< Єзекіїль 11 >

1 І підійняв мене Дух, і привів мене до схі́дньої брами Господнього дому, що обе́рнена на схід. І ось при вході до брам двадцять і п'ять чоловіка, а серед них бачив я Яазанію, сина Аззурового, та Пелатію, сина Венаїного, князі́в народу.
பின்பு தேவ ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் யெகோவாவுடைய ஆலயத்தின் கிழக்கு முகமாக இருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து ஆண்கள் இருந்தார்கள்; அவர்களின் நடுவே மக்களின் பிரபுக்களாகிய அசூரின் மகனாகிய யசனியாவையும், பெனாயாவின் மகனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.
2 І сказав Він до мене: „Сину лю́дський, оце ті люди, що заду́мують кривду, і радять злу раду в цьому місті,
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, தீய ஆலோசனை சொல்லுகிற மனிதர்கள்.
3 що говорять: „Не скоро будувати доми́. Воно — казан, а ми — м'ясо“.
இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.
4 Тому́ пророкуй на них, пророкуй, сину лю́дський!“
ஆகையால் அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம்சொல்லு, மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம்சொல்லு என்றார்.
5 І зійшов на мене Дух Господній, та й до мене сказав: „Скажи: Так говорить Господь: Отак кажете, доме Ізраїлів, і заміри вашого духа — Я знаю їх.
அப்பொழுது யெகோவாவுடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் மக்களே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்களுடைய மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.
6 Ви намно́жили своїх забитих у цьому місті, і напо́внили його вулиці тру́пами.
இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலை செய்யப்பட்டவர்களாலே நிரப்பினீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
7 Тому так говорить Госпо́дь Бог: Ваші забиті, що ви їх поклали серед нього, вони те м'ясо, а воно — той каза́н. Та Я ви́проваджу вас із нього!
ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றுவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
8 Ви боїте́ся меча — і меча наведу́ Я на вас, говорить Господь Бог.
பட்டயத்திற்குப் பயப்பட்டீர்கள், வாளையே உங்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9 І ви́проваджу вас із нього, і дам вас у руку чужих, і зроблю́ між вами при́суди!
நான் உங்களை அதற்குள் இல்லாதபடிக்குப் வெளியேற்றி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.
10 Від меча ви попа́даєте; на границі Ізраїля розсуджу́ вас, і ви пізнаєте, що Я — то Господь!
௧0பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
11 Воно не буде вам казано́м, і ви не станете в ньому м'ясом. При границі Ізраїля розсуджу́ вас!
௧௧இந்த நகரம் உங்களுக்குப் பானையாக இருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாக இருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
12 І пізнаєте ви, що Я — Господь, бо за уставами Його ви не ходили, а постано́в Моїх не виконували, але виконували за постано́вами тих наро́дів, що навколо вас“.
௧௨என்னுடைய கட்டளையின்படி நடக்காமலும், என்னுடைய நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13 І сталося, коли я пророкував, то Пелатія, син Бенаніїн, помер. І впав я на своє обличчя, і закричав сильним голосом та й сказав: „О Господи Боже, Ти робиш кінець з Ізраїлевим останком!“
௧௩நான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லும்போது, பெனாயாவின் மகனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாக: ஆ, யெகோவாகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களை முற்றிலும் அழித்துப்போடுவீரோ என்று முறையிட்டேன்.
14 І було мені слово Господнє таке:
௧௪அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
15 „Сину лю́дський, брати твої, брати твої — мужі рідні тобі, а ввесь Ізраїлів дім — увесь той, що до них говорили ме́шканці Єрусалиму: Віддалі́ться від Господа, нам даний цей край на володі́ння,
௧௫மனிதகுமாரனே, நீங்கள் யெகோவாவைவிட்டுத் தூரமாகப்போங்கள், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன்னுடைய சகோதரர்களுக்கும், உன்னுடைய குடும்பத்தாருக்கும், உன்னுடைய சொந்த மக்களுக்கும், இஸ்ரவேலர்கள் அனைவருக்கும், எருசலேமின் வாழ்கிறவர்கள் சொல்லுகிறார்கள்.
16 тому скажи: Так говорить Господь Бог: Хоч Я віддали́в їх поміж народи, і хоч розпоро́шив їх по края́х, проте буду для них хоч малою святинею в тих края́х, куди вони ввійшли.
௧௬ஆகையால் நான் அவர்களைத் தூரமாக அந்நியஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்திற்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்.
17 Тому́ скажи: Так говорить Господь Бог: І позбираю Я вас із народів, зберу́ з тих країв, серед яких ви розпоро́шені, і дам вам Ізраїлеву землю.
௧௭ஆதலால் நான் உங்களை மக்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.
18 І вони вві́йдуть туди, і викинуть з неї усі мерзо́ти її та всі гидо́ти її.
௧௮அவர்கள் அங்கே வந்து, அதில் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாக இருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.
19 І дам їм одне серце, і ново́го духа дам у вас, і вийму з їхнього тіла серце камінне, і дам їм серце із м'яса,
௧௯அவர்கள் என்னுடைய கட்டளைகளின்படி நடந்து, என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஒருமனப்பட்ட இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் சரீரத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
20 щоб вони ходили за уставами Моїми, і додержували Мої постанови та виконували їх. І вони стануть Мені народом, а Я буду їм Богом!
௨0அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள், நான் அவர்கள் தேவனாக இருப்பேன்.
21 А щодо тих, що їхнє серце ходить за гидо́тами своїми та мерзо́тами своїми, то поверну́ їхню дорогу на їхню голову, говорить Господь Бог“.
௨௧ஆனாலும் சீ என்று வெறுக்கப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்களுடைய இருதயத்தின் ஆசையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
22 І попідійма́ли Херувими кри́ла свої, а коле́са при них, і слава Ізраїлевого Бога зверху над ними.
௨௨அப்பொழுது கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
23 І підняла́ся слава Господня з-над сере́дини міста, і стала на горі, що зо сходу міста.
௨௩யெகோவாவுடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்து எழும்பி, நகரத்திற்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
24 І дух підні́с мене, і ввів мене в Халдею до полоня́н у видінні, Духом Божим. І підійняло́ся від мене те виді́ння, яке я бачив.
௨௪பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய்விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுக்கப்பட்டுப்போனது.
25 І я говорив до полоня́н усі Господні слова, які Він наказав був мені.
௨௫யெகோவா எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பில் இருந்தவர்களுக்குச் சொன்னேன்.

< Єзекіїль 11 >