< Йәшая 39 >

1 Шу пәйттә Баладанниң оғли Бабил падишаси Меродақ-Баладан Һәзәкияниң кесәл болуп йетип қалғанлиғини һәм әслигә кәлгәнлигини аңлиғачқа, Һәзәкияға хәтләрни һәдийә билән әвәтти.
அந்நாட்களில் பாபிலோனிய அரசன் பலாதானின் மகன் மெரோதாக்பலாதான், எசேக்கியா வியாதியாயிருந்து குணமடைந்தான் என்பதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் எசேக்கியாவுக்குக் கடிதங்களையும் அன்பளிப்பையும் அனுப்பினான்.
2 Һәзәкия әлчиләрни хошаллиқ билән күтүп, униң ғәзнә-амбарлирида сақланған нәрсилирини көрсәтти; йәни күмүчни, алтунни, дора-дәрманларни, сәрхил майларни, савут-қуралларни сақлайдиған өйниң һәммисини вә байлиқлириниң барлиғини көрсәтти; униң ордиси вә яки пүткүл падишалиғи ичидики нәрсиләрдин Һәзәкия уларға көрсәтмигән бириму қалмиди.
எசேக்கியா அந்தத் தூதுவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். அவன் தனது களஞ்சியங்களிலுள்ள வெள்ளி, தங்கம், நறுமணப் பொருட்கள், சிறந்த எண்ணெய் ஆகியவற்றையும், ஆயுதசாலை முழுவதையும், தனது பொக்கிஷசாலையில் இருந்த எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான். தன் அரண்மனையிலும், தன்னுடைய அரசு முழுவதிலும் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமில்லை.
3 Андин Йәшая пәйғәмбәр Һәзәкияниң алдиға берип, униңдин: — «Мошу кишиләр немә деди? Улар сени йоқлашқа нәдин кәлгән?» — дәп сориди. Һәзәкия: — «Улар жирақ бир жуттин, йәни Бабилдин кәлгән», деди.
அப்பொழுது இறைவாக்கினன் ஏசாயா, எசேக்கியா அரசனிடம் போய், “அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்ன சொன்னார்கள்?” என்று கேட்டான். அதற்கு எசேக்கியா, “தூர நாடான பாபிலோனிலிருந்து என்னிடம் வந்தார்கள்” என்றான்.
4 Йәшая йәнә: — «Улар ордаңда немини көрди?» дәп сориди. Һәзәкия: — «Ордамда бар нәрсиләрни улар көрди; байлиқлиримниң арисидин уларға көрсәтмигән бириму қалмиди» — деди.
இறைவாக்கினன் அவனிடம், “உனது அரண்மனையில் அவர்கள் எதைப் பார்த்தார்கள்?” என்று கேட்டான். அதற்கு எசேக்கியா, “எனது அரண்மனையிலுள்ள எல்லாவற்றையும் அவர்கள் பார்த்தார்கள். எனது பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமேயில்லை” எனப் பதிலளித்தான்.
5 Йәшая Һәзәкияға мундақ деди: — Самави қошунларниң Сәрдари болған Пәрвәрдигарниң сөзини аңлап қойғин: —
அதற்கு ஏசாயா, எசேக்கியாவிடம், “சேனைகளின் யெகோவாவினுடைய வார்த்தையைக் கேள்:
6 — Мана шундақ күнләр келидуки, ордаңда бар нәрсиләр вә бүгүнгә қәдәр ата-бовилириң топлап, сақлап қойған һәммә нәрсә Бабилға елип кетилиду; һеч нәрсә қалмайду — дәйду Пәрвәрдигар,
உனது அரண்மனையில் உள்ள ஒவ்வொன்றும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்து வைத்த யாவும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும் காலம் நிச்சயமாக வரும். அவைகளில் ஒன்றாகிலும் மீந்திருக்காது என்று யெகோவா கூறுகிறார்.
7 — һәмдә [Бабиллиқлар] оғуллириңни, йәни өзүңдин болған әвлатлириңни елип кетиду; шуниң билән улар Бабил падишасиниң ордисида ағват болиду.
மேலும் உனது சொந்த மாம்சமும் இரத்தமுமாக உனக்குப் பிறக்கப்போகும் உனது சந்ததிகள் சிலரும் சிறைப்பிடிக்கப்பட்டு, பாபிலோனிய அரசனின் அரண்மனையில் அண்ணகர்கள் ஆக்கப்படுவார்கள்” என்றான்.
8 Шуниң билән Һәзәкия өз-өзигә: «Өз күнлиримдә болса аман-течлиқ, [Худаниң] һәқиқәт-вапалиғи болидикәнғу» дәп, Йәшаяға: — «Сиз ейтқан Пәрвәрдигарниң мошу сөзи яхши екән» — деди.
அதற்கு எசேக்கியா ஏசாயாவை நோக்கி, “நீர் சொன்னது யெகோவாவினுடைய வார்த்தை என்றால் அது நல்லதுதான்” என்று கூறினான். ஏனெனில், “எனது வாழ்நாளிலாவது சமாதானமும் பாதுகாப்பும் நிலவுமே” என அவன் எண்ணினான்.

< Йәшая 39 >