< Самуил 1 25 >
1 Самуил өлди. Пүткүл Исраил жиғилип униң үчүн матәм тутти; улар уни униң Рамаһдики өйидә дәпнә қилди. Давут болса қопуп Паран чөлигә барди.
சாமுயேல் மரணமடைந்தபோது முழு இஸ்ரயேலரும் ஒன்றுசேர்ந்து அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். அவர்கள் அவனை ராமாவிலுள்ள அவனுடைய வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள். பின்பு தாவீது அவ்விடமிருந்து புறப்பட்டு பாரான் பாலைவனத்துக்குப் போனான்.
2 Әнди тирикчилиги Кармәлдә болған, Маонда олтирақлиқ бир адәм бар еди. Бу киши бәк бай болуп үч миң қой, бир миң өшкиси бар еди. У өз қойлирини Кармәлдә қирқивататти.
அப்போது கர்மேலில் சொத்துக்களுள்ள செல்வந்தனான ஒரு மனிதன் மாகோனில் இருந்தான். ஆயிரம் வெள்ளாடுகளும், மூவாயிரம் செம்மறியாடுகளும் அவனுக்கு இருந்தன. அப்பொழுது அவன் கர்மேலில் தன் செம்மறியாடுகளை மயிர் கத்தரித்துக் கொண்டிருந்தான்.
3 У адәмниң исми Набал болуп, аялиниң исми Абигаил еди; аяли һәм пәм-парасәтлик һәм әпт-турқи чирайлиқ, лекин ери қаттиқ қол вә рәзил еди; у Каләбниң әвладидин еди.
அவன் பெயர் நாபால். அவன் மனைவியின் பெயர் அபிகாயில். அவள் மிகவும் அழகுள்ளவளும், புத்திக் கூர்மையுள்ளவளுமாய் இருந்தாள். ஆனால் காலேபியனான அவள் கணவனோ, முரடனும் தன் செயல்களில் கீழ்த்தரமானவனுமாய் இருந்தான்.
4 Давут чөлдә туруп Набалниң өз қойлирини қирқийдиғанлиғини аңлап
தாவீது பாலைவனத்தில் ஒளித்திருந்தபோது நாபால் தன் செம்மறியாடுகளை மயிர் கத்தரிப்பதற்கு வந்திருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டான்.
5 Он яш жигитни у йәргә маңдуруп уларға: — Силәр Кармәлгә чиқип Набалниң қешиға берип, мәндин униңға салам ейтиңлар.
அப்பொழுது தாவீது பத்து வாலிபரை அழைத்து அவர்களிடம், “நீங்கள் கர்மேலுக்குச் சென்று என் பெயரால் நாபாலை வாழ்த்துங்கள்.
6 Униңға: — «Яшиғайсән; сизгә теч-аманлиқ болғай, өйиңизгә теч-аманлиқ болғай, һәммә барлиғиңизға теч-аманлиқ болғай!
நீங்கள் அவனை, ‘நீர் நீடித்து வாழ்வீராக. உமக்கும் உமது குடும்பத்துக்கும் நல்வாழ்வு உண்டாவதாக. உமக்குரிய அனைத்திற்கும் நல்வாழ்வு உண்டாவதாக’ என்று வாழ்த்துங்கள்.
7 Мән қирқиғучиларниң сиздә иш башлиғанлиғини аңлидим. Сизниң падичилириңиз биз тәрәпләрдә турғанда уларға һеч зәхмә йәткүзмидуқ; биз Кармәлдә турған вақитта уларниң һеч тәрсиси жүтүп кәтмиди.
“‘அதன்பின் இது ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் காலம் என்று கேள்விப்படுகிறேன். உம்முடைய ஆட்டு மேய்ப்பர்கள் எங்களுடன் இருந்தபோதும், நாங்கள் அவர்களைத் துன்புறுத்தவில்லை. கர்மேலில் அவர்கள் இருந்த காலமுழுதும் அவர்களுக்குரிய அவர்களின் ஆடுகளில் ஒன்றேனும் காணாமல் போகவுமில்லை.
8 Өз жигитлириңиздин сорисиңиз улар сизгә дәп бериду. Шуңа биз қутлуқ бир күнидә кәлдуқ, шуңа жигитлиримиз нәзириңиздә илтипат тапсун; өз қолиңизға немә чиқса шуни кәминилириңизгә вә оғлиңиз Давутқа немә чиқса шуни бәргәйсиз», дәңлар, — деди.
இதைப்பற்றி உம்முடைய பணியாட்களிடம் கேளும். அவர்கள் உமக்குச் சொல்வார்கள். ஆகவே எனது வாலிபர்களுக்குத் தயவுகாட்டும். நாங்கள் ஒரு சந்தோஷமான விழாக்காலத்தில் வந்திருக்கிறோம். உம்முடைய அடியாருக்கும் உம்முடைய மகனாகிய தாவீதுக்கும் கொடுக்கக்கூடிய எதையாவது கொடும் என்று தயவாகக் கேட்கிறேன்’ என்று சொல்லுங்கள்” என்று சொல்லியனுப்பினான்.
9 Давутниң жигитлири у йәргә берип бу гәпләрниң һәммисини Давутниң намида униңға ейтип андин җим туруп сақлиди.
அவ்வாறே தாவீதின் வாலிபர் அவ்விடத்திற்கு வந்துசேர்ந்து நாபாலிடம் தாவீதின் செய்தியைச் சொன்னார்கள். பின் அவன் பதிலுக்காகக் காத்திருந்தார்கள்.
10 Набал Давутниң хизмәткарлириға җавап берип: — Давут дегән ким? Йәссәниң оғли дегән ким? Бу күнләрдә өз ғоҗилирини ташлап кетиватқан хизмәткарлар тола.
நாபாலோ தாவீதின் பணியாட்களிடம், “இந்தத் தாவீது யார்? ஈசாயின் மகன் யார்? இந்நாட்களில் பல வேலையாட்கள் தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிறார்கள்.
11 Мән өзүмниң йемәк-ичмәклиримни вә жуң қирқуғучилиримға сойған гөшни кәлгән җайи намәлум болған кишиләргә берәмдим? — деди.
என் அப்பத்தையும் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர் கத்தரிக்கிறவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் சமையலையும், யாரும் அறியாத இடத்திலிருந்து வந்த மனிதருக்கு நான் ஏன் கொடுக்கவேண்டும்?” என்று கேட்டான்.
12 Давутниң жигитлири кәлгән йолиға йенип кәтти. Йенип келип улар Давутқа һәммә гәпни дәп бәрди.
எனவே தாவீதின் மனிதரான அந்த வாலிபர் தாங்கள் வந்த வழியே மறுபடியும் திரும்பிப் போனார்கள். அவர்கள் போய் நாபால் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தாவீதுக்குச் சொன்னார்கள்.
13 Давут өз адәмлиригә: — Һәр бириңлар өз қиличиңларни есиңлар, деди. Шуниң билән һәр бири өз қиличини [тасмисиға] асти, Давутму өз қиличини асти. Андин төрт йүзчә адәм Давут билән чиқти, вә икки йүз киши җабдуқлар билән қалди.
அப்பொழுது தாவீது தன் மனிதரிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள்” என்றான். அவ்வாறே அவர்களும் வாளை எடுத்துக் கட்டிக்கொண்டார்கள். தாவீதும் தன் வாளை எடுத்துக்கொண்டான். ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுடன் சென்றார்கள். இருநூறுபேர் உணவுப் பொருட்களுடன் தங்கியிருந்தார்கள்.
14 Амма Набалниң хизмәткарлиридин бири униң аяли Абигаилға: — Давут әлчиләрни чөлдин ғоҗимизға салам беришкә әвәткән екән; лекин у уларни тиллап кайип кәтти.
அதேவேளை நாபாலின் பணியாட்களில் ஒருவன் நாபாலின் மனைவி அபிகாயிலிடம் போய், “நமது தலைவனை வாழ்த்தி உதவிபெற்று வரும்படி தாவீது பாலைவனத்திலிருந்து தூதுவரை அனுப்பினான். ஆனாலும் அவரோ வந்தவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்.
15 Бу адәмләр болса, бизгә көп яхшилиқ қилған. Биз далада уларниң йенида жүргән вақитлиримизда бизгә һеч яманлиқ кәлмиди, бизниң һеч нәрсимизму жүтүп кәтмигән еди.
இந்த மனிதர் எங்களோடு மிக நன்றாய் பழகினார்கள். எங்களைத் துன்புறுத்தவில்லை. நாங்கள் வயல்வெளியில் அவர்களுக்கு அருகே இருந்த காலம் முழுவதும் எங்களுக்குரிய ஒன்றும் காணாமல் போகவுமில்லை.
16 Биз уларға йеқин җайда қой баққан вақитта улар кечә-күндүз бизгә сепилдәк болған еди.
நாங்கள் அவர்களருகே செம்மறியாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த காலமெல்லாம், இரவும் பகலும் அவர்கள் எங்களைச் சுற்றி மதில்போல் இருந்தார்கள்.
17 Әнди бу иштин хәвәрдар болдила, қандақ қилиш керәклигини ойлишип баққайла. Болмиса, ғоҗимизға вә пүткүл өйдикилиригә бир бала-қаза кәлмәй қалмайду. У шунчә каҗ бир адәмки, һеч ким униңға сөз қилишқа петиналмайду, деди.
இப்பொழுது யோசித்து நீங்கள் என்ன செய்யலாம் என்று பாருங்கள். ஏனெனில் எங்கள் தலைவனுக்கும், அவர் முழுக் குடும்பத்துக்கும் மேலாகவும் பேராபத்து வந்திருக்கிறது. எங்கள் தலைவனோ யாரும் பேசமுடியாத அளவுக்கு கொடுமையான மனிதனாய் இருக்கிறார்” என்றான்.
18 Абигаил дәрһал икки йүз нан, икки тулум шарап, бәш пиширилған қой, бәш сеаһ қомач, бир йүз кишмиш пошкили, икки йүз әнҗир пошкили елип ешәкләргә артип
உடனே அபிகாயில் தாமதிக்கவில்லை; அவள் இருநூறு அப்பங்களையும், இரண்டு தோல் குடுவைகளில் திராட்சை இரசத்தையும், தோல் உரித்த ஐந்து செம்மறியாடுகளையும், ஐந்துபடி அளவு வறுத்த தானியத்தையும், நூறு திராட்சை அடைகளையும், இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து அவற்றைக் கழுதைகள்மேல் ஏற்றினாள்.
19 өз жигитлиригә: — Мениң алдимда бериңлар; мана, мән кәйниңлардин барай, деди. Лекин у өз ери Набалға бу ишни демиди.
அவள் தன் பணியாட்களிடம், “நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள். நான் உங்கள் பின்னே வருகிறேன்” என்றாள். ஆனாலும் தன் கணவன் நாபாலுக்கு அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
20 У өз ешигигә минип тағниң етигидин чүшкәндә, мана Давут адәмлири билән униң удулиға чүшүп униң билән учрашти.
இவ்வாறு அவள் கழுதைமேல் ஏறி மலையின் கணவாய்க்கு வந்தபோது, தாவீதும், அவன் ஆட்களும் அவளை நோக்கி இறங்கிவந்தார்கள். அவள் அவர்களைச் சந்தித்தாள்.
21 Давут әслидә: — Мән бу кишиниң мелини чөлдә бекардин бекар қоғдап, униң барлиғидин һеч немини жүтүргүзмигән едим; лекин у яхшилиқниң орнида маңа яманлиқ қилди.
தாவீது தன் மனிதரிடம், “இந்த பாலைவனத்திலே இவனுடைய உடமைகளில் ஒன்றேனும் தொலைந்துபோகாமல் அவற்றை நான் பாதுகாத்தது வீணாயிற்று. அவனோ எனக்கு நன்மைக்குப் பதிலாகத் தீமையே செய்திருக்கிறான்” என்று அப்பொழுதுதான் சொல்லியிருந்தான்.
22 Униң адәмлиридин әтигичә бирәр әркәкни қалдуруп қойсам, Худа мән Давутни униңдинму артуқ җазалиғай, дегән еди.
“அவனுக்குச் சொந்தமான எல்லா ஆண்களிலும் ஒருவனையாவது பொழுது விடியும் முன் உயிரோடு விட்டேனேயானால், இறைவன் தாவீதை எவ்வளவு கடுமையாகவும் தண்டிப்பாராக” என்றும் சொல்லியிருந்தான்.
23 Абигаил Давутни көрүп, алдирап ешәктин чүшүп, Давутниң алдида жиқилип йүзини йәргә йеқип тазим қилди;
அபிகாயில் தாவீதைக் கண்டதும் தனது கழுதையை விட்டு விரைவாக இறங்கி தாவீதுக்கு முன்னால் தரையை நோக்கிக் குனிந்து வணங்கினாள்.
24 униң путлириға есилип мундақ деди: — «И ғоҗам, бу қәбиһлик маңа һесаплансун; әнди шуни өтүнимәнки, дедәклириниң силигә сөз қилишиға иҗазәт қилип, дедиклириниң сөзигә қулақ салғайла: —
அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து அவனிடம், “ஐயா இந்தக் குற்றம் என்மேல் மட்டுமே சுமரட்டும். உம்முடைய அடியவளை உம்மிடம் பேசவிடும். உமது அடியவள் சொல்ல இருப்பதைக் கேளும்.
25 өтүнимәнки, ғоҗам бу рәзил адәм Набалға писәнт қилмиғайла; чүнки униң мүҗәзи худди исмиға охшаштур; униң исми «каҗ», дәрвәқә униңда каҗлиқ толиму еғирдур. Лекин мән дедәклири болса ғоҗам әвәткән жигитләрни көрмидим.
என் எஜமானே! அந்தக் கொடுமையான மனிதன் நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம். அவர் தன் பெயருக்கேற்றபடி மூடராயிருக்கிறார். மூடத்தனமே அவரோடு இருக்கின்றது. உமது அடியாளாகிய நானோ நீர் அனுப்பிய பணியாட்களைச் சந்திக்கவில்லை.
26 Әнди и ғоҗам, Пәрвәрдигарниң һаяти билән вә сениң җениң билән қәсәм ичимәнки, Пәрвәрдигар силини өз қоллири билән қан төкүп интиқам елиштин сақлиди. Әнди дүшмәнлириму, сили ғоҗамға яманлиқ қилмақчи болғанларму Набалға охшаш болсун.
இப்பொழுது, என் ஆண்டவனே, நீர் இரத்தத்தைச் சிந்தாமலும், உம்முடைய கையினால் பழிவாங்காமலும் யெகோவா உம்மைத் தடுத்திருக்கிறார். யெகோவா இருப்பது நிச்சயமெனில், உம் பகைவரும், உமக்குத் தீங்குசெய்ய நோக்கம் கொண்டிருக்கிறவர்களும் நாபாலைப்போல் இருப்பார்களாக.
27 Әнди дедәклири ғоҗамға елип кәлгән бу соғат болса ғоҗамға әгәшкән жигитләргә тәқсим қилинсун.
உமது அடியவள் எனது எஜமானுக்குக் கொண்டுவந்திருக்கும் அன்பளிப்பு உம்மைப் பின்பற்றும் மனிதருக்குக் கொடுக்கப்படட்டும்.
28 Силидин өтүнимәнки, дедәклириниң сәһвәнлигини кәчүргәйла; чүнки сили, и ғоҗам Пәрвәрдигарниң җәңлирини қилип кәлгәнлири үчүн, барлиқ күнлиридә силидә яманлиқ тепилмиғини үчүн Пәрвәрдигар җәзмән җәмәтлирини мәзмут қилиду.
“தயவுசெய்து அடியாளுடைய பிழையை மன்னியும். எனது எஜமான் யெகோவாவின் யுத்தத்தை நடத்துவதனால் யெகோவா நிச்சயமாக எனது எஜமானுக்கு நிலைத்து நிற்கும் சந்ததியைக் கொடுப்பார். உமது வாழ்நாள் முழுவதும் உம்மேல் ஒரு பிழையும் காணப்படாதிருக்கட்டும்.
29 Бириси қопуп силини қоғлап җанлирини издисә, сили ғоҗамниң җени Пәрвәрдигар Худалириниң қешидики тирикләр халтиси ичидә орилип сақлиниду, лекин дүшмәнлириниң җанлирини болса, у салғуға селип чөрүп ташлайду.
ஒருவன் உமது உயிரை வாங்குவதற்கு உம்மைத் தொடர்ந்தபோதிலும், என் ஆண்டவனுடைய உயிர் உமது இறைவனாகிய யெகோவாவினால் உயிருள்ளோர் தொகையில் பத்திரப்படுத்தப்படும். ஆனாலும் உம்முடைய பகைவரின் உயிர்களையோ கவணில் வைத்து வீசப்படும் கல்லைப்போல் அவர் வீசி விடுவார்.
30 Әнди Пәрвәрдигар сили ғоҗам тоғрисида ейтқан барлиқ яхши вәдилиригә әмәл қилип, силини Исраилға баш қилғанда шундақ болидуки,
யெகோவா உம்மைக் குறித்து வாக்குப்பண்ணிய எல்லா நன்மைகளையும் செய்துமுடித்து, உம்மை இஸ்ரயேலரின் தலைவனாக நியமிப்பார்.
31 сили ғоҗамниң наһәқ қан төкмигәнликлири яки өз интиқамлирини алмиғанлиқлири үчүн көңүллиригә путликашаң яки дәрд болмайду. Вә Пәрвәрдигар ғоҗамға нусрәт бәргинидә сили өз дедәклирини яд қилғайла».
அப்பொழுது தேவையில்லாத இரத்தம் சிந்திய குற்றமோ, உமக்காகப் பழிவாங்கிய குற்றமோ பாரமாக ஆண்டவனுடைய மனசாட்சியை அழுத்தாதிருக்கட்டும். இப்படியாக யெகோவா என் ஆண்டவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்போது உம்முடைய அடியாளையும் நினைத்துக்கொள்ளும்” என்றாள்.
32 Давут Абигаилға: — Сени бүгүн мениң билән учришишқа әвәткән Исраилниң Худаси Пәрвәрдигарға тәшәккүр-мәдһийә қайтурулғай!
அப்பொழுது தாவீது அபிகாயிலிடம், “இன்று என்னைச் சந்திக்கும்படி உன்னை அனுப்பிய இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக.
33 Әнди әқил-параситиңгә барикалла, саңиму барикалла! Чүнки сән бүгүн мени өз қолум билән қан төкүп интиқам елиштин тостуң.
உனது நல்ல நிதானிப்புக்காகவும், நான் இரத்தம் சிந்தாமலும், என் சொந்த கையால் பழிவாங்காமலும் இன்று என்னை நீ தடுத்ததற்கு நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக.
34 Лекин мени саңа зиян-зәхмәт йәткүзүштин сақлиған Исраилниң Худаси Пәрвәрдигарниң һаяти билән қәсәм қилимәнки, сән мениң алдимға тезлинип кәлмигән болсаң, Набалниң адәмлиридин һеч әркәк әтигичә тирик қалмас еди, деди.
நீ என்னைச் சந்திக்க விரைந்து வராதிருந்தால், உனக்குத் தீங்கு செய்யாதபடி என்னைத் தடுத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இருப்பது நிச்சயமெனில், நாளை விடியுமுன் நாபாலின் மனிதரில் ஒரு ஆணும் உயிரோடிருந்திருக்க மாட்டான் என்பதும் நிச்சயம்” என்றான்.
35 Андин Давут униң өзигә кәлтүргән нәрсилирини қолидин тапшуруп елип униңға: — Теч-аман өйүңгә барғин, мана сөзлириңгә қулақ селип, көңлүңни қобул қилдим, деди.
அபிகாயில் கொண்டு வந்தவற்றையெல்லாம் தாவீது ஏற்றுக்கொண்டு அவளிடம், “நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப்போ. நீ சொன்னவற்றையெல்லாம் கேட்டேன். உனது வேண்டுகோளின்படியே செய்வேன்” என்றான்.
36 Абигаил Набалниң қешиға кәлди; мана, у өйидә шаһанә зияпәттәк бир зияпәт өткүзүвататти. Набал көңлидә хошал еди вә интайин мәс болуп кәткән еди. Шуңа Абигаил әтиси таң атқичә униңға һеч немә демиди.
அபிகாயில் நாபாலிடம் திரும்பிவந்தாள். அப்பொழுது அவன் வீட்டில் அரசவிருந்தைப்போன்ற ஒரு விருந்தினை நடத்திக்கொண்டிருந்தான். அவன் மதுபோதையில் களிப்புற்றிருந்தான். எனவே அவள் விடியும்வரை அவனுக்கு ஒன்றுமே சொல்லவில்லை.
37 Лекин әтиси Набал мәсликтин йешилгәндә аяли униңға болған вақиәләрни дәп беривиди, униң жүриги өлгәндәк болуп, өзи таштәк болуп қалди.
பொழுது விடிந்ததும் நாபாலின் மதுவெறி தெளிந்தபின் அவன் மனைவி நடந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொன்னாள். அதைக் கேட்டவுடன் அவன் இருதயம் பாதிக்கப்பட்டு அவன் கல்லைப்போலானான்.
38 Вә шундақ болдики, тәхминән он күндин кейин Набални Пәрвәрдигар урди вә у өлди.
இவை நடந்து ஏறக்குறைய பத்து நாட்களுக்குப்பின்பு யெகோவா நாபாலை அடித்ததினால் அவன் இறந்தான்.
39 Давут Набалниң өлгинини аңлап: — Пәрвәрдигар мубарәктур. Чүнки У мән Набалдин тартқан һақарәт үчүн дәвайимни сорап Өз қулини яманлиқтин сақлиди; әксичә Пәрвәрдигар Набалниң яманлиғини өз бешиға яндурди, деди. Андин Абигаилни өз әмримгә алай дәп, униңға сөз қилғили әлчи маңдурди.
நாபால் இறந்ததைக் கேள்விப்பட்ட தாவீது, “என்னை அவமானப்படுத்திய நாபாலுக்கு எதிரான எனது வழக்கை வாதாடிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. அவர் தமது அடியவனை குற்றம் செய்யாதபடி தற்காத்து, நாபாலின் அநியாயத்தை அவனுடைய தலையிலேயே சுமரப்பண்ணினார்” என்றான். அதன்பின் தாவீது அபிகாயிலைத் தன் மனைவியாக்கும்படி கேட்டு அவளிடம் ஆளனுப்பினான்.
40 Давутниң хизмәткарлири Кармәлгә Абигаилниң қешиға келип униңға: — Сени әмримгә алай дәп Давут саңа сөз қилғили бизни әвәтти, деди.
தாவீதின் பணியாட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “தாவீது உம்மைத் தன் மனைவியாக்கிக் கொள்வதற்காகத் தன்னிடம் கூட்டிக்கொண்டு வரும்படி எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்றார்கள்.
41 Абигаил болса қопуп йүзини йәргә тәккидәк тазим қилип: — Мана, дедигиң ғоҗамниң хизмәткарлириниң путлирини жуюшқа қул болсун, деди.
அவள் எழுந்து முகங்குப்புற விழுந்து வணங்கி, அவர்களிடம், “இதோ நான் உங்கள் பணிப்பெண். உங்களுக்குப் பணிசெய்யவும், என் எஜமானின் பணியாட்களின் கால்களைக் கழுவவும் நான் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றாள்.
42 Андин Абигаил шу һаман өзигә һәмраһ болған бәш чөриси билән ешәккә минип Давутниң әлчилириниң кәйнидин берип, униң аяли болди.
அபிகாயில் விரைவாகக் கழுதையில்மேல் ஏறி தன் ஐந்து தோழிகளும் பின்செல்ல தாவீதின் தூதுவர்களுடன் சென்று அவனுக்கு மனைவியாகினாள்.
43 Давут Йизрәәллик Аһиноамни һәм хотунлуққа алған еди. Шуниң билән бу иккиси униңға хотун болди.
தாவீது யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமையும் திருமணம் செய்திருந்தான். அவர்கள் இருவரும் தாவீதின் மனைவிகளாயிருந்தார்கள்.
44 Лекин Саул Давутқа хотун қилип бәргән қизи Миқални Галлимдики Лаишниң оғли Фалтиға хотунлуққа бәргән еди.
ஆனால் சவுல் தன் மகளான மீகாள் என்னும் தாவீதின் மனைவியை, காலீம் ஊரானான லாயீசின் மகன் பல்த்திக்கு மனைவியாகக் கொடுத்தான்.