< Батур Һакимлар 6 >
1 Исраиллар Пәрвәрдигарниң нәзиридә рәзил болғанни қилди; шуниң билән Пәрвәрдигар уларни йәттә жилғичә Мидиянийларниң қолиға тапшуруп бәрди.
இஸ்ரயேலர் திரும்பவும் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தார்கள். அவர் அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர் கையில் ஒப்புக்கொடுத்தார்.
2 У вақитта Мидиянийлар Исраилниң үстидин ғалип келип, Исраил Мидиянийларниң сәвәвидин өзлири үчүн тағлардин, өңкүрләрдин вә қорам ташлардин панаһ җайларни ясиди.
மீதியானியரின் வலிமையினால் இஸ்ரயேலுக்கெதிரான ஒடுக்குதல் மிகுதியாய் இருந்தது. அதனால் இஸ்ரயேலர் மலைகளின் வெடிப்புகளிலும், குகைகளிலும், அரண்களிலும் தங்களுக்கென கோட்டைகளை அமைத்துக்கொண்டனர்.
3 Һәр қетим Исраиллар уруқ териғанда шундақ болаттики, Мидиянийлар, Амаләкийләр вә мәшриқтикиләр келип уларға һуҗум қилатти.
இஸ்ரயேலர் பயிரிடும் போதெல்லாம் மீதியானியரும், அமலேக்கியரும் மற்றும் கிழக்குத்திசை இனமக்கள் எல்லோரும் நாட்டிற்குள் படையெடுத்தார்கள்.
4 Уларға һуҗум қилишқа баргаһларни тикип, зиминдики һосулни вәйран қилип, Газағичә Исраилға һеч қандақ ашлиқ қалдурмай, уларниң қой, кала, ешәклириниму елип кетәтти.
அங்கே அவர்கள் முகாமிட்டு பயிர்களை காசாவரை அழித்தனர். இஸ்ரயேலருக்கோ செம்மறியாடுகள், கால்நடைகள், கழுதைகள் உட்பட உயிர்வாழும் எவற்றையும் விட்டுவைக்கவில்லை.
5 Чүнки улар чекәткиләрдәк көп болуп, өз мал-чарвилири вә чедирлирини елип келәтти; уларниң адәмлири вә төгилири сан-санақсиз болуп, зиминни вәйран қилиш үчүн таҗавуз қилатти.
தங்களிடமுள்ள வளர்ப்பு மிருகங்களோடும், கூடாரங்களோடும், வெட்டுக்கிளி கூட்டங்கள்போல் வந்தார்கள். அந்த மனிதர்களையும், ஒட்டகங்களையும் எண்ண முடியாதிருந்தது. அவர்கள் நாட்டை சூறையாடி அழிக்கும்படி அதன்மேல் படையெடுத்தார்கள்.
6 Шуниң билән Исраил Мидиянийларниң алдида толиму хар һаләткә чүшүп қалди; андин Исраиллар Пәрвәрдигарға налә-пәряд көтәрди.
இவ்வாறு மீதியானியர் இஸ்ரயேலரை மிகவும் ஏழ்மையாக்கினார்கள். இதனால் இஸ்ரயேலர் தங்களுக்கு உதவிசெய்யும்படி கேட்டு யெகோவாவிடம் அழுதார்கள்.
7 Мидиянийларниң дәстидин Исраил Пәрвәрдигарға пәряд көтәргинидә шундақ болдики,
மீதியானியரின் கொடுமையால் இஸ்ரயேலர் யெகோவாவிடம் அழுதபோது,
8 Пәрвәрдигар Исраилға бир пәйғәмбәрни әвәтти. У келип уларға: — Исраилниң Худаси Пәрвәрдигар мундақ дәйду: «Мән силәрни Мисирдин чиқирип, «қуллуқ макани»дин елип чиққан едим;
அவர் ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன் அவர்களிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: நான் உங்களை அடிமைத்தன நாடான எகிப்திலிருந்து கொண்டுவந்தேன்.
9 силәрни мисирлиқларниң қолидин, шундақла силәргә барлиқ зулум қилғучиларниң қолидин қутқузуп, уларни алдиңлардин қоғливетип, уларниң зиминини силәргә бәрдим
அத்துடன் எகிப்தியரின் வல்லமையிலிருந்தும், ஒடுக்குபவர்கள் எல்லோரினது கையினின்றும் நானே உங்களைப் பிரித்தெடுத்தேன். அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு அவர்களின் நாட்டை உங்களுக்குத் தந்தேன்.
10 вә силәргә: «Мана, Мән Пәрвәрдигар силәрниң Худайиңлардурмән; силәр Аморийларниң зиминида турғиниңлар билән уларниң илаһлиридин қорқмаңлар» дегән едим. Лекин силәр Мениң авазимға қулақ салмидиңлар», — деди.
நான் உங்களிடம், ‘நானே யெகோவா, உங்கள் இறைவனாகிய யெகோவா. இப்பொழுது நீங்கள் வாழும் நாட்டிலுள்ள எமோரியரின் தெய்வங்களை வணங்கவேண்டாம்’ என உங்களுக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்றான்.
11 Андин Пәрвәрдигарниң Пәриштиси келип Офраһ дегән җайда Абиезәр җәмәтидики Йоашқа тәвә болған дуб дәриғиниң түвидә олтарди. У вақитта [Йоашниң] оғли Гидеон Мидиянийларниң [булаңчилиғидин] сақлиниш үчүн шарап көлчиги ичидә буғдай тепивататти.
அதற்கு பின்பு யெகோவாவின் தூதனானவர் வந்து அபியேஸ்ரியனான யோவாசிற்கு சொந்தமான ஒப்ராவிலிருக்கும் கர்வாலி மரத்திற்குக்கீழ் உட்கார்ந்திருந்தார். அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன், மீதியானியருக்குத் தெரியாமல் திராட்சை இரச ஆலையில் கோதுமை அடித்துக் கொண்டிருந்தான்.
12 Пәрвәрдигарниң Пәриштиси униңға көрүнүп: — Әй җасарәтлик палван, Пәрвәрдигар сән билән биллидур! — деди.
அப்பொழுது யெகோவாவின் தூதனானவர் கிதியோனின் முன்தோன்றி, “வலிமைமிக்க வீரனே! யெகோவா உன்னுடன் இருக்கிறார்” என்றார்.
13 Гидеон униңға җавап берип: — И ғоҗам, әгәр Пәрвәрдигар биз билән биллә болған болса, бу көргүлүкләр немишкә үстимизгә кәлди? Ата-бовилиримиз бизгә сөзләп бәргән униң барлиқ мөҗизилири қени? Булар тоғрисида ата-бовилиримиз: «Мана, Пәрвәрдигар бизни Мисирдин чиқирип кәлмигәнмиди?» — деди. Лекин бүгүнки күндә Пәрвәрдигар бизни ташлап, Мидиянниң қолиға тапшуруп бәрди! — деди.
அதற்குக் கிதியோன், “ஐயா, யெகோவா எங்களோடிருந்தால் ஏன் எங்களுக்கு இவையெல்லாம் சம்பவிக்கின்றன? எகிப்தியரின் கையினின்று யெகோவா எங்களை விடுவிக்கவில்லையா! என்று எங்கள் முற்பிதாக்கள் கூறிய அந்த அதிசயங்கள் எங்கே? இப்பொழுதோ யெகோவா எங்களைக் கைவிட்டு மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்து விட்டாரே!” என்றான்.
14 Пәрвәрдигар униңға қарап: — Сән мошу күчүңгә тайинип, берип Исраилни Мидиянниң қолидин қутқузғин! Мана, Мән сени әвәткән әмәсму? — деди.
யெகோவா கிதியோனைத் திரும்பிப்பார்த்து, “உனக்கிருக்கும் பெலத்துடன் நீ போய் இஸ்ரயேல் மக்களை மீதியானியர் கையினின்று காப்பாற்று. உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா!” என்றார்.
15 Гидеон Униңға: — И Рәб, мән Исраилни қандақ қутқузалаймән? Мениң аиләм болса Манассәһ қәбилиси ичидә әң намрити, өзүм атамниң җәмәтидә әң кичигидурмән, — деди.
அதற்கு கிதியோன், “யெகோவாவே! மனாசே கோத்திரத்தில் எனது வம்சம் வலுக்குறைந்தது; என் குடும்பத்திலும் நானே சிறியவனாயிருக்கிறேன். இஸ்ரயேலரைக் காப்பாற்ற எப்படி என்னால் முடியும்?” என்று கேட்டான்.
16 Пәрвәрдигар униңға: — Мән җәзмән сән билән биллә болимән; шуңа сән Мидиянларни бир адәмни урғандәк уруп қирисән, — деди.
அதற்கு யெகோவா, “நான் உன்னுடனே இருப்பேன்; மீதியானியர் எல்லோரையும் ஒரு மனிதனை முறியடிப்பதுபோலவே நீ முறியடிப்பாய்” என்றார்.
17 Гидеон Униңға илтиҗа қилип: — Мән нәзириңдә илтипат тапқан болсам, мән билән сөзләшкүчиниң һәқиқәтән Сән Өзүң екәнлигигә бир аламәт көрсәткәйсән;
அதற்கு கிதியோன், “இப்பொழுது உமது பார்வையில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடம் பேசுபவர் உண்மையாகவே நீர் என்றால் அதற்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்.
18 өтүнимән, мән йенип келип өз һәдийә-қурбанлиғимни алдиңға қойғичә бу йәрдин кәтмигәйсән, — деди. У җавап берип: — Сән йенип кәлгичә күтимән, деди.
நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உமக்கு முன்பாக வைக்கும்வரையும், தயவுசெய்து இவ்விடம் விட்டு நீர் போகவேண்டாம்” எனக் கேட்டான். அதற்கு யெகோவா, “நீ திரும்பி வரும்வரையும் நான் காத்திருப்பேன்” என்றார்.
19 Гидеон берип [өйгә] кирип бир оғлақни тәйярлап, бир әфаһ есил ундин петир нан пиширип, гөшни севәткә селип, шорписини кориға усуп буларни униң қешиға елип келип, униңға сунди (У техичә дуб дәриғиниң түвидә олтиратти).
உடனே கிதியோன் போய் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை பிடித்து சமைத்து, ஒரு எப்பா அளவு மாவில் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டான். இறைச்சியை ஒரு கூடையிலும், குழம்பை ஒரு பானையிலும் ஊற்றி கர்வாலி மரத்தடியில் இருந்தவரிடம் கொண்டுவந்து கொடுத்தான்.
20 Андин Худаниң Пәриштиси униңға: — Бу гөш билән петир нанларни елип берип, мошу йәрдики [қорам] ташниң үстигә қоюп, шорпини төккин, — девиди, у шундақ қилди.
யெகோவாவின் தூதனானவர் அவனிடம், “இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும் எடுத்து இந்த கற்பாறையின்மேல் வைத்து குழம்பை அதன்மேல் ஊற்று” என்றார். கிதியோனும் அப்படியே செய்தான்.
21 Пәрвәрдигарниң Пәриштиси қолидики һасини узитип учини гөш билән петир нанларға тәккүзивиди, [қорам] таштин от чиқип, гөш билән петир нанларни йәп кәтти. Шу һаман Пәрвәрдигарниң Пәриштисиму униң көзидин ғайип болди.
யெகோவாவின் தூதனானவர் தன் கையிலிருந்த கோலின் நுனியால் இறைச்சியையும், அப்பத்தையும் தொட்டார். அப்பொழுது கற்பாறையிலிருந்து நெருப்பு திடீரென எழுந்து இறைச்சியையும், அப்பத்தையும் சுட்டெரித்தது. யெகோவாவின் தூதனானவரும் மறைந்தார்.
22 Шуниң билән Гидеон униң Пәрвәрдигарниң Пәриштиси екәнлигини билип: — Апла, и Рәб Пәрвәрдигар! Чатақ болди, чүнки мән Пәрвәрдигарниң Пәриштиси билән йүзму-йүз көрүшүп қалдим...! — деди.
கிதியோன் தான் கண்டது யெகோவாவின் தூதனானவர் என அறிந்தான்; அப்போது அவன் சத்தமிட்டு, “யெகோவாவாகிய ஆண்டவரே! யெகோவாவின் தூதனானவரை நான் முகமுகமாய்க் கண்டேனே!” என்று வியப்புடன் கூறினான்.
23 Лекин Пәрвәрдигар униңға: — Хатирҗәм болғин! Қорқмиғин, өлмәйсән, — деди.
ஆனால் யெகோவா அவனிடம், “சமாதானமாய் இரு; பயப்படாதே! நீ சாகமாட்டாய்” என்றார்.
24 Шуниң билән Гидеон Пәрвәрдигарға атап у йәрдә бир қурбангаһ ясап, униң исмини «Яһвәһ-шалом» дәп атиди. Бу қурбангаһ та бүгүнгичә Абиезәр җәмәтиниң Офраһ дегән җайида бар.
எனவே கிதியோன் அந்த இடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அவ்விடத்திற்கு யெகோவா ஷாலோம் யெகோவாவே சமாதானம் என்று பெயரிட்டான். அவ்விடம் இந்நாள்வரை அபியேஸ்ரியரின் ஒப்ராவில் இருக்கிறது.
25 У кечиси Пәрвәрдигар униңға: — Сән атаңниң [чоң] буқиси вә йәттә яшлиқ иккинчи буқисини елип атаңға тәвә болған Баал қурбангаһини өрүп, униң йенидики Ашәраһ бутини кесивәткин.
அதே இரவில் யெகோவா அவனிடம், “உன் தகப்பனின் மந்தையிலிருந்து, ஏழு வயது நிரம்பிய இரண்டாம் காளையைப் பிடித்து எடு. உன் தகப்பன் கட்டிய பாகால் பலிபீடத்தை இடித்து, உடைத்து அதன் அருகேயுள்ள மரத்தினாலான அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டிப்போடு.
26 Андин мошу қорғанниң үстигә Пәрвәрдигар Худайиңға аталған, бәлгүләнгән рәсим бойичә бир қурбангаһ ясап, иккинчи бир буқини елип, өзүң кесивәткән Ашәраһниң парчилирини отун қилип қалап, уни көйдүрмә қурбанлиқ қилғин, — деди.
அதன்பின் இந்த மேட்டின் உச்சியிலே உன் இறைவனாகிய யெகோவாவுக்குத் தகுந்தவிதமான ஒரு பலிபீடத்தைக் கட்டு. அதிலே அந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தை வெட்டிய மரத்துண்டுகளை அடுக்கி, அந்த கொழுத்த இரண்டாவது காளையைத் தகன காணிக்கையாக யெகோவாவுக்கு செலுத்து” என்றார்.
27 Шуниң билән Гидеон өз хизмәтчилиридин он адәмни елип берип, Пәрвәрдигарниң өзигә ейтқинидәк қилди; лекин у атисиниң өйидикиләрдин вә шәһәр адәмлиридин қорққини үчүн, у бу ишни күндүзи қилмай, кечиси қилди.
எனவே கிதியோன் தனது பணியாட்களில் பத்துப்பேரை அழைத்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான். ஆனால் கிதியோன் தனது குடும்பத்தவர்களுக்கும், பட்டணத்திலுள்ள மனிதருக்கும் பயந்ததினால் அதை பகலில் செய்யாமல் இரவிலே செய்தான்.
28 Әтиси сәһәрдә шәһәр хәлқи қопуп қариса, мана, Баал қурбангаһи өрүветилгән, униң йенидики Ашәраһ бути кесиветилгән еди вә йеңи ясалған қурбангаһниң үстидә иккинчи буқа қурбанлиқ қилинған еди.
அதிகாலையில் பட்டணத்து மக்கள் எழுந்தபோது, அங்குள்ள பாகாலின் பலிபீடம் இடிக்கப்பட்டிருப்பதையும், அதற்கு அருகேயுள்ள மரத்தாலான அசேரா தெய்வத்தின் கம்பம் வெட்டப்பட்டிருப்பதையும் கண்டார்கள். அதோடு அங்கே புதிதாகக் கட்டிய பலிபீடத்தின்மேல் ஒரு கொளுத்த காளை பலியிடப்பட்டிருப்பதையும் கண்டார்கள்.
29 Буни көрүп улар бир-биригә: — Бу ишни ким қилғанду? — дейишти. Улар сүрүштүривиди, буни Йоашниң оғли Гидеонниң қилғанлиғи мәлум болди.
அப்பொழுது ஒருவரையொருவர், “யார் இதைச் செய்தார்கள்?” என்று கேட்டனர். பின்பு அவர்கள் மிகக் கவனமாக விசாரித்தபோது, “யோவாசின் மகன் கிதியோனே இதைச் செய்தான்” என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
30 Шуниң үчүн шәһәрниң адәмлири Йоашқа: — Оғлуңни чиқирип бәргин! У Баал қурбангаһини өрүп, униң йенидики Ашәраһни кесивәткини үчүн өлтүрүлсун! — деди.
உடனே பட்டணத்து மக்கள் யோவாசிடம் வந்து, “உன் மகன் எங்கள் பாகாலின் பலிபீடத்தை உடைத்து, அதன் அருகிலிருந்த அசேரா தெய்வத்தின் கம்பத்தையும் வெட்டியிருக்கிறான். ஆகையால் அவன் சாகவேண்டும். எனவே அவனை வெளியே கொண்டுவா” என வற்புறுத்திக் கேட்டார்கள்.
31 Бирақ Йоаш өзигә қаршилишишқа турған көпчиликкә җавап берип: — Силәр Баал үчүн дәвалашмақчимусиләр? Силәр уни қутқузмақчиму? Кимки униң тоғрисида дәвалашса әтигә қалмай өлүмгә мәһкүм қилинсун! Әгәр Баал дәрвәқә бир худа болса, ундақта униң қурбангаһини бириси өрүвәткини үчүн, у шу адәм билән өзи дәвалашсун! — деди.
ஆனால் யோவாஸ் தன்னைச் சுற்றிலும் எதிர்த்து நின்ற கூட்டத்தைப் பார்த்து, “நீங்கள் பாகாலுக்காக பரிந்து பேசப்போகிறீர்களோ? அல்லது நீங்கள் பாகாலைக் காப்பாற்றப் போகிறீர்களோ? பாகாலுக்காகச் சண்டையிடுபவன் காலையிலேயே கொல்லப்படவேண்டும். பாகால் உண்மையான தெய்வமானால் தனது பலிபீடத்தை உடைக்கும்போதே தன்னைப் பாதுகாத்திருக்கலாமே?” என்று சொன்னான்.
32 Бу сәвәптин [атиси] Гидеонни «Йәруббаал» дәп атиди, чүнки [атиси]: «У Баалниң қурбангаһини өрүвәткини үчүн, Баал өзи униң билән дәвалашсун!» дегән еди.
அந்த நாளில் அவர்கள் கிதியோனை, “யெருபாகால்” என அழைத்தார்கள். பாகால் பலிபீடத்தை கிதியோன் உடைத்ததால், “பாகாலே அவனுடன் வாதாடட்டும்” என்று சொல்லி இப்படிப் பெயரிட்டார்கள்.
33 Амма Мидиян, Амаләкләр вә мәшриқтикиләрниң һәммиси жиғилип, [Иордан] дәриясидин өтүп Йизрәәл җилғисида чедирлирини тикишти.
சிறிது காலத்தின்பின், மீதியானியர் எல்லோரும், அமலேக்கியரும், கிழக்கு நாட்டு மக்களும் இஸ்ரயேலரை எதிர்த்து ஒன்றுகூடினர். அவர்கள் யோர்தானைக் கடந்துசென்று யெஸ்ராயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்தார்கள்.
34 У вақитта Пәрвәрдигарниң Роһи Гидеонниң үстигә чүшти; у канай челивиди, Абиезәр җәмәтидикиләр жиғилип униң кәйнидин әгишип маңди.
அப்பொழுது யெகோவாவின் ஆவியானவர் கிதியோன்மேல் வந்தார். எனவே அவன் எக்காளம் ஊதி அபியேசரியரைத் தன்னைப் பின்பற்றும்படி அழைத்தான்.
35 Андин у әлчиләрни Манассәһниң зиминиға берип, у йәрни айлинип келишкә әвәтивиди, Манассәһләр жиғилип униңға әгишип кәлди. У Аширларға, Зәбулунларға вә Нафталиларға әлчи әвәтивиди, уларму униң алдиға чиқишти.
பின்பு அவன் மனாசே நாடு முழுவதற்கும் தூதுவர்களை அனுப்பி அவர்களையும் ஆயுதம் தரிக்கும்படி அழைத்தான். அதோடு ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளுக்கும் தூதுவர்களை அனுப்பினான். அவர்களும் அவர்களைச் சந்திக்கப் போனார்கள்.
36 Гидеон Худаға: — Әгәр Сән һәқиқәтән ейтқиниңдәк мениң қолум билән Исраилни қутқузидиған болсаң,
அப்பொழுது கிதியோன் இறைவனிடம், “நீர் வாக்குக் கொடுத்தபடி இஸ்ரயேலை எனது கைகளினால் மீட்பது உண்மையானால்,
37 Ундақта мана, мән хаманға бир парчә қой териси қоюп қойимән; әгәр пәқәт териниң үстигила шәбнәм чүшүп, чөрисидики йәрләрниң һәммиси қуруқ турса, мән Өзүң ейтқиниңдәк мениң қолум арқилиқ Исраилни қутқузмақчи болғиниңни билимән, — деди.
நான் கம்பளியை களத்தில் போடுவேன்; பனி, கம்பளியில் மட்டும் பெய்து எல்லா நிலமும் காய்ந்து காணப்பட்டால், நீர் சொன்னபடி இஸ்ரயேலை என் கையினால் மீட்பீர் என்பதை அறிந்துகொள்வேன்” என்றான்.
38 Иш дәрвәқә шундақ болди. Әтиси сәһәрдә Гидеон қопуп, жуңни сиқивиди, лиқ бир пиялә шәбнәм сүйи чиқти.
கிதியோன் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது அது அப்படியே நடந்திருந்தது. உடனே அவன் கம்பளியைப் பிழிந்து ஒரு கிண்ணம் அளவு தண்ணீரை எடுத்தான்.
39 Андин Гидеон Худаға йәнә: Ғәзивиңни маңа қозғимиғайсән, мән пәқәт мошу бир қетимла дәймән! Сәндин өтүнәй, мән пәқәт йәнә бу қетим бу терә билән синап бақай; илтиҗа қилимәнки, әнди бу қетим пәқәт терә қуруқ болуп, чөрисидики йәрниң һәммисигә шәбнәм чүшкәй, — деди.
பின்பும் கிதியோன் இறைவனிடம், “நீர் என்னோடு கோபங்கொள்ள வேண்டாம். நான் உம்மிடம் கேட்க இன்னும் ஒரு வேண்டுகோள் இருக்கிறது. கம்பளியைக்கொண்டு இன்னும் ஒருமுறை சோதித்துப்பார்க்க இடங்கொடும். இம்முறை கம்பளி காய்ந்திருக்கவும் நிலமெல்லாம் பனியால் நனைந்திருக்கவும் செய்யும்” என்றான்.
40 Бу кечисиму Худа шундақ қилди; дәрвәқә пәқәт терила қуруқ болуп, чөрисидики йәрниң һәммисигә шәбнәм чүшкән еди.
அந்த இரவும் இறைவன் அவ்வாறே செய்தார். கம்பளி மாத்திரம் காய்ந்தும், நிலமெல்லாம் பனியால் நனைந்தும் இருந்தது.