< Мисирдин чиқиш 30 >

1 Сән йәнә хушбуй яндуруш үчүн бир хушбуйгаһни ясатқин; уни акатсийә яғичидин тәйярлиғин.
“நறுமணத்தூளை எரிப்பதற்கு ஒரு தூபபீடத்தை சித்தீம் மரத்தினால் செய்யவேண்டும்.
2 У төрт часа, узунлуғи бир гәз, кәңлиги бир гәз, егизлиги икки гәз болсун. Униң [төрт бүҗигидики] мүңгүзләр униң билән бир пүтүн қилип ясалсун.
அது ஒரு முழம் நீளமும் ஒரு முழம் அகலமுமுள்ள சதுர வடிவில், இரண்டு முழம் உயரமுள்ளதாய் இருக்கவேண்டும். அதன் கொம்புகள் அதனுடன் இணைந்ததாய் இருக்கவேண்டும்.
3 Сән уни, йәни униң үстини, төрт әтрапини һәм мүңгүзлирини сап алтун билән қаплатқин; униң үсти қисминиң чөрисигә алтундин гирвәк чиқарғин.
அதன் மேல்பகுதியையும், அதன் எல்லா பக்கங்களையும், கொம்புகளையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, அதைச் சுற்றிலும் தங்க விளிம்புச்சட்டத்தை அமைக்கவேண்டும்.
4 Униңға алтундин икки һалқа ясап, униң гирвикиниң астиға бекиткин; уларни икки йениға удулму удул бекиткин. Хушбуйгаһни көтиридиған икки балдақни селиш үчүн буларни хушбуйгаһниң икки тәрипигә орунлаштурғин.
தூபபீடத்தின் தங்க விளிம்புச்சட்டத்துக்குக் கீழே இரண்டு தங்க வளையங்களை இரண்டு பக்கங்களிலும் அமைக்கவேண்டும். அதைச் சுமப்பதற்கான கம்புகளை அதற்குள் மாட்டும்படி எதிரெதிராக அவைகளை அமைக்கவேண்டும்.
5 Балдақлирини акатсийә яғичидин ясап, алтун билән қаплиғин.
அந்தக் கம்புகளையும் சித்தீம் மரத்தினால் செய்து, தங்கத்தகட்டால் மூடவேண்டும்.
6 Хушбуйгаһни һөкүм-гувалиқ сандуғиниң удулидики пәрдиниң сиртиға, йәни Мән сән билән көришидиған җай болған һөкүм-гувалиқ сандуғиниң үстидики кафарәт тәхтиниң удулиға қойғин.
தூபபீடத்தை சாட்சிப்பெட்டியின் முன் இருக்கும் திரைக்கு முன்னால் வைக்கவேண்டும். அது நான் உன்னைச் சந்திக்கும் இடமான, சாட்சிப்பெட்டியை மூடியிருக்கும் கிருபாசனத்தின் முன்னே இருக்குமிடம்.
7 Һарун шуниң үстидә есил хушбуй әтирни яндурсун; һәр күни әтигәнлиги чирақларни пәрлигили кәлгәндә, хушбуйларни яндурсун.
“ஆரோன் காலைதோறும் விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போது நறுமணத்தூளை எரிக்கவேண்டும்.
8 Шуниңдәк Һарун гугумда чирақларни тизип яққанда, хушбуй яндурсун. Шундақ қилип Пәрвәрдигарниң алдида нәсилдин-нәсилгә хушбуй һемишә өчүрүлмәй йениқ болиду.
பொழுதுபடும் நேரத்தில் அவன் விளக்கேற்றும்போது, திரும்பவும் நறுமணத்தூளை எரிக்கவேண்டும். இவ்விதமாக தலைமுறைதோறும் இந்த நறுமணத்தூள் யெகோவாவுக்குமுன் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக எரிந்துகொண்டிருக்கும்.
9 Силәр униң үстидә нә һеч қандақ ғәйрий хушбуй яндурмаңлар, нә көйдүрмә қурбанлиқ нә ашлиқ һәдийә сунмаңлар, шундақла униң үстигә һеч қандақ шарап һәдийәни төкмәңлар.
இவைகளைத்தவிர வேறெந்த நறுமணத்தூளையோ, தகன காணிக்கையையோ, தானியக் காணிக்கையையோ இப்பீடத்தின்மேல் செலுத்தாதே. அதன்மேல் பானகாணிக்கையை ஊற்றவும் வேண்டாம்.
10 Һәр жилда Һарун бир қетим [хушбуйгаһниң] мүңгүзлиригә кафарәт кәлтүрсун; һәр қетим кафарәт кәлтүридиған гуна қурбанлиғиниң қени билән униң үчүн кафарәт кәлтүрсун. Нәсилдин-нәсилгә шундақ қилиңлар; бу [хушбуйгаһ] Пәрвәрдигарға «әң муқәддәс» һесаплинидиған нәрсиләрниң қатаридиндур.
ஆரோன் வருடத்திற்கு ஒருமுறை இப்பீடத்தின் கொம்புகளின்மேல் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். இந்த வருடாந்திர பாவநிவிர்த்தி, பாவநிவாரண பலியின் இரத்தத்தினால் தலைமுறைதோறும் செய்யப்படவேண்டும். இந்தத் தூபபீடம் யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது” என்றார்.
11 Пәрвәрдигар Мусаға мундақ деди: —
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
12 Сән Исраилларниң санини ениқлаш үчүн уларни саниғиниңда, уларниң санилиши вәҗидин арисиға балаю-апәт кәлмәслиги үчүн, уларни саниғиниңда һәр бир адәм өз җени үчүн Пәрвәрдигарға кафарәт пули тапшурсун.
“நீ இஸ்ரயேலரை மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்கையில், அவர்கள் ஒவ்வொருவரும் தன் உயிருக்காக ஒரு மீட்புப் பணத்தை யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். அப்பொழுது நீ அவர்களைக் கணக்கிடுகையில் அவர்கள்மேல் ஒரு கொள்ளைநோயும் வராது.
13 Ройхәткә елинип, санақтин өткәнләрниң һәммиси бериши керәк болғини шуки, һәр бири муқәддәс җайдики шәкәлниң өлчәм бирлиги бойичә йерим шәкәл бәрсун (бир шәкәл жигирмә гәраһқа баравәр келиду). Бу йерим шәкәл Пәрвәрдигарға «көтәрмә һәдийә» болиду.
எண்ணப்படுகிறவன் ஏற்கெனவே எண்ணப்பட்டவர்களிடம் கடந்துபோகும்போது, பரிசுத்த இடத்தின் அளவின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும். ஒரு சேக்கல் இருபது கேரா நிறையுள்ளது. இந்த அரைச்சேக்கல் யெகோவாவுக்கான ஒரு காணிக்கையாகும்.
14 Ройхәткә елинип, санақтин өткәнләр, йәни жигирмә яш яки униңдин чоңларниң һәр бири Пәрвәрдигарға шу «көтәрмә һәдийә»ни бәрсун.
இருபது வயதுடையவர்களும், அதற்கு மேற்பட்டவர்களும் இவ்வாறு கடந்துபோகும் எல்லோரும் யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொடுக்கவேண்டும்.
15 Өз җениңларға кафарәт кәлтүрүш үчүн Пәрвәрдигарға көтәрмә һәдийә бәргиниңларда бай киши йерим шәкәлдин артуқ бәрмисун, кәмбәғәл кишиму йерим шәкәлдин кам бәрмисун.
உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்வதற்காக நீங்கள் யெகோவாவுக்கு காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தர்கள் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் கூடாது, ஏழைகள் அதைவிடக் குறைவாகக் கொடுக்கவும் கூடாது.
16 Сән Исраиллардин шу кафарәт пулини тапшуруп елип, җамаәт чедириниң хизмитигә беғишлап ишләткин; у пул Исраилларға Пәрвәрдигарниң һозурида әсләтмә сүпитидә җениңларға кафарәт кәлтүридиған болиду.
நீயோ அந்த பாவநிவிர்த்திப் பணத்தை இஸ்ரயேலரிடம் இருந்து வாங்கி, சபைக் கூடாரப் பணிக்காக அதைப் பயன்படுத்த வேண்டும். அது உங்கள் உயிர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும்படி, யெகோவா முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாய் இருக்கும்” என்றார்.
17 Пәрвәрдигар Мусаға мундақ деди: —
பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
18 Сән жуюнушқа ишлитишкә мистин [йоған] бир дас вә униңға мистин бир тәглик ясатқин; уни җамаәт чедири билән қурбангаһниң оттурисиға орунлаштуруп, ичигә су тоштуруп қойғин.
“நீ கழுவுவதற்காக ஒரு வெண்கலத் தொட்டியையும் அதன் வெண்கலக் கால்களையும் செய்யவேண்டும். அதைச் சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வைக்கவேண்டும்.
19 Һарун билән униң оғуллири униңдики су билән пут-қоллирини жуйсун.
அதிலுள்ள தண்ணீரால் ஆரோனும், அவன் மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவவேண்டும்.
20 Улар җамаәт чедириға киргәндә өлмәслиги үчүн су билән өзини жуюши керәк; улар хизмәт қилиш үчүн, қурбангаһқа йеқин берип Пәрвәрдигарға от арқилиқ атилидиған қурбанлиқ сунмақчи болғинидиму, шундақ қилсун.
அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதெல்லாம் தாங்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் கழுவவேண்டும். அத்துடன், நெருப்பினால் யெகோவாவுக்கு செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவந்து ஆசாரிய ஊழியம் செய்வதற்காக பலிபீடத்தை அணுகும்போதும்,
21 Улар өлмәслиги үчүн пут-қоллирини жуйсун; бу иш уларға, йәни өзи вә униң нәсиллири үчүн әвлаттин әвлатқичә әбәдий бир бәлгүлимә болиду.
அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும், கால்களையும் கழுவவேண்டும். இது ஆரோனுக்கும், அவன் சந்ததியினருக்கும் தலைமுறைதோறும் நிரந்தர நியமமாயிருக்கும்.”
22 Пәрвәрдигар Мусаға мундақ деди: —
மேலும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
23 Сән һәммидин есил хушбуй дора-дәрмәкләрдин тәйярла, йәни мурмәкки суюқлуғидин бәш йүз шәкәл, дарчиндин икки йүз әллик шәкәл, егирдин икки йүз әллик шәкәл,
“நீ பின்வரும் சிறந்த வாசனைப் பொருட்களை எடுக்கவேண்டும். திரவ வெள்ளைப்போளம் 500 சேக்கல், சுகந்த கறுவாப்பட்டை 250 சேக்கல், நறுமண வசம்பு 250 சேக்கல்,
24 қовзақдарчиндин бәш йүз шәкәл елип (бу өлчәмләр муқәддәс җайдики шәкәлниң өлчәм бирлиги бойичә болсун) вә зәйтун мейидинму бир һин тәйярла;
இலவங்கப்பட்டை 500 சேக்கல் ஆகிய இவையெல்லாம் பரிசுத்த இடத்தின் சேக்கல் அளவின்படி இருக்கவேண்டும். அத்துடன் ஒரு ஹின் அளவு ஒலிவ எண்ணெயையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
25 бу дора-дәрмәкләр билән мәсиһ қилиш үчүн бир муқәддәс май — әтирчи чиқарғандәк бир хушбуй май чиқарғузғин. Бу «муқәддәс мәсиһләш мейи» болиду.
இவற்றைக்கொண்டு வாசனை தைலம் தயாரிப்பவன் செய்வதுபோல், வாசனைக் கலவையாக பரிசுத்த அபிஷேக எண்ணெயைச் செய்யவேண்டும். இது பரிசுத்த அபிஷேக எண்ணெயாயிருக்கும்.
26 Сән униң билән җамаәт чедирини, һөкүм-гувалиқ сандуғини,
இந்த எண்ணெயை உபயோகித்து சபைக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
27 ширә вә униң барлиқ қача-қучилирини, чирақдан вә униң әсваплирини, хушбуйгаһни,
மேஜையையும், அதிலுள்ள பொருட்களையும், குத்துவிளக்குகளையும், அதின் உபகரணங்களையும், தூபபீடத்தையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
28 көйдүрмә қурбанлиқ қурбангаһи вә униң әсваплирини, жуюнуш деси вә униң тәглигини мәсиһлигин;
தகன பலிபீடத்தையும், அதிலுள்ள எல்லா பாத்திரங்களையும், தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம் செய்யவேண்டும்.
29 сән шу тәрздә уларни «әң муқәддәс нәрсиләр» қатарида муқәддәс қилғин. Уларға тәккән һәр қандақ нәрсиму «муқәддәс» һесаплиниду.
அவை மகா பரிசுத்தமாயிருக்கும்படியும், அவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாயிருக்கும்படியும் அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும்.
30 Һарун билән униң оғуллирини болса Маңа каһинлиқ хизмәттә болуши үчүн мәсиһләп муқәддәс қилғин.
“அத்துடன் ஆரோனும் அவன் மகன்களும், ஆசாரியர்களாக எனக்கு ஊழியம் செய்யும்படி, அவர்களை அபிஷேகம் செய்து அர்ப்பணம் செய்யவேண்டும்.
31 Исраилларға сөз қилип мундақ ейтқин: — Бу май әвлаттин әвлатқичә Маңа аталған муқәддәс мәсиһләш мейи болиду.
இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் இது எனக்கு பரிசுத்த அபிஷேக எண்ணெயாய் இருக்கவேண்டும்.
32 Уни адәмниң бәдинигә қуйса болмайду; шуниңдәк униңға охшайдиған яки тәркиби охшишидиған һеч қандақ майларни ясимаңлар. У муқәддәс болғини үчүн силәргиму муқәддәс болуши керәк.
இதை ஒரு மனிதனுடைய உடலின்மேல் ஊற்றவோ, இந்தக் கலவை முறைப்படி வேறொரு எண்ணெயைத் தயார்செய்யவோ வேண்டாம். இது பரிசுத்தமானது. நீங்களும் இதைப் பரிசுத்தமாய் எண்ணவேண்டும்.
33 Кимки тәркиби шуниңға охшайдиған май тәңшисә, яки уни елип ят бирисигә сүрсә, у өз хәлқи арисидин үзүп ташлиниду.
இதேபோல் வாசனைத் தைலத்தைச் செய்கிறவனோ அல்லது ஆசாரியரைத் தவிர வேறு யார்மேலாவது இந்த எண்ணெயைப் பூசுகிறவனோ தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.
34 Пәрвәрдигар Мусаға мундақ деди: — Сән хушбуй дора-дәрмәкләр, йәни хушбуй йелим, деңиз қулулиси мейи, ақ девирқай вә сап мәстики тәйярлиғин. Буларниң һәммиси охшаш миқдарда болсун;
பின்னும் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது: “பிசின் கலந்த குங்கிலியம், சாம்பிராணி, அல்பான்பிசின், சுத்தமான நறுமணமுள்ள குங்கிலியம் ஆகிய வாசனைப் பொருட்களை சமமான அளவு எடுத்துக்கொண்டு,
35 Худди әтирчи май чиқарғанға охшаш, уларни тәңшәп хушбуй ясиғин; у тузланған, сап вә муқәддәс пурақлиқ әтир болиду.
இவற்றை வாசனை தைலம் தயாரிப்பவனின் வேலையைப் போல் வாசனைக் கலவையாக நறுமணத்தூளைச் செய்யவேண்டும். அது உப்பிடப்பட்டு, தூய்மையும், பரிசுத்தமுமாய் இருக்கவேண்டும்.
36 Сән униңдин азрақ елип, талқандәк убдан езип, җамаәт чедиридики һөкүм-гувалиқ [сандуғиниң] удулиға, йәни Мән силәр билән көрүшидиған җайниң алдиға қойғин. Бу силәргә Пәрвәрдигарға аталған «әң муқәддәс нәрсиләр» қатарида һесаплансун.
அதில் கொஞ்சத்தை அரைத்துத் தூளாக்கி, நான் உன்னைச் சந்திக்கும் இடமான சபைக் கூடாரத்திலுள்ள சாட்சிப்பெட்டிக்கு முன் வைக்கவேண்டும். அது உங்களுக்கு மகா பரிசுத்தமுள்ளதாய் இருக்கும்.
37 Силәр ясиған бу хушбуйниң ретсепи билән өзүңларғиму охшаш бир хушбуйни ясивалсаңлар болмайду. У саңа нисбәтән ейтқанда Пәрвәрдигарға хас қилинған муқәддәс болиду.
இந்தக் கலவை முறையைக் கொண்டு உங்களுக்காக வேறெந்த நறுமணத்தூளையும் தயாரிக்கக்கூடாது. இதை யெகோவாவுக்குப் பரிசுத்தமானதாக எண்ணிக்கொள்ளுங்கள்.
38 Кимки униң пуриғини пурап һозурлиниш үчүн униңға охшап кетидиған һәр қандақ бир хушбуйни ясиса, у өз хәлқи арисидин үзүп ташлансун.
அதன் வாசனையை அனுபவிக்கும்படி இதுபோன்ற எதையாவது செய்யும் எவனும், தன் மக்களிடத்திலிருந்து அகற்றப்படவேண்டும்” என்றார்.

< Мисирдин чиқиш 30 >