< Мисирдин чиқиш 4 >

1 Муса җавап берип: — Мана, улар маңа ишәнмәй туруп, сөзүмгә қулақ салмайду, бәлки: «Пәрвәрдигар саңа көрүнмиди», дейиши мүмкин, деди.
மோசே மறுமொழியாக, “அவர்கள் என்னை நம்பாமலும், நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும், ‘யெகோவா உனக்கு காட்சி அளிக்கவில்லை’ என்று சொல்வார்களானால் நான் என்ன செய்வேன்?” என்றான்.
2 Пәрвәрдигар униңға: — Қолуңдики бу немә? — дәп сориди. У: — Бу бир һаса, дәп җавап бәрди.
அதற்கு யெகோவா அவனிடம், “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். “ஒரு கோல்” என்றான்.
3 У: — Уни йәргә ташла, деди. Уни йәргә ташливиди, у бир иланға айланди; Муса униң алдидин қачти.
“அதைத் தரையில் எறிந்துவிடு” என்று யெகோவா சொன்னார். மோசே அதைத் தரையில் எறிந்தபோது அது பாம்பாக மாறியது, மோசே விலகி ஓடினான்.
4 Андин Пәрвәрдигар Мусаға: — Қолуңни узитип, уни қуйруғидин тут, девиди, у қолини узитип, уни тутти. У йәнә униң қолида һасиға айланди.
அப்பொழுது யெகோவா, “உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடித்துத் தூக்கு” என்று சொன்னார். மோசே கையை நீட்டி பாம்பைப் பிடித்தான்; அது அவன் கையில் கோலாக மாறியது.
5 [Пәрвәрдигар йәнә]: — Буниң билән улар ата-бовилириниң Худаси, йәни Ибраһимниң Худаси, Исһақниң Худаси вә Яқупниң Худаси болған Пәрвәрдигарниң саңа көрүнгинигә ишиниду, — деди.
“ஆபிரகாமின் இறைவனும், ஈசாக்கின் இறைவனும், யாக்கோபின் இறைவனுமான அவர்களின் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவா, உனக்கு காட்சியளித்திருக்கிறார் என்பதை அவர்கள் நம்பும்படி இதுவே அடையாளம்” என்று யெகோவா சொன்னார்.
6 Пәрвәрдигар униңға йәнә: — Қолуңни қойнуңға салғин, девиди, у қолини қойниға селип чиқиривиди, мана, қоли песә-мохо кесилигә гириптар болуп қардәк ақирип кәтти.
மேலும் யெகோவா மோசேயிடம், “உன் கையை உன் மேலங்கியினுள் வை” என்றார். எனவே மோசே தன் கையை மேலங்கிக்குள் வைத்தான்; அவன் அதை வெளியே எடுத்தபோது, அவனுடைய கை உறைபனியைப்போல் குஷ்டமாகியிருந்தது.
7 Андин униңға: — Қолуңни йәнә қойнуңға салғин, девиди, қолини қойниға салди. Уни йәнә қойнидин чиқиривиди, мана, өз әксигә келип әтлириниң башқа йәрлиридәк болди.
“இப்பொழுது திரும்ப உனது கையை மேலங்கிக்குள் வை” என்றார். அப்படியே மோசே, மறுபடியும் அங்கிக்குள் கையை வைத்தான். திரும்பவும் கையை வெளியே எடுத்தபோது, அது சுகமடைந்து உடலின் மற்ற பகுதிகளைப்போல் மாறினது.
8 Пәрвәрдигар йәнә: — Шундақ болидуки, әгәр улар саңа ишәнмәй, алдинқи мөҗизилик аламәтгә көңүлшимисә, улар иккинчи мөҗизилик аламәткә ишиниду.
பின்பு யெகோவா, “அவர்கள் உன்னை நம்பாமல் அல்லது முதல் அற்புத அடையாளத்தைக் கவனிக்காமல் விட்டிருந்தாலும், இரண்டாவதை நம்பக்கூடும்.
9 Һалбуки, улар бу икки мөҗизигә йәнила ишәнмисә вә я сөзүңгә қулақ салмиса, ундақта сән [Нил] дәриясиниң сүйидин елип, қуруқ йәргә төккин. Шуниң билән сән дәриядин алған су қуруқ йәр үстидә қанға айлиниду, деди.
இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமல் அல்லது உனக்குச் செவிகொடுக்காமல் போனால், நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து, அதைக் காய்ந்த தரையில் ஊற்று; நீ நதியிலிருந்து எடுக்கிற தண்ணீர் தரையில் இரத்தமாய் மாறிவிடும்” என்றார்.
10 Андин Муса Пәрвәрдигарға: — Әй Егәм, мән әслидинла гәпкә уста әмәстим, сән қулуңға сөз қилғандин кейинму йәнила шундақ; чүнки мән ағзим калва вә тилим еғир адәммән, — деди.
அதற்கு மோசே யெகோவாவிடம், “யெகோவாவே, கடந்த காலத்திலோ அல்லது நீர் உமது அடியானுடன் பேசியதிலிருந்தோ, நான் ஒருபோதும் பேச்சுத்திறன் உடையவனாய் இருக்கவில்லை; என் வாய் திக்கும், என் நாவு குழறும்.”
11 Пәрвәрдигар униңға: — Ким инсанға еғиз бәргән? Ким адәмни гача яки гас, көргүчи яки кор қилған? Шундақ қилғучи Мән Пәрвәрдигар әмәсму?
அப்பொழுது யெகோவா அவனிடம், “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? அவனை ஊமையாகவோ செவிடாகவோ ஆக்குகிறவர் யார்? அவனுக்கு பார்வையைக் கொடுப்பதோ, அவனைக் குருடனாக்குவதோ யார்? யெகோவாவாகிய நான் அல்லவா?
12 Әнди сән барғин, Мән Өзүм сениң ағзиң билән биллә болимән, немә сөзләйдиғиниңни саңа үгитип туримән, — деди.
இப்பொழுதே நீ போ; பேசுவதற்கு நான் உனக்கு உதவிசெய்து, நீ சொல்ல வேண்டியதையும் உனக்குப் போதிப்பேன்” என்றார்.
13 Лекин у: — Әй Егәм! Сәндин өтүнүп қалай, Сән [бу ишқа] халиған [башқа] бирисини әвәтип, шуниң қоли билән қилғин! — деди.
அதற்கு மோசேயோ, “யெகோவாவே, தயவுசெய்து இதைச் செய்வதற்கு வேறொருவனை அனுப்பும்” என்றான்.
14 Буни аңлап Пәрвәрдигарниң ғәзиви Мусаға тутишип: — Лавийлардин болған акаң Һарун бар әмәсму? Униң гәпни убдан қилалайдиғинини билимән. Мана, у әнди сениң алдиңға чиқишқа аллиқачан йолға чиқти; у сени көрсә, көңли толиму хуш болиду.
அதனால் மோசேக்கு எதிராக யெகோவாவின் கடுங்கோபம் மூண்டது; அவர், “அப்படியானால் லேவியனாகிய உன் சகோதரன் ஆரோன் இருக்கிறான் அல்லவா? அவன் நன்றாகப் பேசுவான் என்பதை நான் அறிவேன். அவன் உன்னைச் சந்திப்பதற்கு வந்துகொண்டிருக்கிறான், உன்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைவான்.
15 Әнди дәйдиған гәпләрни униңға ейт; Мән Өзүм сениң ағзиң билән биллә вә униң ағзи билән биллә болимән, немә қилиш керәклигиңларни силәргә үгитимән.
நீ அவனுடன் பேசி, அவன் சொல்லவேண்டிய வார்த்தைகளை அவனுக்குச் சொல்வாய்; அப்பொழுது நான் உங்கள் இருவருக்கும் பேசுவதற்கு உதவிசெய்து, நீங்கள் செய்யவேண்டியதையும் உங்களுக்குப் போதிப்பேன்.
16 Һарун сениң орнуңда хәлиққә сөзләйду; шундақ болидуки, у саңа еғиз болиду, сән униңға Худадәк болисән.
அவன் உனக்காக மக்களிடம் பேசுவான், அவன் உனக்கு வாய் போலிருப்பான்; நீ அவனுக்கு இறைவன்போல் இருப்பாய்.
17 Бу һасини қолуңға елип, униң билән шу мөҗизилик аламәтләрни көрситисән, — деди.
ஆனாலும் நீ இந்தக் கோலை கையில் கொண்டுபோ; இதைக்கொண்டு அற்புத அடையாளங்களை உன்னால் செய்யமுடியும்” என்றார்.
18 Шуниң билән Муса қейинатиси Йәтрониң қешиға йенип берип, униңға: — Маңа иҗазәт бәргәйла, Мисирдики қериндашлиримниң қешиға барай, улар һаятму, әмәсму көрүп келәй, деди. Йәтро Мусаға: — Аман-есән берип кәлгин, — деди.
அதன்பின் மோசே தன் மாமனார் எத்திரோவிடம் திரும்பிப்போய் அவனிடம், “நான் எகிப்திலுள்ள என் சொந்த மக்களிடம் மறுபடியும்போய், அவர்களில் யாராவது இன்னும் உயிரோடிருக்கிறார்களா, என்று பார்க்க என்னைப் போகவிடும்” என்றான். அதற்கு எத்திரோ, “என் நல்வாழ்த்துகள்; நீ போய்வா” என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தான்.
19 Муса техи Мидияндики вақтида, Пәрвәрдигар униңға йәнә: — Мисирға йенип барғин! Чүнки сениң җениңни истигән кишиләр өлүп кәтти, — деди.
மீதியான் தேசத்தில் யெகோவா மோசேயிடம், “உன்னைக் கொலைசெய்ய எண்ணியிருந்தவர்களான எல்லோரும் இறந்துவிட்டார்கள். ஆகையால், நீ எகிப்திற்குத் திரும்பவும் போ” என்று சொல்லியிருந்தார்.
20 Шуниң билән Муса аяли вә оғуллирини елип, уларни бир ешәккә миндүрүп, Мисир зиминиға беришқа йолға чиқти. Маңғанда Муса Худаниң һасисини алғач кәтти.
எனவே மோசே தன் மனைவியையும், மகன்களையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு எகிப்திற்குப் போகப் புறப்பட்டான். மோசே இறைவனின் கோலை தன்னுடன் எடுத்துச் சென்றான்.
21 Пәрвәрдигар Мусаға: — Мисирға йенип барғиниңда сән агаһ бол, Мән қолуңға тапшурған барлиқ карамәтләрни Пирәвнниң алдида көрсәткин. Лекин Мән униң көңлини хәлиқни қоюп бәрмигидәк қаттиқ қилимән.
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “நீ எகிப்திற்குத் திரும்பிப் போனபின்பு, நான் உனக்குக் கொடுத்த அற்புதங்களை எல்லாம் என் வல்லமையைக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாகச் செய்துகாட்டு; ஆனால் நானோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்துவேன். அதனால் அவன் மக்களைப் போகவிடமாட்டான்.
22 Сән Пирәвнгә: — «Пәрвәрдигар мундақ дәйду: — Исраил Мениң оғлум, Мениң тунҗа оғлум болиду.
அப்பொழுது நீ பார்வோனிடம், ‘யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேல் எனது முதற்பேறான மகன்,
23 Шуниң үчүн Мән саңа: Оғлумни Өзүмгә ибадәт қилишқа қоюп бәр, дедим. Униңға йол қоюшни рәт қилидиған болсаң, сениң тунҗа оғлуңни өлтүримән» — дегин, — деди.
என் மகனை என்னை வழிபடும்படி போகவிடு என்று நான் உனக்குச் சொன்னேன்; ஆனால் நீயோ, அவனைப் போகவிட மறுத்தாய்; ஆகையால் நான் உன்னுடைய முதற்பேறான மகனைக் கொல்லுவேன்’ என்கிறார் என்று சொல்” என்றார்.
24 Амма Муса сәпәр қилип бир қоналғуға кәлгәндә, Пәрвәрдигар униңға учрап, уни өлтүрүвәтмәкчи болди.
மோசே பயணம் செய்யும் வழியில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் யெகோவா மோசேயை எதிர்த்து, அவனைக் கொல்ல முயன்றார்.
25 Шуниң билән Зиппораһ бир чақмақ тешини елип, оғлиниң хәтнилигини кесип, уни ериниң айиғиға ташлап: — Сән дәрвәқә алдимда қан төкәр әр екәнсән! — деди.
உடனே சிப்போராள் ஒரு கூர்மையானக் கல்லை எடுத்து, தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து, அதனால் மோசேயின் பாதங்களைத் தொட்டு, “நிச்சயமாக நீர் எனக்கு இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்றாள்.
26 Шуниң билән Пәрвәрдигар уни қоюп бәрди (бу чағда Зиппораһ униңға: «Сән дәрвәқә алдимда қан төкәр бир әр екәнсән!» — деди. Бу сөзини у хәтнә түпәйлидин ейтти).
எனவே யெகோவா அவனை விட்டுவிட்டார். “இரத்தத்தினால் உரிமையான மணமகன்” என்று விருத்தசேதனத்தைக் குறித்தே அந்நேரத்தில் அவள் சொன்னாள்.
27 Пәрвәрдигар Һарунға: — Сән чөл-баяванға берип, Муса билән көрүшкин, девиди, у берип Худаниң теғида униң билән учришип, уни сөйди.
யெகோவா ஆரோனிடம், “மோசேயைச் சந்திப்பதற்காகப் பாலைவனத்திற்குப் போ” என்றார். அதன்படியே ஆரோன் இறைவனின் மலையில் மோசேயைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான்.
28 Муса өзини әвәткән Пәрвәрдигарниң һәммә сөзлири билән қилишқа буйруған барлиқ мөҗизилик аламәтләрни Һарунға дәп бәрди.
அப்பொழுது மோசே யெகோவா தன்னை அனுப்பிச் சொல்லும்படிச் சொன்ன எல்லாவற்றையும் ஆரோனிடம் கூறினான். அத்துடன் அவர் தனக்குச் செய்யும்படி கட்டளையிட்ட அற்புத அடையாளங்களைப் பற்றியும் சொன்னான்.
29 Андин Муса билән Һарун берип, Исраилларниң барлиқ ақсақаллирини жиғди.
மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் எல்லோரையும் கூடிவரச் செய்தார்கள்.
30 Һарун Пәрвәрдигарниң Мусаға ейтқан һәммә сөзлирини баян қилди вә хәлиқниң көз алдида шу мөҗизилик аламәтләрни көрсәтти.
அப்பொழுது யெகோவா மோசேக்குச் சொல்லியிருந்த எல்லாவற்றையும் ஆரோன் அவர்களிடம் கூறினான், அவன் அந்த அடையாளங்களையும் மக்களுக்குமுன் செய்துகாட்டினான்.
31 Буни көрүп, хәлиқ ишәнди; Пәрвәрдигарниң Исраилларни йоқлап, улар учриған харлиқларни көргәнлигини аңлиған һаман, башлирини егип сәҗдә қилишти.
அவர்கள் நம்பினார்கள். யெகோவா இஸ்ரயேலர்களில் கரிசனையாய் இருக்கிறார் என்றும், தங்கள் அவலத்தைக் கண்டிருக்கிறார் என்றும் அவர்கள் கேள்விப்பட்டபோது, அவர்கள் தலைகுனிந்து வழிபட்டார்கள்.

< Мисирдин чиқиш 4 >