< Псалми 135 >

1 Алілу́я!
அல்லேலூயா, யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்; யெகோவாவின் ஊழியக்காரர்களே, துதியுங்கள்.
2 що стоїте́ в домі Господньому, на подві́р'ях дому нашого Бога!
யெகோவாவுடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயமுற்றங்களிலும் நிற்கிறவர்களே, யெகோவாவை துதியுங்கள்.
3 Хваліть Господа, — бо добрий Госпо́дь, співайте Іме́нню Його, — бо приємне воно,
யெகோவா நல்லவர்; அவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுங்கள்; அது இன்பமானது.
4 бо вибрав Господь собі Якова, Ізраїля — на власність Свою!
யெகோவா யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்.
5 Знаю бо я, що Господь і Владика наш більший від богів усіх!
யெகோவா பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
6 Все, що хоче Господь, те Він чинить на небі та на землі, на моря́х та по всяких глиби́нах!
வானத்திலும் பூமியிலும், கடல்களிலும், எல்லா ஆழங்களிலும், யெகோவா தமக்கு விருப்பமானதையெல்லாம் செய்கிறார்.
7 Підіймає Він хмари від кра́ю землі, блискави́ці вчинив для дощу́, випрова́джує вітер з запа́сів Своїх.
அவர் பூமியின் கடைசியிலிருந்து மேகங்களை எழும்பச்செய்து, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது சேமிப்புக்கிடங்கிலிருந்து புறப்படச்செய்கிறார்.
8 Він позабива́в перворідних Єгипту, від люди́ни аж до скотини.
அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
9 Він послав між Єгипет озна́ки та чу́да, — на фараона і на рабів всіх його.
எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்கள் மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்.
10 Він ура́зив багато наро́дів, і поту́жних царів повбива́в:
௧0அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
11 Сиго́на, царя аморе́ян, і Оґа, Баша́ну царя, та всіх ханаа́нських царів.
௧௧எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து,
12 І Він дав їхню землю спадщиною, на спа́док Ізра́їлеві, Своєму наро́дові.
௧௨அவர்கள் தேசத்தைத் தம்முடைய மக்களுமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்.
13 Господи, Йме́ння Твоє вікові́чне, Господи, — пам'ять Твоя з роду в рід!
௧௩யெகோவாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; யெகோவாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
14 Бо буде суди́ти Господь Свій наро́д, та змилосе́рдиться Він над Своїми раба́ми.
௧௪யெகோவா தம்முடைய மக்களின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்கள்மேல் பரிதாபப்படுவார்.
15 Божки лю́дів — то срі́бло та золото, ді́ло рук лю́дських:
௧௫அஞ்ஞானிகளுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும், மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.
16 вони мають уста́ — й не говорять, очі мають вони — і не бачать,
௧௬அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
17 мають уші — й не чують, в їхніх уста́х нема ві́ддиху!
௧௭அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
18 Нехай стануть такі, як вони, ті, хто їх виробля́є, усі, хто надію на них покладає!
௧௮அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள்.
19 Доме Ізраїлів, — благословіть Господа! Ааро́новий доме, — благословіть Господа!
௧௯இஸ்ரவேல் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
20 Доме Леві́їв, — благословіть Господа! Хто боїться Господа, — благословіть Господа!
௨0லேவி குடும்பத்தாரே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்; யெகோவாவுக்குப் பயந்தவர்களே, யெகோவாவுக்கு நன்றிசொல்லுங்கள்.
21 Благослове́нний Господь від Сіону, що ме́шкає в Єрусалимі! Алілу́я!
௨௧எருசலேமில் குடியிருக்கிற யெகோவாவுக்கு சீயோனிலிருந்து நன்றிஉண்டாகட்டும். அல்லேலூயா.

< Псалми 135 >