< Nnwom 118 >

1 Monna Awurade ase efisɛ oye, na nʼadɔe wɔ hɔ daa.
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
2 Momma Israel nka se, “Nʼadɔe wɔ hɔ daa.”
“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இஸ்ரயேலர் சொல்வார்களாக.
3 Momma Aaronfi nka se, “Nʼadɔe wɔ hɔ daa.”
“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று ஆரோன் குடும்பத்தவரான ஆசாரியர்கள் சொல்வார்களாக.
4 Momma wɔn a wosuro Awurade nka se, “Nʼadɔe wɔ hɔ daa.”
“அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்கள் சொல்வார்களாக.
5 Mʼahohia mu, misu frɛɛ Awurade; ogyee me so, na ɔma me dee me ho.
நான் நெருக்கத்திலிருந்து யெகோவாவைக் கூப்பிட்டேன் எனக்குப் பதிலளித்து, விசாலமான இடத்தில் என்னை நடத்தினார்.
6 Awurade ne me boafo; enti merensuro. Dɛn na onipa betumi ayɛ me?
யெகோவா என்னோடு இருக்கிறார், நான் பயப்படமாட்டேன்; மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
7 Awurade ne me wɔ hɔ; ɔyɛ me boafo. Mede nkonimdi bɛhwɛ mʼatamfo.
யெகோவா என்னோடு இருக்கிறார், அவரே என் உதவியாளர்; என்னைப் பகைக்கிறவர்களுக்கு நேரிடுவதை நான் காண்பேன்.
8 Eye sɛ yebehintaw wɔ Awurade mu, sen sɛ yɛde yɛn ho bɛto onipa so.
மனிதனில் நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே மேலானது.
9 Eye sɛ yebehintaw Awurade mu, sen sɛ yɛde yɛn ho bɛto mmapɔmma so.
அதிகாரிகள் மீது நம்பிக்கை வைப்பதைப் பார்க்கிலும், யெகோவாவிடத்தில் தஞ்சம் அடைவதே சிறந்தது.
10 Amanaman no nyinaa twaa me ho hyiae, nanso Awurade din mu mitwitwaa wɔn gui.
எல்லா மக்களும் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; ஆனாலும் யெகோவாவின் பெயரில் நான் அவர்களை மேற்கொண்டேன்.
11 Wotwaa me ho hyiaa wɔ baabiara, nanso Awurade din mu, mitwitwaa wɔn gui.
அவர்கள் எல்லாப் பக்கங்களிலும் என்னை வளைத்துக்கொண்டார்கள்; ஆனாலும் யெகோவாவின் பெயரிலேயே நான் அவர்களை மேற்கொண்டேன்.
12 Wɔkyere guu me so sɛ nnowa, nanso wɔhyew ntɛm so sɛ nsɔe a ogya atɔ mu; Awurade din mu mitwitwaa wɔn gui.
அவர்கள் தேனீக்களைப்போல என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் எரியும் முட்செடிகளைப்போல் விரைவாக மறைந்துபோனார்கள்; யெகோவாவின் பெயரால் நான் அவர்களை மேற்கொண்டேன்.
13 Wosum me kɔɔ mʼakyi a anka mereyɛ ahwe ase, nanso Awurade boaa me.
நான் பின்னோக்கித் தள்ளப்பட்டு, விழப்போனேன்; ஆனால் யெகோவாவோ எனக்கு உதவி செய்தார்.
14 Awurade yɛ mʼahoɔden ne me bammɔ; wayɛ me nkwagye.
யெகோவா என் பெலமும், என் பாடலுமாய் இருக்கிறார்; அவரே எனக்கு இரட்சிப்புமானார்.
15 Osebɔ ne nkonimdi gyigye wɔ atreneefo ntamadan mu se, “Awurade nsa nifa ayɛ nneɛma akɛse!
நீதிமான்களின் கூடாரங்களில், வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் திரும்பத்திரும்ப ஒலிக்கின்றன: “யெகோவாவின் வலதுகரம் வல்லமையான செயல்களைச் செய்திருக்கிறது.
16 Wɔama Awurade nsa nifa so; Awurade nsa nifa ayɛ nneɛma akɛse!”
யெகோவாவின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; யெகோவாவின் வலதுகரம் வல்லமையான காரியங்களைச் செய்திருக்கிறது.”
17 Merenwu, mmom mɛtena ase na mapae mu aka nea Awurade ayɛ.
நான் வாழுவேன், சாகமாட்டேன். நான் வாழ்ந்து யெகோவா செய்தவற்றை அறிவிப்பேன்.
18 Awurade atwe mʼaso dennen, nanso onyaa me mmaa owu ɛ.
யெகோவா என்னைக் கடுமையாகத் தண்டித்தார், ஆனாலும் அவர் என்னை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
19 Bue trenee apon ma me; na mɛhyɛn mu na mede aseda ama Awurade.
நீதியின் வாசல்களை எனக்காகத் திறவுங்கள்; நான் உள்ளே சென்று யெகோவாவுக்கு நன்றி செலுத்துவேன்.
20 Awurade ponkɛse ni; ɛhɔ na atreneefo bɛfa ahyɛn mu.
இதுவே யெகோவாவின் வாசல்; நீதிமான்கள் அதின் உள்ளே செல்வார்கள்.
21 Mɛda wo ase, efisɛ wugyee me so; na woayɛ me nkwagye.
நீர் எனக்குப் பதிலளித்தபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; என் இரட்சிப்பு நீரே.
22 Ɔbo a adansifo no poe no, abɛyɛ tweatibo.
வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்த கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
23 Awurade na wayɛ eyi, na ɛyɛ nwonwa wɔ yɛn ani so.
யெகோவாவே இதைச் செய்தார், இது நமது கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
24 Nnɛ yɛ da a Awurade ayɛ. Momma yɛn ani nnye na yenni ahurusi.
யெகோவா உண்டாக்கின நாள் இதுவே; இதிலே நாம் மகிழ்ந்து களிகூருவோம்.
25 Awurade, gye yɛn nkwa; Awurade, ma yɛn nkonimdi.
யெகோவாவே, எங்களை இரட்சியும்; யெகோவாவே, எங்களுக்கு வெற்றியைத் தாரும்.
26 Nhyira ne nea ɔnam Awurade din mu reba. Yehyira wo fi Awurade fi.
யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவினுடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
27 Awurade yɛ Onyankopɔn, na wama ne hann ahyerɛn yɛn so. Momfa nnua mman nkura na yɛnto afɔrebɔ santen nkɔ afɔremuka no mmɛn ho.
யெகோவாவே இறைவன், அவர் தமது ஒளியை நம்மேல் பிரகாசிக்கச் செய்திருக்கிறார்; பண்டிகை பலியைக் கையில் எடுத்துக்கொண்டு, பலிபீடத்தின் கொம்புகளில் கயிற்றைக் கட்டி ஊர்வலத்தில் கலந்துகொள்ளுங்கள்.
28 Woyɛ me Nyankopɔn na meyi wo ayɛ; wone me Nyankopɔn na mɛma wo so.
நீரே என் இறைவன், நான் உமக்கு நன்றி செலுத்துவேன்; நீரே என் இறைவன், நான் உம்மைப் புகழ்ந்து உயர்த்துவேன்.
29 Monna Awurade ase, efisɛ oye; na nʼadɔe wɔ hɔ daa.
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.

< Nnwom 118 >