< Від Матвія 20 >

1 Подібне бо царство небесне чоловіку господареві, що вийшов рано вранцї наймати робітників у виноградник свій.
பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது; அவன் தன் திராட்சைத்தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான்.
2 І, згодившись із робітниками по денарию на день, післав їх у виноградник свій.
வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத்தோட்டத்திற்கு அனுப்பினான்.
3 І, вийшовши коло третьої години, побачив внших, що стояли на торгу без дїла,
காலை ஒன்பதுமணியளவில் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து:
4 і рече до них: Ідїть і ви у виноградник, і що буде право, дам вам, Вони й пійшли.
நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள்.
5 Вийшовши знов коло шестої і девятої години, зробив так само.
மறுபடியும், நண்பகல் பன்னிரண்டுமணிக்கும், மூன்றுமணிக்கும் அவன்போய் அப்படியே செய்தான்.
6 Вийшовши ж коло одинайцятої години, знайшов инших, що стояли без дїла, й рече до них: Чого тут стоїте увесь день без дїла?
ஐந்துமணியளவிலும் அவன்போய், சும்மா நிற்கிற வேறு சிலரைப் பார்த்து: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்.
7 Кажуть вони йому: Бо ніхто не найняв нас. Рече він їм: Ійдїть і ви в виноградник, і що буде право, одержите.
அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்றார்கள். அவன் அவர்களைப் பார்த்து: நீங்களும் திராட்சைத்தோட்டத்திற்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான்.
8 Як же настав вечір, рече пан виноградника доморядникові своєму: Поклич робітників, та роздай їм нагороду, почавши від останнїх аж до первих.
மாலைநேரத்தில், திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் நிர்வாகியைப் பார்த்து: நீ வேலையாட்களை அழைத்து, பிந்தி வந்தவர்கள் தொடங்கி முதலில் வந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான்.
9 І прийшовши ті, що коло одинайцятої години, взяли по денарию.
அப்பொழுது ஐந்துமணியளவில் சேர்க்கப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
10 Прийшовши ж перші, думали, що більше візьмуть; та взяли й вони по денарию.
௧0முந்தி சேர்க்கப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று நினைத்தார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு வெள்ளிக்காசு வாங்கினார்கள்.
11 І взявши вони, нарекали на господаря,
௧௧வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானைப் பார்த்து:
12 говорячи: Що сї останні одну годину робили, й зрівняв єси їх із нами, що зносили тяготу дня і спеку.
௧௨பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒருமணிநேரம்மட்டும் வேலைசெய்தார்கள்; பகலின் பாடுகளையும் வெயிலின் வெப்பத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்.
13 Він же, озвавшись, рече одному з них: Друже, не кривжду тебе; хиба не за денария згодив ся єси зо мною?
௧௩அவர்களில் ஒருவனுக்கு அவன் மறுமொழியாக: நண்பனே, நான் உனக்கு அநியாயம் செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு வெள்ளிக்காசுக்குச் சம்மதிக்கவில்லையா?
14 Візьми своє, та й іди: я ж хочу й сьому останньому дати, що й тобі.
௧௪உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோல பிந்திவந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய விருப்பம்.
15 Хиба ж не вільно менї робити, що хочу, з добром моїм? Чи того твоє око лихе, що я добрий?
௧௫என்னுடையதை என் விருப்பப்படிச்செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தாராளமனமுடையனாக இருக்கிறபடியால், நீ பொறாமைகொள்ளலாமா என்றான்.
16 Так будуть останнї перві, а перві останнї; багато бо званих, мало ж вибраних.
௧௬இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராகவும், முந்தினோர் பிந்தினோராகவும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
17 І, йдучи Ісус у Єрусалим, узяв дванайцять учеників на самоту в дорозї, й рече до них:
௧௭இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து:
18 Оце ми йдемо в Єрусалим; і буде виданий Син чоловічий архиєреям, та письменникам, і осудять вони Його на смерть;
௧௮இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனிதகுமாரன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் வேதபண்டிதரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரணதண்டனைக்குள்ளாகத் தீர்த்து,
19 і видадуть Його поганам, щоб з Него насьміхались, та били, та розпяли, а третього ж дня він воскресне.
௧௯அவரைப் பரிகாசம்பண்ணவும், சாட்டையினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
20 Тодї приступила до Него мати синів Зеведеєвих із синами своїми, кланяючись та просячи чогось у Него.
௨0அப்பொழுது, செபெதேயுவின் குமாரர்களுடைய தாய் தன் குமாரர்களோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் செய்யவேண்டும் என்றாள்.
21 Він же рече до неї: Чого хочеш? Каже вона до Него: Скажи, щоб сидїли оці два сини мої, один по правицї Твоїй, а другий по лївицї у царстві Твоєму.
௨௧அவர் அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரர்களாகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், ஒருவன் உமது இடதுபக்கத்திலும் உட்காரும்படி அருள்செய்யவேண்டும் என்றாள்.
22 Озвав ся ж Ісус і рече; Не знаєте, чого просите. Чи зможете ви пити чашу, яку я пити му, й хреститись хрещеннєм, яким я хрещусь? Кажуть йому: Зможемо.
௨௨இயேசு மறுமொழியாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் இடத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள்.
23 І рече до них: Ви то чашу мою пити мете, й хрещеннєм, яким я хрещусь, хреститиметесь; тільки ж, щоб вам сидіти по правиці в мене й по лївицї в мене, се не єсть моє дати, а кому приготовлено від Отця мого.
௨௩அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
24 І почувши десять, ремствували із двох братів.
௨௪மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்கள்மேல் கோபமடைந்தார்கள்.
25 Ісус же, покликавши їх, рече: ви знаєте, що в поган князї панують над ними, й великі управляють ними.
௨௫அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: யூதரல்லாதவர்களுடைய தலைவர்கள் அவர்களை இறுமாப்பாக ஆளுகிறார்கள் என்றும், அதிகாரமுடைய மனிதர்கள் அவர்கள்மேல் கடினமாக அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
26 Не так же буде в вас: нї, хто хоче бути великим між вами, нехай буде вам слугою;
௨௬உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாவது பெரியவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
27 і хто хоче між вами бути першим, нехай вам буде рабом,
௨௭உங்களில் எவனாவது முதன்மையானவனாக இருக்கவிரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைசெய்கிறவனாக இருக்கவேண்டும்.
28 як Син чоловічий не прийшов, щоб служено Йому, а служити, й дати душу свою яко викуп за многих.
௨௮அப்படியே, மனிதகுமாரனும் பணிவிடை பெரும்படி வராமல், பணிவிடைசெய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.
29 І як виходили вони з Єрихона, йшло слїдом за Ним багато народу
௨௯அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகும்போது, திரளான மக்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.
30 І ось двоє слїпих, що сидїли над шляхом, почувши, що Ісус переходить, кричали, кажучи: Помилуй нас, Господи, сину Давидів.
௩0அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர்கள், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
31 Народ же сваривсь на них, щоб мовчали; а вони ще більш кричали, кажучи: Помилуй нас, Господи, сину Давидів.
௩௧அவர்கள் பேசாதிருக்கும்படி மக்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாகக் கூப்பிட்டார்கள்.
32 І, зупинившись Ісус, покликав їх, і рече: Що хочете, щоб зробив вам?
௩௨இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார்.
33 Кажуть йому: Господи, щоб очі наші відкрились.
௩௩அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்களுடைய கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள்.
34 Вмилосердив ся ж Ісус, і доторкнувсь очей їх, і зараз прозріли очі їх, і пійшли вони слїдом за Ним.
௩௪இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

< Від Матвія 20 >