< Дії 24 >
1 А по п'яти днях прибув первосвященик Ана́ній з якимись старши́ми, та з промовцем якимсь Терти́лом, що перед намісником ска́ржилися на Павла.
௧ஐந்து நாட்களுக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு வழக்கறிஞரோடும் கூடப்போனான், அவர்கள் பவுலுக்கு எதிராக தேசாதிபதியினிடத்தில் முறையீடு செய்தார்கள்.
2 Коли ж він був покликаний, то Тертил оскаржати зачав, промовляючи: „Через тебе великий мир маємо ми, і для наро́ду цього добрі речі впроваджено через дбайливість твою, —
௨அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி:
3 це ми за́вжди і скрізь визнаємо з подякою щирою, вседостойний наш Фе́ліксе!
௩கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சுகத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்த தேசத்தினர்களுக்கு சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே ஒப்புக்கொள்ளுகிறோம்.
4 Та щоб довго тебе не турбува́ти, то благаю тебе, щоб ти коротко вислухав нас зо своєї ласка́вости.
௪உம்மை நான் அதிக சொற்களினாலே வருத்தப்படுத்தாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாகச் சொல்வதை நீர் பொறுமையாகக் கேட்கவேண்டுமென்று வேண்டுகிறேன்.
5 Ми переконались, що цей чоловік — то зара́за, і що він колотнечу викли́кує між усіма юдеями в ці́лому світі, і що він провідни́к Назорейської єресі.
௫என்னவென்றால், இந்த மனிதன் கொள்ளைநோயாகவும், பூமியிலுள்ள அனைத்து யூதர்கள் நடுவில் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதகுழப்பத்திற்கு தலைவனாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம்.
6 Він відважився навіть збезчестити храм, і його ми схопи́ли були, і судити хотіли за нашим Зако́ном.
௬இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப்பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்களுடைய வேதபிரமாணத்தின்படியே நியாயம் விசாரிக்க விரும்பியிருந்தோம்.
7 Але тисяцький Лі́сій прибув, і з великим наси́льством видер його з наших рук,
௭அப்பொழுது இராணுவ அதிபதி லீசியா வந்து, மிகவும் துணிகரமாக இவனை எங்களுடைய கைகளிலிருந்து இழுத்துக்கொண்டுபோய்,
8 а його винува́льникам звелів йти до тебе. Ти сам зможеш від нього, розпитавши, дізнатись про все, у чо́му його ми вину́ємо“.
௮இவன்மேல் குற்றஞ்சுமத்துகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சுமத்துகிற குற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
9 Юдеї також прилучились до того, говорячи, що то так.
௯யூதர்களும் அதற்கு சம்மதித்து, இவைகள் உண்மைதான் என்றார்கள்.
10 І як намісник дав знака йому говорити, то Павло відповів: „Я знаю, що від літ багатьох ти суддя для наро́ду цього, — тому буду сміліш боронитись.
௧0பவுல் பேச தேசாதிபதி அனுமதித்தபோது, அவன் பதிலாக: நீர் அநேக வருடகாலமாக இந்த நாட்டாருக்கு நீதிபதியாக இருக்கிறீர் என்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் பதில் சொல்லுகிறேன்.
11 Ти можеш довідатися, що нема більш дванадцяти день, як прийшов я до Єрусалиму вклонитися.
௧௧நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாட்கள்மட்டும் ஆனதென்று நீர் அறிந்துகொள்ளலாம்.
12 І вони ані в храмі, ані в синагогах, ні в місті мене не здиба́ли, щоб я з ким сперечався, або колотнечу в наро́ді здіймав.
௧௨தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம் செய்ததையும், நான் ஜெப ஆலயங்களிலாவது பட்டணத்திலாவது மக்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் பார்த்ததில்லை.
13 І не можуть вони дове́сти тобі того, у чо́му тепер оскаржа́ють мене.
௧௩இப்பொழுது என்மேல் சுமத்துகிற குற்றங்களை இவர்கள் உம்மிடத்தில் நிரூபிக்கவும் முடியாது.
14 Але признаю́сь тобі, що в дорозі оцій, яку звуть вони єрессю, я Богові отців служу́ так, що вірую всьому, що в Зако́ні й у Пророків написане.
௧௪உம்மிடத்தில் ஒன்றை ஏற்றுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற வழியின்படியே எங்களுடைய முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புத்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் நம்பி,
15 І маю надію я в Бозі, — чого й самі вони сподіва́ються, — що настане воскресіння праведних і неправедних.
௧௫நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறதுபோல, நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
16 І я пильно дба́ю про те, щоб за́всіди мати сумління невинне, щодо Бога й людей.
௧௬இதனால் நான் தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாக இருக்க முயற்சிக்கிறேன்.
17 А по довгих рока́х я прибув, щоб подати моєму наро́дові ми́лостиню та при́носи.
௧௭பல வருடங்களுக்குப்பின்பு நான் என் மக்களுக்கு நன்கொடைப் பணத்தைக் கொடுக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன்.
18 Ось при цьо́му знайшли мене дехто з юдеїв азійських очищеного в храмі, а не з на́товпом чи з колотнечею.
௧௮அப்பொழுது கூட்டமில்லாமலும் ஆர்ப்பாட்டமில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரிப்பு செய்துகொண்டவனாக இருந்தபோது, ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைப் பார்த்தார்கள்.
19 Їм належало б ось перед тебе прибути й казати, коли мають вони що на мене.
௧௯அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாவது இருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சுமத்தவேண்டும்.
20 Або самі ці нехай скажуть, чи якусь неправду знайшли на мені, як я в синедріоні стояв,
௨0நான் ஆலோசனைச் சங்கத்தினர்களுக்கு முன்பாக நின்றபோது அவர்கள் ஏதாவது அநியாயத்தை என்னிடத்தில் கண்டிருந்தால் இவர்களே அதைச் சொல்லட்டும்.
21 крім отого єдиного виразу, що я його крикнув, стоячи́ серед них: „За воскресіння мертвих приймаю від вас суд сьогодні!“
௨௧நான் அவர்கள் நடுவில் நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேன் என்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றம் காணப்படவில்லை என்றான்.
22 Але Фе́лікс, дуже добре дорогу цю знавши, відро́чив їм справу, говорячи: „Розсуджу́ вашу справу, коли тисяцький Лісій прибу́де“.
௨௨இந்த மார்க்கத்தின் விஷயங்களை தெளிவாக அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: இராணுவ அதிபதி லீசியா வரும்போது உங்களுடைய காரியங்களைக் கண்டிப்பாய் விசாரிப்பேன் என்று சொல்லி;
23 І він сотникові наказав сторожити Павла́, але мати полегшу, і не боронити ніко́му з близьки́х його, щоб служили йому.
௨௩பவுலைக் காவலில் வைக்கவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு சேவைசெய்கிறதற்கும் அவனைக் கவனித்துக்கொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனிதர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூறுபேருக்கு அதிபதியானவனுக்கு ஆணையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படி செய்தான்.
24 А по декількох днях прийшов Фе́лікс із дружи́ною своєю Друзі́ллою, що була юде́янка, і покликав Павла, та слухав від нього про віру в Ісуса Христа.
௨௪சில நாட்களுக்குப்பின்பு பேலிக்ஸ் யூதப் பெண்ணாகிய தன் மனைவி துருசில்லாளுடனே வந்து, பவுலை அழைத்து வரச்செய்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக்குறித்து அவன் சொல்லக்கேட்டான்.
25 І як розповідав він про праведність, і про здержливість, та про майбу́тній суд, то Фе́лікса страх обгорнув, і він відповів: „Тепер іди собі, відповідного ж ча́су покличу тебе!“
௨௫அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பைக்குறித்துப் பேசும்போது, பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்கு நேரம் கிடைக்கும்போது உன்னை வரவழைப்பேன் என்றான்.
26 Разом із тим і сподіва́вся він, що дасть Павло грошей йому, тому й часто його приклика́в і розмову з ним вів.
௨௬மேலும், அவன் பவுலை விடுதலைசெய்யும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்; அதினாலே அவன் அநேகமுறை அவனை அழைத்து, அவனுடனே பேசினான்.
27 Як минуло ж два роки, то Фе́лікс одержав наступника, — По́рція Фе́ста. А Фелікс бажав догодити юдеям, — і в в'язниці Павла́ залиши́в.
௨௭இரண்டு வருடங்கள் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாக பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதர்களுக்கு நன்மைசெய்ய விரும்பி பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.