< Nnwom 37 >

1 Dawid dwom. Nha wo ho nnebɔneyɛfoɔ nti; mma wʼani mmere wɔn a wɔyɛ bɔne;
தாவீதின் பாடல். பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமை கொள்ளாதே.
2 Wɔte sɛ ɛserɛ, ɛnkyɛre na ahye, wɔte sɛ dua mono, ɛnkyɛre na awu.
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுக்கப்பட்டு, பச்சைத்தாவரத்தைப்போல் வாடிப்போவார்கள்.
3 Fa wo ho to Awurade so na yɛ papa. Tena asase no so na ma wʼani nka asomdwoeɛ adidibea hɔ.
யெகோவாவை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.
4 Ma wʼani nka Awurade ho na woama wo deɛ wʼakoma pɛ.
யெகோவாவிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
5 Fa wʼakwan hyɛ Awurade nsam; na fa wo ho to ne so, na ɔno na ɔbɛyɛ:
உன் வழியைக் யெகோவாவுக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கச்செய்வார்.
6 ɔbɛma wo teneneeyɛ ahyerɛn sɛ adekyeeɛ, na wʼatɛntenenee ayɛ sɛ owigyinaeɛ.
உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கச்செய்வார்.
7 Yɛ komm wɔ Awurade anim na to wo bo ase twɛn no, nha wo ho wɔ wɔn a asi wɔn yie ho ɛfiri sɛ wɔnam bɔne akwan so.
யெகோவாவை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன் மேலும் தீவினைகளைச் செய்கிற மனிதன் மேலும் எரிச்சலாகாதே.
8 Mma wo bo mfu, na gyae abufuhyeɛ; nha wo ho, ɛkɔwie bɔne nko ara.
கோபத்தை தள்ளி, கடுங்கோபத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.
9 Wɔbɛtwa nnebɔneyɛfoɔ agu, nanso wɔn a wɔn ani da Awurade soɔ no, wɔbɛnya asase no adi so.
பொல்லாதவர்கள் அறுக்கப்பட்டுபோவார்கள்; யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
10 Ɛrenkyɛre, nnebɔneyɛfoɔ bɛyera. Wɔbɛhwehwɛ wɔn, nanso wɔrenhunu wɔn.
௧0இன்னும் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இருக்கமாட்டான்; அவன் நிலையை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.
11 Nanso ahobrɛasefoɔ bɛnya asase no adi so na wɔanya asomdwoeɛ mmorosoɔ.
௧௧சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
12 Amumuyɛfoɔ bɔ pɔ bɔne tia ateneneefoɔ na wɔtwɛre wɔn se gu wɔn so;
௧௨துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாகத் தீங்கு நினைத்து, அவன்மேல் பல்லைக் கடிக்கிறான்.
13 nanso, Awurade sere amumuyɛfoɔ, na ɔnim sɛ wɔn nna abɛn.
௧௩ஆண்டவர் அவனைப் பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.
14 Amumuyɛfoɔ twe akofena na wɔkuntunu wɔn tadua mu sɛ wɔbɛkum ahiafoɔ ne mmɔborɔfoɔ, sɛ wɔbɛkum wɔn a wɔn akwan tene.
௧௪சிறுமையும் எளிமையுமானவனை வீழ்த்தவும், செம்மை மார்க்கத்தாரை விழசெய்யவும், துன்மார்க்கர்கள் வாளை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.
15 Nanso, wɔn akofena bɛwowɔ wɔn ankasa akoma mu, na wɔn tadua mu abubu.
௧௫ஆனாலும் அவர்கள் வாள் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போகும்; அவர்கள் வில்லுகள் முறியும்.
16 Kakra a ateneneefoɔ wɔ no som bo sene amumuyɛfoɔ bebree ahonya;
௧௬அநேக துன்மார்க்கர்களுக்கு இருக்கிற திரளான செல்வத்தைவிட, நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.
17 ɛfiri sɛ, amumuyɛfoɔ ahoɔden bɛsa nanso Awurade bɛwowa ateneneefoɔ.
௧௭துன்மார்க்கருடைய கரங்கள் முறியும்; நீதிமான்களையோ யெகோவா தாங்குகிறார்.
18 Awurade nim wɔn a wɔn ho nni asɛm no nna, na wɔn agyapadeɛ bɛtena hɔ daa.
௧௮உத்தமர்களின் நாட்களைக் யெகோவா அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.
19 Ahohiahia berɛ mu wɔremmrɛ. Ɛkɔm berɛ mu wɔbɛnya ma abu so.
௧௯அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.
20 Nanso, amumuyɛfoɔ bɛyera. Awurade atamfoɔ bɛyɛ te sɛ wiram nhwiren; wɔbɛtu ayera sɛ wisie.
௨0துன்மார்க்கர்களோ அழிந்துபோவார்கள், யெகோவாவுடைய எதிரிகள் ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பைப்போல புகைந்து போவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள்.
21 Amumuyɛfoɔ pɛ bosea, na wɔntua, nanso ɔteneneeni de ahummɔborɔ ma;
௨௧துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
22 Wɔn a Awurade ahyira wɔn no bɛnya asase no adi so, na wɔn a ɔdome wɔn no wɔbɛtwa wɔn agu.
௨௨அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுக்கப்பட்டுபோவார்கள்.
23 Sɛ Awurade ani sɔ onipa akwan a, ɔma nʼanammɔntuo si pi.
௨௩நல்ல மனிதனுடைய நடைகள் யெகோவாவால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.
24 Sɛ ɔsunti a ɔrenhwe ase, ɛfiri sɛ Awurade kura no wɔ ne nsam.
௨௪அவன் விழுந்தாலும் தள்ளப்பட்டு போவதில்லை; யெகோவா தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
25 Na meyɛ aberanteɛ, na seesei mabɔ akɔkoraa, na menhunuu ɔteneneeni a Awurade apa nʼakyi anaasɛ ne mma resrɛ aduane.
௨௫நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்திற்கு பிச்சை எடுக்கிறதையும் நான் காணவில்லை.
26 Ɛberɛ biara ɔyɛ adɔeɛ, na ɔde fɛm kwa; na ne mma bɛnya nhyira.
௨௬அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
27 Twe wo ho firi bɔne ho na yɛ papa na wobɛtena asase no so afebɔɔ.
௨௭தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.
28 Ɛfiri sɛ, Awurade pɛ deɛ ɛtene, na ɔrennya ne nkurɔfoɔ nokwafoɔ no. Wɔbɛnya banbɔ daa nyinaa Nanso, amumuyɛfoɔ asefoɔ deɛ, wɔbɛtwa wɔn agu.
௨௮யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.
29 Ateneneefoɔ bɛnya asase no adi so na wɔatena so afebɔɔ.
௨௯நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே குடியிருப்பார்கள்.
30 Ɔteneneeni ano ka nyansasɛm, na ne tɛkrɛma ka deɛ ɛtene.
௩0நீதிமானுடைய வாய் ஞானத்தை சொல்லி, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.
31 Ne Onyankopɔn mmara wɔ nʼakoma mu; ne nan nnwatiri.
௩௧அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
32 Amumuyɛfoɔ tetɛ ateneneefoɔ hwehwɛ sɛ wɔbɛkum wɔn,
௩௨துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.
33 nanso, Awurade nnyaa wɔn mma wɔn na ɔremma wɔmmu wɔn kumfɔ wɔ asɛnniiɛ.
௩௩யெகோவாவோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது, அவனை தண்டனைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.
34 Montwɛn Awurade na monhwɛ nʼakwan. Ɔbɛma mo so na moanya asase no adi so; sɛ wɔtwitwa amumuyɛfoɔ no gu a, mobɛhunu.
௩௪நீ யெகோவாவுக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர்கள் அறுக்கப்பட்டுபோவதை நீ காண்பாய்.
35 Mahunu omumuyɛfoɔ a ɔyɛ basabasa sɛ ɔredi yie sɛ dua mono a ɛsi asase pa soɔ,
௩௫கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன் அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.
36 nanso ankyɛre na ɛwuiɛ a wɔnhunu no bio; mehwehwɛɛ no, nanso manhunu no.
௩௬ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; நான் மறுபடியும் போனேன், அவன் காணப்படவில்லை.
37 Susu deɛ ɔyɛ pɛ ho, na hwɛ deɛ ɔtene; na asomdwoeɛ onipa bɛnya asetena pa daakye.
௩௭நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனிதனுடைய முடிவு சமாதானம்.
38 Nanso wɔbɛsɛe nnebɔneyɛfoɔ nyinaa; na wɔbɛtɔre wɔn asefoɔ ase.
௩௮அக்கிரமக்காரர் ஒன்றாக அழிக்கப்படுவார்கள்; அறுக்கப்பட்டுபோவதே துன்மார்க்கர்களின் முடிவு.
39 Ateneneefoɔ nkwagyeɛ firi Awurade ɔne wɔn aban wɔ amanehunu berɛ mu.
௩௯நீதிமான்களுடைய இரட்சிப்பு யெகோவாவால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.
40 Awurade boa wɔn na ɔgye wɔn; ɔyi wɔn firi amumuyɛfoɔ nsam na ɔgye wɔn nkwa, ɛfiri sɛ wɔhinta wɔ ne mu.
௪0யெகோவா அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கர்களுடைய கைக்குத் தப்புவித்து காப்பாற்றுவார்.

< Nnwom 37 >