< Һошия 4 >

1 Пәрвәрдигарниң сөзини аңлаңлар, и Исраил балилири; чүнки Пәрвәрдигарниң зиминда туруватқанлар билән қилидиған дәваси бар; чүнки зиминда һеч һәқиқәт, һеч меһриванлиқ, Худани һеч билиш-тонуш йоқтур;
இஸ்ரயேலரே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; நாட்டில் வாழ்கிற உங்களுக்கு எதிராகக் கொண்டுவரும்படி, ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது: நாட்டில் உண்மையும் அன்பும் இல்லை, இறைவனை அறியும் அறிவு இல்லை.
2 Қарғаш-тиллаш, ялғанчилиқ, қатиллиқ, оғрилиқ, зинахорлуқ — булар зиминда ямрап кәтти; қан үстигә қан төкүлиду.
அங்கே சாபமிடுதலும், பொய்யும், கொலையும், களவும், விபசாரமும் மட்டுமே உண்டு; அவர்கள் எல்லைமீறிப் போகின்றனர், இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகின்றது.
3 Мана шу сәвәптин зимин матәм тутиду, униңда туруватқанларниң һәммиси җүдәп кетиду; улар даладики һайванлар һәм асмандики учар-қанатлар билән биллә җүдәп кетиду; бәрһәқ, деңиздики белиқларму йәп кетилиду.
இதனால் நாடு துக்கத்தோடிருக்கிறது, அங்கு வாழும் யாவரும் நலிந்துபோகிறார்கள். வெளியின் மிருகங்களும், ஆகாயத்துப் பறவைகளும், கடலில் உள்ள மீன்களும் சாகின்றன.
4 Әнди һеч ким дәва қилишмисун, һеч ким әйипләшмисун; чүнки Мениң дәвайим дәл сән билән, и каһин!
ஆசாரியர்களே நீங்கள் ஒரு குற்றச்சாட்டையும் கொண்டுவர வேண்டாம். ஒருவன் இன்னொருவனைச் குற்றஞ்சாட்டவும் வேண்டாம். ஏனெனில் உங்கள் மக்கள் ஆசாரியனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருகிறவர்கள் போலிருக்கிறார்கள்; ஆசாரியர்களே, என் வழக்கு உங்களோடுதான்.
5 Сән күндүздә путлишип жиқилисән; пәйғәмбәрму сән билән кечидә тәң путлишип жиқилиду; вә Мән анаңни һалак қилимән.
நீங்கள் இரவிலும் பகலிலும் இடறிவிழுகிறீர்கள்; இறைவாக்கினரும் உங்களுடன் விழுகிறார்கள். எனவே நான் உங்கள் தாயை, இஸ்ரயேல் தேசத்தை அழிப்பேன்.
6 Мениң хәлқим билимсизликтин һалак қилинди; вә сәнму билимни чәткә қаққан екәнсән, Мәнму сени чәткә қақимәнки, сән Маңа йәнә һеч каһин болмайсән; Худайиңниң қанун-көрсәтмисини унтуғанлиғиң түпәйлидин, Мәнму сениң балилириңни унтуймән.
எனது மக்கள் அறிவில்லாததினால் அழிந்துபோகிறார்கள். “நீங்கள் அறிவைப் புறக்கணித்திருக்கிறீர்கள், அதனால் நானும் உங்களை என் ஆசாரியர்களாய் இராதபடிக்கு புறக்கணிப்பேன். நீங்கள் உங்கள் இறைவனின் சட்டத்தை மறந்தபடியால், நானும் உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்க மறந்துவிடுவேன்.
7 Улар көпәйгәнсери, Маңа қарши көп гуна садир қилди; Мән уларниң шан-шәривини шәрмәндичиликкә айландуруветимән.
ஆசாரியர்கள் அநேகராய்ப் பெருகியபோது, அவர்கள் எனக்கெதிராக அதிகமாகப் பாவம் செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய மகிமையான இறைவனை வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்கு மாற்றினார்கள்.
8 Улар хәлқимниң гунайини йәйдиған болғачқа, Уларниң җени [хәлқимниң] қәбиһлигигә интизар болиду.
எனது மக்களின் பாவத்தில் ஆசாரியர்கள் தின்று பிழைத்து, அவர்களது கொடுமையில் ஆவலாயிருக்கிறார்கள்.
9 Вә хәлқим қандақ болса, каһинларму шундақ болиду; Мән [каһинларниң] тутқан йоллирини өз үстигә чүшүримән, өз қилмишлирини бешиға қайтуримән.
அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும். எனவே அவர்களின் தீயவழிகளுக்காக நான் அவர்கள் இரு சாராரையும் தண்டிப்பேன். அவர்கள் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நான் பதிலளிப்பேன்.
10 Улар йәйду, бирақ тоймайду, Улар паһишилик қилиду, бирақ һеч көпәймәйду; Чүнки улар Пәрвәрдигарни тиңшашни ташлап кәтти,
“அவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடையமாட்டார்கள்; அவர்கள் வேசித்தனத்தில் ஈடுபட்டாலும் பலுகமாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் தங்கள் வேசித்தனத்திற்காக யெகோவாவைக் கைவிட்டார்கள்.
11 Өзлирини паһишилик, шарап вә йеңи шарапқа беғишлиди; Бу ишлар адәмниң әқил-зеһнини булап кетиду.
புது மற்றும் பழைய திராட்சை இரசம் எனது மக்களின் விளங்கிக்கொள்ளும் ஆற்றலை பரித்துவிட்டது.
12 Хәлқим өз тайиғидин йолйоруқ сорайду, Уларниң һасиси уларға йол көрситәрмиш! Чүнки паһишиликниң роһи уларни аздуриду, Улар Худасиниң һимайиси астидин паһишиликкә чиқип,
எனது மக்கள் மர விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் பதில் தருமென்றிருக்கிறார்கள். வேசித்தனத்தின் ஆவி அவர்களை வழிவிலகச் செய்கிறது; அவர்கள் தங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்.
13 Тағ чоққилирида қурбанлиқ қилиду, Дөң-егизликләрдә, шундақла сайиси яхши болғачқа дуб вә терәк вә қарияғачлар астидиму исриқ салиду; Шуңа қизлириңлар паһишилик, келинлириңларму зинахорлуқ қилиду.
அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் தகன காணிக்கைகளைப் பலியிடுகிறார்கள். எனவே உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்கும், மருமகள்கள் விபசாரத்திற்கும் திரும்புகிறார்கள்.
14 Мән қизлириңларни паһишиликлири үчүн, Яки келинлириңларни зинахорлуқлири үчүн җазалимаймән; Чүнки [атилири] өзлириму паһишиләр билән сиртқа чиқиду, «Бутхана паһишә»лири билән биллә қурбанлиқ қилиду; Шуниң билән йорутулмиған бир хәлиқ жиқитилиду.
“உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்குத் திரும்பும்போதும், மருமகள்கள் விபசாரம் செய்யும்போதும் நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன். ஏனெனில் ஆண்களும் வேசிகளுடன் பாலுறவுகொண்டு, கோவில் வேசிகளுடன் பலியிடுகிறார்கள், அறிவில்லாத அம்மக்கள் சீரழிந்து போவார்கள்.
15 Сән, и Исраил, паһишилик қилишиң билән, Йәһуда гунаға четилип қалмисун! Нә Гилгалға кәлмәңлар, нә «Бәйт-Авән»гә чиқмаңлар, Нә «Пәрвәрдигарниң һаяти билән!» дәп қәсәм қилмаңлар.
“இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாயிருக்கட்டும். “நீ கில்காலுக்குப் போகவேண்டாம்; பெத்தாவேனுக்கும் போகவேண்டாம். ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று ஆணையிடவும் வேண்டாம்.
16 Чүнки тәрса бир қисир инәктәк, Исраил тәрсалиқ қилиду; Пәрвәрдигар қандақму пахланни баққандәк, уларни кәң бир яйлақта озуқландурсун?
இஸ்ரயேலரோ அடங்காத இளம் பசுவைப்போல் பிடிவாதமாயிருக்கிறார்கள். அப்படியிருக்க, யெகோவா எப்படி புல்வெளியில் செம்மறியாட்டுக் குட்டிகளை மேய்ப்பதுபோல அவர்களை மேய்க்க முடியும்?
17 Әфраим бутларға чаплашти; Униң билән һеч кимниң кари болмисун!
எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்; அவனைத் தனியே விட்டுவிடு!
18 Уларниң шараби түгиши биләнла, Улар өзлирини паһишиликкә беғишлайду; Уларниң есилзадилири номуссизлиққа әсәбийләрчә мәптун болди.
அவர்களுடைய மதுபானங்கள் முடிந்துபோனாலும், அவர்கள் எப்போதும் தங்கள் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள்; அவர்களுடைய ஆளுநர்கள் வெட்கக்கேடான வழிகளை ஆவலுடன் விரும்புகிறார்கள்.
19 Бир шамал-роһ уларни қанатлири ичигә оривалди, Улар қурбанлиқлири түпәйлидин иза-аһанәткә қалиду.
சுழல் காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும், அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கும் பலிகள் அவர்களுக்கு வெட்கத்தையே கொண்டுவரும்.

< Һошия 4 >