< Лавийлар 5 >

1 Әгәр бириси мәлум ишқа гувачи болуп, шундақла униңға қәсәм буйрулғинида көргини яки билгинидин мәлумат бәрмисә, ундақта у қәбиһлигиниң җазасиға тартилиду.
“‘ஒருவன் தான் கண்டிருந்த அல்லது அறிந்திருந்த ஏதாவது ஒன்றைப்பற்றி சாட்சி சொல்லும்படியாக பிறப்பிக்கப்பட்ட பகிரங்கக் கட்டளையைக் கேள்விப்பட்டிருந்தும், அவன் அதைப் சொல்லத்தவறி பாவம்செய்தால், அவன் அதற்கு பொறுப்பேற்கவேண்டும்.
2 Әгәр бириси өзи билмәй напак бир нәрсигә тегип кәтсә — мәйли у напак бир һайванниң җәсити болсун, мәйли напак бир чарпайниң җәсити болсун, яки напак бир өмилигүчи һайванниң җәсити болсун, мошундақ нәрсигә тегип кәтсә уму напак санилип гунакар һесаплиниду;
“‘அசுத்தமான காட்டு மிருகங்கள், அசுத்தமான வீட்டு மிருகங்கள், தரையில் வாழும் அசுத்தமான பிராணிகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களை தொடுகிறவன் எவனும் அதை அறியாதிருந்தாலும், அவன் அசுத்தமாகி, குற்றவாளியாகிறான்.
3 әгәр шуниңдәк бириси өзи туймай мәлум кишиниң адәмни напак қилидиған һәр қандақ ниҗаситигә тегип кәтсә, шундақла у буни билип йәтсә, ундақта у гунакар һесаплиниду.
அல்லது எந்த அசுத்தத்தினாலாவது தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் தொட்டால், அவன் அதை அறியாதிருந்தாலும், அவன் அதை அறிந்துகொள்ளுகிறபோது குற்றவாளியாவான்.
4 Әгәр бириси аңсиз рәвиштә яман яки яхши бир ишни қилай дәп қәсәм қилип салса (кишиләр һәртүрлүк иш тоғрисида аңсиз рәвиштә қәсәм қилиши мүмкин), шундақла у буни тонуп йәтсә, у бу ишлар түпәйлидин гунакар һесаплиниду.
ஒருவன் கவலையீனமாய், வாயில் வந்தபடி முன்யோசனையின்றி, நன்மையான அல்லது தீமையான எதையாவது செய்வதாக சத்தியம் செய்திருந்தால், அவன் அதை அறியாதிருந்தாலும், அவன் அதை அறிந்துகொள்ளுகிறபோது குற்றவாளியாவான்.
5 Бириси жуқуриқи һәр қайси ишларда мән гунакар болдум дәп билсә, у өз гунайини «мән мундақ гуна қилдим» дәп иқрар қилсун;
யாராவது ஒருவன் இவ்விதமான ஒன்றில் குற்றமுள்ளவனாகும்போது, தான் எவ்வகையில் பாவம் செய்தான் என்பதை அவன் அறிக்கை செய்யவேண்டும்.
6 андин өзи садир қилған гунайиниң кафарити үчүн Пәрвәрдигарниң алдиға «итаәтсизликни тилигүчи қурбанлиқ» сүпитидә ушшақ малдин сағлиқ вә я бир чиши өшкини гуна қурбанлиғи қилип кәлтүрсун; андин каһин уни гунайидин пакландурушқа униң үчүн кафарәт кәлтүрсун.
அவன், தான் செய்த பாவத்திற்குத் தண்டனையாக மந்தையிலிருந்து செம்மறியாட்டு பெண்குட்டியையோ அல்லது வெள்ளாட்டு பெண்குட்டியையோ பாவநிவாரண காணிக்கையாக யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அவனுக்காக அவனுடைய பாவத்திற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
7 Әгәр у қойлардин [қурбанлиқ] қилишқа қурби йәтмисә, у қилған итаәтсизлиги үчүн икки пахтәк яки икки бачкини елип келип, бирини гуна қурбанлиғи үчүн, йәнә бирини көйдүрмә қурбанлиқ үчүн Пәрвәрдигарниң алдиға сунсун.
“‘அவன் ஒரு செம்மறியாட்டுக் குட்டியைக் கொடுக்க இயலாதவனாயிருந்தால், அவன் இரண்டு புறாக்களையோ அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையோ தன் பாவத்திற்கான தண்டனையாக யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். அவற்றில் ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகவும், இன்னொன்றைத் தகன காணிக்கையாகவும் கொண்டுவர வேண்டும்.
8 У буларни каһинниң қешиға кәлтүргәндә, [каһин] авал гуна қурбанлиғиға тәйярланғанни қурбанлиқ қилип бойнини үзмәй, бешиға йеқин җайидин толғисун, лекин бешини бойнидин үзүвәтмисун;
அவன் அவைகளை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் முதலாவது, ஒன்றைப் பாவநிவாரண காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவன் அதன் கழுத்திலிருந்து தலையைத் திருகவேண்டும். அதை முழுமையாக துண்டித்துப்போடக் கூடாது.
9 андин гуна қурбанлиғиниң қенидин азғина елип қурбангаһниң темиға чачсун; қалған қени болса қурбангаһниң түвигә сиқип чиқирилсун. Буниң өзи гуна қурбанлиғи болиду.
பாவநிவாரண காணிக்கையின் இரத்தத்தில் கொஞ்சத்தைப் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் தெளிக்கவேண்டும். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் வடியவிடவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை.
10 Амма иккинчисини болса бекитилгән бәлгүлимә бойичә көйдүрмә қурбанлиқ қилип сунсун. Бу йол билән каһин униң қилған гунайи үчүн кафарәт кәлтүриду вә шу гуна униңдин кәчүрүлиду.
விதிக்கப்பட்ட விதிமுறைப்படியே, ஆசாரியன் மற்றப் பறவையைத் தகன காணிக்கையாகச் செலுத்தி, அவன் செய்த பாவத்திற்காக அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவனும் மன்னிக்கப்படுவான்.
11 Әгәр икки пахтәк яки икки бачкини кәлтүрүшкә қурби йәтмисә, ундақта гуна қилған киши гуна қурбанлиғи үчүн есил ундин бир әфаһниң ондин бирини кәлтүрсун; бу гуна қурбанлиғи болғачқа у униң үстигә зәйтун мейи қуймисун яки үстигә һеч қандақ мәстики салмисун; чүнки у гуна қурбанлиғи болиду.
“‘ஆனாலும், இரண்டு புறாக்களையாவது, இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளையாவது கொண்டுவர அவன் இயலாதவனானால், அவன் தன் பாவத்திற்கான காணிக்கையாக, எப்பா அளவான சிறந்த மாவில் பத்தில் ஒரு பங்கை பாவநிவாரண காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். அது பாவநிவாரண காணிக்கையாக இருப்பதால், அந்த மாவின்மேல் எண்ணெயை ஊற்றவோ, நறுமணத்தூளைப் போடவோ கூடாது.
12 У уни каһинниң қешиға кәлтүрсун вә каһин буниңдин [сунғучиниң] «ядлиниш үлүши» сүпитидә бир чаңгал елип, шуни Пәрвәрдигарға атап отта сунулған қурбанлиқларға қошуп, қурбангаһниң үстидә көйдүрсун. Буниң өзи гуна қурбанлиғи болиду.
அவன் அதை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். ஆசாரியன் அந்த மாவிலிருந்து கைப்பிடி அளவுள்ள மாவை ஞாபகார்த்தப் பங்காக எடுத்து, நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளின்மேல் அதை எரிக்கவேண்டும். இது பாவநிவாரண காணிக்கை.
13 Бу йол билән у шу гуналардин қайсисини қилған болса, каһин униң үчүн кафарәт кәлтүриду. Ашлиқ һәдийәләрдикигә охшаш қалған қисми каһинға тәвә болиду.
இவ்விதமாய் ஆசாரியன் அவன் செய்த இந்தப் பாவங்களில் எதற்கானாலும் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவனும் மன்னிக்கப்படுவான். மீதமுள்ள காணிக்கை தானியக் காணிக்கையைப்போலவே ஆசாரியனுக்கு உரியதாகும்.’”
14 Андин Пәрвәрдигар Мусаға сөз қилип мундақ деди: —
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
15 Бириси билмәй Пәрвәрдигарға аталған муқәддәс нәрсиләргә нисбәтән итаәтсизлик қилип гуна өткүзсә, ундақта у Пәрвәрдигарниң алдиға ушшақ малдин беҗирим бир қочқарни итаәтсизлик қурбанлиғи қилип кәлтүрсун; шу итаәтсизлик қурбанлиғи болған қочқарниң баһасини сән муқәддәс җайдики шәкәлниң өлчәм бирлиги бойичә күмүч шәкәлгә тохтатқин.
“ஒருவன் யெகோவாவுக்குரிய பரிசுத்தமானவைகளில் தவறிழைத்து தெரியாமல் பாவம் செய்கிறபோது, அவன் அதற்கான தண்டனையாக ஆட்டு மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவை யெகோவாவிடத்தில் கொண்டுவர வேண்டும். அது குறைபாடற்றதாகவும், பரிசுத்த இடத்தின், ‘சேக்கல்’ நிறையின்படி வெள்ளியில் சரியான மதிப்பு உடையதாகவும் இருக்கவேண்டும். இது ஒரு குற்றநிவாரண காணிக்கை.
16 Андин шу киши муқәддәс нәрсиләргә нисбәтән өткүзгән хаталиғидин болған зиянни толдурсун, шундақла зиянниң бәштин бири бойичә қошуп каһинға төләм төлисун. Бу йол билән каһин итаәтсизлик қурбанлиғи болған қочқарниң вастиси билән униң үчүн кафарәт кәлтүриду; шу гуна униңдин кәчүрүлиду.
பரிசுத்தமானவைகளின் காரியத்தில் அவன் செய்த தவறுக்கு அவன் ஈடுசெய்ய வேண்டும். அவன் அதன் மதிப்புடன், ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்து, அதையெல்லாம் ஆசாரியனிடம் செலுத்தவேண்டும். குற்றநிவாரண காணிக்கையான அந்த செம்மறியாட்டுக் கடாவை, ஆசாரியன் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான்.
17 Әгәр бириси билмәй Пәрвәрдигарниң «қилма» дегән һәр қандақ әмирлириниң бирәрисигә хилаплиқ қилип, гунакар болған болса у қәбиһлигиниң җазасиға тартилиду;
“ஒருவன் பாவம் செய்து, யெகோவாவின் கட்டளைகளினால் தடைசெய்யப்பட்ட எதையாவது செய்தால், அவன் அதை அறியாதிருந்தாலும்கூட, அவன் குற்றவாளியாகிறான். அவன் அதற்குக் கணக்குக் கொடுக்கவேண்டும்.
18 шундақ болса, у ушшақ малдин сән тохтатқан қиммәттә беҗирим бир қочқарни итаәтсизлик қурбанлиғи қилип сунсун. Бу йол билән каһин униң билмәй өткүзгән итаәтсизлиги үчүн кафарәт кәлтүриду вә шу итаәтсизлик гунайи униңдин кәчүрүлиду.
அவன் குற்றநிவாரண காணிக்கையாக, ஆட்டு மந்தையிலுள்ள ஒரு செம்மறியாட்டுக் கடாவை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும். அது குறைபாடற்றதாகவும், தகுந்த மதிப்பு உடையதாகவும் இருக்கவேண்டும். இவ்விதமாய் அவன் தவறுதலாக செய்த பிழைக்காக, ஆசாரியன் அவனுக்காக பாவநிவிர்த்தி செய்வான். அவனும் மன்னிக்கப்படுவான்.
19 Бу итаәтсизлик қурбанлиғи болиду; чүнки у дәрһәқиқәт Пәрвәрдигарниң алдида итаәтсизлик қилған.
இது ஒரு குற்றநிவாரண காணிக்கை. அவன் யெகோவாவுக்கு விரோதமாக பிழை செய்தபடியால் குற்றவாளியாய் இருந்தான்” என்றார்.

< Лавийлар 5 >