< Nnwom 35 >

1 Dawid dwom. Awurade wo ne wɔn a wɔne me di asi no nni asi; ko tia wɔn a wɔko tia me.
தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என்னோடு வழக்காடுகிறவர்களோடு வழக்காடி, என்னோடு போராடுகிறவர்களுடன் நீர் போராடும்.
2 Fa wo nkatabo ne wʼakode; na sɔre bra bɛboa me.
கேடயத்தையும் கவசத்தையும் எடுத்துக்கொள்ளும்; எனக்கு உதவிசெய்ய எழுந்து வாரும்.
3 Twe peaw ne abonnua wɔ wɔn a wɔtaa me no so. Ka kyerɛ me kra se, “Mene wʼagyenkwa.”
என்னைத் துரத்துகிறவர்களுக்கு எதிராக ஈட்டியையும் எறிவேலையும் நீட்டி இப்படி சொல்லும்: நீர் என் ஆத்துமாவுக்கு, “நானே உனது இரட்சிப்பு.”
4 Wɔn a wɔpɛ sɛ wokum me no, ma wɔn anim ngu ase; wɔn a wɔbɔ me sɛe ho pɔw no, ma wɔmfa aniwu nsan wɔn akyi.
எனது உயிரை வாங்கத் தேடுகிறவர்கள் அவமானம் அடைந்து வெட்கப்படுவார்களாக; என்னை அழிக்கச் சதிசெய்கிறவர்கள் மனம் தளர்ந்து பின்வாங்கிப் போவார்களாக.
5 Ma wɔnyɛ sɛ ntɛtɛ a mframa bɔ gu wɔn a Awurade bɔfo repam wɔn no.
யெகோவாவினுடைய தூதன் அவர்களைத் துரத்துவதால் காற்றிலே பறந்து போகிற பதரைப்போல் இருப்பார்களாக;
6 Ma wɔn akwan so nnuru sum na ɛso ɛnyɛ toro, na Awurade bɔfo ntaa wɔn.
யெகோவாவினுடைய தூதன் அவர்களைப் பின்தொடர்வதால், அவர்களுடைய பாதை இருளாகவும், சறுக்குகிறதாகவும் இருப்பதாக.
7 Esiane sɛ wɔde ɔtan sum me afiri kwa, na wotuu amoa maa me a menyɛɛ wɔn hwee no nti
காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும், காரணமின்றி அவர்கள் எனக்காக குழிதோண்டி இருப்பதனாலும்,
8 ma ɔsɛe mmefu wɔn mu na ɔtan no a wɔde hintaw no nyi wɔn, na ma wɔnhwe amoa no mu nsɛe.
அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக; அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக.
9 Afei me kra ani begye wɔ Awurade mu na wasɛpɛw ne ho wɔ ne nkwagye mu.
அப்பொழுது என் ஆத்துமா யெகோவாவிடம் சந்தோஷப்பட்டு, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ச்சியடையும்.
10 Me nipadua nyinaa bɛteɛ mu aka se, “Hena na ɔte sɛ wo, Awurade? Wugye ohiani fi ahoɔdenfo nsam, ne nea onni bi fi apoobɔfo nsam.”
“யெகோவாவே, உம்மைப்போல் யாருண்டு? நீர் ஏழைகளை ஒடுக்குகிற வலிமையானவர்களிடம் இருந்தும், ஏழைகளையும் குறைவுள்ளோரையும் கொள்ளையிடுகிறவர்களிடம் இருந்தும் விடுவிக்கிறீர்” என்று என் முழு உள்ளமும் வியப்புடன் சொல்லும்.
11 Adansekurumfo sɔre; wobisa me nneɛma a minnim ho hwee ho asɛm.
இரக்கமற்ற சாட்சிகள் முன்வருகிறார்கள்; எனக்குத் தெரியாதவைகளை அவர்கள் என்னிடத்தில் கேட்கிறார்கள்.
12 Wɔde bɔne tua papa a meyɛ so ka na wɔma me kra yɛ basaa.
நன்மைக்குப் பதிலாய் அவர்கள் எனக்குத் தீமை செய்து, என்னை உதவியின்றி விட்டுவிடுகிறார்கள்.
13 Nanso bere a wɔyaree no, mifuraa atweaatam na mede akɔnkyen brɛɛ me ho ase. Bere a me mpaebɔ ho mmuae nnya mmae no,
ஆனாலும் அவர்கள் வியாதியாய் இருந்தபோதோ, நான் துக்கவுடை உடுத்தி உபவாசத்துடன் என்னைத் தாழ்த்தினேன். எனது மன்றாட்டுகள் பதிலளிக்கப்படாமல் என்னிடமே திரும்பிவந்தபோது,
14 mekɔɔ so twaa adwo, sɛnea meyɛ ma mʼadamfo anaa onuabarima. Mede awerɛhow sii me ti ase te sɛ nea meregyam me na.
எனது நண்பர்களைப்போலவும் சகோதரரைப் போலவும் நான் அவர்களுக்காக துக்கித்தேன்; என் தாய்க்காக அழுகிறது போல, துக்கத்தில் என் தலையை குனிந்து கொண்டேன்.
15 Nanso bere a mihintiw no wɔde anigye boaa wɔn ho ano; afowfo twaa me ho hyiae a minnim, na wodii me ho nseku a wɔantwa so da.
ஆனால் நான் இடறியபோதோ, அவர்கள் ஒன்றுகூடி மகிழ்கிறார்கள்; நான் எதிர்பாராத வேளையில் தாக்குகிறவர்கள், எனக்கெதிராய் ஒன்றுகூடி, ஓய்வின்றி என்னை நிந்தித்தார்கள்.
16 Wɔde adwemmɔne dii me ho fɛw te sɛ nnipa a wonni nyamesu, wɔtwɛree wɔn se guu me so.
அவர்கள் இறை பக்தியற்றவர்களோடு சேர்ந்து பரியாசம் செய்து, என்னைப் பார்த்து பற்களைக் கடித்தார்கள்.
17 Awurade, wobɛhwɛ wɔn akosi da bɛn? Gye me nkwa fi wɔn sɛe mu, gye me nkwa a ɛsom bo no fi saa gyata yi nsam.
யெகோவாவே, எதுவரையிலும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்? அவர்கள் செய்யும் அழிவுகளிலிருந்து என்னையும் சிங்கங்களிடமிருந்து விலையுயர்ந்த என் உயிரையும் தப்புவியும்.
18 Na mɛda wo ase wɔ guabɔ kɛse ase; wɔ nnipa dodow mu na mɛkamfo wo.
அப்பொழுது மகா சபையிலே நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; மக்கள் கூட்டங்களின் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்.
19 Mma mʼatamfo a wɔtan me kwa no nhwɛ me haw nserew. Mma wɔn a menyɛɛ wɔn hwee nanso wɔtan me no mmfa adwene bɔne mmu me anikyiw.
காரணமின்றி என்னைப் பகைக்கிறவர்கள் என்னைப் பழித்து மகிழாமலும், காரணமின்றி என்னை வெறுக்கிறவர்கள் தவறான நோக்கத்தோடு கண் சிமிட்டாமலும் இருக்கட்டும்.
20 Wɔnnkasa asomdwoe so, na mmom, wɔde ntwatoso tia nnipa a wɔmpɛ wɔn ho asɛm wɔ asase yi so.
அவர்கள் சமாதானமாய்ப் பேசுவதில்லை; நாட்டில் அமைதியாய் வாழ்கிறவர்களுக்கு எதிராய் வஞ்சகமாய்த் திட்டமிடுகிறார்கள்.
21 Wɔhwɛ me haw ka se, “Yiw! Yiw, yɛde yɛn ankasa ani ahu.”
அவர்கள் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து சொல்கிறதாவது: “ஆ! ஆ! எங்கள் கண்களாலேயே நாங்கள் இதைக் கண்டிருக்கிறோம்.”
22 Awurade, woahu na mmua wʼano. Ntwe wo ho nkɔ akyiri, Awurade.
யெகோவாவே, நீர் இதைக் கண்டிருக்கிறீர்; மவுனமாயிராதேயும். யெகோவாவே, என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்.
23 Nyan, sɔre na bɛbɔ me ho ban! Ka bi ma me, me Nyankopɔn ne mʼAwurade.
விழித்தெழும், எழுந்து எனக்காக வழக்காடும்; என் இறைவனே, யெகோவாவே, எனக்காகப் போராடும்.
24 Di mʼasɛm ma me wɔ wo trenee no mu, Awurade me Nyankopɔn; mma wɔnnhwɛ me haw nserew.
என் இறைவனாகிய யெகோவாவே, உமது நீதியின் நிமித்தம் என்னை நியாயம் விசாரியும்; அவர்கள் என்னைப் பழித்து மகிழவிடாதேயும்.
25 Mma wɔnnwene nka se, “Yiw, nea yɛpɛ ni!” anaa wɔnnka se, “Yɛanya no.”
“ஆ! நாங்கள் விரும்பியதே நடந்துவிட்டது!” என்று அவர்கள் சிந்திக்க விடாதேயும் அல்லது “நாங்கள் அவனை விழுங்கிவிட்டோம்” என்று அவர்கள் சொல்லவிடாதேயும்.
26 Ma wɔn a wɔhwɛ me haw serew me wɔ mʼahohiahia mu no nyinaa anim ngu ase na wɔnyɛ basaa; ma wɔn a wodi me so akokurokosɛm no nhyɛ aniwu ne animguase atade.
என் துன்பத்தைக் குறித்து என்னைப் பழித்து மகிழ்கிறவர்கள் எல்லோரும் வெட்கமடைந்து கலங்குவார்களாக; எனக்கு மேலாகத் தங்களை உயர்த்துகிறவர்கள் எல்லோரும் வெட்கத்தாலும் அவமானத்தாலும் மூடப்படுவார்களாக.
27 Ma wɔn a wodi ahurusi wɔ me bembu ho no mfa anigye ne ahosɛpɛw nteɛ mu bere nyinaa mu; ma wɔnka se, “Momma Awurade so, ɔno na nʼani gye ne somfo yiyedi ho.”
என் நீதி நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறவர்கள், சந்தோஷத்தினாலும் மகிழ்ச்சியினாலும் ஆர்ப்பரிப்பார்களாக. “தனது பணியாளனின் நலனை விரும்புகிற யெகோவா உயர்த்தப்படுவாராக” என்று அவர்கள் எப்பொழுதும் சொல்லட்டும்.
28 Me tɛkrɛma bɛka wo trenee, ne wʼayeyi, da mu nyinaa.
எனது நாவு உமது நீதியை அறிவிக்கும், நாள்முழுவதும் உம்மைத் துதிக்கும்.

< Nnwom 35 >