கொடுத்து, தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.
6 Бәрһәқ, у әбәдий тәвритилмәйду; Һәққаний адәм мәңгүгә әслиниду.
நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்; நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.
7 У шум хәвәрдин қорқмайду; Униң көңли тоқ һалда, Пәрвәрдигарға таянған.
துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது; அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.
8 Дили мәһкәм қилинған, у қорқмайду; Ахирида у рәқиплириниң мәғлубийитини көриду.
அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது; கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான்.
9 У өзиниңкини мәртләрчә тарқатқан, Йоқсулларға бериду; Униң һәққанийлиғи мәңгүгә туриду; Униң мүңгүзи иззәт-шөһрәт билән көтирилиду.
அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்; அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது; அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.
10 Рәзил адәм буни көрүп чидимайду, Чишлирини ғуҗурлитиду, у ерип кетиду; Рәзилләрниң арзу-һәвиси йоқитилиду.
கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்; அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்; கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.

< Зәбур 112 >