< Ісая 12 >
1 І ти скажеш дня того: Хвалю́ Тебе, Господи, бо Ти гні́вавсь на мене, та гнів Твій вщуха́є, й мене Ти пора́дуєш,
௧அக்காலத்திலே நீ சொல்வது: “யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது; நீர் என்னைத் தேற்றுகிறீர்.
2 оце, — Бог спасі́ння моє! Безпечний я, і не боюсь, бо Госпо́дь, — Господь сила моя та мій спів, і спасі́нням для мене Він став!
௨இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
3 І ви в радості бу́дете че́рпати воду з спасе́нних джере́л!
௩நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.
4 І скажете ви того дня: „Дя́куйте Господу, кличте Іме́ння Його́, сповісті́ть між наро́дів про вчинки Його, пригадайте, що Йме́ння Його превеличне!
௪அக்காலத்திலே நீங்கள் சொல்வது: யெகோவாவை துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள்.
5 Співайте для Господа, Він бо вели́чне вчинив, і хай це́ буде зна́не по ці́лій землі!
௫யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
6 Радій та співай, ти мешка́нко Сіону, бо серед тебе Великий, — Святий Ізраїлів!
௬சீயோனில் குடியிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”