< Малахії 2 >

1 А тепер до вас за́повідь цяя, священики!
இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது.
2 Якщо ви не послу́хаєтесь, і не покладе́те на серце собі, щоб Іме́нню Моєму давати хвалу́, — говорить Госпо́дь Савао́т, — то пошлю Я прокля́ття на вас, і прокляну́ благословення ваші, і вже проклина́ю, бо ви не бере́те до серця цього́!
நீங்கள் கேட்காமலும் என் நாமத்திற்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்திக்காமலும் இருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்களுடைய ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்திக்காமற்போனதால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
3 Ось Я обітну́ вам раме́но, і розпоро́шу нечистість на ваших обли́ччях, нечистість свят ваших, і до неї вас ви́несуть.
இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள்.
4 І пізнаєте ви, що Я заповідь вам цю послав, щоб був заповіт Мій з Леві́єм, каже Госпо́дь Савао́т.
லேவியுடன்செய்த என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
5 Заповіт Мій з ним був для життя та для миру, і Я дав йому страх, і він налякався Мене, та боя́всь перед Іме́нням Моїм.
அவனோடே செய்த என் உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாக இருந்தது; அவன் எனக்குப் பயப்படும் பயத்தோடே இருக்கவேண்டுமென்று, இவைகளை அவனுக்குக் கட்டளையிட்டேன்; அப்படியே அவன் என் நாமத்திற்குப் பயந்தும் இருந்தான்.
6 Закон правди в уста́х його був, і не знайшла́сь на губа́х його кривда, — у мирі й просто́ті ходив він зо Мною, і багато-кого́ відверну́в від вини.
சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாக வாழ்ந்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான்.
7 Бо у́ста священикові знання́ стережу́ть та Зако́на шукають із уст його, бо він ангол Господа Саваота.
ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய யெகோவாவின் தூதன்.
8 А ви відхили́лись з дороги, вчини́ли таке, що багато спіткну́лись в Зако́ні, Леві́євого заповіта пони́щили, говорить Госпо́дь Савао́т.
நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறச்செய்தீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
9 Тому́ то і Я вас зробив пого́рджуваними й низьки́ми для всього наро́ду, бо не стереже́те доріг Моїх ви, та не безсторо́нні в Зако́ні.
நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம்செய்ததினால் நானும் உங்களை எல்லா மக்களுக்கு முன்பாகவும் அற்பமானவர்களும் இழிவானவர்களுமாக்கினேன்.
10 Чи Оте́ць нам усім не оди́н? Хіба Бог не один нас створи́в? Чому́ ж один о́дного зраджуємо ми, щоб нам зневажа́ти запові́т батькі́в наших?
௧0நம்மெல்லோருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மை உருவாக்கவில்லையோ? நாம் நம்முடைய முற்பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்கு ஏன் துரோகம் செய்யவேண்டும்?
11 Зраджує Юда, і робиться не́чисть серед Ізраїля та в Єрусалимі, — бо Юда зневажив святиню Господню, яку покохав був, і дочку бога чужого за жінку узя́в.
௧௧யூதா மக்கள் துரோகம் செய்தார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; யெகோவா சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா மக்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் மகள்களை திருமணம்செய்தார்கள்.
12 Нехай Господь ви́губить кожного, хто́ таке робить, того, хто чува́є та відповідає з наме́тів Якова, і хто да́р прино́сить Господу Саваоту.
௧௨இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாக இருந்தாலும், உத்திரவு கொடுக்கிறவனாக இருந்தாலும், சேனைகளின் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்துகிறவனாக இருந்தாலும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இல்லாமல் யெகோவா அழிப்பார்.
13 І робите й друге таке: Господнього же́ртівника ви слізьми́ покриваєте, плаче́м та стогна́нням, бо до да́рів уже Він не зве́рнеться більше, і милої жертви з рук ваших не ві́зьме.
௧௩நீங்கள் இரண்டாவது முறையும் இதைச் செய்து, யெகோவாவுடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதிக்கமாட்டார், அதை உங்கள் கைகளில் பிரியமாக ஏற்றுக்கொள்ளவுமாட்டார்.
14 А ви ще й говорите: „За́що?“— За те, що засві́дчив Господь між тобою й жоною юна́цтва твого́, якій ти невірність вчинив, а вона ж твоя по́друга, і дружи́на умо́ви твоєї!
௧௪ஏன் என்று கேட்கிறீர்கள்; யெகோவா உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம் செய்தாயே.
15 Хіба Бог не один нас учинив? І за́лишок духу — Його́. А що цей один? Насіння від Бога шукав. Тому́ свого духа пильну́йте, і дружи́ну юна́цтва свойо́го не зраджуйте!
௧௫அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்பு ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் செய்யாமல், உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
16 Бо нена́виджу ро́звід, — говорить Госпо́дь, Бог Ізраїлів, — і того, хто вкриває наси́льством одежу свою, промовляє Госпо́дь Савао́т. Тому́ свого духа пильнуйте, — і не зраджу́йте!
௧௬விவாகரத்தை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் ஆடையை மூடுகிறான் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்செய்யாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
17 Словами своїми ви мучите Господа, та й пита́єте ще: „Чим ми мучимо?“— Гово́ренням вашим: „Кожен, хто чинить ли́хе, той добрий у Господніх оча́х, і Він у них уподо́бання має“, або: „Де Бог правосу́ддя?“
௧௭உங்கள் வார்த்தைகளினாலே யெகோவாவை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் யெகோவாவின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்மேல் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

< Малахії 2 >