< Чөл-баявандики сәпәр 29 >

1 Йәттинчи айниң биринчи күни силәр муқәддәс жиғилиш өткүзүңлар; [у күни] һеч қандақ иш-әмгәк қилмаслиғиңлар керәк. Бу силәр үчүн канайлар челинидиған күни болиду.
“‘ஏழாம் மாதம் முதலாம்தேதி பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு எக்காளங்களை ஊதும் நாளாயிருக்கிறது.
2 Силәр Пәрвәрдигарға аталған, хушбуй кәлтүридиған көйдүрмә қурбанлиқ сүпитидә яш бир топақ, бир қочқар, йәттә бир яшлиқ беҗирим әркәк қозини сунуңлар.
அன்றைய நாளில் ஒரு இளங்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
3 Шуларға қошуп сунулидиған ашлиқ һәдийә зәйтун мейи иләштүрүлгән есил ундин болуп, һәр бир топақ бешиға әфаһниң ондин үчи, қочқар бешиға әфаһниң ондин иккиси,
காளையுடன், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவுடன் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையைச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதம் செலுத்தவேண்டும்.
4 шу йәттә қоза бешиға әфаһниң ондин бири сунулсун;
அவ்விதமே ஏழு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான சிறந்த மாவைச் செலுத்தவேண்டும்.
5 шуниңдәк силәрниң [гунайиңлар үчүн] кафарәт кәлтүрүшкә гуна қурбанлиғи сүпитидә бир текә сунулсун.
உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
6 Шуларни айниң биринчи күнидики көйдүрмә қурбанлиқ вә униңға қошумчә болған ашлиқ һәдийәси, дайимий көйдүрмә қурбанлиқ, униңға қошумчә болған ашлиқ һәдийәси вә буларға қошулидиған шарап һәдийәлириниң сиртида сунуңлар; буларниң һәммиси һәр бири бәлгүлимә бойичә Пәрвәрдигарға атап отта хушбуй кәлтүрсун дәп сунулсун.
இவை குறிப்பிடப்பட்ட மாதாந்திர தகன காணிக்கையுடனும், அன்றாட தகன காணிக்கையுடனும், அவற்றிற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் இவைகளையும் செலுத்தப்பட வேண்டும். இவை மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளாகும்.
7 Йәттинчи айниң онинчи күни силәр муқәддәс жиғилиш өткүзүңлар; нәпсиңларни тартип өзүңларни төвән тутуңлар. У күни һеч қандақ иш-әмгәк қилишқа болмайду.
“‘இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாள் பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் நீங்கள் உங்களை தாழ்மைப்படுத்தி உபவாசிக்கவேண்டும். எந்த வேலையையும் செய்யவேண்டாம்.
8 Силәр Пәрвәрдигарға аталған, хушбуй кәлтүридиған көйдүрмә қурбанлиқ сүпитидә яш бир топақ, бир қочқар, бир яшлиқ әркәк қозидин йәттини сунуңлар (буларниң һәммиси алдиңларда беҗирим көрүнсун).
ஒரு இளம்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
9 Шуларға қошуп сунулидиған ашлиқ һәдийә зәйтун мейи иләштүрүлгән есил ундин болуп, һәр бир топақ бешиға әфаһниң ондин үчи, қочқар бешиға әфаһниң ондин иккиси,
காளையுடன் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து, அதைத் தானிய காணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே கொண்டுவர வேண்டும்.
10 шу йәттә қоза бешиға әфаһниң ондин бирини,
ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும்.
11 шуниңдәк гуна қурбанлиғи сүпитидә бир текә сунуңлар; уларниң һәммиси кафарәт күнидики гуна қурбанлиғи, дайимий көйдүрмә қурбанлиқ, униң қошумчә ашлиқ һәдийәси вә буларниң шарап һәдийәлири биллә сунулсун.
பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதைப் பாவநிவிர்த்திக்கான பாவநிவாரண காணிக்கையுடனும், வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவைகளுக்குரிய பானகாணிக்கைகளோடும் இவைகளையும் செலுத்தவேண்டும்.
12 Йәттинчи айниң он бәшинчи күни муқәддәс жиғилиш өткүзүңлар; у күни һеч қандақ иш-әмгәк қилишқа болмайду. Пәрвәрдигарға атап йәттә күн һейт қилиңлар;
“‘ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியும் ஒரு பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்நாளில் வழக்கமான வேலை எதையுமே செய்யக்கூடாது. ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும்.
13 силәр Пәрвәрдигарға атап, хушбуй кәлтүрсун дәп отта сунулидиған көйдүрмә қурбанлиқ сүпитидә яш топақтин он үчни, икки қочқар, бир яшлиқ әркәк қозидин он төртни сунуңлар (шулар һәммиси беҗирим болсун).
அந்நாளில் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும். பதின்மூன்று இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் தகன காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
14 Шуларға қошуп сунулидиған ашлиқ һәдийә зәйтун мейи иләштүрүлгән есил ундин болуп, он үч топақ бешиға әфаһниң ондин үчи, икки қочқар бешиға әфаһниң ондин иккиси,
அந்த பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுடனும், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களில் ஒவ்வொன்றுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும்.
15 он төрт қоза бешиға әфаһниң ондин бирини,
பதினான்கு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்தில் ஒரு எப்பா அளவான மாவை அவ்விதமே செலுத்தவேண்டும்.
16 шуниңдәк гуна қурбанлиғи сүпитидә бир текә сунуңлар; шуларниң үстигә дайимий көйдүрмә қурбанлиқ, униң қошумчә ашлиқ һәдийәси вә шарап һәдийәси биллә сунулсун.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் கூடுதலாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
17 Иккинчи күни яш топақтин он иккини, икки қочқар, бир яшлиқ әркәк қозидин он төртни сунуңлар (шулар һәммиси беҗирим болсун)
“‘இரண்டாம் நாளில் பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாயிருக்க வேண்டும்.
18 вә шундақла топақлар, қочқарлар вә әркәк қозиларниң саниға қарап бәлгүлимә бойичә қошумчә сунулидиған ашлиқ һәдийәлири билән шарап һәдийәлирини сунуңлар.
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
19 Шуниңдәк гуна қурбанлиғи сүпитидә бир текә сунуңлар; шуларниң үстигә дайимий көйдүрмә қурбанлиқ, униң қошумчә ашлиқ һәдийәси вә шуларниң шарап һәдийәлири биллә сунулсун.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவற்றின் பானகாணிக்கைகளுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 Үчинчи күни бир яш топақтин он бирни, икки қочқар, бир яшлиқ әркәк қозидин он төртни сунуңлар (шулар һәммиси беҗирим болсун)
“‘மூன்றாம் நாளில் பதினோரு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
21 вә шундақла топақлар, қочқарлар вә әркәк қозиларниң саниға қарап бәлгүлимә бойичә қошумчә сунулидиған ашлиқ һәдийәлири билән шарап һәдийәлирини сунуңлар;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
22 шуниңдәк гуна қурбанлиғи сүпитидә бир текә сунуңлар; шуларниң үстигә дайимий көйдүрмә қурбанлиқ, униң қошумчә ашлиқ һәдийәси вә шарап һәдийәси биллә сунулсун.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
23 Төртинчи күни яш топақтин онни, икки қочқар, бир яшлиқ әркәк қозидин он төртни сунуңлар (шулар һәммиси беҗирим болсун)
“‘நான்காம் நாளில் பத்து காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் செலுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
24 вә шундақла топақлар, қочқарлар вә әркәк қозиларниң саниға қарап бәлгүлимә бойичә қошумчә сунулидиған ашлиқ һәдийәлири билән шарап һәдийәлирини сунуңлар;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
25 шуниңдәк гуна қурбанлиғи сүпитидә бир текә сунуңлар; шуларниң үстигә дайимий көйдүрмә қурбанлиқ, униң қошумчә ашлиқ һәдийәси вә шарап һәдийәси биллә сунулсун.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
26 Бәшинчи күни яш топақтин тоққузни, икки қочқар, бир яшлиқ әркәк қозидин он төртни сунуңлар (шулар һәммиси беҗирим болсун)
“‘ஐந்தாம் நாளில் ஒன்பது காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை குறைபாடற்றவையாயிருக்க வேண்டும்.
27 вә шундақла топақлар, қочқарлар вә әркәк қозиларниң саниға қарап бәлгүлимә бойичә қошумчә сунулидиған ашлиқ һәдийәлири билән шарап һәдийәлирини сунуңлар;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
28 шуниңдәк гуна қурбанлиғи сүпитидә бир текә сунуңлар; шуларниң үстигә дайимий көйдүрмә қурбанлиқ, униң қошумчә ашлиқ һәдийәси вә шарап һәдийәси биллә сунулсун.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
29 Алтинчи күни яш топақтин сәккизни, икки қочқар, бир яшлиқ әркәк қозидин он төртни сунуңлар (шулар һәммиси беҗирим болсун)
“‘ஆறாம்நாளில் எட்டுக் காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
30 вә шундақла топақлар, қочқарлар вә әркәк қозиларниң саниға қарап бәлгүлимә бойичә қошумчә сунулидиған ашлиқ һәдийәлири билән шарап һәдийәлирини сунуңлар;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
31 шуниңдәк гуна қурбанлиғи сүпитидә бир текә сунуңлар; шуларниң үстигә дайимий көйдүрмә қурбанлиқ, униң қошумчә ашлиқ һәдийәси вә шарап һәдийәси биллә сунулсун.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
32 Йәттинчи күни яш топақтин йәттини, икки қочқар, бир яшлиқ әркәк қозидин он төртни сунуңлар (шулар һәммиси беҗирим болсун)
“‘ஏழாம்நாளில் ஏழு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
33 вә шундақла топақлар, қочқарлар вә әркәк қозиларниң саниға қарап бәлгүлимә бойичә қошумчә сунулидиған ашлиқ һәдийәлири билән шарап һәдийәлирини сунуңлар;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
34 шуниңдәк гуна қурбанлиғи сүпитидә бир текә сунуңлар; шуларниң үстигә дайимий көйдүрмә қурбанлиқ, униң қошумчә ашлиқ һәдийәси вә шарап һәдийәси биллә сунулсун.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
35 Сәккизинчи күни силәр муқәддәс жиғилиш өткүзүңлар; у күни һеч қандақ иш-әмгәк қилмаңлар.
“‘எட்டாம் நாளில் சபையைக் கூட்டுங்கள். அதில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம்.
36 Силәр Пәрвәрдигарға атап, хушбуй кәлтүрсун дәп отта сунулидиған көйдүрмә қурбанлиқ сүпитидә бир топақ, бир қочқар вә бир яшлиқ әркәк қозидин он төртни (шулар һәммиси беҗирим болсун)
யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையைக் கொண்டுவாருங்கள். ஒரு காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவற்றை தகன காணிக்கையாக கொண்டுவாருங்கள். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
37 һәмдә топақ, қочқар вә әркәк қозиларниң саниға қарап, бәлгүлимә бойичә қошумчә сунулидиған ашлиқ һәдийәлири билән шарап һәдийәлирини сунуңлар;
காளையுடனும், செம்மறியாட்டுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
38 шуниңдәк гуна қурбанлиғи сүпитидиму бир текә сунуңлар; шуларниң үстигә дайимий көйдүрмә қурбанлиқ, униң қошумчә ашлиқ һәдийәси вә шарап һәдийәси биллә сунулсун.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
39 Бәлгүләнгән һейтлириңларда Пәрвәрдигарға атап сунулидиған қурбанлиқ-һәдийәләр әнә шулардур; силәрниң қәсәмгә бағлиқ яки ихтиярән сунидиғанлириңлар, көйдүрмә қурбанлиқлириңлар, ашлиқ һәдийәлириңлар, шарап һәдийәлириңлар вә енақлиқ қурбанлиқлириңлар болса, уларниң сиртидидур.
“‘அத்துடன், நீங்கள் நேர்ந்துகொண்டவைகளுடனும், உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளோடும் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகைகளில் இவைகளையும் யெகோவாவுக்கு ஆயத்தப்படுத்தவேண்டிய காணிக்கைகளாவன: தகன காணிக்கைகள், தானிய காணிக்கைகள், பானகாணிக்கைகள், சமாதான காணிக்கைகள் ஆகிய இவையே’” என்றார்.
40 Шундақ қилип, Муса Пәрвәрдигарниң өзигә буйруғанлириниң һәммисини қалдурмай Исраилларға уқтурди.
யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே இஸ்ரயேலருக்குச் சொன்னான்.

< Чөл-баявандики сәпәр 29 >