< Hiob 9 >

1 Na Hiob kasaa bio sɛ:
அப்பொழுது யோபு மறுமொழியாக சொன்னது:
2 “Aane, menim sɛ yei yɛ nokorɛ. Na ɛbɛyɛ dɛn na ɔdasani bɛtene wɔ Onyankopɔn anim?
“நீ சொல்வது உண்மையென நான் அறிவேன். மனிதன் எப்படி இறைவனுக்கு முன்பாக நீதிமானாக இருக்கமுடியும்?
3 Sɛ obi pɛ sɛ ɔne Onyankopɔn yiyi a, ɔrentumi nyi nsɛm apem mu baako mpo ano.
இறைவனோடு மனிதன் வாதாட விரும்பினால், அவர் கேட்கும் ஆயிரத்தில் ஒரு கேள்விக்குக்கூட அவனால் பதிலளிக்க முடியாது.
4 Ne nyansa mu dɔ, na ne tumi so. Hwan na ɔne no adi asie na ne ho baabiara anti?
இறைவன் இருதயத்தில் ஞானமுள்ளவர், வல்லமையில் பலமுள்ளவர். அவரை எதிர்த்து சேதமின்றித் தப்பினவன் யார்?
5 Ɔtutu mmepɔ a wɔnnim ho hwee ɔbubu wɔn fa so wɔ nʼabufuo mu.
அவர் மலைகளை அவைகளுக்குத் தெரியாமலே நகர்த்துகிறார்; அவர் தன் கோபத்தில் அவற்றைப் புரட்டிப் போடுகிறார்.
6 Ɔwoso asase firi ne siberɛ, na ɔma ne nnyinasoɔ woso biribiri.
அவர் பூமியின் தூண்கள் அதிரும்படி அதை அதின், இடத்திலிருந்து அசையவைக்கிறார்.
7 Ɔkasa kyerɛ owia na ɛnhyerɛn, na ɔsɔ nsoromma hyerɛn ano.
அவர் கட்டளையிட்டால், சூரியனும் ஒளி கொடாதிருக்கும்; நட்சத்திரங்களின் ஒளியையும் மூடி மறைக்கிறார்.
8 Ɔno nko ara na ɔtrɛ ɔsoro mu, na ɔnante ɛpo asorɔkye so.
அவர் தனிமையாகவே வானங்களை விரித்து, கடல் அலைகளின்மேல் மிதிக்கிறார்.
9 Ɔno ne Nwenwenente, Akokɔbaatan ne ne mma Yɛfoɔ; Nsorommabafan ne ewiem anafoɔ fam nsorommakuo no.
சப்தரிஷி, மிருகசீரிடம், கார்த்திகை நட்சத்திரங்களையும், தென்திசை நட்சத்திரக் கூட்டங்களையும் படைத்தவர் அவரே.
10 Ɔyɛ anwanwadeɛ a wɔntumi nte aseɛ, nsɛnkyerɛnneɛ a wɔntumi nkan.
அவர் ஆழ்ந்தறிய முடியாத அதிசயங்களையும் அவர் கணக்கிடமுடியாத அற்புதங்களையும் செய்கிறார்.
11 Sɛ ɔnam me ho a, menhunu no; sɛ ɔsene a, menhunu no.
அவர் என்னைக் கடந்து செல்லும்போது, அவரை என்னால் காணமுடியாது; அவர் என் அருகில் வரும்போது, அவரை என்னால் பார்க்க முடியாது.
12 Sɛ ɔhwim kɔ a, hwan na ɔsi no kwan? Hwan na ɔbɛtumi abisa no sɛ, ‘Ɛdeɛn na woreyɛ yi?’
அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்? ‘நீர் என்ன செய்கிறீர்?’ என யாரால் அவரிடம் கேட்க முடியும்?
13 Onyankopɔn nkora nʼabufuo so; Rahab aboafoɔ mpo ho popo wɔ nʼanim.
இறைவன் தமது கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை; ராகாப் என்ற பெரிய விலங்கைச் சேர்ந்தவர்களும் அவருடைய காலடியில் அடங்கிக் கிடந்தனர்.
14 “Na me ne hwan a me ne no bɛyiyi? Mɛyɛ dɛn anya nsɛm a me ne no de bɛgye akyinnyeɛ?
“இப்படியிருக்க, நான் அவரோடு எப்படி விவாதம் செய்வேன்? அவரோடு வாதாடும் வார்த்தைகளை நான் எங்கே கண்டுபிடிப்பேன்?
15 Sɛ menim mpo a, merentumi nyi nʼano; ɛno ara ne sɛ mɛsrɛ ahummɔborɔ afiri me ɔtemmufoɔ nkyɛn.
நான் நீதிமானாயிருந்தாலும் என்னால் அவருடன் வழக்காட முடியாது; எனது நீதிபதியிடம் இரக்கத்திற்காக மன்றாடத்தான் என்னால் முடியும்.
16 Mpo, sɛ mefrɛ no na ɔba a, mennye nni sɛ ɔbɛtie mʼasɛm.
அவர் என் அழைப்பிற்கு இணங்கினாலும், என் விண்ணப்பத்திற்குச் செவிகொடுப்பார் என நான் நம்பவில்லை.
17 Ɔde asorɔkye bɛdwerɛ me ama mʼapirakuro adɔɔso kwa.
அவர் என்னைப் புயலினால் தாக்குவார்; காரணமில்லாமல் அவர் என் காயங்களைப் பலுகச்செய்வார்.
18 Ɔremma menya mʼahome, bio. Ɔde awerɛhoɔ bɛhyɛ me ma tɔ.
அவர் என்னைத் திரும்பவும் மூச்சுவிட முடியாமல் துன்பத்திற்குள் அமிழ்த்தி விடுவார்.
19 Sɛ ɛba no ahoɔden a, ɔyɛ ɔhoɔdenfoɔ! Na sɛ ɛba atɛntenenee nso a, hwan na ɔbɛsamane no?
பெலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் அவரே வல்லமையுடையவர். நீதியை எடுத்துக்கொண்டால் அவரை விசாரணைக்கு அழைப்பவன் யார்?
20 Sɛ medi bem mpo a, mʼano bɛbu me kumfɔ; sɛ me ho nni asɛm a, ɛbɛbu me fɔ.
நான் மாசற்றவனாய் இருந்தாலும் என் வாயே எனக்குக் குற்றத் தீர்ப்பளிக்கும்; நான் குற்றமற்றவனாய் இருந்தாலும், அது என்னைக் குற்றவாளி எனத் தீர்க்கும்.
21 “Ɛwom sɛ medi bem deɛ, nanso memmu me ho; abrabɔ afono me.
“நான் குற்றமற்றவன், என்னைப்பற்றி எனக்கு அக்கறையில்லை; என் சொந்த வாழ்வையே நான் வெறுக்கிறேன்.
22 Ne nyinaa yɛ pɛ; ɛno enti na meka sɛ, ‘Ɔsɛe deɛ ne ho nni asɛm ne omumuyɛfoɔ.’
எல்லாம் ஒன்றுதான்; அதினால்தான் நான் சொல்கிறேன், ‘குற்றமற்றவர்களையும், கொடியவர்களையும் அவர் அழிக்கிறார்.’
23 Ɛberɛ a amanehunu de owuo aba no, ɔsere deɛ ne ho nni asɛm no akomatuo.
வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது, அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார்.
24 Ɛberɛ a asase akɔ amumuyɛfoɔ nsam no, ɔfira ɛso atemmufoɔ ani. Sɛ ɛnyɛ ɔno a, na ɛyɛ hwan?
நாடு கொடியவர்களின் கையில் விழும்போது, அவர் அதின் நீதிபதிகளின் கண்களை மூடிக் கட்டுகிறார். அவர் அதைச் செய்யவில்லையென்றால் அதைச் செய்வது வேறு யார்?
25 “Me nna ho yɛ herɛ sene ommirikatufoɔ; ɛsene kɔ a anigyeɛ kakra mpo nni mu.
“எனது நாட்கள் ஓடுபவனைவிட வேகமாய்ப் போகின்றன; அவை ஒருகண நேர மகிழ்ச்சியும் இல்லாமல் பறந்து போகின்றன.
26 Ɛtwam kɔ sɛ akodoɔ a wɔde paparɔs ayɛ te sɛ akɔdeɛ a wɔreto akyere wɔn ahaboa.
நாணல் படகுகள் வேகமாகச் செல்வது போலவும், தங்கள் இரைமேல் பாய்கிற கழுகுகளைப் போலவும் அவை பறந்து போகின்றன.
27 Sɛ meka sɛ, ‘Me werɛ mfiri mʼanwiinwii, mɛsesa me nsɛm ka, na masere a,’
‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’ என்று சொன்னாலும்,
28 me yea ahodoɔ no bɔ me hu ara. Na menim sɛ, woremmu me bem.
நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்; நீர் என்னைக் குற்றமற்றவனாக எண்ணமாட்டீர் என்றும் அறிவேன்.
29 Woabu me fɔ dada enti, adɛn na ɛsɛ sɛ meha me ho kwa?
நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க, ஏன் வீணாய் போராட வேண்டும்?
30 Mpo sɛ ɛba sɛ mede samina dware na mede samina hohoro me nsa ho a,
நான் என்னை பனிநீரினால் கழுவினாலும், என் கைகளை சோப்பினால் சுத்தப்படுத்தினாலும்,
31 wobɛto me atwene atɛkyɛ amena mu, ama mʼatadeɛ mpo akyiri me.
நீர் என்னைச் சேற்றின் குழிக்குள் அமிழ்த்துவீர். அப்பொழுது என் சொந்த உடைகளே என்னை அருவருக்கும்.
32 “Ɔnyɛ onipa te sɛ me na mayi nʼano, na yɛakɔgyina asɛnniiɛ abobɔ yɛn nkuro.
“நான் அவருக்குப் பதிலளிக்கவும், அவரை நீதிமன்றத்தில் எதிர்க்கவும் அவர் என்னைப்போல் ஒரு மனிதனல்ல.
33 Sɛ anka obi wɔ hɔ a ɔbɛsiesie yɛn ntam na waka yɛn baanu abɔ mu a,
எங்கள் இருவருக்கும் நடுவராயிருந்து தீர்ப்புக்கூறவும், எங்கள் இருவர்மேலும் தம் கையை வைத்து,
34 obi a ɔbɛyi Onyankopɔn abaa afiri me so, sɛdeɛ nʼahunahuna mmɔ me hu bio a,
என்னிடத்திலிருந்து இறைவனது தண்டனையின் கோலை அகற்ற ஒருவர் இருந்தால் நலமாயிருக்குமே; அவருடைய பயங்கரம் என்னைப் பயமுறுத்தாது.
35 anka mɛkasa a merensuro no, nanso saa tebea a mewɔ mu yi deɛ, mentumi.
நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன், ஆனால் இப்போதைய நிலையில் அப்படிப் பேச என்னால் முடியாது.

< Hiob 9 >