< Від Матвія 16 >
1 Поприходили також Фарисеї та Садукеї й, спокушуючи Його, бажали від Него, щоб показав їм ознаку з неба.
௧பரிசேயர்களும், சதுசேயர்களும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.
2 Він же, озвавшись, рече їм: Як настане вечір, ви говорите: Погода, бо червонїє небо.
௨அவர்களுக்கு அவர் மறுமொழியாக: மாலைநேரமாகிறபோது செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் அமைதியாக இருக்கும் என்று சொல்லுகிறீர்கள்.
3 А вранці: Сьогодні непогідь, бо небо червонїє та хмарить ся. Лицеміри, лице неба вмієте познавати, а ознак часу не можете?
௩உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாக இருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரர்களே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா?
4 Кодло лукаве та перелюбне ознаки шукав; а ознака не дасть ся йому, хиба тільки ознака Йони пророка. І, покинувши їх, пійшов.
௪இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேதவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களைவிட்டுப் புறப்பட்டுப்போனார்.
5 Та ученики Його, перепливши на той бік, забули взяти хлїба.
௫அவருடைய சீடர்கள் அக்கரையைச் சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்.
6 Ісус же рече до них: Гледїть, остерегайтесь квасу Фарисейського та Садукейського.
௬இயேசு அவர்களைப் பார்த்து: பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என்றார்.
7 Вони ж міркували собі, кажучи: Се, що не взяли ми хлїба.
௭நாம் அப்பங்களைக் கொண்டுவராததினால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள்.
8 Постерігши ж се Ісус, рече до них: Що ви міркуєте собі, маловіри, що хлїба не взяли?
௮இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
9 Хиба ще не зрозуміли, та й не памятаєте пяти хлібів пятьом тисячам, і скільки кошів набрали?
௯இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனைக் கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும்;
10 анї семи хлїбів чотирьом тисячам, і скільки кошів набрали?
௧0ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைகள்நிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா?
11 Як се не розумієте, що не про хлїб я казав вам, остерегатись квасу Фарисейського та Садукейського?
௧௧பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.
12 Тоді зрозуміли, що не казав остерегатись квасу хлїбного, а науки Фарисейської та Садукейської.
௧௨அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.
13 Як же прийшов Ісус у сторони Кесариї Филипової, то питав учеників своїх, глаголючи: За кого мають люде мене, Сина чоловічого?
௧௩பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
14 Вони ж сказали: Одні за Йоана Хрестителя, другі за Ілию, инші ж за Єремію або одного з пророків.
௧௪அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
15 Рече до них: Ви ж як кажете? хто я?
௧௫அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
16 Озвавшись Симон Петр, каже: Ти єси Христос, Син Бога живого.
௧௬சீமோன்பேதுரு மறுமொழியாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
17 І озвавшись Ісус, рече до него: Блажен єси; Симоне, сину Йонин, бо тіло й кров не відкрила тобі сього, а Отець мій, що на небі.
௧௭இயேசு அவனைப் பார்த்து: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
18 Скажу ж і я тобі: Що ти єси Петр, і на сьому каменї збудую церкву мою, і ворота пекельні не подужають її. (Hadēs )
௧௮மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. (Hadēs )
19 І дам я тобі ключі царства небесного; й що звяжеш на землі, буде звязане на небі; а що розвяжеш на землі, буде розвязане на небі.
௧௯பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.
20 Тоді наказав ученикам своїм, щоб не казали нікому, що Він Ісус Христос.
௨0அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.
21 З того часу почав Ісус виявляти ученикам своїм, що мусить ійти в Єрусалим, і багато терпіти од старших, та архиєреїв, та письменників, і бути вбитим, і встати третього дня.
௨௧அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
22 І взявши Його Петр, почав докоряти Йому, кажучи: Пожаль ся себе, Господи; нехай се не станеть ся Тобі.
௨௨அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.
23 Він же обернувсь і рече до Петра: Геть від мене, сатано! ти блазниш мене, бо не гадаєш про Боже, а про чоловіче.
௨௩அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.
24 Рече тоді Ісус ученикам своїм: Коли хто хоче йти слїдом за мною, нехай відречеть ся себе самого, й візьме хрест свій, та й іде слїдом за мною.
௨௪அப்பொழுது, இயேசு தம்முடைய சீடர்களைப் பார்த்து: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றவேண்டும்.
25 Хто бо хоче спасти душу свою, той погубить її; хто ж погубить душу свою ради мене, знайде її.
௨௫தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.
26 Що бо за користь, чоловікові, хоч би сьвїт увесь здобув, а душу свою занапастив? або що дасть чоловік у замін за душу свою?
௨௬மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனிதன் தன் ஜீவனுக்கு இணையாக என்னத்தைக் கொடுப்பான்?
27 Прийде бо Син чоловічий у славі Отця свого з ангелами своїми; й тоді віддасть кожному по дїлам його.
௨௭மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.
28 Істино глаголю вам: Єсть деякі між стоячими тут, що не вкусять смерти, аж поки побачять Сина чоловічого, грядущого в царстві своїм.
௨௮இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனிதகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காண்பதற்குமுன், மரணத்தைக் காண்பதில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.