< Nnwom 109 >

1 Wɔde ma dwomkyerɛfoɔ no. Dawid dwom. Ao Onyankopɔn a mekamfo woɔ, mmua wʼano,
இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாடல். நான் துதிக்கும் தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம்.
2 na amumuyɛfoɔ ne nkontompofoɔ atu wɔn ano agu me so; wɔde atorɔ tɛkrɛma akasa atia me.
துன்மார்க்கனுடைய வாயும், வஞ்சகவாயும், எனக்கு விரோதமாகத் திறந்திருக்கிறது; பொய் நாவினால் என்னோடு பேசுகிறார்கள்.
3 Wɔde nitansɛm atwa me ho ahyia na wɔto hyɛ me so a menkaa wɔn.
பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, காரணமில்லாமல் என்னோடு போர்செய்கிறார்கள்.
4 Wɔka nsɛm to me so de tua me nnamfoyɛ so ka, nanso meyɛ obi a ɔpɛ mpaeɛbɔ.
என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன்.
5 Wɔde bɔne tua me papayɛ so ka, na wɔde ɔtan tua me nnamfoyɛ so ka.
நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என்னுடைய அன்புக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள்.
6 Ma onipa bɔne bi nsɔre ntia no; na Satan nnyina ne nsa nifa so.
அவனுக்கு மேலாகத் தீயவனை ஏற்படுத்தி வையும், சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்கட்டும்.
7 Wɔdi nʼasɛm a, ma ɔnni fɔ, na ne mpaeɛbɔ mmu no kumfɔ.
அவனுடைய நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகட்டும்; அவனுடைய ஜெபம் பாவமாகட்டும்.
8 Ma ne nkwa nna nyɛ kakraa bi; na ɔfoforɔ nsi nʼanan mu sɛ ɔkandifoɔ.
அவனுடைய நாட்கள் கொஞ்சமாகட்டும்; அவனுடைய வேலையை வேறொருவன் பெறட்டும்.
9 Ma ne mma nyɛ nwisiaa na ne yere nyɛ okunafoɔ.
அவனுடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவனுடைய மனைவி விதவையுமாகட்டும்.
10 Ma ne mma nkyinkyini nsrɛsrɛ adeɛ; ma wɔmpam wɔn mfiri wɔn afie a abubuo no mu.
௧0அவனுடைய பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்களுடைய பாழான வீடுகளிலிருந்து பிச்சை எடுக்கட்டும்.
11 Ma ɔdefirifoɔ bi mfa deɛ ɔwɔ nyinaa; na amanfrafoɔ mfom nʼadwuma so aba.
௧௧கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்ளட்டும்; அவனுடைய உழைப்பின் பலனை அந்நியர்கள் பறித்துக்கொள்ளட்டும்.
12 Mma obiara nhunu no mmɔbɔ Mma obiara nhunu ne nwisiaa nso mmɔbɔ.
௧௨அவனுக்கு ஒருவரும் இரக்கங்காட்டாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவு செய்யாமல் போகட்டும்.
13 Ma nʼase nhye, na wɔn din nyera wɔ awoɔ ntoatoasoɔ a ɛreba no mu.
௧௩அவனுடைய சந்ததியார் அழிக்கப்படட்டும்; இரண்டாம் தலைமுறையில் அவர்களுடைய பெயர் இல்லாமல் போகட்டும்.
14 Ma wɔnkae nʼagyanom nnebɔne wɔ Awurade anim; na ne maame bɔne no ntena hɔ daa.
௧௪அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும்.
15 Wɔn bɔne nyinaa nka Awurade anim, na wɔankae wɔn bio wɔ asase so.
௧௫அவைகள் எப்பொழுதும் யெகோவாவுக்கு முன்பாக இருக்கட்டும்; அவர்களுடைய பெயர் பூமியில் இல்லாமல் அழிக்கப்படட்டும்.
16 Ɛfiri sɛ wannwene da sɛ ɔbɛyɛ adɔeɛ, na mmom ɔtaa ahiafoɔ mmɔborɔfoɔ ne wɔn a wɔn werɛ ahoɔ de kɔɔ owuo mu.
௧௬அவன் தயவுசெய்ய நினைக்காமல், ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.
17 Nʼani gyee sɛ ɔbɛdome enti nnome mmra ne so; wampɛ sɛ ɔbɛhyira enti nhyira mmɔ no.
௧௭சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.
18 Ɔhyɛɛ nnome sɛ atadeɛ; ɛnonom kɔɔ ne onipadua mu sɛ nsuo, ne ne nnompe mu sɛ ngo.
௧௮சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
19 Ma ɛnyɛ sɛ atadeɛ a ɛkyekyere ne ho, ne abɔsoɔ a ɛbɔ no daa.
௧௯அது அவன் போர்த்துக்கொள்ளுகிற ஆடையாகவும், எப்பொழுதும் கட்டிக்கொள்ளுகிற வார்க்கச்சையாகவும் இருக்கட்டும்.
20 Ma yei nyɛ Awurade akatua a ɔde ma me kwaadubɔfoɔ, wɔn a wɔka nsɛmmɔne fa me ho no.
௨0இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன்.
21 Nanso, wo Ao Asafo Awurade, wo din enti, wo ne me nni no yie; firi wʼadɔeɛ mu gye me.
௨௧ஆண்டவராகிய யெகோவாவே, நீர் உமது பெயரினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும்.
22 Ɛfiri sɛ meyɛ ohiani ne deɛ onnibie, na mʼakoma atɔ baha wɔ me mu.
௨௨நான் ஏழையும் தேவையுள்ளவனுமாக இருக்கிறேன், என்னுடைய இருதயம் எனக்குள் புண்பட்டிருக்கிறது.
23 Metwam sɛ anwummerɛ sunsumma; wɔwoso me kyene sɛ ntutummɛ.
௨௩சாயும் நிழலைப்போல் அகன்றுபோனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன்.
24 Abuadadie ama me kotodwe mu agogo; mafɔn na ama aka me nnompe.
௨௪உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.
25 Mayɛ aseredeɛ ama wɔn a wɔbɔ me soboɔ; sɛ wohunu me a, wɔwoso wɔn ti.
௨௫நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்களுடைய தலையை அசைக்கிறார்கள்.
26 Boa me, Ao Awurade me Onyankopɔn; gye me sɛdeɛ wʼadɔeɛ teɛ.
௨௬என் தேவனாகிய யெகோவாவே எனக்கு உதவிசெய்யும்; உமது கிருபையின்படி என்னைக் காப்பாற்றும்.
27 Ma wɔnhunu sɛ ɛyɛ wo nsa, na wo na woayɛ, Ao Awurade.
௨௭இது உமது கரம் என்றும், யெகோவாவே, தேவனே நீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.
28 Wɔbɛdome, nanso wobɛhyira; sɛ wɔto hyɛ me so a, wɔn anim bɛgu ase, nanso wo ɔsomfoɔ ani bɛgye.
௨௮அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.
29 Animguaseɛ bɛdura mʼatamfoɔ ho; na akyekyere wɔn ho sɛ atadeɛ.
௨௯என்னுடைய விரோதிகள் அவமானத்தால் மூடப்பட்டு, தங்களுடைய வெட்கத்தைச் சால்வையைப்போல் அணிந்துக்கொள்வார்களாக.
30 Mede mʼano bɛma Awurade so ayɛ no kɛseɛ; mɛkamfo no wɔ nnipadɔm mu.
௩0யெகோவாவை நான் என்னுடைய வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன்.
31 Ɛfiri sɛ, ɔgyina onnibie nsa nifa so sɛ ɔbɛgye no nkwa afiri wɔn a wɔbu no kumfɔ nsam.
௩௧தண்டனைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களிடம் ஒடுக்கப்பட்டவனுடைய ஆத்துமாவை காப்பாற்றும்படி அவர் அவனுடைய வலதுபக்கத்தில் நிற்பார்.

< Nnwom 109 >